TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சாம்பார்வகைகள்

2 posters

Go down

சாம்பார்வகைகள் Empty சாம்பார்வகைகள்

Post by அருள் Mon Feb 08, 2010 10:43 pm

தமிழர் சிறப்பு சொல்லும் உணவில்
சாம்பார் முக்கியமானது. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும்
தயாரிக்கப்பட்டாலும், தமிழகத்தின் சாம்பார் தனிருசிதான். தமிழகத்தின்
ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை
மூலப் பொருட்கள் பருப்பு, புளிக்கரைசல், காய்கறிகள் என்றாலும்,
தயாரிக்கப்படும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடுகின்றது.

சாம்பார்வகைகள் Sambar_recipes
சிற்றுண்டி வகைகளுக்காக,
பெரும்பாலும் இட்லிக்காக தயாரிக்கப்படும் இட்லி சாம்பாரின் ருசி
அலாதியானது. அறுசுவை நேயர்கள் அதிகம் கேட்கும் கேள்விகளுள் ஒன்று, உணவு
விடுதிகளில் தயாரிக்கப்படும் இட்லி சாம்பார் செய்வது எப்படி? துவரம்
பருப்பு, கடலைப்பருப்பு, பயற்றம்பருப்பு என அனைத்து வகை பருப்புகளைப்
பயன்படுத்தியும் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. அரைத்துவிட்ட வெங்காய
சாம்பார் கொங்கு வகை உணவுகளில் மிகவும் சிறப்பானது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty பொன்னாங்கண்ணி சாம்பார்

Post by அருள் Mon Feb 08, 2010 10:46 pm

தேவையானப் பொருட்கள்





  • கீரை - ஒரு கட்டு
  • வடகம் - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • துவரம் பருப்பு - கால் கப்
  • பெரிய வெங்காயம் - 2
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • உப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • தேங்காய் துருவல் - அரை கப்



கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.


தேங்காயுடன்
தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து 1
1/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.


துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை
சேர்க்கவும்.அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி
வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.


கடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும்.


சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி. இந்த கீரை சாம்பார் குறிப்பினை நமக்காக செய்து காட்டியர் செல்வி. ஸ்ரீதுர்கா அவர்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty கத்திரிக்காய் சாம்பார்

Post by அருள் Mon Feb 08, 2010 10:47 pm

தேவையானப் பொருட்கள்





  • கத்திரிக்காய் - 5
  • வெங்காயம் - ஒன்று
  • சாம்பார் பொடி - கால் கப்
  • தக்காளி - ஒன்று
  • உப்பு - 1 1/2 ஒன்றரை மேசைக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • துவரம் பருப்பு - கால் கப் + அரை தேக்கரண்டி
  • புளி - எலுமிச்சை பழ அளவு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து



கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.



பாத்திரத்தில்
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம், அரை
தேக்கரண்டி துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 10 நொடி வதக்கவும்.


பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.


ஒரு நிமிடம் வதக்கிய பிறகு 2 கப் புளித் தண்ணீரை ஊற்றி அதனுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டு கலக்கி விடவும்.



அதன் பின்னர் கத்திரிக்காயை போட்டு 10 நிமிடம் வேக விடவும்.



கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.


சுவையான கத்திரிக்காய் சாம்பார் ரெடி. இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. மகேஷ்வரி அவர்கள்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty முருக்கங்காய் மாங்காய் சாம்பார்

Post by அருள் Mon Feb 08, 2010 10:49 pm

தேவையான பொருட்கள்




  • முருக்கங்காய்-2
  • மாங்காய்-1
  • துவரம் பருப்பு-1 கப்
  • சின்ன வெங்காயம்-150 கிராம்
  • பச்சை மிளகாய்-3
  • தக்காளி-3
  • மிளகாய்த்தூள்-2 தே.க
  • மஞ்சள்-1/2 தே.க
  • பெருங்காயத்தூள்-1/4 தே.க
  • புளி எலுமிச்சை அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்புதேவையான அளவு
  • எண்ணெய்
  • வறுத்து அரைக்க
  • ------------------
  • காய்ந்தமிளகாய்-6
  • சீரகம்-1 தே.க
  • மிளகு-1 தே.க
  • வெந்தயம்-1 தே.க
  • துவரம் பருப்பு-1 தே.க




செய்முறை




  • துவரம் பருப்பை மஞ்சள்,உப்பு,பெருங்காயம் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  • அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து அரைக்கவும்.
  • புளியைக் கரைத்து வைக்கவும்.
  • முருக்கங்காய்,மாங்காய்,வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் முருக்கங்காய்,மாங்காயைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு மஞ்சள்,மிளகாய்த்தூள்,உப்பு போட்டு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து, புளிக்கரைசலையும் விட்டும் கொதிக்கவிடவும்.
  • கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.





குறிப்பு:


இது இட்லி, தோசை, சோறு, புட்டுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.



வழங்கியவர்


திருமதி வத்சலா நற்குணம்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

15 நிமிடம்

20-30 நிமிடம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty இட்லி சாம்பார்(காய் இல்லாமல்)

Post by அருள் Mon Feb 08, 2010 10:51 pm

தேவையான பொருட்கள்




  • துவரம்பருப்பு -1கப்
  • சின்னவெங்காயம் -10
  • காய்ந்தமிளகாய் -2
  • கறிவேப்பிலை -1கொத்து
  • தக்காளி -1
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
  • சாம்பார்பொடி -1ஸ்பூன்
  • புளிகரைசல் -1/4கப்
  • உப்பு -தேவையான அளவு
  • கொத்தமல்லிதழை -சிறிது
  • தாளிக்க;
  • எண்ணை -1ஸ்பூன்
  • கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு-1/2ஸ்பூன்
  • பெருங்காயம் -1/2ஸ்பூன்
  • வெந்தயம் -1/4ஸ்பூன்




செய்முறை




  • குக்கரில் பருப்பை வேகவைக்கவும்.
  • வெங்காயம் உரித்து முழுதாகவைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.மிளகாயை இரண்டாக கிள்ளி வைக்கவும்.
  • வாணலியில்
    எண்ணை ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,வெந்தயம் தாளித்து
    மிளகாய்,கறிவேப்பிலை போட்டு,உரித்தவெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம்
    வதங்கியவுடன் தக்காளி சேர்த்து
    வதக்கி,மஞ்சள்பொடி,சாம்பார்பொடி,புளிகரைசல்,பெருங்காயம் சேர்த்து வதக்கி
    வெந்த பருப்பை போடவும்.
  • தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லிதூவி இறக்கவும்.
  • சுவையான இட்லி சாம்பார் ரெடி.





குறிப்பு:


காய் எதுவும் இல்லாதபோது இந்த சாம்பார் வைக்கலாம்.



வழங்கியவர்


செல்வி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty குக்கும்பர் தால்(Cucumber )

Post by அருள் Mon Feb 08, 2010 10:52 pm

தேவையான பொருட்கள்




  • வெள்ளிரிக்காய் – 1
  • துவரம் பருப்பு – 1/2 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பில்லை – 4 இலை
  • மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
  • கொத்தமல்லி – கடைசியில் தூவ
  • எண்ணெய் – 1 தே.கரண்டி
  • கடுகு – தாளிக்க




செய்முறை




  • முதலில் துவரம் பருப்பினை பிரஸ்ர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • வெள்ளிரிக்காயினை தோல் நீக்கி பொடிதாக வெட்டி கொள்ளவும். (விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்).
  • வெங்காயம் , தக்காளி மற்றும் கொத்தமல்லியை வெட்டி வைக்கவும்.பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
  • ---------------------------------------
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் தக்காளி, பச்சை மிளகாயினை போட்டு 3 நிமிடம் வதக்கி வெள்ளிரிக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.
  • மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.
  • பிறகு வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
  • இப்பொழுது சுவையான வெள்ளிரிக்காய் தால் ரெடி.
  • இதனை சாதம், சாப்பத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
  • குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.





வழங்கியவர்


Geetha Achal





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

10 நிமிடம்

20 நிமிடம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty Re: சாம்பார்வகைகள்

Post by logu Sat Jun 22, 2013 2:02 pm

ஆச்சரியம்ஆச்சரியம்ஆச்சரியம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சாம்பார்வகைகள் Empty Re: சாம்பார்வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum