TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாடி வீட்டு மனிதருக்கு காற்றை வடி கட்டி சுவாசிக்க தரும் மகாகோனி மரம்

Go down

மாடி வீட்டு மனிதருக்கு காற்றை வடி கட்டி சுவாசிக்க தரும் மகாகோனி மரம்  Empty மாடி வீட்டு மனிதருக்கு காற்றை வடி கட்டி சுவாசிக்க தரும் மகாகோனி மரம்

Post by mmani Wed Aug 03, 2011 3:00 pm

மாடி வீட்டு மனிதருக்கு காற்றை வடி கட்டி சுவாசிக்க தரும் மகாகோனி மரம்  MahakoniTree
மகாகோனி மரம்
எங்கு நோக்கினும் இப்போது மரம் வளர்ப்பு
விழிப்புணர்வு பெருகி வருகிறது. பொதுவாக மரங்களினால் பல்வேறு பயன்கள்
என்றாலும், சில மரங்கள் பொருளாதார ரீதியாக அதிக பயனை தருகிறது. உதாரணமாக மா
மரத்தை எடுத்து கொள்வோம்.சீசனில் ஏராளமான மாம்பழங்களை தரும்.நமக்கு
மாம்பழங்களை கடையில் வாங்கும் செலவு மிச்சம்.



இது போல் ,மனிதனுக்கு
ஆதிகாலத்திலிருந்து மரங்கள் குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல்
தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, காய்கள், பழங்கள் தரும் உணவு பயிராக என்று
எத்தனையோ வழிகளில் பயனுள்ளதாக இருந்து வந்திருக்கின்றன. மரங்கள் இல்லாமல்
மனித வாழ்க்கை இல்லை என்பது தான் உண்மை நிலை.



விலை உயர்ந்த மரங்கள்
எத்தனையோ
பயன்பாடுகள் இருந்தாலும், கட்டிடங்கள் கட்டும் போது நிலைக்கதவுகள்,
ஜன்னல்கள் வடிவமைக்க நீடித்து உழைக்கக்கூடிய, பார்ப்பதற்கு அழகாக காட்சி
தரும் தேக்கு, ரோஸ்வுட் மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
படாக் மரங்கள் போன்ற விலை உயர்ந்த மரங்கள் தான் பெருமளவில்
பயன்படுத்தப்படுகின்றன.



தமிழ்நாட்டில் லட்சக்கணக்கிலான
எக்டரில் தரிசுநிலங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் எல்லாம்
குறிப்பிடத்தக்க பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்தால் இறக்குமதி மரங்களுக்கு
அவசியம் இருக்காது. கூடவே மரங்கள் அதிகமாக வளர்க்கும் போது மழை பொழிவும்
அதிகம் ஏற்படும். விவசாயம் செழிக்கும்.



மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த
விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் நிலங்களில்
நல்ல லாபம் தரும் மரங்களை நட்டு வளர்த்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் நல்ல
லாபத்தை தரும். இந்த மரங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதும்
முக்கியம்.



மகாகொனி மிலியேசி
இப்படி
விவசாயிகளுக்கு வளம் தரும் மரங்களில் ஒன்றாக இருப்பது தான் மகாகொனி
மிலியேசி. மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்டது இந்த மரம். டொமினிக்
ரேபுப்ளிக் என்ற சிறிய நாட்டின் தேசிய மரம் வேறு. இது தற்போது அழியும்
நிலையில் உள்ள மரங்களின் பட்டியலில் இருப்பது தான் வேதனை.



இந்த மரம் முதன்முதலாக இந்தியாவை ஆண்ட
கிழக்கிந்திய கம்பெனியர்களால் ஜமைக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு
கல்கத்தாவில் உள்ள தாவரவியல் தோட்டத்தில் வளர்க்கப்பட்டன. பின்னர்
சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சென்னை தோட்டக்கலை துறை சொசைட்டியில் நாற்று
விடப்பட்டது.



அடையாறு தியாசபிகல் சொசைட்டி மற்றும்
ஒரு சில இடங்களிலும், உளுந்தூர் பேட்டை வனத்துறை அலுவலகம், சித்தேரி
வனத்துறை ஓய்வூதிய இல்லம் என்றும் சில இடங்களில் நடப்பட்டன. ஆனால் இந்த
மரங்கள் பரவலாக வளர்க்கப்படவில்லை. மகாகொனி மரம் 4.5 மீட்டர் சுற்றளவுடைய
அடிமரத்துடன், 25 மீட்டர் உயரத்திற்கு வளரும் இயல்புடையது. இலையுதிர்
மரவகையை சேர்ந்த இந்த மரம். மரத்தின் உச்சியில் கிளைகளை பரப்பிக் கொண்டு
910 மீட்டர் சுற்றளவுக்கு தழையமைப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும். இதன்
மரப்பட்டைகள் சிவப்பு கலந்த கருமைப்பட்டையுடன் இருக்கும்.


பயிரிட
வேப்ப
மரத்தின் இலையை போன்று கூட்டிலை உடையது. ஏப்ரல் மாதத்தில் மகாகொனி மரம்
பூக்கும். 3.5 மீ நீளக் காம்புடைய பூங்கதிர்கள் 8 செ.மீ நீளத்தில்
இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த மரம் ஆண்டிற்கு 1000
மில்லி மீட்டர் மழை அளவு பெறும் இடங்களில் நன்றாக வளரும். வடிகால் திறனும்,
ஆழமான மண்கண்டமும் உள்ள இடங்கள் மககொனி வளர்க்க சிறந்த இடங்கள். மற்ற
மரங்களை விட மககொனி மரத்திற்கு சத்து அதிகம் கொண்ட மண்வாகு தேவைப்படும்.



தமிழ்நாட்டில் ஒரளவு நீர்செழிப்புள்ள
இடங்களில் பயிரிடலாம். மதுரை மாவட்டத்தின் வைகை ஒடிவரும் நீர்பிடிப்பு
பகுதிகள் (ஆற்றுப்படுகைகள்) உள்பட நீர்செழிப்புள்ள மேட்டுப்பாங்கான இடங்கள்
ஏற்றவை. செவ்வல் கண்மாய் கரைகளும் ஏற்றவை. தனியார் தோட்டங்களில்
காற்றுத்தடுப்பு வரிசைகளில் நடலாம். நகரங்களில் அதிக மழையுடைய பகுதிகளில்
கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். மாடிகளில்
உள்ளவர்களுக்கு காற்றை வடிகட்டி கொடுக்கும்.



நல்ல மகாகொனி மரம் உருவாக 20 ஆண்டுகள்
பிடிக்கும். நடும் பொழுது 6 6 மீட்டர் இடைவெளியில் நடலாம். பின்னர் களைகளை
நீக்கி கொத்திக் கொடுக்க வேண்டும். நிழல் உள்ள இடங்களில் நட்டால் வளர்ச்சி
குன்றிவிடும். பாசனமளித்தால் கன்றுகளில் 90 சதவீதம் துளிர்த்து விடும்.
இரண்டு ஆண்டுகளில் 96 செ.மீட்டர் அளவிற்கு உயர்ந்து வளரும். எனவே பாசனமுள்ள
இடங்களில் தொடக்க காலத்தில் நீர் ஊற்றி வளர்ப்பது நல்லது.



பதனப்படுத்த
20
முதல் 40 ஆண்டுகளில் செழிப்பாக வளர்ந்து விடும் மரத்தை, இலகுவாக
பதனப்படுத்தலாம். காற்றில் உலரவிட்டாலே பதனப்படும். காளவாய் முறையிலும்
பதனப்படுத்தலாம். சாதாரணமாக, வெடிப்போ சுருக்கமோ ஏற்படுவதில்லை. நீடித்து
உழைக்கக்கூடியதுகரையான்களும் அரிப்பதில்லை. கைக்கருவிகளால் நன்றாக
இழைக்கலாம். பாலிஷ் ஏற்ற வலுவான மரம். சிவப்புக்கருமை நிறத்தையுடைய இந்த
மரம் தங்கத்தின் பளபளப்புடன் காணப்படும். ஒரு கனமீட்டர் மரத்தின் எடை
சுமார் 750 கிலோ இருக்கும்.



இந்த மரத்தை அழகிய வேலைப்பாடுகள் உள்ள
மேஜை, நாற்காலிகள், சட்டமிட்ட கதவுகள், பீரோக்கள் மற்றும் பல
கடைசல்களுக்கும் ஏற்றது. இசைக்கருவிகள் செய்ய ஏற்றது. கப்பல்
கட்டுவதற்கும், பல வகையான கட்டுமான பொருட்கள் செய்வதற்கும், பென்சில்
செய்வதற்கும் கூட ஏற்ற மரம் இது.



என்றைக்கும் நல்ல வளர்ச்சியுள்ள
கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் மர விவசாயம்
எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
இந்த மரம் பற்றி விவரங்கள் அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள வனத்துறை
அலுவலங்களை அணுகலாம்.



விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Mahogany
இந்த மரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு மகாகோனி மரம் நடுங்கள்.
நன்றி :பசுமை இந்தியா
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
» மாசில்லாத காற்றை சுவாசிக்க வேண்டுமா? செண்பக மரங்கள் வளருங்கள்!
» 15 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 30 மாடி ஹோட்டல்! சாதித்த சீனா
» வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம்.
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum