TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே - டில்லி மா நாடு

Go down

  இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே - டில்லி மா நாடு   Empty இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே - டில்லி மா நாடு

Post by ஜனனி Fri May 13, 2011 1:04 pm

இலங்கையில் நடந்த போர் தமிழனத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையே என்று
கூறிய லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்,
வங்கதேசத்திற்கு ஒரு கொள்கை, இலங்கைக்கு ஒரு கொள்கையா என்று வினா
எழுப்பினார்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டு, டெல்லி பல்கலைக் கழக தமிழ்
மாணவர்கள் சங்கம் கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில்
கலந்துகொண்டு பேசிய பாஸ்வான் இவவாறு கூறினார்.

‘ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில்
நடைபெற்ற இக்கருத்தரங்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், மனித உரிமைப் போராளி பேராசிரியர்
ஜக்மோகன் சி்ங், லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.இராசா, பேராசிரியர் மணிவண்ணன்,
இதழாளர் சத்யா சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் அனைவரும் இலங்கையில் தமிழர்களுக்கு
எதிராக நடந்த போரில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவாகப்
பேசியுள்ளனர்.

இக்கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் ஜக்மோகன் சிங், ஐ.நா.நிபுணர் குழு
அறிக்கை வெளியான பின்பும், தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்கு
துணை நின்ற நாடுகள் ஒன்று அமைதி காக்கின்றன அல்லது அப்படி ஏதும்
நடைபெறவில்லை என்பதை மறுக்கின்றன. இந்தப் போரில் தனது பங்கை இந்திய அரசால்
மறுத்தவிட முடியாது. சிறிலங்க அரசு செய்த குற்றத்தில் இந்திய அரசின்
பங்கும் உள்ளது. இலங்கையில் நடந்த போர் தமிழர்களுக்கு எதிரானது என்பதில்
அந்த ஐயமும் இல்லை என்று கூறினார்.

கச்சத்தீவை சிறிலங்காவிற்கு தாரை வார்த்துக்கொடுத்த காரணத்தால்தான் தமிழக
மீனவர்கள் இதுவரை பல நூற்றுக்கணக்கில் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தமிழர்கள் பிரச்சனையில் பாராமுகத்துடனேயே
இந்திய அரசு நடந்துகொள்கிறது என்றும் ஜக்மோகன் சிங் கூறினார்.

தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதில் உரிய அளவிற்கு
தமிழக அரசியல் சக்திகள் செயலாற்றவில்லை என்று கூறிய ஜக்மோகன், இலங்கையில்
நடந்தது இனப் படுகொலையே என்றும், அதனை உறுதி செய்ய பன்னாட்டு விசாரணை
நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசு அமைதி காக்கக் கூடாது

போர் தொடர்பான குற்றங்களை எதை வேண்டுமானாலும் கூறுங்கள், அதனை சிறிலங்க
படைகள் செய்திருக்கும் என்று கூறிய நீதிபதி ராஜேந்தர் சச்சார், சிறிலங்க
அரசமைப்பில் உள்ள ஒருதலைப் பட்சமான நிலையை விளக்கினார்.

இலங்கையில் நடந்த போரின்போது போர் நடந்த பகுதியில் சிக்கிய தமிழர்களுக்கு
உணவு வழங்காமல் பட்டினி போட்டதும், தமிழப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்கியதும் அது இனப் படுகொலைதான் என்பதை உறுதி செய்கிறது என்று கூறிய
பேராசிரியர் மணிவண்ணன், ஆனால் இப்படிப்பட்ட குற்றங்களை தி இந்து உள்ளிட்ட
நாளிதழ்கள் திட்டமிட்டு மறைத்தது மட்டுமின்றி, சிறிலங்க அரசு கூறுவதையே
செய்தியாக்கின என்று குற்றம் சாற்றினார்.
போர் நடந்தபோது சிறிலங்க அரசின் பொதுத் தொடர்பு மேலாளராகவே இந்திய அரசு
செயல்பட்டது என்று கூறிய இதழாளர் சத்யா சிவராமன், சிறிலங்க அரசிற்கு எல்லா
வகையிலும் இந்திய அரசின் அதிகாரிகள் சிலர் உதவியுள்ளனர் என்று கூறினார்.

“நடந்த போர்க் குற்றங்களுக்கு சிறிலங்க அரசு பொறுப்பேற்க வேண்டும்.
அந்நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வந்த ஐ.நா.குழுவை
அனுமதிக்காததும் குற்றமே. இதற்கு மேலும் இந்தியா அமைதி காக்கக் கூடாது.
பேசுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று நீதிபதி சச்சார் கூறினார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போரை நடத்தியது சிறிலங்க
அரசுதான் என்றாலும், அதன் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்று
கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.இராசா, சிறிலங்க அரசின்
தமிழினப் படுகொலைத் திட்டத்திற்கு இந்திய அரசு எவ்வாறு உதவலாம்? என்று
வினவினார்.

சிறிலங்கா தொடர்பான இந்திய அரசின் அயலுறவுக் கொள்கை முற்றிலும்
தோற்றுவிட்டது என்று கூறிய இராசா, ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள
அறிக்கையின் மீது தனது விளக்கத்தை இந்தியா அளிக்க வேண்டும் என்று
கூறியுள்ளார்.

இன அழித்தல் கொள்கையை கடைபிடிக்கும் சிறிலங்க அரசால் அந்நாடு மிகப் பெரிய
உள்நாட்டுக் குழப்பத்தில் சிக்கப்போகிறது என்பதை 1083ஆம் ஆண்டிலேயே
இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது என்று கூறிய லோக் ஜன சக்தி
கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்கிற ஒரு
தலைப்பட்சமான ஒரு கொள்கையை கொண்டுள்ள சிறிலங்க அரசு, தமிழர்களுக்கு
சுயாட்சி அளிப்பதை மறுத்து வருகிறது என்றார்.
வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய பிரச்சனைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கும் நமது நாடு இலங்கைப் பிரச்சனையை
மட்டும் தமிழ் பயங்கரவாதம் என்று கூறி சிறுமைபடுத்துகிறது என்று கூறிய
பாஸ்வான், இலங்கையில் தமிழர்கள் படும் துன்பதை தமிழர் அல்லாத
இந்தியர்களிடம் மறைக்கும் முயற்சி இந்த நாட்டில் நடைபெறுகிறது என்று
கூறினார்.

“இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே. வங்கதேசத்திற்கு ஒரு கொள்கையும்,
இலங்கைக்கு ஒரு கொள்கையும் கடைபிடிக்கக் கூடாது” என்று கூறிய பாஸ்வான்,
இதற்கு மேலும் இந்தியா மெளனம் காக்கக் கூடாது என்று கூறினார்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைப் போரில் சிறிலங்க
அரசுடன் எந்த அளவில் இணைந்து செயல்பட்டோம் என்பது குறித்து இந்திய அரசு
ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கருத்தரங்கில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வன்னியில் நடந்தது இனப்படுகொலையே! - விக்கிரமபாகு கருணாரத்ன
» "இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலையே: முன்னாள் ஐரோப்பிய பா. உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ்"
» இலங்கையில் நடந்தது இனப்படுகொலை புத்தகத்தால் ஜெனிவாவை அதிர வைத்த பேராசிரியர் மணிவண்ணன்
» நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை
» "1983ல் கொழும்பில் நடந்தது நேற்று லண்டனில் நடந்தது"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum