Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்
4 posters
Page 1 of 1
சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்
வணக்கம்
நண்பர்களே, தள வாசகர்களே, தீபாவளிக்கு இன்னும் முழுதாய் இரண்டு நாட்கள்
இருக்கிறது ஆனாலும் வரும் நாட்களில் இந்த பதிவை எழுத முடியுமாவென சந்தேகம்
அது தான் முன் கூட்டியே உங்கள் அனைவருக்கும் தீபவாளி நல் வாழ்த்துகள்
பொதுவாக சந்தோஷ தருணங்களிலும் இது போன்ற விழா காலங்களிலும் கவணமாக இருக்க
வேண்டும், பொதுவாக தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசுகளும் நினைக்கு
வருவதை நம்மாள் தவிர்க்க முடியாது அதே நேரத்தில் தீபாவளி இரவு செய்திகளில்
தீபாவளி அன்று நடந்த வெடி விபத்துகளைய்ம் நாம் அவசியம் காண நேரிடும் காணும்
நேரத்தில் சிறிதாய் உச் கொட்டி விட்டு நம் சொந்த வேலையை பார்க்க தொடங்கி
விடுவோம் எந்தவொரு பிரச்சினையும் நமக்கு நேரடியாய் வரும் போதும்
அனுபவப்படும் போது மட்டுமே அதன் பாதிப்பும் வலியும் புரியும்.
இந்த
நேரத்தில் என் அருமை நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் தீபாவளி
வாழ்த்துகளை தெரிவிப்பதோடு கூடவே இலவசமாய் சில தகவல்களையும் அறிய தறுவது
என் கடமையென நினைக்கிறேன்.
உங்கள் கவணத்திற்கு...
கொடுத்துள்ளவை எல்லாம் சில விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த
பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்களை கருத்துரையில் பகிர்ந்துகொள்ளுங்கள்
எனக்கும் என்னைப்போல பிறருக்கும் உதவியாய் இருக்கும்.மீண்டும் ஒரு முறை தீபாவளி வாழ்த்துகள்.
நண்பர்களே, தள வாசகர்களே, தீபாவளிக்கு இன்னும் முழுதாய் இரண்டு நாட்கள்
இருக்கிறது ஆனாலும் வரும் நாட்களில் இந்த பதிவை எழுத முடியுமாவென சந்தேகம்
அது தான் முன் கூட்டியே உங்கள் அனைவருக்கும் தீபவாளி நல் வாழ்த்துகள்
பொதுவாக சந்தோஷ தருணங்களிலும் இது போன்ற விழா காலங்களிலும் கவணமாக இருக்க
வேண்டும், பொதுவாக தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசுகளும் நினைக்கு
வருவதை நம்மாள் தவிர்க்க முடியாது அதே நேரத்தில் தீபாவளி இரவு செய்திகளில்
தீபாவளி அன்று நடந்த வெடி விபத்துகளைய்ம் நாம் அவசியம் காண நேரிடும் காணும்
நேரத்தில் சிறிதாய் உச் கொட்டி விட்டு நம் சொந்த வேலையை பார்க்க தொடங்கி
விடுவோம் எந்தவொரு பிரச்சினையும் நமக்கு நேரடியாய் வரும் போதும்
அனுபவப்படும் போது மட்டுமே அதன் பாதிப்பும் வலியும் புரியும்.
இந்த
நேரத்தில் என் அருமை நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் தீபாவளி
வாழ்த்துகளை தெரிவிப்பதோடு கூடவே இலவசமாய் சில தகவல்களையும் அறிய தறுவது
என் கடமையென நினைக்கிறேன்.
உங்கள் கவணத்திற்கு...
- பட்டாசுகள் வாங்கும் போது அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் தரமுள்ள தயாரிப்புகளை பார்த்து வாங்கவும்.
- பட்டாசுகளை ஏதாவது ஒரு பெட்டியில் போட்டு குழந்தைகள் கையில் கிடைக்காதவாறும் அதிகமான வெப்பம் படாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள்.
- பட்டாசுகளை
கொழுத்தும் போது கவணமாக உடையணியவும் நீளமான உடைகள் அணிவதை தவிர்க்கவும்,
முடிந்தவரை பட்டாசுகள் கொழுத்தும் போது கதர் ஆடைகள் அணிவது நலம். - பட்டாசு
கொழுத்துவதற்கு நீளமான ஊதுபத்திகளை பயன்படுத்தவும். தீப்பெட்டி வைத்தோ
அல்லது சாட்டை திரி கொண்டோ கொழுத்த முயற்சிக்க வேண்டாம். - ஒரே
நேரத்தில் பல பட்டாசுகளை அடுத்தடுத்து கொழுத்த முயற்சிக்க வேண்டாம் கொஞ்சம்
தவறு நடந்து ஏதாவது ஒரு பட்டாசு வெடித்தால் அது தேவையில்லாத சங்கடத்தை
தந்துவிடும். - சாதரண வெடிகளாய் நினைக்க கூடிய சங்கு சக்கரம்
மற்றும் சாட்டை, கம்பி மத்தாப்பு போன்றவைகளை வீட்டின் உள்ளே கொழுத்த
வேண்டாம் சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகள் வெடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளவை. - பட்டாசுகளை
கொழுத்தும் போது மிக நெருங்கி இருந்து அல்லது அதனருகிலேயே அமர்ந்து கொண்டு
கொழுத்த முயற்சிக்க வேண்டாம் எப்போதும் தாங்கள் பட்டாசு தீ பிடித்தவுடன்
ஓடும் நிலையில் இருக்கவும். - பட்டாசுகளை கொழுத்தும் முன்
முடிந்த வரை அதன் நூல் திரியில் சுற்றி இருக்கும் வெள்ளை காகிதத்தை
ஓரளவிற்கு நீக்கியும் அதன் திரிகளில் உள்ள வெடிமருந்தை நீக்குவதன் மூலமும்
பட்டாசு திரியில் தீ வைத்தவுடன் உடனே வெடிக்க விடாமல் உங்களுக்கான
பாதுகாப்பான இடைவெளியை அதிகரிக்க செய்யமுடியும். - மிக நீளமான சர
வெடி வாலக்களை கொழுத்தும் போது மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் ஆட்கள்
இல்லாத இடத்தை தெரிவு செய்து கொழுத்துதல் நலம் பொதுவாக சர வெடி வாலாக்கள்
பலமுனையில் தெரித்து விழும் வாய்ப்பு கொண்டது. - ராக்கெட்
பட்டாசு கொழுத்தும் போது நேர் நிலையில் இருக்கட்டும் சாய்வான நிலையிலோ
அல்லது படுக்க வைத்த நிலையிலோ கொழுத்த வேண்டாம், அதே போல புஸ்வானம்
கொழுத்தும் போதும் நேரான நிலையில் வைத்தே கொழுத்தவும் சில நேரஙகளில்
புஸ்வானம் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது கவணம் தேவை. - எந்த
காரணத்தை கொண்டும் சிறு குழந்தைகளை பட்டாசுகளின் தலையில் தீ வைக்க
அனுமதிக்க வேண்டாம், அவர்களை பயமுறுத்துகிறேன் என்றோ அல்லது
சந்தோஷபடுத்துகிறேன் என்றென்றி அவர்களை அருகிலோ அல்லது தூக்கி
வைத்துக்கொண்டு பட்டாசுகளை கொழுத்த வேண்டாம. உங்களின் கால் இடறல் கூட
தேவையில்லாத சங்கடத்தை உருவாக்கி விடும். - பட்டாசுகளை உங்கள்
சட்டை டவுசர்களில் போட்டுக்கொண்டே பட்டாசு கொழுத்துவது சரியானதல்ல அவசியம்
இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் கவணம் தேவை. - கைகளில்
பிடித்துக் கொண்டு பட்டாசுகளை கொழுத்த வேண்டாம் பாட்டில்கள் அல்லது
கொட்டாச்சி மூடிகள் போன்றவற்றில் உள்ளே வைத்தோ அல்லது அதை கொண்டு மூடி
வைத்தோ தயவு செய்து பட்டாசு கொழுத்த வேண்டாம் வெடித்து சிதறும் போது
காயங்களை ஏற்படுத்தி விடும். - பட்டாசு ஏதாவது ஒன்றை கொழுத்தி
அது வெடிகாத போது உடனே அதனருகில் சென்று பார்க்க வேண்டாம் குறைந்தது
10முதல் 15 நிமிடம் வரையாவது அதன் அருகில் செல்லாதீர்கள். - அதிக
சத்தம் கொடுக்கும் வகையிலான பட்டாசுகள் கொழுத்தும் போது முடிந்தவரை உங்கள்
காதுகளில் பஞ்சு வைத்து அடைப்பது நலம் நம் செவியானது சாதராணமாக 65 முதல்
85 வரையிலான டெசிபல் சப்தங்களை மட்டுமே தாங்கவல்லது அதற்கு மேலான சத்தம்
உங்கள் காதுகளை கேட்க விடாமல் செய்து விடும். - உங்களுடைய
குழந்தைகள் பட்டாசு கொழுத்தி முடித்து சாப்பிட உட்காரும் முன் அவசியம்
அவர்களின் கைகளை சோப்பு போட்டு சுத்தமாய் கழுவி விட வேண்டியது
பெற்றோர்களின் கடமை அவசியம் உங்கள் குழந்தைகளை கவணிக்க
வேண்டும்.குழந்தைகளுக்கு தெரியாது பட்டாசு மருந்து ஒரு விஷம் என்பது அதனால்
அவர்களை கவணித்து கை கழுவாமால் எதையும் எடுத்து சாப்பிட விடாதிர்கள். - கொஞ்சம்
நடைமுறைக்க ஒவ்வாத விஷயங்கள் போல தோனாலம் ஆனாலும் பட்டாசு கொழுத்தும் போது
இரண்டு பக்கெட் தண்ணீர் தேவைப்பட்டால் எடுக்கும் நிலையில் இருக்கட்டும்.
எதிர்பாராத அசம்பாவிதங்களை தவிர்க்க உதவும். - எதிர்பாராத விதமாக
உடையில் தீ பிடித்தால் உடனே உடையை களைய முயற்சி செய்யுங்கள் மாறாக
போர்வையை கொண்டோ சாக்கு கொண்டோ மூடி அனைக்க முயற்சிக்க வேண்டாம் ஒரு வேளை
அது மேலும் பிரச்சினையை தரலாம். எதுவாக இருந்தாலும் எரியும் தீயின் தன்மையை
பொருத்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு புத்திசாலிதனத்துடன் செயல்படுங்கள்.
கொடுத்துள்ளவை எல்லாம் சில விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு தெரிந்த
பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்களை கருத்துரையில் பகிர்ந்துகொள்ளுங்கள்
எனக்கும் என்னைப்போல பிறருக்கும் உதவியாய் இருக்கும்.மீண்டும் ஒரு முறை தீபாவளி வாழ்த்துகள்.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்
மிகவும் உபோயோகமான பதிவு. அனைவரும் இதை படித்து பயன் பெறலாம். நம்ம யூஸ்தமிழ்.காம் குடும்பத்தினர்களுக்கு என் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வையகம்.
ram73- பண்பாளர்
- Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை
Re: சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்
ram73 wrote:மிகவும் உபோயோகமான பதிவு. அனைவரும் இதை படித்து பயன் பெறலாம். நம்ம யூஸ்தமிழ்.காம் குடும்பத்தினர்களுக்கு என் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வையகம்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: சந்தோஷ தீபாவளி வாழ்த்துகளும் பட்டாசுகளுக்கான முன்னெச்சரிக்கையும்
தீபாவளி என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான்... வானைப் பிளக்கும் வெடிச்சத்தமும், வண்ண வண்ண ஒளிகளை உமிழ்வதும் என்று ஏராளமான பட்டாசுகள் விற்பனைக்கு வருகின்றன.
பட்டாசுகளை
வெடித்து அதில் வரும் சப்தமும், ஒளியும் நம்மை
மகிழ்ச்சிக்குள்ளாக்கினாலும், எதிர்பாராத விதமாக அதனால் ஒருசில
விபத்துக்களும் நிகழ வாய்ப்புண்டு.
எனவே பட்டாசுகளை கொளுத்தும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும். இவை எல்லாமே உங்களுக்குத் தெரியும்தான். எனினும் ஒரு சில குறிப்புகள்...
குழந்தைகள்.....
மிக பாதுகாப்பான இடத்தில் பட்டாசுகளைக் கொளுத்தவும்.
கொளுத்துவதற்காக வைத்திருக்கும் பட்டாசுகளில் இருந்து 25 அடி தூரத்தில்தான் நீங்கள் பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.
எரியாத,
வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்க முயல வேண்டாம். அதனை
பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டு அல்லது தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில்
பட்டாசுகளை வெடிக்கவும்.
பட்டாசுகளை வெடிக்கும் இடத்தில் ஒரு வாலி நிறைய தண்ணீரை வைத்துக் கொள்வது நல்லது.
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வெடிகளைக் கொளுத்த முயற்சிக்க வேண்டாம்.
பட்டாசில் தீயை வைத்ததும் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து விடவும். நீங்கள் வீரர், வீராங்கனைகள்தான் அதனை அங்கே நிரூபிக்க வேண்டாம்.
சில
சமயங்களில் புஸ்வானம், சங்கு சக்கரங்கள் கூட வெடிக்கின்றன. எனவே எதுவாக
இருந்தாலும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் இனிய தீபாவளியாக அமையும்.
ஒரு
வேளை உங்கள் ஆடையில் நெருப்புப் பற்றிக் கொண்டால் அலறாமல், பயப்படாமல்
உடனடியாக கீழே படுத்து உருளுங்கள். உங்கள் முகங்களை கைகளால் மூடிக் கொண்டு
நெருப்பு அணையும் வரை உருளுங்கள்.
கொளுத்திய சுஸ்ரவத்தி கம்பி, சங்கு சக்கர வில்லைகளை நீர் நிரப்பிய பாத்திரத்தில் போடவும். எரிந்து முடிந்ததும் கீழே போட்டுவிட்டு அதை மிதித்து தீப்புண்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
பட்டாசுகளை
வெடித்து அதில் வரும் சப்தமும், ஒளியும் நம்மை
மகிழ்ச்சிக்குள்ளாக்கினாலும், எதிர்பாராத விதமாக அதனால் ஒருசில
விபத்துக்களும் நிகழ வாய்ப்புண்டு.
எனவே பட்டாசுகளை கொளுத்தும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும். இவை எல்லாமே உங்களுக்குத் தெரியும்தான். எனினும் ஒரு சில குறிப்புகள்...
குழந்தைகள்.....
மிக பாதுகாப்பான இடத்தில் பட்டாசுகளைக் கொளுத்தவும்.
|
எரியாத,
வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்க முயல வேண்டாம். அதனை
பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டு அல்லது தற்காலிகமாக வேறு ஒரு இடத்தில்
பட்டாசுகளை வெடிக்கவும்.
பட்டாசுகளை வெடிக்கும் இடத்தில் ஒரு வாலி நிறைய தண்ணீரை வைத்துக் கொள்வது நல்லது.
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வெடிகளைக் கொளுத்த முயற்சிக்க வேண்டாம்.
பட்டாசில் தீயை வைத்ததும் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து விடவும். நீங்கள் வீரர், வீராங்கனைகள்தான் அதனை அங்கே நிரூபிக்க வேண்டாம்.
சில
சமயங்களில் புஸ்வானம், சங்கு சக்கரங்கள் கூட வெடிக்கின்றன. எனவே எதுவாக
இருந்தாலும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் இனிய தீபாவளியாக அமையும்.
ஒரு
வேளை உங்கள் ஆடையில் நெருப்புப் பற்றிக் கொண்டால் அலறாமல், பயப்படாமல்
உடனடியாக கீழே படுத்து உருளுங்கள். உங்கள் முகங்களை கைகளால் மூடிக் கொண்டு
நெருப்பு அணையும் வரை உருளுங்கள்.
கொளுத்திய சுஸ்ரவத்தி கம்பி, சங்கு சக்கர வில்லைகளை நீர் நிரப்பிய பாத்திரத்தில் போடவும். எரிந்து முடிந்ததும் கீழே போட்டுவிட்டு அதை மிதித்து தீப்புண்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
» தீபாவளி கோலங்கள்
» தீபாவளி வந்துருச்சு
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி - காணொளி-
» தீபாவளி கோலங்கள்
» தீபாவளி வந்துருச்சு
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி - காணொளி-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|