TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெனரல் சரத் பொன்சேகா கைது: ராஜபக்சவைக் கொல்ல முயன்றாராம்

Go down

ஜெனரல் சரத் பொன்சேகா கைது: ராஜபக்சவைக் கொல்ல முயன்றாராம் Empty ஜெனரல் சரத் பொன்சேகா கைது: ராஜபக்சவைக் கொல்ல முயன்றாராம்

Post by Tamil Tue Feb 09, 2010 6:40 am

ஜெனரல் சரத் பொன்சேகா கைது: ராஜபக்சவைக் கொல்ல முயன்றாராம் Fonseka_5நடந்து
முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க்
கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல்
சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார்.

அவருடன் கூடவே அவரது ஊடகச் செயலாளர் சேனகா டி சில்வாவும் கைது செய்யப்பட்டார்.
தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்கான இரகசியச்
சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே பொன்சேகா கைது
செய்யப்பட்டுள்ளார் என படைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க
கூறினார்.
இரகசிய இடம் ஒன்றில் வைத்த அவர் விசாரிக்கப்படுகிறார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட போது பொன்சேகா அவமானகரமாக நடத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரைக் கைது செய்த படையினர் தனது கண்களுக்கு முன்னால் தரதரவென
இழுத்துச் சென்றனர் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
ஜனவரி மாதம் 26ஆம் நாள் நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் 4 மில்லியன்
வாக்குகளைப் பெற்ற பொன்சேகா 6 மில்லியன் வாக்குகள் பெற்ற அதிபர்
ராஜபக்சவிடம் தோல்வி அடைந்தார்.
எனினும், தேர்தலில் தானே வெற்றி பெற்றார் என்றும் அது தன்னிடம் இருந்து
பறிக்கப்பட்டு விட்டது என்றும் தேர்தல் முடிவுகளைத் தான் ஏற்றுக் கொள்ளப்
போவதில்லை என்றும் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
குடியரசுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையிலேயே
அதிபர் ராஜபக்சவைக் கொல்ல பொன்சேகா முயன்றார் என்ற குற்றச்சாட்டு அரச
தரப்பால் சுமத்தப்பட்டது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று தெரிவித்த
பொன்சேகா தன்னைப் பழிவாங்குவதற்கான நடவடிக்கையே அது எனவும்
கூறியிருந்தார்.
பொன்சேகாவின் சதி முயற்சி என்று அரசு கூறுவது தொடர்பில் அவர் மீது படைய விசாரணை நடத்துவதற்கான சட்ட ஆலோசனையை அரசு கேட்டிருந்தது.
இன்று பகல் பொழுதில் தனது கணவர் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதை பொன்சேகாவின் மனைவி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட போது அவர் தனது அரசியல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

பொன்சேகா
கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதைப் படம்பிடித்த, தமது மற்றும்
AFP நிறுவனத்தின் படப்பிடிப்பாளர்களின் ஒளிப்படக் கருவிகள் படையினரால்
பறித்து உடைக்கப்பட்டதாக டெய்லி மிரர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கைது திடீரென நடைபெற்ற நாடகம் என சம்பவத்தை வர்ணித்துள்ள பி.பி.ஸி.
கொழும்பு செய்தியாளர் Charles Haviland. இது எதிர்க் கட்சிகளைப்
பழிவாங்கும் பெரும் நடவடிக்கையின் ஆரம்பமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி
எனவும் கூறி உள்ளார்.

பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கான காரணம்
எதனையும் படை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று சம்பவத்தின் போது
உடனிருந்த அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சிறிலங்காப் படையினரின் போர்க் குற்றங்கள் தொடர்பான
ஆதாரங்களைத் தான் அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாகச் சமர்ப்பிப்பதற்குத்
தயாராகி வருகிறார் என இன்று பகல் ஊடகவியலாளர்களிடம் பொன்சேகா
தெரிவித்திருந்தார்.
“எனக்குத் தெரிந்ததை எல்லாம் - எனக்கு என்ன சொல்லப்பட்டதோ, நான்
என்ன கேள்விப்பட்டேனோ அவற்றை நான் நிச்சயம் வெளியிடுவேன். யார் போர்க்
குற்றங்களை இழைத்தார்களோ அவர்கள் நிச்சயம் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட
வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் பொன்சேகா.
இதேவேளை, பொன்சேகா தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொல்வதற்கான
சதியில் ஈடுபட்டார் என அதிபர் ராஜபக்ச தெரிவித்த போதும் நாட்டின்
பாதுகாப்புத் தொடர்பான மிக இரகசியமான தகவல்களை வெளியிட்ட
குற்றங்களுக்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என அரச தகவல் திணைக்களம்
தெரிவித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக சிறிலங்கா முன்னெடுப்பதற்குக் காரணமாக இருந்தவர் படைத் தளபதி பொன்சேகா.
ஆனால், போர் முடிந்த உடனேயே, சதிப் புரட்சியில் ஈடுபடுவார் என்ற
சந்தேகத்தில் தரைப் படைத் தளபதி பதவியில் இருந்து அகற்றப்பட்ட அவர், முப்
படைகளின் கூட்டு அதிகாரியாக அதிகாரமற்ற பதவி ஒன்றில் அமர்த்தப்பட்டார்.
போரின் வெற்றி யாருக்கானது என்பதில் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன்
ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக குடியரசுத் தேர்தலில் அவரை எதிர்த்துப்
போட்டியிட்டார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வேட்பு மனுப் பத்திரங்களில் நேற்று கையெழுத்திட்டார் ஜெனரல் சரத்
» சரத் பொன்சேகாவின் ஜெனரல் தரம் ‐ பிரஜா உரிமை ரத்துச் செய்யப்படுமா?
» ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றாலும் 6 மாத காலம் இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்
» புதிய அரசியல் கூட்டணிக்கு ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை வகிப்பார்: ஜே.வி.பி அறிவிப்பு
» சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum