TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர் கிடையாது : காற்றில் பறந்த ஹசாரேவின் யோசனைகள்

Go down

லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர் கிடையாது : காற்றில் பறந்த ஹசாரேவின் யோசனைகள்  Empty லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர் கிடையாது : காற்றில் பறந்த ஹசாரேவின் யோசனைகள்

Post by ஜனனி Fri Jul 29, 2011 9:01 am

புதுடில்லி: லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்
அளித்தது. இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமரும், நீதித்துறையில் உயர் பதவி
வகிப்பவர்களும் கொண்டு வரப்படவில்லை. சமூக சேவகர் அன்னா ஹசாரே அளித்த
ஜனலோக்பால் வரைவு மசோதாக் கருத்துக்கள் ஒன்றிரண்டு தவிர மற்றவை
எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க
வேண்டும் என வலியுறுத்தி, சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே
உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து, லோக்பால் வரைவு மசோதாவை தயாரிக்க
மத்திய அமைச்சர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு
அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், மசோதா தயாரிப்புப் பணியில்
ஈடுபட்டிருந்த போது, "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர
வேண்டும்' என, சமூக பிரதிநிதிகள் தரப்பினர் வலியுறுத்தினர். இதற்கு அரசு
தரப்பு பிரதிநிதிகளான மத்திய அமைச்சர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், மசோதா தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரும்
தனித்தனியாக தங்கள் தரப்பு கருத்துக்கள் அடங்கிய மசோதாவை தயாரித்து
அளித்தனர். இதையடுத்து, இரு தரப்பினரும் தெரிவித்த யோசனைகள் அடிப்படையில்,
லோக்பால் வரைவு மசோதா ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த வரைவு
மசோதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்
நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி
கூறியதாவது:
லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது. இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமரும், நீதித்துறையில் உயர்
பதவி வகிப்போரும் இடம் பெறவில்லை. மேலும், பார்லிமென்டில் எம்.பி.,க்களின்
நடத்தை தொடர்பாகவும் லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியாது. அன்னா ஹசாரே
தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த ஜன் லோக்பால் மசோதாவில் இடம் பெற்றிருந்த
சில விதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எந்த ஒரு மத்திய
அமைச்சரிடமும் அல்லது குரூப் "ஏ' அதிகாரிகளிடமும் எந்தவிதமான முன்
அனுமதியும் பெறாமல், லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தலாம்.

பெருந்தன்மை:
பிரதமர் அலுவலகத்தையும், லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்
என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். பெருந்தன்மையுடன் அவர் இதைத்
தெரிவித்தாலும், மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி
பிரதமரையும், அவரது அலுவலகத்தையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு
வந்தால், அரசின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும்
அமைச்சர்கள் தெரிவித்தனர். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட்
முதல் தேதி துவங்குகிறது. அந்தக் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களில்,
லோக்பால் மசோதா அறிமுகம் செய்யப்படும். லோக்பால் சட்டத்தின்படி, அமைக்கப்பட
உள்ள லோக்பால் அமைப்பானது ஒரு தலைவரையும், எட்டு உறுப்பினர்களையும்
கொண்டிருக்கும். உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறையுடன்
தொடர்புடையவர்களாக இருப்பர். இந்த அமைப்பு சொந்தமாகவே வழக்கு பதிவு
செய்து, விசாரணை நடத்தும் என்பதால், அதற்கு தேவையான அலுவலர்கள் மற்றும்
அதிகாரிகளைக் கொண்டிருக்கும்.
லோக்பால் அமைப்பின் ஒரு தலைவரின் கீழ்
மொத்தம் எட்டுபேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். உறுப்பினர்களில்
பாதிப்பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாகவும், மீதிப்பேர், 25 ஆண்டுகளாக
பொதுவாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவர்களாகவும், கணக்கு வழக்கு விவரங்களை
அறிந்தவர்களாகவும் இருப்பர். பிரதமர் தலைமையிலான குழுவினர்தான் லோக்பால்
விசாரணை அமைப்பை உருவாக்குவார்கள். இந்த அமைப்பில் லோக்சபா சபாநாயகர்,
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்,ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர், மத்திய
அமைச்சர் ஒருவர்,சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஐகோர்ட் நீதிபதி, நீதித்துறை
வல்லுனர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். லோக்பால் அமைப்பின் தலைவராக
ஆவதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள்
நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஐகோர்ட் நீதிபதி ஆகியோர்
தகுதிபடைத்தவர்கள் ஆவர். பிரதமர் பதவியில் இருப்போருக்கு எதிராக ஊழல்
புகார் கூறப்பட்டால், லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியாது. அதே
நேரத்தில், அவர் பதவி விலகிய பின்னர் விசாரணை நடத்தலாம்.
அமைச்சர்கள்,
எம்.பி.,க்கள், குரூப் "ஏ' அதிகாரிகள் மற்றும் இதற்கு சமமான அந்தஸ்து
கொண்ட, பார்லிமென்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட
தன்னாட்சி அமைப்புகளில் அல்லது ஆணையங்களில் அல்லது கழகங்களில் பணியாற்றிய
நேர்மையான அதிகாரிகளும் நியமிக்கப்படுவர். இவர்கள் மீது வழக்கு தொடர,
யாரிடமும் முன் அனுமதி பெறாமல், லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தலாம். ஊழல்
செய்தவர்கள் முறைகேடான வகையில் சொத்து சேர்ந்திருந்தாலும், அதை பறிமுதல்
செய்யும் அதிகாரமும் லோக்பால் அமைப்புக்கு உண்டு.
இவ்வாறு அம்பிகா சோனி
கூறினார். மேலும், லோக்பால் அமைப்பு மீது புகார் வந்தால், அதற்கு
தீர்வுகாணும் முடிவு ஜனாதிபதி கையில் இருக்கும் என்றும்
கூறப்பட்டிருக்கிறது.

"நாட்டை ஏமாற்றும் செயல்' : ""லோக்பால்
மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது நாட்டை ஏமாற்றும்
செயல்,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண்பேடி கூறியுள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அவர் மேலும் கூறியதாவது : ""தற்போதைய
லோக்பால் மசோதா நிறைவேறினால், அது மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்பை
ஏற்படுத்தும். லோக் ஆயுக்தா அமைக்க திட்டமிட்டுள்ள மாநிலங்கள், அந்த
அமைப்பின் விசாரணை வரம்பில் இருந்து மாநில முதல்வரை நீக்கி விடும்,''
என்றார். லோக்பால் வரைவு மசோதா கூட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான
சந்தோஷ் ஹெக்டே கூறுகையில், ""மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள
லோக்பால் வரைவு மசோதாவில், அன்னா ஹசாரே தலைமையிலான சமூக பிரதிநிதிகள்
தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் இடம் பெறவில்லை. நாங்கள்
கேட்டபடி மசோதா இல்லை. இது பலமான லோக்பால் மசோதாவாக இருக்காது. கடந்த 44
ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு விரும்பவில்லை. இப்போதும்
பலவீனமான மசோதாவையே கொண்டு வந்துள்ளது,. இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே
கூறினார்.

லோக்பாலை கலைக்கும் அதிகாரம் யாருக்கு? : லோக்பால்
அமைப்பின் தலைவரை நீக்க வேண்டுமெனில் அதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டிற்கு,
ஜனாதிபதி தரப்பில் இருந்து பரிந்துரை அளிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்
நன்கு விசாரித்து, ஜனாதிபதிக்கு பதில் அனுப்பி வைக்கும். அதன் பிறகு
ஜனாதிபதியே லோக்பால் அமைப்பின் தலைவரை நீக்குவதற்குரிய தகுதிபடைத்தவராவார்.
இந்த லோக்பால் மசோதவின்படி, ஊழல் நடந்த ஏழு ஆண்டுகளுக்குள் விசாரணை
நடத்தியாக வேண்டும். பிரதமர் தனது பதவியை விட்டு இறங்கியவுடன் அவர் மீது
விசாரணை நடத்தலாம். வரும் மழைக்கால கூட்டத்தொடரின்போது, பார்லிமென்டில்
இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். பின், பார்லிமென்டின் நிலைக்குழுவின்
பரிசீலனைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டியின்போது
அன்னா ஹசாரே குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் சல்மான்
குர்ஷித், "இதுவரை அரசாங்கத்தை மட்டுமே அவர் எதிர்த்து வந்தார். இதற்கு
பிறகும் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை துவங்குவார் என்றால், அவர்
ஒட்டுமொத்த பார்லிமென்ட் அமைப்பின் அதிகாரத்தையே எதிர்க்கிறார் என்று
அர்த்தம்' என்றார்.

ஆகஸ்ட் 16ம் தேதி முதல் போராட்டம் : அன்னா ஹசாரே :
""வலுவற்ற லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை
கண்டித்து, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்,'' என,
சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
கம்பெனிகளுக்காக வலுவற்ற லோக்பால் மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் மக்களை முட்டாளாக்க முற்பட்டுள்ளது. தற்போதைய வடிவில் இந்த
மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு
தொடரப்படும். வலுவற்ற லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்ததை கண்டித்து, ஆகஸ்ட் 16ம் தேதி முதல், டில்லி ஜந்தர் மந்தரின்
உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். இது, ஹசாரேயின் போராட்டம் அல்ல. ஒட்டு
மொத்த நாட்டின் போராட்டம். இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின்
அவசியத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அனைவரும் வீதிகளுக்கு வந்து
போராட வேண்டும். இவ்வாறு ஹசாரே கூறினார். லோக்பால் வரைவு மசோதா குழுவில்
இடம் பெற்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், ""சிவில் சமூக
பிரதிநிதிகள் எழுப்பிய பல விஷயங்கள் லோக்பால் மசோதாவில் இடம்பெறவில்லை.
லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து பிரதமரை நீக்கி அரசு எடுத்த முடிவு,
கோர்ட்டின் பரிசீலனைக்கு வரும்போது நிற்காது. இந்த மசோதாவை நிச்சயம்
சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்யும்,'' என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர், மாநில முதல்–மந்திரிகள்: புதிய லோக்பால் மசோதாவில் முக்கிய அம்சங்கள்
» விமானிகள் கவனக்குறைவால் 5000 அடி தாழ்வாகப் பறந்த ஜெட் விமானம்: டிஜிசிஏ விசாரணை ...
» புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது: கோத்தபாய ராஜபக்ஷ
» ஹெட்லியிடம் விசாரணை நடத்த ஒபாமா அனுமதி: பிரதமர் மன்மோகன்
» எதற்கு பார்லி கூட்டுக்குழு விசாரணை? கோரிக்கைகளை நிராகரித்தார் பிரதமர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum