TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012)

Go down

எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) Empty எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012)

Post by அருள் Mon Mar 26, 2012 9:35 am


எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 531300_10150702762963679_528343678_9330663_1297039777_n

கூடன்குளத்தில்
அணு மின் நிலையத்தை மீண்டும் திறந்தது சரியா? தவறா? அது பாதுகாப் பானதா?
அம்மக்களின் போராட்டம் நியாயமான தா? போராட்டத்தின் தீவிரத்தைக் கட்டிக்
காத்துவரும் உதயகுமார் நல்லவரா? கெட்டவரா? கைது நடவடிக்கைகளின் மூலம்
அங்கு போராடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க முனைந்திருப்பது
முறைதானா?


-கடும் மின்வெட்டால் புழுங்கிக் கொண்டி ருக்கின்ற தமிழக மக்கள் நாளும் விவாதித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை.

எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 535631_10150702764348679_528343678_9330666_1274492526_n

2011
செப்டம்பர் 11-ல் இடிந்தகரையில் ஆரம் பித்த அந்த மக்களின் அறவழிப்
போராட்டம் மேலும் மேலும் உக்கிரமாகிக் கொண்டேயிருக்க.. 144 தடை உத்தரவு
அமுலுக்கு வந்து, ‘எப்போது என்ன நடக்குமோ?’ என பீதியைக் கிளப்பும் விதத்
தில் அந்தப் பகுதியெங்கும் காக்கிகள் குவிக்கப்பட.. ஊருக்குள் செல்லவோ,
வெளியேறவோ விடாமல் நாலா பக்கமும் காவல்துறை தடுப்புக்களை ஏற்படுத்தி விட,
தொடர் கடையடைப்பால் மொத்த ஊரும் வெறிச்சோடிக் கிடந்த நிலையில் நாம்
மீண்டும் கூடன்குளம் சென்றோம். வழியெங்கும் தடுத்தார்கள் காக்கிகள். அடையாள
அட்டையைக் காண்பித்த பிறகு, "ம்.. போங்க.. போங்க..'’ என்று சலிப்புடன்
அனுமதித்தார்கள்.


கூடன்குளத்தில்
சற்று விவரமாகப் பேசிய தெய்வமணியிடம் ""1988-ல் அணு மின்நிலையம்
அமைப்பதற்கான இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. 1998-ல் கூடன்குளத்தில்
அணு உலை அமைப்பதென்று முடிவானது. . 2001-ல் இதற்கென ரூ.13,121 கோடி நிதி
ஒதுக்கினார்கள். 2002-ல் அணு உலைக்கான காங்கிரீட் தளம் இங்கே
அமைக்கப்பட்டது. 2011-ல் அணு உலைக்கான பணிகள் முடிக்கப்பட்டு சோதனை
ஓட்டமும் நடந்தது. ஆனால், கடந்த 7 மாதங்களாகத்தான் அணு உலைக்கு எதிரான
போராட்டத்தில் மும்முரம் காட்டி வருகின்றீர்கள். மூட வேண்டும் எனச்
சொல்வது ஏன்?''’என கேட்டோம்.

எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 558700_10150702766303679_528343678_9330669_1058867343_n

"சொல்லுறேன்..
எழுதிக்கங்க.. போன வருஷம் மார்ச் மாசம் ஜப்பான்ல புகுஷிமாவுல அணு உலை
வெடிச்சு எத்தனை பேரு செத்தாங்க.. எத்தனை ஊரு நாசமாச்சு.. அப்பத்தாங்க
நாங்க உஷாரானோம்.. டி.வி.யில சினிமா, பாட்டு, சீரியல்ன்னு பார்த்துக்கிட்டி
ருந்த நாங்க அன்னைல இருந்துதான் செய்தி பார்க்க ஆரம்பிச்சோம்.. கல்பாக்கம்
அணு உலை பாதிப்பைக் கூட இப்ப நாங்க தெரிஞ்சு வச்சிருக்கோம். இங்க அணு உலை
வந்தா ஊரு டெவலப் ஆகும்.. மக்களுக்கு வேலை கிடைக் கும்னு விவரம் பத்தாம
மொதல்ல நம்பித் தொலைச்சது எம்புட்டுத் தப்புன்னு அப்புறம் உணர்ந்தோம்..
எங்கயாச்சும் கடல் மண்ணுல கட்டிடம் கட்டிப் பாத்திருக்கீங்களா? நாங்கள்லாம்
கக்கூஸக் கூட கடல் மண்ணுல கட்ட மாட்டோம். இவனுக கடல் மண்ணுலதான் அணு
உலையக் கட்டிருக்கானுவ.. அது எப்ப வெடிச்சு எங்க உசிரப் பறிக்குமோன்னு
பயந்து நடுங்கிக்கிட்டிருக்கோம்''’என்றார் கலவர முகத்தோடு.


"புகுஷிமா
அணு அலையை ஒப்பிடும் போது கூடன்குளம் ஆலை மிகவும் பாதுகாப் பானது என்று
விஞ்ஞானிகள் உறுதியளிக்கிறார் கள். மத்திய, மாநில அரசுகளின்
ஆய்வுக்குழுக்களும் சொல்கின்றன'’என அரசு தரப்பு கூறுவதைச் சொன்னவுடன்...
சிலிர்த்துவிட்டார் செல்வன்.


""சுய
உதவிக்குழு பெண்கள வச்சு அணு உலைக்காரங்க பேரிடர் பயிற்சி வகுப்பு நடத்து
னாங்க.. அணு உலைக்கு ஆபத்து வந்தா அப்ப இங்கயிருக்கிற மக்கள் என்ன
செய்யணும்னு சொல் லிக் கொடுத்திருக்காங்க.. மொத மணி அடிக்கிறப்ப துணியால
மூக்கையும் வாயையும் பொத்திக்கணு மாம்.. ரெண்டாவது மணிக்கு வீட்டுக்குள்ள
போயி பூட்டிக்கணுமாம்.. மூணாவது மணி அடிச்சா இந்த ஊரயே காலி பண்ணிட்டு
ஓடணு மாம்.. அப்பக்கூட காத்து அடிக்கிற திசைய வச்சு எந்த திசையில ஓடணும்னு
அவங்க சொல்லு வாங்களாம்.. அது படி ஓடணுமாம்.. அப்ப அயோடின் மாத்திரையும்
சாப்பிடணுமாம்.. பயிற்சி நடக் கிறப்ப இத்தனையும் சொல்லிக் கொடுத்தவங்க..
இந்தப் பயிற்சி குறித்து பத்திரிகைல எந்தச் செய்தி யும் வராம
பார்த்துக்கிட்டாங்க. அப்படியும் நாகர்கோயில் பேப்பர் ஒண்ணுல இது
வந்திருச்சு.. அப்புறம் தான்.. அடக் கொடு மையே இந்தப் பூதம் எப்ப நம்மள
விரட்டு மோன்னு எங்க பயம் கூடிப் போச்சு.. நான் சாகத்தான் போறேன்.. அணு உலை
வெடிச்சு இல்ல.. அதுக்கு முன் னாடியே போராடிச் சாவேன்.. எங்க ஊருல பூச்
சாண்டி காட்டிக்கிட்டுத் திரியுதுல்ல போலீஸ்.. நான் நெஞ்சைக் காட்டி
நிக்கிறேன். அவங்க துப்பாக்கியால சுடட்டும்.. எம் மக்களுக்காக சந்தோஷமாச்
செத்துப் போறேன்...''’என்று உணர்ச்சிவசப்பட்டார்.


எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 540698_10150702767818679_528343678_9330674_1215851119_a

உண்ணாவிரதமிருப்போர்
இருக்கும் இடிந்த கரைக்குச் சென்ற நம்மை வைராவிக்கிணற்றிலேயே தடுத்து
நிறுத்திய ஒரு போலீஸ் அதிகாரி "அங்கே போனால் பாதுகாப்பில்லை.. ஏன் ரிஸ்க்
எடுக்கிறீங்க..?'’என்று அக்கறை காட்ட, அவருக்கு பை’ சொல்லி விட்டு
நகர்ந்தோம். அங் கிருந்து 3 கி.மீ. தூரத்துக்கு, சாலைகளில் குறுக்கே
அங்கங்கே மரங்களை வெட்டிப் போட்டிருந்தார்கள். சாலையோர சிமெண்ட்
பெஞ்சுகளைப் பெயர்த் தெடுத்து தடுப்பாக்கியிருந்தார்கள். பாறாங்கற்களும்
கிடந்தன. உதயகுமா ரைக் கைது செய்ய வரும் போலீசாரைத் தடுப்பதற்காகவும்,
அடிக்கடி ஊருக்குள் ரோந்து வரும் போலீஸ் வாகனங்களை வரவிடாமல்
செய்வதற்காகவும் போராட்டக்காரர்கள் இந்தத் தடைகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.
ஒரு வழியாக இடிந்தகரையை அடைந்தோம்.


அணு
உலைக்கு எதிரான "அய்யோ...'’என்ற பேனர் முகத்தில் அறைந்தாற்போல்
தென்பட்டது, இடது புறம் திரும்பினோம். லூர்து மாதா ஆலயம் முன்பாக
தட்டிகளைக் கட்டி பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். பெண்களின் எண்ணிக் கையே
ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். பந்தலின் கீழ் விரிப்பு கூட இல்லாமல்
வெறுந்தரையில் படுத்திருந்தார்கள். குதூகலத்தை தொலைத்து வாடியிருந்த அந்தக்
குழந்தை களின் முகங்களே போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தின. உண்ணாவிரதம்
மேற்கொள்ளாமல், போராட்டத்தில் மட்டும் பங்கெடுப்பவர்களுக்கு ஒரு பக்கம்
கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். பந்தல் கம்பங்களில், உலகெங்கிலும்
நடந்த அணு உலையின் பாதிப்புக்களை காட்சிப் படுத்தி யிருந்தார்கள். அன்றைய
தினம் மூன்றாம் கட்டப் போராட் டத்தின் 156-ஆம் நாளாம். மூன்று கட்டப்
போராட்டத்தை யும் சேர்த்தால் 219-ஆம் நாளாம். ஒரு துக்க வீட்டில், கூட்
டத்தில் ஒருவராக சில மணி நேரம் உட்கார்ந்திருப்பதற்கே நெளிகிறோம். 219
நாட்களாக இத்தனை பேரும் ஒரே நோக்கத்துக்காக ஒரு பந்தலின் கீழ்
போராடுகிறார்கள்.


அந்தக்
கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்தார் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்
உதயகுமார். அவ்வப் போது எழுந்து மைக் முன் நிற்கிறார். சில தகவல்களைச்
சொல்கிறார். நாகர்கோவிலில் உள்ள தனது பள்ளிக்கூடத்தைச் சேதப்படுத்தியது
குறித்துப் பேசுகிறார். கைதாகி கடலூர் சிறையில் அடைபட்டிருக்கும் முகிலன்
தன் மனைவியைத் தொடர்புகொண்டு "நான் திரும்பி வருவது சந்தேகம் தான்..
குழந்தையைப் பத் திரமாகப் பார்த்துக்கொள்' என்று பரிதவித்ததைச் சொல்கிறார்.
"தண்ணீர் வரவிடாம பண்ணிட் டாங்க. பால் சப்ளை யவும் தடுத்துட் டாங்க..
இங்கே பால் கிடைக்காம. ஒரு அம்மா தன்னோட குழந்தைக்கு குப்பியில தண்ணிய
கொடுத்தத பார்த்தேன்...'’எனத் தானும் கண்கலங்கி, மக்களையும் உருகச்
செய்கிறார். “"இடிந்த கரையில் நாம் ஆயுதங்கள் தயாரிப்பதாகப் பொய்
சொல்கிறார்கள். இது தமிழ் மக்களின் அரசு அல்ல. வந்தேறிகளின் அரசு'’என்று
ஜெ.வை தூற்றுகிறார். "ஊடகங்கள் மட்டும் இங்கு இல்லையென்றால்
முள்ளிவாய்க்கால் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.. நாசம்
செய்கிறவர்கள் நாசமாகப் போவார் கள்...'’என சாபமிடுகிறார். "உங்களை விட்டு
நான் எங்கும் போக மாட்டேன். இந்தப் பிரச் சினைக்காக என் உயிரையும் கொடுப்
பேன்...'’என்ற அவரது நெடிய பேச்சுக்கு மொத்த கூட்டமும் கட்டுண்டு
கிடக்கிறது. சில நேரங்களில் குமுறிக் கொதித்து ஆவேசம் மேலிட கை
தட்டுகிறது.


எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 539537_10150702769928679_528343678_9330679_1712337641_a

""ஒரு
வேளை நாங்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டால், அணு உலைக்கு எதிரான
போராட்டத்தை எங்கள் குழந்தைகள் முன்னெடுத்துச் செல்வார்கள்...''’’


உண்ணாவிரத
மேடையில் வெளிப் பட்ட இந்தக் கருத்தினை அங்கிருந்த குழந் தைகள் எந்த
அளவுக்கு எடுத்துக் கொண் டார்கள் என்பதை அறிய அவர்களிடம் பேச்சுக்
கொடுத்தோம். ஏழாவது வகுப்பு படிக்கும் மரியஜூலி, உரேனியம் கதிர் வீச்சுக்
கழிவுகள் குறித்தெல்லாம் பேசினாள். ‘என்ன இங்கே உட்கார்ந்திருக்கீங்க?’
என்று நாம் கேட்டபோது “பார்த்தா தெரியல.. போராடிக்கிட்டிருக்கோம்..''’என்றவள்,“""ஸ்கூல்ல
கூட நாங்க அணு உலையப் பத்தித்தான் பேசிக்கிட்டிருப்போம்.. அணுக் கழிவுகளை
அகற்றுவது லேசான காரியமில்ல.. அது சுற்றுச் சூழலுக்கு கேடு உண்டாக்கும்..
இதனால் பிறக்கின்ற குழந்தைகள் குருடு, செவிடு, மூளை வளர்ச்சி குறைவுன்னு
பலவித ஊனமாகப் பிறக்கும்'' என்றெல்லாம் சொல்கிறாள். இவளைப் போலவே, அணு உலை
குறித்து தான் அறிந்து வைத்திருப்பதை தெள்ளத் தெளிவாகப் பேசினான் 6-வது
படிக்கும் முத்துக்குமார். ஏதாவது ஒரு சூழ்நிலையில் போலீஸ் அடித்தால், அந்த
இடத்திலேயே பிடரியில் கையைக் கட்டிக் கொண்டு படுத்து விடவேண்டும்
என்பதெல்லாம் தனக்குத் தெரியும் என்றான் அவன். இது எக்காரணம் கொண்டும்
பின்னந்தலையில் அடிபட்டுவிடக் கூடாது என உதயகுமார் கற்றுத் தந்த பாடமாம்.


சிறுவர்கள்,
பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலரும் தேர்ந்த
விஞ்ஞானிகளைப் போல இங்கு பேசுகிறார்கள். இந்த அறிவும், தெளிவும், போராட
வேண்டும் என்ற மன உறுதியும் எப்படி வந்தது?

எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 524151_10150702772628679_528343678_9330685_1158942000_n

அணு
உலையை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இத்தனை ஒற்றுமை இல்லை. ஜப்பான் புகுஷிமா
அணு உலை விபத்துக்குப் பிறகே, கூடன்குளம் மக்கள் அணு உலை குறித்து தெரிந்து
கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். அமெரிக்காவில் இருந்த போதே அணு
உலை எதிர்ப்பாளராக இருந்த உதயகுமார், இங்கும் சுற்றுச் சூழல் ஆர்வலராக
தன்னை வெளிப்படுத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி, நெல்லை,
குமரி மாவட்ட பிஷப்புகள், அணு உலை குறித்த விழிப் புணர்வு மக்களுக்கு
போய்ச் சேர வேண்டும் என்று கருதி னார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு, இடிந்த
கரை, கூடன்குளம் போன்ற கடற்கரையோர மீனவ கிராமங்களில் வசிக்கும்
மக்களுக்கு அணு உலையின் ஆபத்துக் களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்
உதயகுமார் -


எங்கெங்கும் உதயகுமாரர்கள்! - கூடன்குளம் 'கரண்ட்' ரிப்போர்ட் (நக்கீரன் 24/03/2012) 550846_10150702774653679_528343678_9330690_1571494589_a"என்
தாத்தாவும் பாட்டியும் புற்றுநோயால் இறந்து போனார்கள். குமரி மாவட்டம்
முழுவதும் புற்றுநோய் பரவி வருகிறது. இந்தப் பேரழிவு நமது
சந்ததியினருக்கும் வந்து விடக்கூடாது. போபால் விஷவாயு கசிவு விஷ யத்தில்
ஆன்டர்சன் எப்படி பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாரோ, அது
போல இங்கும் நடக்குமானால், அணு உலையைச் சேர்ந்த ரஷியாக்காரர் கள் அவரவர்
நாட்டுக்குப் போய் விடுவார்கள். நாம்தான் தெருவில் நிற்போம். கூடன்குளம்
அணு உலையில் விபத்து நடந்தால் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்களை
இரண்டு மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசால் இது
முடியுமா? நானும், என் மனைவியும் வெளிநாட்டில் பணி புரிந்து பணம்
சம்பாதித்துள்ளோம். எங்களது தேவைக்கு பணம் உள்ளது. மக்களே! உங்களுக் காகப்
போராட வந்திருக்கிறேன்'' என்று தன்னி லை விளக்கம் தர, மக்கள் கேட்க
ஆரம்பித்தனர். பிறகே, இடிந்தகரை லூர்து மாதா ஆலய வளா கம் கூடன்குளம் அணு
உலைக்கு எதிரான போராட்ட களமாக மாறியது. அணு உலைக்கு எதிராக உலக நாடுகள்
பலவும் இருக்கின்றன என்ற தனது பேச்சுக்கு ஆதாரமாக, வெளிநாடுகளில் அணு உலை
பாதிப்புக்கு ஆளான குழந் தைகளின் படங்களை பேனர்களாக்கி காட்டினார்.


அணு
உலை குறித்து தான் அறிந்து வைத்திருந்த அத்தனை விவரங்களையும் பாமரர்களும்
அறியும் விதத்தில் போதித்தார். உதயகுமாரின் பேச்சும், தன்னலமற்றவர் என்ற
இமேஜும் இப்பகுதி மக்களை இவர் பால் ஈர்த்தன. இவரை ஒரு ரோல் மாடலாகக்
கொண்டு அனேகர். எங்கெங்கும் உதயகுமாரர் களாகவே மாறினர். அவர் பதியம்
போட்டு வளர்த்த மக்களின் இந்த மன உறுதியே இன்று வலுவான போராட்டமாக
உருவெடுத்து மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பெரும் குடைச்சலைத் தந்து
கொண்டிருக்கிறது. கூடன்குளம் மக்களிடமிருந்து நாம் விடை பெற்றபோது
பத்திரகாளி என்ற மூதாட்டி, “""ஏம்ப்பா, நீ மெட்ராசு பக்கம் போவியா?
ஜெயலலிதாவ பாப்பியா? நாஞ் சொன்னேன்னு சொல்லு... எங்கள ஜெயில்லயெல்லாம் போட
வேணாம்… ஒரே குழியாத் தோண்டி.. எங்க அத்தனை பேரயும் அதுல தள்ளி... உசிரோட
புதைக்கச் சொல்லு. அவுக பறந்து வருவாக லாம்ல.. ஏரோப்பிளேனா?
கெல்லிகாப்டர்ரா? அதுலயிருந்துக்கிட்டே அந்தக் குழிமேல பாலை ஊத்தச் சொல்லு.
இத அங்க போயி சொல்லுவியா?''’என்று நம் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு
கதறினார்.


-சி.என்.இராமகிருஷ்ணன், மணிகண்டன்

படங்கள்: ராம்குமார்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடன்குளம் அணு ஆலையினால் மன்னார், யாழ்ப்பாணம் பகுதிக்கு ஆபத்து!
» கூடன்குளம் அணு உலைக்கு எதிராக வைகோ-வுக்கும் ராஜீவ்காந்திக்கும் 1988-ல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் பற்றிய செய்தி.
» நள்ளிரவில் "கரண்ட் கட்' ஏற்பட்டால் கண்காணிக்க உத்தரவு
» இப்படி செஞ்சாக் கூட நிறைய 'கரண்ட்'டை சேமிக்கலாமே...!
» விஸ்வரூபம் ஒளிபரப்பு நேரத்தில் கரண்ட் கட். எதிர்ப்பாளர்களின் சதியால் கமல் அதிர்ச்சி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum