TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உண்மையை வெளிக் கொண்டுவர சிறிலங்கா அரசு விரும்பாது

Go down

உண்மையை வெளிக் கொண்டுவர சிறிலங்கா அரசு விரும்பாது Empty உண்மையை வெளிக் கொண்டுவர சிறிலங்கா அரசு விரும்பாது

Post by piraba Tue Aug 02, 2011 7:38 am

உண்மையை வெளிக் கொண்டுவர சிறிலங்கா அரசு விரும்பாது Action

படுகொலை செய்யப்பட்ட ACF
பணியாளர்களின் குடும்பத்தினரில் சிலர் தமது இரத்த உரித்துகள் மீது
மேற்கொள்ளப்பட்ட அநீயை மறக்க நினைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஏனைய
குடும்பத்தவர்கள் சிலர் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறார்கள். இவ்வாறு சண்டேலீடர் வார ஏட்டில் அப்துல் எச்.அசீஸ்
எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா
இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற
போரின் போது 2006 ஆகஸ்ட் 04ம் நாள் ACF என அழைக்கப்படும் பட்டினிக்கு
எதிரான அமைப்பில் (Action Contre La Faim) பணியாற்றிய 17 பேர் மூதூரில்
வைத்து கொலை செய்யப்பட்டனர்.

இளம் வயதில் உயிர்களைப் பறிகொடுத்த இந்தப் பணியாளர்கள் 24 வயது தொடக்கம் 54 வயதிற்குட்பட்டவர்களாவர்.

இவர்களில் 04 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்கியிருந்ததுடன், 11 பேர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது மிக மோசமான போர்க்குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த
மனிதப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த போதிலும்
இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னமும் நீதியின் முன்
நிறுத்தப்படவில்லை.

இந்தக் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள்
இதுவரையில் மூன்று தடவைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எந்தவொரு சாதகமான
தீர்வும் கிடைக்கவில்லை.

இதன் பின்னர் 2008 இல் சிறிலங்காவை விட்டு
வெளியேறிய ACF தனது பணியாளர்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தினரின் கொலை
வெறித் தாக்குதலைக் கண்டித்து அனைத்துலக அரங்கில் பரப்புரைகளை மேற்கொண்டது.


இதன் விளைவாக 2009 இல் இது தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு ACF அழைக்கப்பட்டது.

அதேவேளை சிறிலங்காவிலும் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

மூதூரில்
படுகொலை செய்யப்பட்ட ACF இன் 17 பணியாளர்களின் குடும்பங்கள் சார்பாக
சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் முன் வாதிடுகின்றவரும் -ACF சார்பாக
குற்றவியல் நீதிமன்றங்களில் வாதிடுபவருமான சட்டவாளர் கே.இரத்தினவேல்
சண்டேலீடர் இடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீட்டால் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகிறது.

இந்த
மனிதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்தால்
அலட்சியம் செய்யப்படுகின்றன. அத்துடன் அவை புறக்கணிக்கப்படுகின்றன.

உண்மையில்
என்ன நடந்தது என்பது தொடர்பாக கொல்லப்பட்ட பணியாளர்களின் குடும்ப
உறுப்பினர்களில் பலருக்குத் தெரியும். அவர்கள் இந்த வழக்கு விசாரணைக்கான
மிக முக்கிய சாட்சியங்களாக உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட
பணியாளர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்கள் பலர் சிறிலங்காவில் வாழ முடியாத
காரணத்தினால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களுடன்
ஒளித்தோற்ற கருத்தாடலை (video conferencing) மேற்கொள்வதற்கான நிதி
வழங்கப்படவில்லை“ என்றும் சட்டவாளரான இரத்தினவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

“சட்டமா
அதிபர் ஒருபுறம் அரச வழக்கறிஞராகவும் மறுபுறம் இந்தப் படுகொலையுடன்
சம்பந்தப்பட்ட ஆயுதப்படைகளைக் காப்பாற்றுபவராகவும் இரு முரண்பட்ட
செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.

சட்டமா அதிபர் தனது சொந்த நலனில் அதிகம் கவனம் செலுத்துகிறார்“ என்றும் சட்டவாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

படுகொலை
செய்யப்பட்ட ACF பணியாளர்களின் குடும்பத்தினரில் சிலர் தமது இரத்த
உரித்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீயை மறக்க நினைக்கிறார்கள்.

இதில் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பத்தவர்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

மூதூரில்
இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் போது ACF வளாகத்தில் துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொல்லப்பட்ட 28 வயதுடைய திருமணமாகாத கோவர்த்தனி
கனகரட்ணம் என்பவரின் சகோதரியான மகிந்தனா வசந்தன் என்பவர்-

“எனது
சகோதரியின் படுகொலை தொடர்பாக நீதி கிடைக்கும் என நாம் நம்பவில்லை. ACF இந்த
நாட்டை விட்டு வெளியேறிய போது எம்மிடம் இருந்த இறுதி நம்பிக்கையையும்
நாம் இழந்துவிட்டோம்.

எனது சகோதரி கொலை செய்யப்பட்ட பின்னர்
உடனடியாக எமது வீட்டிற்கு வந்த சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவானது
எம்மை விசாரணை செய்தனர்.

அதன் பின்னர் பிறிதொரு விசாரணைக்காக எம்மை கொழும்பு வருமாறு அழைத்தார்கள்.

நாம்
விசாரணைக்காக கொழும்பு சென்ற போதிலும், இது தொடர்பாக எம்மை
காவற்துறையினரோ அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரோ எம்மிடம் எந்தவொரு
விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை' எனத் தெரிவித்தார்.

இந்தச்
சம்பவத்தின் போது இராசையா துரைராஜாவின் ஒரேயொரு மகனான 27 வயதான பிரதீபன்
என்பவர் கொல்லப்பட்டார். இவரது மகள் சிறிலங்காவை விட்டு வெளியேறி தற்போது
பிரிட்டனில் வசிக்கிறார்.

“2008 ஏப்ரல் 01 அன்று எமது மகனின் கொலை தொடர்பாக விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவினர் எம்மை அழைத்திருந்தனர்.

அதன் பின்னர் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நாம் எந்தவொரு தகவல்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

2009
இல் இந்த ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது என்பதை பி.பி.சி செய்தியின்
மூலம் தெரிந்து கொண்டோம்“ என்று துரைராஜா தெரிவித்துள்ளார்.

தனது
மகனின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என இவர் ஆவலாக உள்ள போதிலும், ACF
சிறிலங்காவை விட்டு வெளியேறிய பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணைகள்
எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாது உள்ளது.

சிறிலங்கா அதிபர்
ஆணைக்குழுவானது இந்தப் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும்
இன்னமும் இது தொடர்பான அறிக்கையை வெளியிடவில்லை.

இது ஒருபோதும் நடைபெறாது என்பது சட்டவாளர் இரத்தினவேலின் கருத்தாகும்.

'சிறிலங்கா
அரசாங்கமானது உண்மையை வெளிக் கொண்டு வருவதில் பெரிதும் விருப்பத்தைக்
காட்டமாட்டாது' எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஏக்கத்துடன் காத்திருக்கும் சிறிலங்கா அரசு!
» சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது
» தமிழர் தாயகத்தில் கனிம வளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசு
» கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரவரலாறு படைத்து காவியமான 14 நிழற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» உண்மையை ஊமையாக்காதே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum