TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாஜி அமைச்சர் ராஜா மீது மீண்டும் நடவடிக்கை பாயுமா?

Go down

மாஜி அமைச்சர் ராஜா மீது மீண்டும் நடவடிக்கை பாயுமா? Empty மாஜி அமைச்சர் ராஜா மீது மீண்டும் நடவடிக்கை பாயுமா?

Post by மாலதி Sat Jun 25, 2011 7:53 am

மாஜி அமைச்சர் ராஜா மீது மீண்டும் நடவடிக்கை பாயுமா? Large_263715ஈரோடு: நிலத்தை அபகரிக்க, குடும்பத்தை கடத்தியது, எம்.எல்.ஏ., வுக்கு
கொலை மிரட்டல் விடுத்தது, சொத்துக் குவிப்பு என, பல்வேறு புகார்களுக்கு
உள்ளான, ஈரோடு மாவட்ட, தி.மு.க., செயலர், ராஜா மீது மீண்டும் நடவடிக்கை
பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் இளைய மகன் ராஜா; இவர்,
2005ல், தி.மு.க., ஈரோடு மாவட்ட செயலரானார். வடக்கு, தெற்கு என, இரு
மாவட்டங்களாக பிரிந்து கிடந்த ஈரோட்டை, ஒருங்கிணைந்த தி.மு.க.,
மாவட்டமாக்கினார். கட்சியில் இருந்த கோஷ்டி பூசல்களைத் தாண்டி வளர்ந்தார்.
கடந்த, 2006 தேர்தலில், ஈரோட்டில் இருந்த, 11 தொகுதிகளில், 9 தொகுதிகளில்,
தி.மு.க., அணி வெற்றி பெற்றது; ராஜாவும், ஈரோடு தொகுதியில் வெற்றி
பெற்றார். அவருக்கு கைத்தறித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. கட்சி
நடத்திய மாநாடுகள் பலவற்றுக்கும், ஈரோட்டில் இருந்து பெருந்தொகை
நன்கொடையாக வழங்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்சிக்கு அலுவலகம்
கட்டினார். கட்சித் தலைமையிடம் ராஜாவுக்கு செல்வாக்கு வளர்ந்தது. அவரது
அதிரடி அரசியலால், மூத்த நிர்வாகிகள் பலரும் பாதிக்கப்பட்டனர்; ஆனால்,
கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அமைதி காத்தனர். பஸ்
டிரான்ஸ்போர்ட், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், கல்லூரி, "டிவி' என, பல
துறைகளிலும் ராஜா கால் பதித்தார். தாளவாடி மலையில் இருந்து தாராபுரம் வரை
சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என, அவரது கட்சியினரே கூறி வந்தனர்.
இவை எல்லாவற்றுக்கும், "செக்' வைத்தது போல அமைந்தது, 2008ல் நடந்த
பெருந்துறை ஆள்கடத்தல் சம்பவம். பெருந்துறை, கல்லாங்குத்து தோட்டத்தைச்
சேர்ந்தவர் பழனிச்சாமி ,62; இவரது தம்பி குகமணி ,62; இவர்களுக்கு
சொந்தமான, 6.25 ஏக்கர் நிலத்தில், 250 தென்னை மரங்கள் வைத்து விவசாயம்
செய்து வந்தனர். சொத்தை அபகரிக்கும் நோக்கில் பழனிசாமி, அவரது மனைவி
மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி ஆகியோர் கடத்தப்பட்டனர். அவர்களது
வீடு, தென்னந்தோப்பு ஆகியவை ஒரே நாள் இரவில் தரைமட்டமாக்கப்பட்டன.
ஐகோர்ட்டில் பழனிசாமியின் மைத்துனர் சுப்பிரமணி, ஆள் கொணர்வு மனு தாக்கல்
செய்தார். அதன் பிறகே, இவர்கள் விடுவிக்கப்பட்டனர். "இந்த வழக்கில் ராஜா
மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறது' என, அப்போதைய முதல்வர்
கருணாநிதி கூறினார். அமைச்சர் பதவியிலிருந்து ராஜா நீக்கப்பட்டார்.
இவ்வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெருந்துறை போலீசாருக்கு,
ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ்
விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்த
குற்றப்பத்திரிகையில், ஆள் கடத்தல் வழக்கில், 14வது குற்றவாளியாக ராஜா
சேர்க்கப்பட்டார்; அவரே, சொத்தை சேதப்படுத்திய வழக்கில், 11வது
குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம், "பிடிவாரன்ட்'
பிறப்பித்தது. ராஜா முன்ஜாமின் பெற்றார்.
வழக்கை வாபஸ் பெற, காஞ்சி கோவிலில் உள்ள ராஜாவின் பண்ணை வீட்டில்,
சிவபாலனுடன் பேரம் பேசப்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு
முற்றி, சிவபாலன் கடுமையாக தாக்கப்பட்டார். இரு தரப்பும் பரஸ்பரம் புகார்
கூறியது. இப்பிரச்னையை தொடர்ந்து ராஜாவின் மாவட்ட செயலர் பதவி
பறிக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும்
நீக்கப்பட்டார். தி.மு.க., மாவட்ட பொறுப்பாளராக, ராஜாவின் தந்தை, முன்னாள்
அமைச்சர் பெரியசாமி நியமிக்கப்பட்டார்; தி.மு.க., இரண்டாக உடைந்தது.
பெரியசாமி தரப்பில் ஒரு கோஷ்டியும், துணை பொறுப்பாளர் சச்சிதானந்தம்,
ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் ஆகியோர் மற்றொரு கோஷ்டியாகவும்
அணி சேர்ந்தனர். நம்பியூர் அருகே கட்டப்பட்ட சமத்துவபுரம் திறப்பு
விழாவுக்கு, அப்போதைய துணை முதல்வர் வருவதாக இருந்தது. விழா ஏற்பாடுகளை
கவனிக்கச் சென்ற, அப்போதைய பவானிசாகர் எம்.எல்.ஏ., ஜீவா
சுப்பிரமணியத்துக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜா மீது புகார்
பதிவானது. தங்கள் வீடுகளுக்கு வந்த ராஜா, தங்களை மிரட்டியதாக, அப்போதைய
முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம், மேயர் குமார் முருகேஷ், சச்சிதானந்தம்
ஆகியோர் புகார் கூறினர். தொடர் புகார்களால் கட்சித் தலைமை கோபமடைந்தது.
எம்.எல்.ஏ., ஜீவா சுப்பிரமணியம் அளித்த புகாரை அடுத்து, ராஜா கைது
செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று நாட்களுக்கு பின்
அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 2010ல் கருணாநிதியின் பிறந்த நாளன்று, ராஜாவுக்கு மாவட்ட
செயலர் பதவி வழங்கப்பட்டது. சிவபாலனை தாக்கிய வழக்கில் ராஜாவை விடுவித்து,
ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிவபாலன் தரப்பினர் ஐகோர்ட்டில்
மேல் முறையீடு செய்துள்ளனர்.
சிவபாலனின் தாய் மலர்விழி கூறியதாவது: கடந்த, 2008 ஜூலை 22ம் தேதி,
அதிகாலை, 3 மணியளவில் நானும், என் கணவர் பழனிசாமி, சிவபாலன் ஆகியோர்
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது, தி.மு.க., மாவட்ட துணைச்
செயலர் ஓ.சி.விஸ்வநாதன், நகரச் செயலர் கோபிநாத், ஒன்றிய செயலர் சாமி,
மாணவரணி மாவட்ட செயலர் ரங்கசாமி, பெருந்துறை இளைஞர் அணி நகர செயலர் பாலாஜி
ஆகியோர் தலைமையில் ஒரு கும்பல், கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தது.
எங்களை அந்த கும்பல் இழுத்துச் சென்றது; எங்கள் வீட்டை இடித்தனர்.
நிலத்தில் இருந்த தென்னை மரங்களை வேருடன் பிடுங்கினர். காரில் கடத்திச்
சென்று, பத்திரத்தில் கையெழுத்து போடும்படி மூன்று பேரையும் மிரட்டினர்.
நத்தக்காடையூர் அருகே வெங்கரையாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து
வைத்தனர். பெருந்துறை பத்திர எழுத்தாளர் கருணாகரன், சார் பதிவாளர்
அன்பழகன் ஆகியோர் அங்கிருந்தனர். பத்திரத்திலும், வெற்று காகிதத்திலும்
கையெழுத்து மற்றும் விரல் ரேகை பதிவு செய்தனர். விரல் ரேகையில் இருந்த
மையை அங்குள்ள சுவரில் தேய்த்தேன். அதை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆதாரமாக
பதிவு செய்துள்ளனர். அதன்பின், மூன்று நாள் எங்களை அங்கேயே அடைத்து
வைத்திருந்தனர். என் மாமனார், மாமியாரிடமும் மிரட்டி, அடித்து, கையெழுத்தி
வாங்கி விட்டனர். இந்த அதிர்ச்சியால், என் மாமனார், 2008 செப்., 13ல்
இறந்துவிட்டார். இவ்வாறு மலர்விழி கூறினார்.
சிவபாலனின் தாய்மாமன் சுப்பிரமணியன் கூறியதாவது: ராஜா தரப்பினரால்
கடத்தப்பட்டவர்களை மீட்கக்கோரி, 2008 ஜூலை 25ல் சென்னை ஐகோர்ட்டில்
ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தேன். "தான் கடத்தப்படவில்லை' என,
பத்திரிகையாளர்களுக்கு சிவபாலனை பேட்டி கொடுக்க வைத்தனர். அதன்பின், 2008
ஆக., 7ல், ராஜாவை அமைச்சர் பதவியில் இருந்து கருணாநிதி நீக்கினார். 2008
செப்., 12ம் தேதி பெருந்துறை போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்
தெரிவித்தது. "உண்மை நிலவரத்தை விசாரித்து நீதிமன்றத்துக்கு ஏன்
தெரிவிக்கவில்லை?' என, பெருந்துறை போலீசாரிடம், நீதிமன்றம் கேள்வி
எழுப்பியது. "போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என, நீதிமன்றத்தில்
நாங்கள் தெரிவித்ததால், அதே தேதியில் இந்த வழக்கை, நீதிமன்றம்,
சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டது. 20ம் தேதி இந்த வழக்கு
சி.பி.சி.ஐ.டி., கைக்கு மாறியது. சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., அருண்,
டி.எஸ்.பி., சாம்பசிவம் இந்த வழக்கை துரிதமாக விசாரித்தனர். இவ்வழக்கில்
ராஜாவின் ஜாமின் மனுவை ரத்து செய்து, அவரை சிறையில் அடைத்து, அதன் பின்
வழக்கு விசாரணை செய்யுமாறு, 2009 நவ., 17ல் சுப்ரீம் கோர்ட்டில்
கேட்டுள்ளோம். "தமிழகத்தில், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு
இல்லை; வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்' என, 2010 ஜூலை 19ல்
சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டோம். அதற்கான தீர்ப்பு இன்னும்
வெளியாகவில்லை. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.
சிவபாலன் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி
கேட்டுள்ளோம். ஜெ., ஆட்சியில் நீதி கிடைக்கும் என நம்பிக்கையாக உள்ளோம்'
என்றார். ஏற்கனவே, 2001 அ.தி.மு.க., ஆட்சியின் போது, பெரியசாமி, ராஜா,
ராஜாவின் மனைவி பரிமளம் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு
செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து, 2006ல், தி.மு.க., ஆட்சியின் போது
இவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காலாவதி பொருட்களை ஏலம் விட்ட பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை பாயுமா?
» புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன் : மாஜி அமைச்சர் ராஜா
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
» மாஜி அமைச்சர் ராஜா மனைவியிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி
» நான் வாய் திறந்தால் நிறைய பேர் "உள்ளே' போக நேரிடும்: மாஜி அமைச்சர் ராஜா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum