TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில்

Go down

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் Empty கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில்

Post by logu Thu Jul 28, 2011 7:50 am

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் Kadir3
உலகத்தின் பல நாடுகளிலும் இந்துக் கடவுளின் திருக்கோயில்கள் இருக்கின்றன.
கோலாலம்பூரில் பத்துமலை அடிவாரத்தில் வெங்கடாசலபதிக்கு ஒரு கோயில் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
உலக சரித்திரத்தில் முதல் இடம் கிடைத்த, கண்ணாடிக் கோவில் ஜோகர் பாருவில் இருக்கிறது.
சிங்கப்பூரையும் ஜோகர் பாரு நகரத்தையும் இணைப்பது கடலின் மீது கட்டப்பட்டபாலம் தான்.
மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள்.
உருண்டை
வடிவ உலகில் கண்ணாடி பதிக்க பட்ட ஆலயம் மலரும் வண்ணம் அழகுற சமைத்து
கண்களை உருளச் செய்தது அதிசயம் .உலக மக்கள் இந்துவாகப் பிறந்தவர்கள்
அனைவரும் மகிழ்வுறும் விசயம் .


தொடக்கத்தில் சிறிய குடிசையாக இருந்து, கால ஓட்டத்தில் ஜோகூர் பாருவில்
அமைந்த மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் Nritanews_9188153

முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட முதல் மலேசியக் கோவில் என்பது சிறப்பம்சம்.


கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091849%5B2%5D

இந்தக் கோயில் உருவாகியிருப்பது முழுக்க முழுக்க கண்ணாடியால் என்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயமே!கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என
அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091843%5B2%5D

கோவில் கோபுரமும், நுழைவாயிலும் எங்கும் உள்ளது போல் சாதாரணமாகத் தான் தோன்றின. ஆனால் உள்ளே சென்ற போது பிரமிப்பு ஏற்படுகிறது.
எங்கும் கண்ணாடிகள் மயம். சிறு சிறு கண்ணாடிகள்! ஒளியைப் பிரதிபலிக்கும்
கண்ணாடிகள்! தூண்களிலும், மேலே விதானம் முழுவதுமே கண்ணாடிக் கூரை தான்.
அத்தனை கண்ணாடிகளும் சேர்ந்து ஒளித் துண்டுகளைப் பிரதிபலிக்க எங்கேயோ ஒரு
மாயபுரியில் இருப்பது போல் பிரமை.கீழே மழமழ தரை! அவற்றில் அத்தனை
கண்ணாடிகளும் பிரதிபலிக்கிறது.

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் DSCN2692
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091845%5B2%5D

இந்த மாயங்களை செய்த அதிசய மனிதர் பார்வைக்கு சாதாரண மனிதர் போல்
இருந்தார். கோவிலுக்கு வந்தால் காவி ஆடை அணிகிறார்.அவர் புறத்தோற்றம்
எதுவுமில்லா முனிவர், உள்ளொளி உள்ளவர்.காளியம்மன் கோவிலை மிகப் பெரிய
தலமாக்க தன் வாழ்நாளையே அர்ப்பணம் செய்தவராவார்.அவர் நிர்வாகத் தலைவராகப்
பொறுப்பேற்ற பிறகு இந்து ஆகம விதிப்படி பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் எனப் பெயரிடப்பட்டது. சுமார் 21
ஆண்டுகள் பலவித தடைகள் போராட்டங்கள் ஆகியவற்றைக் கடந்து காளியம்மன்
அருளால் இங்கு காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
மேற்கொள்ளப்பட்டது.
பூஜையிலிருந்து தொடங்கி கோவிலுக்கு நிதி திரட்டும் வரை இவரே செய்கிறார்.
அவரது திருப்பெயர் தான் சின்னதம்பி சிவசுவாமி. 1967 இல் பிறந்தவர்.
மலேசியாவில் பட்டப் படிப்பு படித்து கல்வித் துறையில் சேர்ந்து 18
வருடங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரது 16ஆவது வயதிலேயே ஓர் அதிசயத்
திருப்பம் நடந்தது.

மனத்தில் உள்ள ஒரு விரதத்தை முடிப்பதற்கு அருள் மிகு இராஜகாளியம்மன்
கோவிலில் பால்குடம் எடுத்தார். அவரது பெற்றோரும் அதைக் கண்டு
மகிழ்ந்தார்கள். அப்போது தொடங்கியது தான் அவரது தவயாத்திரை. இப்பொழுது
எல்லாச் செயல்களிலுமே கடவுளின் நேர்பார்வையின் முன்பாகவே செய்வது போல்
எல்லாம் செய்து வருகிறார்.
உரிய வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். திருமதி வசந்தி அடிகள் என்பது
மனைவியின் பெயர். மூன்றுகுழந்தைகள்.திருமணத்திற்குப் பிறகும் அவர் கோவில்
கடமைகளை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த அதிசய சுவாமியின் மனத்துள் மகாகாளியைப் பற்றி தோத்திரங்கள் எப்போதும்
ஓடிக் கொண்டே இருக்கும். கோவில் கடமைகளைத் தவிர அவர் ஆசிரியர் தொழிலையும்
செய்து வருகிறார்.
இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்தப் போது தாஜ்மகாலையும் இன்னும்ம் பிரசித்தி பெற்ற பல கோவில்களைப் பார்த்திருக்கிறார்.

எல்லாமே அமைப்பிலும் அழகிலும் எல்லாரையும் கவர்ந்து இழுத்தன.
பின்னர் இவர் பர்மாவுக்கும் சென்றிருக்கிறார். அங்கே உள்ள கோவில்களில்
இந்தக் கண்ணாடி அமைப்பைப் பார்த்திருக்கிறார். அதில் சிறிய அமைப்பாகத்
தெரிந்தது.

திரு. சிவசுவாமிக்கு இது பெரிய கனவை உண்டாக்கியது.
அந்த வேலைப்பாடு செய்த பர்மிய தொழிலாளிகளைச் சந்தித்தார்.

அவர்கள் குடும்பங்களை ஜோகர் பாருவுக்குக் கொண்டு வந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார். தகுந்த ஊதியமும் கொடுத்தார்.
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் DSCN0002






















பிரம்மாண்டமாக அமைந்த கண்ணாடிக் கோவில் உலகப் புகழ் பெற்றது.

.இந்தக் கோயிலை நிர்மாணிப்பதற்கு தாய்லாந்தில் தான் பார்த்த கண்ணாடிக்
கோயிலே முன் மாதிரியாக இருந்தது என்கிறார் அறங்காவலரான எஸ். சின்னதம்பி.

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091855%5B2%5D

10 லட்சம் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில்
கட்டுவதற்கான தொகை 30 லட்சம் ரிங்கட் (இந்தியப் பணமதிப்பில் ரூ11.76
கோடி). கோவிலின் 95 சதவீதம் விதானம், ஸ்தூபிகள், தூண்கள், ஆகியவற்றுக்கான
பத்து லட்சம் வர்ணமயமான கண்ணாடித் துண்டுகள் தாய்லாந்து ஜப்பான் பெல்ஜியம்
ஆகிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டன.



ஜொகர் சுல்தான் அவர்கள் 1922 இல் இதைக் கட்டுவதற்கான நிலத்தைக்
கொடுத்தார். இந்தக் கோவில் 1996இல் புனரமைக்கப்பட்டது. கோவில் முழுவதும்
குளிர் சாதனம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் ஆயிரத்து ஐநூறு பக்தர்கள்
தரிசிக்கலாம்.


கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் Raja-Kaliamman-Temple-3

ராஜ காளியம்மன் கோவிலில் சிவன், விஷ்ணு,பெரியாச்சி அமமனுக்கு தனித்தனி
சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர்,முருகன், அம்பாள் என அனைத்து
தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எட்டு
குருமார் துறவிகள் என சிலைகள் பல இரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வரும் பத்தர்கள் தமது மானசீக குருவாக யார் உளரோ, அவரையும்
இங்கு தரிசிக்க ஏற்றவாறு அமைத்துள்ளார்கள்.

பகவான்
இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாயிபாபா, சுவாமி இராகவேந்திரர்,
இராமலிங்க அடிகள், இயேசு நாதர், புத்தர், நபிகள், மற்றும் துறவிகள்
சிற்பங்களையும் கண்ணைக்கவரும் வடீவில் அமைத்திருப்பதாக ஆலய அறங்காவலர்
குருஜி சின்னத்தம்பி குறிப்பிடுகிறார்.


கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091848%5B2%5D
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 20h2eqt_thumb
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091853_thumb
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091852_thumb
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091854%5B2%5D


பிரசித்தி பெற்ற ‘டைம்’ பத்திரிகை 2010 ஏப்ரல் 22ஆம் தேதி இந்தக் கோவிலைப் பாராட்டி எழுதியுள்ளது.

கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் DSCN2700


கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091860%5B2%5D

1996 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு
அளித்தனர்.ஆகமவிதிப்படி தினசரி பூஜைகளும் திருவிழாகளும் தவறாது
நடைபெறுகின்றன. ஆஸ்தான குருவாக சின்னத்தம்பி ஆககப்பட்டு, நாள்தோறும்
நடத்தும் ஆன்மீகப் பேச்சுகளை ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தங்கள் சொந்தப்பிரச்சினைகளுக்கும் இவரிடம் தீர்வு பெற்றுச்
செல்கின்றனர்.2001 ஆம் ஆண்டு 'நயனயுதம் நல்வாழ்வுக் கழகம்' என்னும்
அமைப்பு நிறுவி கோவிலை நிர்வகித்து வருகிறார்.


  • ஆலயத்தை
    ஒட்டிய மூன்று மாடிக் கட்டிடத்தில் இலவச சேவையாக நடத்தி வருகின்றனர். அது
    மட்டுமில்லாமல் சமயக்கல்வி, பாடசாலைக்கல்வி, கணினிக்கல்வியோடு
    தற்காப்புக்கலையும் சொல்லித்தருகிறார்.

  • இந்திய
    பாரம்பரியக் கலைகளான சங்கீதம், பரதம், தபேலா இவற்றோடு வேலைவாய்ப்பு மையம்,
    தரும காரியங்கள், போட்டி நிகழ்ச்சிகள், பஜனை உலா ஆகியவும் இங்கே இலவசமாக
    நடாத்தப்படுகிறது. கண்களுக்கு விருந்தாக வசீகரத் தன்மையுடன் கூடிய அருள்
    தரும் இராஜ காளி அம்மன் ஆலயம் கண்ணாடி பதிக்கப்பட்ட வேலைப்பாடுகளோடு
    அமைந்தது, மட்டுமல்ல மனதிற்கும் அமைதி தரவல்லதாக அமைந்திருப்பது
    வியப்புக்குரியது.

  • 2008ம்
    ஆண்டில் நேபாள அரசி வருகை தந்தார். அவர் ஆலயத்தைக் கண்டு வியந்து
    சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டப விதானத்தில் பதிப்பதற்காக மிகவும் சக்தி
    வாய்ந்த மூன்று லட்சம் உருத்திராட்ச மணிகளை நன்கொடையாக கொடுத்துள்ளார்
    என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.

  • குழந்தைகள்,
    சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக ஆலயம் அமைந்திருத்தல்
    சலச்சிறந்தது. அதன்சேவைகள் அறிவை, மனதை, உடலை வளப்படுத்துமானால்
    மனக்குறையின்றி மக்கள் வாழ்வது திண்ணம்.


  • இராஜகாளியம்மன்
    ஆலயத்தை அழகுற அமைத்த ஆலயவிற்பன்னர்களுக்கும் ஆலயத்தை அமைக்கப்
    பாடுபட்டவர்க்கும் இராஜகாளியம்மன் அருளாசி என்றும் கிடைக்கும். நாமும்
    தரிசித்து அம்மன் அருள் பெறுவோம்.






கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் 050720091877%5B2%5D
கோலாலம்பூரில் கண்ணாடிக் கோவில் F4mhrn%5B2%5D
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum