TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்

Go down

மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Empty மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்

Post by ஜனனி Sun Apr 03, 2011 8:56 am

ஆட்சியைப் பிடிக்கப்போவதாகத்தான் கூறிவந்தீர்கள். ஆனால், தற்போது கூட்டணி சேர்ந்துள்ளீர்கள்.
கடந்த 1962ல் சீனாவுடன் போர் சூழல் இருந்தது. எதிர்ரெதிர் துருவங்களாக
இருந்தாலும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை அண்ணா ஆதரித்தார்.
இதுகுறித்து கேட்டபோது, "வீடு என்று இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும்.
நாடு என்று ஒன்று இருந்தால் தான் கட்சியை மாற்ற முடியும். இப்போது
நாட்டுக்கே ஆபத்து வந்திருக்கிறது. முதலில் அதைத் தீர்க்க வேண்டும்'
என்றார்.அதைத் தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன். கலைஞரின் வீடா,
தமிழ்நாடா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. கலைஞரின் குடும்பம், இந்த
நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் கொள்ளை; எதிலும் கொள்ளை
என்பதாகத் தான் இன்றைய நிலைமை இருக்கிறது. முதலில் இந்த தீய சக்தியை
அழிக்க வேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வர். தெய்வம்
எப்போதும் இறங்கி வந்து பேசாது. மக்கள் மூலமாகத் தான் பேசும். இந்த ஆட்சி
ஒழிய வேண்டும் என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான
முயற்சியில் தான் நான் இறங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு, இந்த ஆட்சியை
ராமதாஸ் திட்டிக் கொண்டிருந்தார். இப்போது, ஒவ்வொரு குடும்பமும்
பயனடைந்துள்ளது என்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா? இது கொள்கைக்
கூட்டணியில்லை; கொள்ளைக் கூட்டணி என்று. இந்தக் கூட்டணியை
விரட்டுவதற்காகத் தான், நான் கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.
திராவிடக் கட்சிகளுக்கான மாற்றாக உங்களை மக்கள் கருதிவந்த நிலையில்,
ஒரு தரப்புக்கு ஆதரவாக நீங்கள் முடிவெடுத்த பிறகும், நடுநிலையாளர்களின்
ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?
கிடைக்கும். மக்கள் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். நான்
ஒன்றும் ஆட்சியில் பங்கு வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று
கேட்கவில்லையே. செம்மொழி மாநாடு நடத்தி, தன் குடும்பத்தைத் தான் அமர
வைத்தார். தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தி, நடனம் தான்
பார்த்தார். இவரை அகற்ற கூட்டணி சேர்ந்திருப்பதால், என் நம்பகத்தன்மை
அதிகரித்து, ஓட்டு கூடுமே தவிர குறையவே குறையாது.
அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், அவர்கள் தவறு செய்யாதபடி கண்காணிப் பீர்களா?
இன்னும் ஆட்சியே அமைந்துவிடாதபோது, கண்காணிப்பது பற்றியெல்லாம் யோசிக்க
வேண்டியதில்லை. மக்களின் விருப்பத்திற்கிணங்க, தி.மு.க., ஆட்சியை
அகற்றுவோம். இப்போதைக்கு அது ஒன்று தான் எங்கள் குறி.
அ.தி.மு.க.,வுடனான உங்கள் கூட்டணி எப்படி இருக்கும்?
போகப் போகத் தெரியும். ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம்
எடுக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்து,
என்னை வைத்து 10 படம் கூட பண்ணுவார். அதைப் போலத் தான் இதுவும். பழகிய
பிறகே தெரியும்.
கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால், தே.மு.தி.க., என்ற கட்சியைத் தொடர்ந்து நடத்துவது பிரச்னையாகி இருக்குமா?
பிரச்னைக்கு அஞ்சுபவன் நான் இல்லை. வாழ்க்கை என்றாலே பிரச்னைகள்
இருக்கத் தான் செய்யும். அதை எதிர்கொண்டு சமாளிக்கும் நெஞ்சுரம்
எங்களுக்கு இருக்கிறது. என் திருமண மண்டபத்தை இடித்தனர், நாட்டில் எங்கும்
நடக்காத அநியாயமாக, கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதுக்கெல்லாம்
கலங்கினேனா?
கூட்டணி என்றான பிறகு, உங்கள் கட்சியின் வளர்ச்சி சுருங்கிவிடாதா?
சுருங்காது.
நாங்கள் பிரிந்து கிடந்தால் மீண்டும் கலைஞர் வந்துவிடுவார். பிரித்தாளும்
சூழ்ச்சி தான் அவருடைய, "பாலிசி.' அதனால் தான் நாங்கள் ஒன்று
சேர்ந்திருக்கிறோம்.
உங்களுக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பது
எல்லாருக்கும் தெரிந்தது தானே. மக்கள் சொன்னதால் தான், நான் இந்த கூட்டணி
முடிவுக்கே வந்தேன். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் தான்
இவர் கட்சி நடத்துகிறார். "காங்கிரசுடனும், பணக்காரர்களுடனும் கூட்டணி
வைக்கக் கூடாது' என அண்ணாதுரை சொல்லியிருந்தார். அதை மீறி, 60க்கு 63ஐக்
கொடுத்து இவர்கள் கூட்டணி சேரவேண்டிய அவசியமென்ன? இவர் மட்டும் மானத்தை
விட்டு சேருவாராம். நாங்கள் சேர்ந்தால் மட்டும் தப்பா?
அ.தி.மு.க., கூட்டணியிலும் பெரிய இணக்கம் இருப்பது போல் தெரியவில்லையே. இடதுசாரிகளுடன் இழுபறி நிலவியது... ம.தி.மு.க., நிலை...
மற்ற கட்சிகளின் விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. எனக்கு
முன்னால் இருந்தே அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால்
தான் இதுபற்றிய விவரம் தெரியும்.
கூட்டணிக்குள் கடைசியாக நுழைந்த நீங்கள், முதல் ஆளாக ஒதுக்கீடு வாங்கி
வந்துவிட்டீர்கள். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக
பணிபுரியுமா?
பணிபுரிபவர்; பணிபுரிய வேண்டும். நாங்கள் எதையும் எதிர்பார்த்து
செயல்படவில்லை. அதேசமயம், கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
முழுமையாக கடைபிடிப்போம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்களும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?
எல்லா தலைவர்களும் ஒரே மேடையில் தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று
என்ன இருக்கிறது? மிகக் குறைந்த நாட்களே இருக்கும்போது, ஆளுக்கு ஒரு
திசையாக பிரசாரம் செய்தால், நிறைய மக்களைச் சென்றடையே முடியுமே. இந்த
ஆட்சியாளர்களை இப்படியே விட்டால், எகிப்து மாதிரி, லிபியா மாதிரி மக்கள்
புரட்சி தான் வெடிக்கும்.
குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஏதேனும் இருக்குமா?
அதற்கு முன்பு முடிவு செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கின்றன.
இப்போதே அதுகுறித்து முடிவு செய்வதற்கில்லை. எங்கள் தரப்பிலிருந்து,
கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களிடமிருந்து ஏதேனும் திட்டத்தை எதிர்பார்க்கலாமா?
நிச்சயமாக. எந்தவொரு அமைப்புமே ஒரு வழிகாட்டுதலோடு, தொலைநோக்கோடு தானே
செயல்பட முடியும். அதைப் பற்றி இப்போதே முடிவு செய்வதற்கு ஒன்றும் இல்லை.
வெற்றி தான் எங்கள் ஒரே குறிக்கோள். இந்த ஆட்சியை அகற்றுவோம். எங்கள்
கூட்டணியை ஜெயிக்க வைப்போம். மற்றதெல்லாம் பிறகு தான். ஊர் கூடி தேர்
இழுப்போம். பிரச்னைகளை அதன் பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
உங்களுடைய பிரசார வியூகம் தான் என்ன?
நிறைய இருக்கிறது. இவர்களின் ஆட்சியில் பிரச்னைக்கா பஞ்சம்? இவர்களது
ஊழல் லட்சக்கணக்கான கோடியை எட்டிவிட்டதால், 100, 200 கோடி ஊழல்களை
எல்லாம், பத்திரிகைகளே செய்தியாக்குவதில்லை. சென்னையின் புறநகர்ப்
பகுதியில் நிலம் வழங்கிய வகையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல்
நடந்துள்ளது. அதை யாரும் பெரிதாக்கவில்லை. ஒரு லட்சம் கோடியைக் கேட்ட
பிறகு, 200 கோடியெல்லாம் மக்களுக்கே சாதாரணமாகிவிட்டது போல.
மாநிலத்தில்
சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்றனர். ஆனால், இவர்கள் செய்ததெல்லாம்,
மாநிலத்தில் சுயமா கொள்ளையடிக்கணும்; மத்தியில கூட்டா
கொள்ளையடிக்கணும்கிறது தான்.
பல நல்ல திட்டங்களைச் செய்திருப்பதாகத் தானே தி.மு.க., அரசு சொல்கிறது?
அப்படி செய்திருந்தால் ஏன் காங்கிரசையும், ராமதாசையும்
கெஞ்சுகிறீர்கள்; 63 சீட்டுக்காக அடித்துக்கொள்கிறீர்கள்; 121 சீட்டாக
குறைத்துக்கொள்கிறீர்கள்? அனைத்து தொகுதிகளிலும் அவர்களே போட்டியிட
வேண்டியது தானே! அப்புறம் ஏன், எனக்கு சவால் விட்ட அழகிரி என்னை, "நண்பர்
நண்பர்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அவரும் ஒன்றாக கோலி
விளையாடினோமா? கிட்டிப்புல் விளையாடினோமா?இவ்வளவு இலவசங்களைத்
தருகின்றனரே, எங்காவது விலைவாசி குறைந்திருக்கிறதா? அப்புறம், அதைத் தந்து
என்ன புண்ணியம்? கொடுக்கின்ற இலவசங்களும், இவர்கள் வீட்டு சொத்தா, என்ன?
எங்கள் வரிப்பணத்தைத் தானே கொடுக்கிறார்? இவர்கள் கட்டித் தந்த இலவச
வீடுகள், எப்போது இடிந்து விழுமோ எனத் தெரியாத நிலையில் தான் இருக்கின்றன.
அரிசி எதற்காக கொடுத்தனர்? கடத்துவதற்காக. "டிவி' கட்சிக்காரங்களுக்கு
கொடுத்தார். ஏழைகளுக்கு கொடுத்த 400 ஏக்கர் இலவச நிலத்தை விற்றுவிட்டதாக,
"டிவி'யில் வந்த செய்தி, ஒன்றரை மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
இவர்களுடைய வேலையே மிரட்டல் தானே.
நீங்கள் சொல்வது எல்லாமே தி.மு.க., எதிர்ப்பாக இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் காங்கிரசுக்கும்...
ஒண்ணுமே இல்லை. என்ன இருக்கிறது? தாமஸ் நியமனம் பற்றி ஒன்றும் தெரியாது
எனச் சொல்லும் பிரதமர் தான் இருக்கிறார். அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது?
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள்
இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினர்.
தேர்தலில் பணபலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அதிகமாகத்
தான் இருக்கும். ஆனால், இவர்கள் என்ன தான் செய்தாலும் சரி, மக்கள்
புரட்சியைத் தடுக்க முடியாது. எகிப்திலும், லிபியாவிலும் ராணுவத்தைக்
கொண்டு வந்து நிறுத்தினார்களே? மக்கள் பின்வாங்கினார்களா? பணபலத்தை மக்கள்
பலம் தூக்கி எறிந்துவிடும். கரும்புத் தோட்டத்துக்கு யானையைக் காவல்
வைத்தது மாதிரி, தமிழகத்தில் கலைஞரை உட்கார வைத்திருக்கிறோம். அவர்
அழிக்கத் தான் செய்வார். அவரிடமிருந்து எங்களால் இந்த நாட்டைக் காப்பாற்ற
முடியும்.
நீங்கள் 41க்கு 41ஐயும் வென்றுவிட்டால், என்ன செய்வதாக உத்தேசம்?
பொறுத்திருந்து பாருங்கள்.

விஜயகாந்த்நிறுவனர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இயற்பெயர் :விஜயராஜ்
வயது :59
திரை ஆர்வம் :எம்.ஜி.ஆர்., ரசிகர்
முதல் படம் :இனிக்கும் இளமை
மனைவி :பிரேமலதா
குழந்தைகள் :இரண்டு மகன்கள்திருமணத்தை
நடத்தியோர் :கருணாநிதி, மூப்பனார்
நிறுவனர் :தேசிய முற்போக்கு திராவிட கழகம்
துவக்கியது :2005
தேர்தல் அனுபவம்:2006ல் விருத்தாசலத்தில்போட்டியிட்டு வெற்றி.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டோனி பிறந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை
» ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்கி 11 போலீஸார் சாவு
» எங்களாலும் சுயமாக உழைத்து வாழ முடியும்; யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் புதுமைப் பெண்கள்
» கெடுபிடிகளுக்கு மத்தியில் போட்டியிட்டோம்''
» நிலக்கரி ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு குப்பைத்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum