TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாகிஸ்தான் நோட்டு:பதறும் புலனாய்வு ஏஜன்சிகள் தென்மாநிலங்களே முதல் குறி

Go down

பாகிஸ்தான் நோட்டு:பதறும் புலனாய்வு ஏஜன்சிகள் தென்மாநிலங்களே முதல் குறி Empty பாகிஸ்தான் நோட்டு:பதறும் புலனாய்வு ஏஜன்சிகள் தென்மாநிலங்களே முதல் குறி

Post by மாலதி Mon Jul 11, 2011 7:41 am

பாகிஸ்தான் நோட்டு:பதறும் புலனாய்வு ஏஜன்சிகள் தென்மாநிலங்களே முதல் குறி Large_272868பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் 1000 மற்றும் 500 ரூபாய் மதிப்பிலான
இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் மையமாக தென்மாநிலங்கள்
மாறிவிட்டதாக, மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் எதிரொலியாக, விமான நிலையங்களில் சோதனை நடைமுறைகளை கடுமையாக்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளநோட்டு கடத்தல் "மாபியா'கள் மீதான
கண்காணிப்பை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டி.ஆர்.ஐ.,), மத்திய
குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,), மத்திய புலனாய்வுத்துறை (ஐ.பி.,)
தீவிரப்படுத்தியுள்ளன.
"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்றழைக்கப்படும் கோவை, சமீபகாலமாக
கள்ளநோட்டு கும்பலின் இலக்குக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த மாதம் 28ம்
தேதி, கோவை மாநகரிலுள்ள கணபதியில் திடீர் சோதனை நடத்திய போலீஸ் குழுவினர்
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த கிதான் முகமது(55), கோவை,
வடவள்ளியைச் சேர்ந்த புஷ்பலதா(25) ஆகியோரை கைது செய்தனர்; 2.5 லட்சம்
ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நோட்டுகளை பரிசோதித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம், ஒரிஜனல் ரூபாய் நோட்டுகளை போன்றே, நுணுக்கமான தொழில்நுட்பத்துடன்
நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரிஜனல் ரூபாய் நோட்டுக்கும்,
கள்ளநோட்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதுமில்லை.வழக்கமாக பிடிபடும்
கள்ளநோட்டுகளை போல இவை, தரம் குறைந்ததாக இல்லை. இந்திய அரசு அச்சகங்களில்
கரன்சி நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்படும், உயர்தரமான தாள்கள்
பயன்படுத்தப்பட்டிந்தன. இதைக் கண்டு, போலீஸ் உயரதிகாரிகளே ஆடிப்போயினர்.
கள்ளநோட்டு கும்பலின் "நெட்வொர்க்' நாடு கடந்தும் இருக்கக்கூடும் என்ற
சந்தேகம் வலுத்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று விசாரணை
நடத்துவதற்கே உள்ளூர் போலீசார் பெரும்பாடுபடும் நிலையில், நாடு கடந்த
"நெட்வொர்க்' கொண்ட கள்ளநோட்டு மாபியா கும்பலை கண்டுபிடிப்பது எப்படி? என,
புரியாமல் விழிக்கின்றனர்.
கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் 1000, 500 ரூபாய் கள்ளநோட்டுகள்
பிடிபடுவது ஒன்றும் புதிதல்ல. இதற்குமுன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான
கள்ளநோட்டுகள் அடுத்தடுத்து பிடிபட்டுள்ளன. கடந்த மே 24ல், கோவை
சி.பி.சி.ஐ.டி., யின் கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு போலீசார் பீளமேடு
பகுதியில் சோதனை நடத்தி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(42),
ராமநாதபுரத்தைச் சேர்ந்த காமராஜ்(45) ஆகியோரை கைது செய்தனர்; பல ஆயிரம்
ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதே போன்று,
கடந்த ஆண்டு அக்.,14ல், திருப்பூர் போலீசார் ஒரு வீட்டை சோதனையிட்டு 48
ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கைப்பற்றி,
மேற்குவங்கத்தைச் சேர்ந்த குர்ஷித் (25) என்பவனை கைது செய்தனர். அவனிடம்
நடந்த விசாரணைக்குபின், நவ.,1ல், மற்றொரு வீட்டை சோதனையிட்டு 2.45 லட்சம்
ரூபாய் மதிப்பிலான 1000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல்
செய்தனர்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது அஷ்ரப்(25), முகமது சதாம் உசேன்(22),
அப்துல் ரகீப்(50) கைது செய்யப்பட்டனர். இவை தவிர, கோவை மற்றும்
திருப்பூர் போலீசில் கடந்த ஐந்தாண்டுகளில் 25க்கும் மேற்பட்ட
கள்ளநோட்டுவழக்குகள் பதிவாகியுள்ளன. புழக்கத்தில்விட்டவர்கள் மட்டுமே
இதுவரை போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். பின்னணியிலுள்ள ஏஜன்ட்கள்,
கடத்தல்காரர்கள் குறித்த விபரங்களை போலீசாரால் திரட்ட முடியவில்லை. அந்த
அளவுக்கு கள்ளநோட்டு கும்பலின் "நெட்வொர்க்' பரம ரகசியமாக உள்ளது.
தடுமாறுகிறது புலனாய்வு பிரிவு: நாடு கடந்த, மாநிலம் கடந்த கள்ளநோட்டு
கும்பலின் நெட்வொர்க் குறித்து உள்ளூர் போலீசாரால் விசாரிக்க முடியாது
என்பதால், இவ்வழக்குகளை விசாரிப்பதற்கு என்றே தமிழக போலீசின்
சி.பி.சி.ஐ.டி., பிரிவில், "கள்ளநோட்டு தடுப்பு குற்றப்புலனாய்வுப்
பிரிவு' செயல்படுகிறது. உள்ளூர் போலீசாரால் பதிவு செய்யப்படும் கள்ளநோட்டு
வழக்குகள் இப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. கள்ளநோட்டு
தடுப்பு பிரிவு, தமிழக அளவில் நான்கு மண்டலமாக செயல்படுகிறது.
சென்னை அலுவலகத்தில் டி.எஸ்.பி., தலைமையில் இரு இன்ஸ்பெக்டர்கள், இரு
எஸ்.ஐ.,கள், 15 போலீசார் பணியாற்றுகின்றனர். கோவையில் ஒரு டி.எஸ்.பி.,-
ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே உள்ளனர். திருச்சியில் டி.எஸ்.பி., தலைமையில் 6
பேரும், மதுரையில் டி.எஸ்.பி., உள்பட 8 பேரும் பணியாற்றுகின்றனர். இந்த
எண்ணிக்கையை பார்த்தாலே, கள்ளநோட்டு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையில் எந்த
அளவுக்கு "வீரியம்' இருக்கும் என்பதையும், கள்ளநோட்டு தடுப்பு
நடவடிக்கையில் மாநில அரசு எந்தளவுக்கு தீவிரம் காட்டுகிறது என்பதையும்
யூகித்துவிட முடியும்.
உள்ளூர் போலீசாராலும் கள்ளநோட்டு வழக்குகளை விசாரிக்க இயலாது; இவற்றை
விசாரிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக குற்றப்புலனாய்வு பிரிவிலும்
போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை என்ற அவல நிலையே கள்ளநோட்டு கும்பல்
தமிழகத்தில் ஊடுருவ ஊக்கமளிக்கிறது.
பாகிஸ்தானில் அச்சடிப்பு: பாகிஸ்தான் அரசும், அந்நாட்டின் புலனாய்வு
ஏஜன்சியுமான ஐ.எஸ்.ஐ.,யும் (இன்டர் சர்வீஸ் இன்டலிஜென்ஸ்) இந்தியா மீது
இரு வகையான பயங்கரவாதங்களை ஏவி விடுகின்றன. ஒன்று, பயங்கரவாத இயக்கங்களை
தூண்டிவிட்டு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்த்து, மக்களிடம்
அமைதியற்ற சூழலை ஏற்படுத்துவது. அடுத்து, இந்திய கரன்சிக்கு ஈடான
தோற்றத்துடன் கள்ளநோட்டுகளை அதிகளவில் அச்சிட்டு இந்தியாவுக்குள்
புழக்கத்தில் விடுவது. இந்த இரண்டாம் யுக்தியானது, இந்திய பொருளாதாரம்
மீது தொடுக்கப்படும் ஒருவகை பொருளாதாரச் சீரழிவு பயங்கரவாதம். இவ்விரண்டு
தாக்குதல்களையும் இடைவிடாது நடத்தி வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானில், அந்நாட்டுக்கான கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும், அரசு
அச்சகங்கள் குவெட்டா, கராச்சி, பெஷாவர் நகரங்களில் இயங்குகின்றன. இந்த
அரசு அச்சகங்களில் கரன்சி அச்சடிக்க தேவையான தரமான தாள்கள், லண்டனில் உள்ள
காகித ஆலைகளில் ஆர்டர் கொடுத்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப காலமாக,
கரன்சி தாள் கொள்முதல் அளவு, பாகிஸ்தானின் தேவைக்கும் அதிகமாக
இருப்பதாகவும், அளவுக்கு மீறி கொள்முதல் செய்யப்படும் கரன்சி தாள், இந்திய
ரூபாய் நோட்டுகளை போன்றே கள்ளநோட்டுகளை அச்சடிக்க பாகிஸ்தானால்
பயன்படுத்தப்படுவதாக வெளியுலக விவகாரங்களை கவனிக்கும் இந்திய புலனாய்வு
ஏஜன்சிக்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும், அந்நாட்டின் மீது இந்திய அரசால் குற்றம்சாட்ட முடிகிறதே தவிர,
எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாத அளவுக்கு சர்வதேச சட்டம் சார்ந்த
சிக்கல்கள் தடுக்கின்றன. பாகிஸ்தானில் அச்சிடப்படும் இந்திய கள்ள ரூபாய்
நோட்டுகள், "டி கம்பெனி' என, சுருக்க அடைமொழியுடன் அழைக்கப்படும் நிழலுலக
மாபியா தலைவன் தாவூத் இப்ராகிம் கும்பல் மூலமாக, பல வழிமுறைகளிலும்
இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றன.
பாகிஸ்தானில் இருந்து நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டு வழியாகவும்,
பாகிஸ்தான் - துபாய் - இலங்கை வழியாகவும், பாகிஸ்தான் - துபாய் -
சிங்கப்பூர் வழியாகவும், பாகிஸ்தான் - டாக்கா (வங்கதேச தலைநகர்)
வழியாகவும் இந்திய எல்லைக்குள் கடத்தி வரப்படுகின்றன. இதற்கென,
விமானங்களில் தொடர்ச்சியாக பயணம் செய்யும், சோதனை கெடுபிடிகளில் இருந்து
தப்பிக்கும் யுக்திகளை நன்கறிந்த "மாபியா' கும்பலைச் சேர்ந்த ஏஜன்ட்களை
பயன்படுத்துகின்றனர்.
தென்மாநிலங்களில் மையம்: வங்கதேசம், சிங்கப்பூர், துபாய், இலங்கை,
நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்படும் கள்ளநோட்டுகள், இங்குள்ள
"மாபியா நெட்வொர்க்' ஏஜன்ட்களுக்கு கைமாற்றப்படுகின்றன. அதன்பின்,
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சாலை வழியே வாகனங்களில் கடத்தப்பட்டு,
மாநில அளவில் செயல்படும், ஏஜன்ட்களுக்கு மாற்றப்படுகிறது. அவர்கள் தொழில்,
வர்த்தகம் அதிகமுள்ள, பணப்புழக்கம் நிறைந்த டில்லி, மும்பை, பெங்களூரு,
ஐதராபாத், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும்
ஊடுருவி புழக்கத்தில் விடுகின்றனர்.
இதற்கு, உள்ளூர் கிரிமினல்கள் உதவுகின்றனர். கள்ளநோட்டுகள் 1:2
விகிதத்தில் கைமாற்றப்படுகின்றன. ஒருநபர் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்,
அதற்கு ஈடாக 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை தருகின்றனர்.
"இத்தொழில் சட்டவிரோதமானது; ஆபத்து நிறைந்தது' என்ற போதிலும், அதிக தொகை
கிடைக்கிறது என்பதால் படித்த, வேலையில்லா இளைஞர்கள் பலரும் துணிந்து
ஈடுபடுகின்றனர்.
பெரும்பாலானோர் பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம்,
சென்னை, கோவை, திருப்பூரில் முகாமிட்டிருப்பதாக மத்திய புலனாய்வு
ஏஜன்சிகளுக்கு உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. கோவை மற்றும்
திருப்பூரில் அடுத்தடுத்து 1000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள்
பிடிபட்டதே இதற்கு சான்று.
இதனால், இந்திய ரிசர்வ் வங்கியும் உஷார் நடவடிக்கை மேற்கொண்டு
கள்ளநோட்டு தடுப்பு நடவடிக்கையை நாடுமுழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது.
வங்கிகளுக்கு அடுத்தடுத்து உஷார் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
சிறப்பு முகாம்களை நடத்தி கள்ளநோட்டுகளை கண்டறியும் வழிமுறைகளை விளக்கவும்
அறிவுறுத்தியுள்ளது.
இப்பணியில் வங்கி நிர்வாகங்கள் மட்டுமின்றி, மாநில போலீசாரும் ஈடுபட்டு
வருகின்றனர்.அதேவேளையில், கள்ளநோட்டு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையும்
முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்படும்
வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ.,), மத்திய புலனாய்வுத்துறை (ஐ.பி.,),
மத்திய குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.,) உள்ளிட்ட ஏஜன்சிகள் நாடு
முழுவதும் தங்களது கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளன. விமான நிலையங்களில்
வழக்கமாக நடத்தப்படும் பாதுகாப்புமுன்னெச்சரிக்கை சோதனை நடைமுறைகளுடன்,
கள்ளநோட்டு ஊடுருவல் தடுப்பு சோதனையையும் கூர்மையாக்குமாறு, விமான நிலைய
பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை
அதிகாரிகளுக்கு (சி.ஐ.எஸ்.எப்.,) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரமான டூப்ளிகேட் நோட்டு!போலீஸ் கமிஷனர் தகவல்:கோவை நகரில் கடந்த இரு
மாதங்களில் மட்டும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000, 500 ரூபாய்
கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன. இவற்றில், கணபதியில் பிடிபட்ட
கள்ளநோட்டுகள், ஒரிஜனல் ரூபாய் நோட்டு போன்றே, தரமான தாளில், தத்ரூபமாக,
மிக நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டறிந்த தனிப்படை
போலீசார், கள்ளநோட்டு வழக்கில் பிடிபட்ட கிதார் முகாமது, புஷ்பலதா
ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, கோவை போலீஸ்
கமிஷனர் அமரேஷ்புஜாரி கூறுகையில்,""கோவை நகரில் இதுவரை பிடிபட்ட கள்ள
ரூபாய் நோட்டுகளை காட்டிலும், கணபதியில் பிடிபட்ட நோட்டுகள் அசல் ரூபாய்
நோட்டுகளை போன்றே உள்ளன.
உயர்தொழில்நுட்ப யுக்திகளுடன் மிகத்தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் பெரிய அளவிலான "நெட்வொர்க்' இருக்க வாய்ப்புள்ளது.
அதுகுறித்த யூக விபரங்களை தற்போது வெளியிட்டால் வழக்கு விசாரணை
பாதிக்கப்படும்; குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்,'' என்றார். கமிஷனர்
அமரேஷ் புஜாரி, இதற்குமுன் 10 ஆண்டுகள் மத்திய புலனாய்வுத் துறையில்
(ஐ.பி.,) பணியாற்றியவர். அப்போது, பலவிதமான தேச விரோத செயல்கள்
குறித்தும், "மாபியா நெட்வொர்க்' குறித்தும் தகவல் அறிந்தவர். அந்த
முன்அனுபவத்தை கொண்டு, கள்ளநோட்டு கும்பலின் நெட்வோர்க்கை எப்படியும்
கண்டறிந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
திருப்பூரில் மாபியா ஏஜன்ட்கள்!ருப்பூர், ஆசியாவிலேயே அதிகளவில் பனியன்
உற்பத்தி செய்யும் மாவட்டம். இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து
ஆண்டுதோறும் நடக்கும் பனியன் ஏற்றுமதி மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு
12 ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய செலாவணி கிடைக்கிறது. வேலைவாய்ப்பு
அதிகம் மிகுந்த மாவட்டம் என்பதால் வடமாநிலங்களில் இருந்து, குறிப்பாக
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்
திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.கள்ளநோட்டு புழக்கம் பெரும்பாலும் இவர்கள்
மூலமாகவே நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்த கள்ளநோட்டு
சோதனையில் கைதான முகமது அஷ்ரப், முகமது சதாம் உசேன், அப்துல் ரகீப்,
குர்ஷித் ஆகிய நான்கு பேருமே மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
வேலைவாய்ப்புக்காக திருப்பூரில் முகாமிட்டிருப்பதாக கூறி, இவர்கள்
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
எனினும், ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூரில், எந்தெந்த
பகுதிகளில் கள்ளநோட்டு கும்பல் பதுங்கியுள்ளது என, கண்டறிவதில் போலீசுக்கு
சிரமம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியதாவது:நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தக நோக்கங்களுக்காக தினமும்
நூற்றுக்கணக்கானோர் திருப்பூர் வருகின்றனர். இவர்கள் உண்மையாகவே வர்த்தக
நோக்கத்துடன்தான் வருகிறார்களா, "ட்ரக் மாபியா (போதைப் பொருள் கடத்தும்
கும்பல்) மற்றும் "கவுன்டர்பீட் கரன்சி மாபியா' (கள்ளநோட்டு) கும்பலைச்
சேர்ந்தவர்களா? என்பதை கண்டறிவதில் எண்ணற்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
வெளிநாட்டில் இருந்து வருவோர் மாவட்ட போலீசில் பதிவு செய்து செல்கின்றனர்.
எவ்வளவு நாள் தங்கவுள்ளனர், எங்கு தங்குகின்றனர், தினமும் எங்கு
செல்கின்றனர், என்ற விபரங்களையும் அளிக்க வேண்டும் என்பது விதிமுறை.
எனினும் அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாரைச் சந்திக்கிறார்கள் என,
தினமும் கண்காணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கள்ளநோட்டு கும்பலைச்
சேர்ந்தவர்கள் கூட்டநெரிசல் மிகுந்த "டாஸ்மாக்' மதுக் கடைகள், வர்த்தக
நிறுவனங்களில் புழக்கத்தில் விடுகின்றனர். ரகசிய தகவலோ அல்லது புகாரோ
வந்தால் மட்டுமே எங்களால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்; அந்த அளவுக்கே
போலீஸ் பலமும் உள்ளது.இவ்வாறு, திருப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
பயங்கரவாதத்துக்கும் தீனி!மத்திய புலனாய்வுத்துறையில் (ஐ.பி.,)
பணியாற்றி, ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பாகிஸ்தானில்
அச்சடிக்கப்படும் இந்திய கள்ளரூபாய் நோட்டுகள் வான்வழியாக அரபு
நாடுகளுக்கு கடத்தப்பட்டு, அங்கு பெருமளவில் பதுக்கப்படுகிறது. இவ்வாறான
கடத்தலுக்கு, "பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (பி.ஐ.ஏ.,)
விமானப்போக்குவரத்து உதவுவதாக இந்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தகவல்கள்
கிடைத்துள்ளன. இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில்
பாகிஸ்தானின் ஐ.எஸ். ஐ., புலனாய்வு ஏஜன்சிக்கு நேரடி தொடர்பு உள்ளது.
இந்திய தரப்பில் இருந்து எழுப்பப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை,
அந்நாட்டு அரசாங்கம் பொத்தாம் பொதுவாக மறுப்பதையே வாடிக்கையாக
கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களது பொய்யுரையை மெய்ப்பிக்கும் வகையில்
கடந்த 2008, ஏப்., 24ல் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஒரு சம்பவம்
நிகழ்ந்தது.
அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி நவ்சாத் சலாம்கான், இந்திய கள்ள
ரூபாய் நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். அவர் வசம் இருந்த 50 லட்சம்
ரூபாய் மதிப்பிலான இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதுமட்டுமின்றி, அந்த அதிகாரிக்கு "ஹூஜி' பயங்கரவாத அமைப்பின் தலைவர்
முப்தி அப்துல் கனன் உடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது. அதன்பிறகும்கூட,
இந்திய பொருளாதாரத்துக்கு எதிரான கள்ள நோட்டு பயங்கரவாதத்தை பாக்., அரசு
நிறுத்தவில்லை. கள்ளநோட்டு ஊடுருவலால் இந்திய பொருளாதாரம் சிதைவது
ஒருபுறம் இருந்தாலும், இங்கு வேரூன்றி படர்ந்துள்ள சர்வதேச பயங்கரவாத
அமைப்புகளை வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது; இது, மிகவும் ஆபத்தானது
என்பதை இந்திய அரசும் நன்கு உணர்ந்திருக்கிறது. இவ்வாறு, முன்னாள், ஐ.பி.,
உயரதிகாரி தெரிவித்தார். - கே.விஜயகுமார் -


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பதறும் பாகிஸ்தான்!
» சரக்கு ரயில் மூலம் மூடை - மூடையாக கள்ள நோட்டு; பாகிஸ்தான் ரயிலில் பதுக்கி இருந்தது கண்டுபிடிப்பு
» ''ஐடி வளாகங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை..." உமா மகேஸ்வரியின் மரணம்....பதறும் ஐடி ஊழியர்கள்! video
» விசாரணைக்கு ஒத்துப்போகவில்லை என்றால் ஐ.நாவால் தடைகொண்டுவர முடியும்: பதறும் ஸ்ரீலங்கா !
» ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum