TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புயல் தாக்கிய பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்கள்: முதல்வரின் அறிவிப்பு

Go down

புயல் தாக்கிய பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்கள்: முதல்வரின் அறிவிப்பு Empty புயல் தாக்கிய பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்கள்: முதல்வரின் அறிவிப்பு

Post by அருள் Sat Feb 04, 2012 9:10 pm


புயல் தாக்கிய பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்கள்: முதல்வரின் அறிவிப்பு Jayalalitha





சென்னை,
பிப்.4: கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர்
ஜெயலலிதா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நிவாரணப் பணி, விவசாயிகளுக்கான
திட்டங்களை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, இன்று
சட்டமன்றத்தில், புயல் பாதித்த இரு மாவட்டங்களுக்கான நிவாரணத் திட்டங்களை
அவர் அறிவித்தார்.இதன் விவரம்:ஆண்டு பயிருக்கான சிறப்பு தொகுப்பு திட்டம்வேளாண் பயிர்கள்54490
ஏக்கர் பரப்பிற்கு தேவையான 54,490 நெல் சிறுதளைகள் (ஆini முவைள)
வழங்கப்படும். 20 கிலோ விதை நெல்; இரண்டு பொட்டலம் உயிர் உரங்கள்;
மற்றும் 500 மில்லி தாவர பூச்சிக் கொல்லி கொண்டவையாக இந்த சிறுதளைகள் இருக்கும்.6,250
ஏக்கர் பரப்பிற்கு தேவையான 6,250 மக்காச்சோள சிறுதளைகள் விழுப்புரம்
மாவட்டத்தில் வழங்கப்படும். இச்சிறுதளை 6 கிலோ வீரிய ஒட்டு விதை மற்றும்
இரண்டு பொட்டலங்கள் உயிர் உரங்கள் உள்ளதாக இருக்கும்.3,83,660
ஏக்கர் பரப்பிற்கு தேவையான 3,83,660 பயறு வகை சிறுதளைகள் வழங்கப்படும்.
8 கிலோ விதையுடன் இரண்டு பொட்டலங்கள் உயிர் உரங்கள் இந்த சிறுதளையில்
அடங்கும்.3,175 ஏக்கர் பரப்பிற்கு தேவையான 3,175 மணிலா சிறுதளைகள்
வழங்கப்படும். 80 கிலோ விதைகள்; நான்கு பொட்டலங்கள் உயிர் உரங்களுடன்
500 மில்லி தாவர பூச்சிக் கொல்லி இந்த சிறுதளைகளில் இருக்கும்.
இச்சிறுதளைகள் 34 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.தோட்டக்கலை பயிர்கள்இந்த
ஆண்டு மார்ச் மாதம் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, பிப்ரவரி மாதத்தில்,
ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1,540/- ரூபாய் மதிப்புள்ள உயர் மகசூல் தரக் கூடிய
வீரிய ரக காய்கறி விதைகள்; உயிர் உரங்கள் மற்றும் தாவர பூச்சிக் கொல்லிகள்
அடங்கிய சிறுதளைகள் வழங்கப்படும். நீண்ட கால பயிர்களுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம்தென்னை“தானே”
புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1284 ஹெக்டேரிலும்; விழுப்புரம்
மாவட்டத்தில் 578 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 1832 ஹெக்டேர் பரப்பில் இருந்த
தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன.முறிந்த மற்றும் சேதாரத்திற்குள்ளான
தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மரம் ஒன்றிற்கு 500 ரூபாய் வீதம்
தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 16 கோடியே 3 லட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கப்படும். மேலும் 100 சங்கிலி ரம்பங்கள் (ஊhயin ளுயறள)
வாடகையின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். தென்னை மரங்களை இழந்த
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஊடுபயிர் பயிரிடும் வகையில்,
ஊடுபயிருக்கான சிறுதளைகள் வழங்கப்படும். தென்னங்கன்றுகளை மீண்டும்
நடுவதற்காக அரசு தென்னை நாற்று பண்ணைகளிலிருந்து 3,20,600 தென்னங்கன்றுகள்
80 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.மீண்டும் நடப்பட்ட தென்னை
மரங்களுக்கு தேவையான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், உயிர் உரங்கள்
மற்றும் தென்னை நுண்ணூட்ட கலவை ஆகியவை வழங்கப்படும். இதற்காக 5 ஆண்டுகளில்
ஒரு ஹெக்டேருக்கு 73,859 ரூபாய் செலவிடப்படும். இதற்கான மொத்த செலவு 13
கோடியே 53 லட்சம் ரூபாய் ஆகும். இதன் காரணமாக 7,083 தென்னை விவசாயிகள்
தங்கள் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற இயலும். முந்திரி மற்றும் பிற தோட்டக்கலை நீண்ட கால பயிர்கள்விழுந்த மரங்களை வெட்டி அகற்றுதல் மற்றும் அதற்கு தேவையான இயந்திரங்கள் வழங்குதல்முந்திரி
மற்றும் பலா தோப்புகள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், விழுந்த மரங்களை
அகற்றிட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள்
மேற்கொள்ளப்படும். இதற்காக, சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு, ஏற்படும் 6,000
ரூபாய் செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
இதற்கென ஏற்படும் செலவு 54 கோடியே 78 லட்சம் ரூபாய் ஆகும். இந்த மரங்களை
வெட்டுவதற்குத் தேவையான சங்கிலி ரம்பக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை
மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும். இதற்கு 3 கோடி ரூபாய் செலவு
ஏற்படும். இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு
தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும்.மரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட
பின், அடிக்கட்டையையும் அகற்றிய பின்னரே அத்தோட்டங்களில் உழவுப் பணியும்,
ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள இயலும் என்பதால்; அடிக்கட்டை அகற்றும் பணி
இயந்திர உதவியுடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 136 கோடியே 94 லட்சம்
ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.உழவு91,293 ஏக்கர்
பரப்பளவில் பாதிப்புக்குள்ளான நிலங்களில் வேளாண்மை பொறியியல் துறை மூலம்
உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். விசை உழுவைகள், மூலம் இப்பணி
மேற்கொள்ளப்படும். இதற்காக அரசுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 400 ரூபாய் வீதம் 3
கோடியே 65 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.குழி எடுத்தல் மற்றும் கன்று நடுதல்ஊரக
வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதித் திட்டம் மூலமாக மரக்கன்றுகளை நடத் தேவையான குழிகளை எடுத்தல்
மற்றும் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ்,
இதற்கென 31 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படும்.சாகுபடிக்கான உதவி1,20,103
ஏக்கர் பரப்பளவில் மறு சாகுபடி செய்ய தேவையான உதவிகள் வழங்கப்படும். 70
லட்சம் ஒட்டு முந்திரி கன்றுகள் மற்றும் இதர மரக் கன்றுகள் வழங்கப்படும்.
உயிர் உரம் மற்றும் தாவர பூச்சி கொல்லி மருந்துகளும் வழங்கப்படும்.
இதற்கென முதல் வருடத்தில் 47 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.நீர்பாசன வசதிகள்வளர்ந்த
முந்திரி, பலா போன்ற மரப் பயிர்களுக்கு மழை நீரே போதுமானது. தனியே
நீர்பாசன வசதி ஏதும் தேவையில்லை. எனினும், புதிதாக நடவு மேற்கொள்ளப்படும்
முந்திரி, பலா போன்ற நீண்டகால மரப் பயிர்களுக்கு, பாசன வசதி செய்து
கொடுப்பது அவசியம். எனவே, 25 ஏக்கர் பரப்புக்கு ஒன்று என்ற வீதத்தில்
ஆழ்துளை சமுதாய கிணறு அமைக்க வழிவகை செய்யப்படும். இந்த ஆழ்துளை சமுதாய
கிணறுகள் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியமும்; இதர
விவசாயிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். இதற்காக ஆகும்
செலவினம் 27 கோடி ரூபாய் ஆகும். இதுவன்றி மின் இணைப்பு முன் பணம்; மின்
கம்பம் ஊன்றுவதற்கான செலவு ஏதுமின்றி தமிழ் நாடு மின் வாரியம்,
முன்னுரிமையின் அடிப்படையில் இத்திட்டத்திற்கு மின் இணைப்பு வழங்கும்.நீர்
பாசன ஆதாரம் ஏதுமில்லாத விவசாயிகளுக்கு, கன்றுகளுக்கு தண்ணீர்
ஊற்றுவதற்கான செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும். இதற்கான செலவினம் 62 கோடியே 57 லட்சம் ரூபாய் ஆகும்.முந்திரி
கன்றுகள் மறு நடவு செய்யும் இடங்களில், நீராதாரம் உள்ள இடங்களில்,
நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்த இயலும். சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்
நுண்ணீர் பாசன வசதி 9 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தித்
தரப்படும்.முந்திரி, பலா, மா போன்ற பாதிக்கப்பட்ட நீண்டகால பயிர்கள்
மீண்டும் பயிர் செய்வதற்கான உதவிகள் செய்யப்படுகின்றன. எனினும், அவை பலன்
தர சில ஆண்டுகள் ஆகும் என்பதால்; அதுவரை விவசாயிகளுக்கு வாழ்வாதாரம்
ஏற்படும் வகையில், உடனடியாக இரு பருவங்களுக்கு ஊடுபயிர் பயிரிடுவதற்கான
உதவிகள் வழங்கப்படும். இதன் அடிப்படையில், சுமார் 91,000 ஏக்கர் பரப்பளவில்
ஊடுபயிர் பயிரிடுவதற்கான சிறுதளைகள் 13 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில்
வேளாண்மைத் துறை மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும்.புதிதாக
நடவு செய்யப்பட்ட கன்றுகளுக்கு, இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை
பராமரித்தலுக்கான செலவையும் அரசே ஏற்கும். பழுது கன்றுகளை நீக்கி, புதிய
கன்றுகளை நடவு செய்தல்; ஆண்டுதோறும் உரங்கள், உயிர் உரங்கள், தாவர
பூச்சிக்கொல்லிகள் மற்றும் இடைவெளி சாகுபடி பணிகளான களையெடுத்தல், செடிகளை
சுற்றி தூர்வாருதல்; தேவையில்லாத கிளைகளை நீக்கி செடிகளின் வளர்ச்சியை
ஊக்குவித்தல்; தேவையான தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவை 334 கோடியே 60 லட்சம்
ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.தற்போது நான் அறிவித்த இந்த
சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ், வேளாண் பயிர்களுக்கு 65 கோடியே 22
லட்சம் ரூபாயும்; தோட்டக் கலைப் பயிர்களுக்கு 724 கோடியே 96 லட்சம்
ரூபாயும்; ஆக மொத்தம் 790 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிறப்பு
தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.விவசாயிகளுக்காக நான்
தற்போது விவரித்த மறுசீரமைப்பு சிறப்புத் திட்டத்தை துரிதமாக
செயல்படுத்துவதற்காக, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகியோரை
ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக, கூடுதல் ஆட்சியர் நிலையில் உள்ள
அலுவலரை தலைவராகக் கொண்ட, ஒரு திட்ட மேலாண்மை மையம் அதாவது, ஞசடிதநஉவ
ஆயயேபநஅநவே ருnவை கடலூரில் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்ட மேலாண்மை
மையத்திற்கு தேவையான களப் பணியாளர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.“தானே”
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்
“புயல் பாதித்த மாவட்டங்கள்” என அறிவிக்கப்படும். இதன் மூலம், கடலூர்
மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நில வரி முழுவதுமாக ரத்து
செய்யப்படும். மேலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள
440 கோடியே 11 லட்சம் ரூபாய் அளவிலான விவசாயிகளின் குறுகிய கால கடன் மத்திய
கால கடனாகவும்; மத்திய கால கடன் நீண்ட கால கடனாகவும் மாற்றப்பட்டு,
விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்கப்படும். இந்த நடவடிக்கையின்
மூலம் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவர்.
! தமிழகத்தை தாக்கிய “தானே” புயலின் தீவிரம் மற்றும் அதனால்
கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி விரிவாக எடுத்துக்
கூறியுள்ளேன். இத்தகைய பாதிப்புகளை முழுவதும் சீர் செய்ய வேண்டுமென்றால்,
நிச்சயம் ஆறு மாத காலமாவது தேவை. ஆனால் எனது அரசு எடுத்த பெரு முயற்சியின்
காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரது இடைவிடாத
உழைப்பினால், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் தற்போது இயல்பு
நிலைக்கு திரும்பியுள்ளன. இதற்கு முன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட
புயலுடன் தற்போதைய புயலை ஒரு சிறு ஒப்பீடு செய்தால் “தானே” புயலின் தாக்கம்
எத்தகையது என்பதும் இந்த அரசின் துரித நடவடிக்கையும் இம்மாமன்ற
உறுப்பினர்களுக்கு தெளிவாக விளங்கும் என்று நம்புகிறேன்.
தி.மு.க. ஆட்சியில் 29.11.2000 அன்று கடலூருக்கு அருகில் 115 கிலோ மீட்டர்
வேகத்தில் புயல் கரையை கடந்தது. அந்தப் புயலில் சுமார் 9,200 எக்டேர்
பயிர்கள் தான் சேதமடைந்தன. 24 மின் மாற்றிகளும்; 4,329 மின் கம்பங்களும்
தான் சேதமடைந்தன. இந்த சேதங்கள் மார்ச் 2001-ல் தான் முழுமையாக
சீரமைக்கப்பட்டன. இதே போன்று, மீண்டும் தி.மு.க. ஆட்சியில் 27.11.2008-ல்
காரைக்காலுக்கு வடக்கே, மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில், “நிஷா” என்னும்
புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயலில் 11,600 மின் கம்பங்கள் தான்
சேதமடைந்தன. இந்த மின் கம்பங்களும், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை,
தர்மபுரி, வேலூர் என பரவலாக 11 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகும்.
இவைகள் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் சீர் செய்யப்பட்டன. இவைகளுடன்
ஒப்பிடும் போது, “தானே” புயலின் பாதிப்பு மிகவும் கடுமையானது ஆகும். இந்தப்
புயல் கடலூர், விழுப்புரம் என்ற இரண்டு மாவட்டங்களில் ஒட்டுமொத்த
கட்டமைப்பு சேதங்களை ஏற்படுத்திவிட்டது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல,
மாவட்டம் முழுமைக்கும், புதிதாக மின் இணைப்பு கொடுக்கப்படுவதைப் போன்ற ஒரு
பெரும் பணி போர்க்கால அடிப்படையில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது.
இத்தகைய ஒரு மிகப் பிரம்மாண்டப் பணி மிகக் குறுகிய காலத்தில்
செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் றந hயஎந
உசநயவநன ய சநஉடிசன. ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறோம். அரசின் இந்தப்
பணிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் பாராட்டுவீர்கள் என நான் நம்புகிறேன்.
இந்த புயலின் தாக்கம் மிகக் கடுமையானது என்பதை அரசியல் களும்
உணர்ந்துள்ளார்கள் என்றே நான் நம்புகிறேன். எனவே தான், கடலூர்
மாவட்டத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித் , அங்கே மின் அமைப்புகளை சீரமைக்க
ஆறு மாத காலமாவது ஆகும் என்று கூறியுள்ளார். அதே போன்று, கடலூர்
மாவட்டத்திற்கு சென்ற முன்னாள் முதலமைச்சரும் “இந்த மாதிரியான
காரியங்களில், இந்த மாதிரியான நேரங்களில், எந்த அரசாக இருந்தாலும், அந்த
அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சியின் பணி என்று
கருதுபவன் நான். எனவே, அந்தப் பணியை முறையாக செய்திருக்கிறேன்” என்று கூறி
அரசின் நிவாரணப் பணிகளுக்கு மறைமுகமாக நற்சான்றிதழ் வழங்கிவிட்டு, பின்னர்
சில நாட்கள் கழித்து, “அரசின் சார்பில் 850 கோடி ரூபாய் நிவாரணத்திற்காக
முதலமைச்சர் ஒதுக்கியதாக அறிவித்து அனைத்து ஏடுகளும் கொட்டை எழுத்துகளில்
வெளியிட்டுவிட்டன. மத்திய அரசிடம் 5,000 கோடி ரூபாய் தமிழகத்தின் சார்பில்
நிதி உதவி கேட்டுவிட்டார்கள். இது தான் புயல் மழை நிவாரணப் பணி!
இப்படியெல்லாம் அறிவித்துவிட்டால் மட்டுமே அது நிவாரணப் பணி நிறைவேறியதாக
ஆகிவிடுமா? சர்க்கரை என்று எழுதிக் காட்டினால் நாவில் இனிப்பு
வந்துவிடுமா?” என்று கூறியுள்ளார். எனது அரசு புயல் நிவாரணத்திற்காக பணம்
வழங்கியதோடு மட்டுமல்லாமல், நிவாரணப் பணிகளை எவ்வாறு விரைந்து மேற்கொண்டது
என்பதையும் இங்கே விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். அதற்காகத்தான் 2000
மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் வீசிய புயல்கள் குறித்தும் ஒப்பிட்டுள்ளேன்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 27.11.2008 அன்று “நிஷா” புயல் தாக்கத்தின்
போது கடலூர் மற்றும் விழுப்பரம் மாவட்டங்களில் மிகவும் கால தாமதமாகவே பயிர்
நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தைப்
பொறுத்தவரை, 2.3.2009 அன்று தான் பயிர் இழப்பீட்டுத் தொகைக்கான கடைசித்
தவணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. அதாவது
மூன்று மாதங்கள் கழித்தே பயிர் இழப்பீட்டுத் தொகை முழுவதுமாக
வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இன்னும் மிக கால
தாமதமாகத் தான் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. விழுப்புரம்
மாவட்டத்திற்கு, பயிர் சேத நிவாரண தொகையான 2 கோடியே 52 லட்சம் ரூபாய்
அரசால் 26.2.2010 அன்று, அதாவது 14 மாதங்களுக்குப் பின்னரே
வழங்கப்பட்டது. இதில், 1 கோடியே 40 லட்சம் ரூபாய் 6.8.2010 அன்றும்; 92
லட்சம் ரூபாய் 17.9.2010 அன்றும் தான் மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கிக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்த மக்கள், எந்த
அரசு துன்பப்படும் மக்களுக்காக விரைந்து பணிகளை செய்கிறது என்பதை நன்கு
அறிவார்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் தாக்கிய இரவு பிறந்ததால் குழந்தைகளுக்கு 'பாய்லின்' பெயர்
» சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் விண்ணப்பம்
» உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க சில திட்டங்கள் – ஜெ., அறிவிப்பு
» புயல் நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ. 500 கோடி- பிரதமர் அறிவிப்பு
» இலங்கையில், போர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum