TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்

Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்

Post by மாலதி Tue Mar 29, 2011 7:27 am


2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Niira_radia





அரசியல்
வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர்
2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய
தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை
உண்டாக்கியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச
நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின்
பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty பெரம்பலூர் மருத்துவமனை பற்றிய ராடியா உரையாடல் (ஆடியோ)

Post by மாலதி Tue Mar 29, 2011 7:28 am

2009-ம் ஆண்டு ஜூன்
26-ம் தேதி ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, நீரா
ராடியாவுடன் பேசுகிறார். பெரம்பலூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு டாடா
நிறுவனம் நிதியளிப்பது குறித்து இருவரும் உரையாடுகிறார்கள். இதன் பிறகு
ராசாவின் சொந்த மாவட்டத்தில் மருத்துவமனைகளை மேம்படுத்த டாடா அறக்கட்டளை
ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.உரையாடலைக் கேட்க...ஆர்.கே. சந்தோலியா: ஹலோ...நீரா ராடியா: ஹாய்! எப்படியிருக்கிறீர்கள்?சந்: ம்... மதிய வணக்கம், நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?ராடியா: ஆல்ரைட். மும்பையில் வேலைகளில் மூழ்கியிருக்கிறேன். பணிகள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.சந்:ஓகே.ராடியா: எப்படியிருக்கிறீர்கள்?சந்: எப்போது தில்லி திரும்புகிறீர்கள்?ராடியா: செவ்வாய், புதன்கிழமைவரை இல்லை...சந்: ஓகே, ஓகே... பேசலாமா? (டாடா) உபகரணங்களோ அல்லது வார்டுகளோ தரலாம்.ராடியா:
நான் கிருஷ்ண குமாருடன் பேசினேன். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று
சொல்கிறேன். பெரம்பலூரில் உள்ள மருத்துவமனைக்கு செய்யலாம் என்கிறார்கள்.
பிரச்னை ஒன்றுமில்லையே? ஆனால், அவர்களது அறக்கட்டளை விதிப்படி குறிப்பிட்ட
முறையில்தான் அவர்களால் செய்ய முடியும் என்பதால் மருத்துவமனைக்கு
உபகரணங்களை வழங்க விரும்புகிறார்கள்.சந்: ஓகே.ராடியா:
அல்லது சில வார்டுகளை கட்டித் தரலாம் என்கிறார்கள். வார்டுகள் போல ஏதாவது
கட்டித் தருவார்கள். காசோலை போல் எதுவும் இல்லை. நாம் ஒரு கடிதம் தர
வேண்டும். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் அவர்கள் சில குறிப்பிட்ட
வகையில் வார்டு அல்லது உபகரணங்கள் என மருத்துவமனையில் பணிகளைத்
தொடங்குவார்கள். பின்னர் அந்த நிதி விநியோகங்கள் தொடங்கும்.சந்: ஓகே. அதனால் ஒன்று செய்யுங்கள், அவருக்கு போன் செய்யுங்கள், அமைச்சருக்கு...ராடியா: ம்...சந்:அவரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் அவர் உங்களது போனுக்காக காத்திருந்தார்...ராடியா: என் போனுக்காக காத்திருந்தாரா?சந்: ஆமாம்... ஆமாம்...ராடியா: ஓகே. அவர் சென்னைக்குப் போய்விட்டாரா அல்லது இன்னும் இங்கேயே இருக்கிறாரா?சந்: இல்லை... அவர் சென்னையில் இருக்கிறார்.ராடியா: சென்னையில் இருக்கிறாரா, அப்படியா?சந்: ஆமாம். ஆமாம்.ராடியா: எப்போது திரும்பி வருவார்?சந்: திங்கள்கிழமை திரும்பி வருவார்.ராடியா: திங்கள்கிழமை வருகிறார்... சரி. நான் பேசுகிறேன்.சந்: தயவு செய்து அவரிடம் பேசுங்கள். பிறகு எனக்குச் சொல்லுங்கள்.ராடியா: ஓகே. அதன் பிறகு அவரிடம் பேசவே இல்லை. மன்னியுங்கள். ஏனென்றால் நேற்றுத்தான் நாங்கள் பேசினோம்.சந்: ம்... ம்...ராடியா:
அதனால்.... நான்... நான்... அதுதான் அவர் என்னிடம் சொன்னது. எனக்கு அந்தத்
தெளிவு தேவைப்பட்டது. பிறகு நான் சொன்னேன்... அது எதுவோ, அதை நீங்களே
எடுத்துக் கொள்ளுங்கள் (குரல் தெளிவில்லை) சமர்ப்பியுங்கள், புகைப்படம்
எடுப்பது உள்ளிட்ட அனைத்தையும். இதுதான் நான் அவருக்குச் சொன்னது.சந்: ம்...ம்...உரையாடலைக் கேட்க...


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty ஸ்வான், டெலினார் பற்றிய ராடியா உரையாடல்(ஆடியோ)

Post by மாலதி Tue Mar 29, 2011 7:29 am

Last Updated :



2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Niira_radia





2009-ம்
ஆண்டு ஜூன் 16-ம் தேதி நீரா ராடியாவுடன் அடையாளம் தெரியாத ஒருவர்
பேசும்போது "நான் இதுபற்றி உடனடியாகப் பேசுகிறேன். டெலினார் நிறுவனத்துடன்
என்ன பிரச்னை' என்று கேட்கிறார்.உரையாடலைக் கேட்க...அடையாளம் தெரியாதவர்: யெஸ் மேடம்! குட் ஈவ்னிங்!ராடியா: ஓகே. டெலினார் பாதுகாப்பு அனுமதி பற்றி ஏதாவது கேள்வி இருந்தால், பிகேஎம்மிடம் கேளுங்கள்அ.தெ: ஓகே.ராடியா: ஏனென்றால் எப்.ஐ.பி.பீ. (அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்) அனுமதி...அ.தெ: ம்...ராடியா: ஹா... ஏனென்றால் பாகிஸ்தானிலும் சேவை அளித்துவரும் நிறுவனம் டெலினார்...அ.தெ: ஓ..ஹோ...ராடியா: ஆனால் ஸ்வானும் அப்படித்தான்...அ.தெ.: ஓகே.ராடியா: திங்கள்கிழமை ஒரு கூட்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...அ.தெ: ஓகே.ராடியா: ... ஐ.பி மற்றும் அனைவரும் டெலினார் பற்றி முடிவு செய்ய திங்கள்கிழமை கூடுகிறார்கள்.அ.தெ: ஓகே.ராடியா: அவரது பிரச்னைகள் என்னென்ன என்று மட்டும் உறுதி செய்யுங்கள்...அ.தெ.: நான் உடனடியாகப் பேசுகிறேன்.ராடியா: இல்லை... அவர்... ஸ்வான் பற்றியும் நாம் கேட்க வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கும் பாகிஸ்தானில் நெட்வொர்க் இருக்கிறது அல்லவா?அ.தெ.: ஓகே.ராடியா: ஓகே, ஓகே. பை.உரையாடலைக் கேட்க...


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty உயர்நீதிமன்ற வழக்குக்கும் ராசாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை : சந்தோலியா (ஆடியோ)

Post by மாலதி Tue Mar 29, 2011 7:30 am


2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Niira_radia





சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசி தீர்ப்பில் தலையிட முயன்றதாக
முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பற்றி ராசாவின்
முன்னாள் அந்தரங்கச் செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் ராடியாவும்
பேசுகிறார்கள். "சென்னை உயர்நீதிமன்ற வழக்குக்கும் ஆ. ராசாவுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லை' என ராடியாவிடம் சந்தோலியா கூறுகிறார். [url=http://www.dinamani.com/audio/radia/radia_hc.mp3]உரையாடலைக் கேட்க...[/url]ராடியா: ஹாய்!சந்தோலியா: ஹலோ, எப்படியிருக்கீங்க?ராடியா:
நான் இன்னும் மும்பையில்தான் இருக்கிறேன். தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்காக
மன்னிக்கவும். எல்லாம் எப்படிப் போகிறது. உங்கள் அமைச்சரின் பெயர்
செய்திகளில் அடிபடுகிறதே?சந்:எதில்?ராடியா:ம்... சென்னை உயர் நீதிமன்ற விவகாரத்தில்.சந். அதனாலென்ன, அவருக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.ராடியா: இல்லை... ஊடகங்களில் 9 மணிச் செய்திகளில் இரண்டு பெயர்கள் அடிபட்டன. ஆ.ராசா, அழகிரி....சந்: ம்...ராடியா:பின்னர்
அழகிரியின் பெயர் விடப்பட்டது. அது அழகிரியில்லை என அவர்கள் கூறினார்கள்.
அதன் பிறகு ராசாவின் பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. சந்:ம்...ராடியா:
இதே விஷயத்தை ராஜ்தீப்(தேசாய்)பும் என்னிடம் சொன்னார்: நியூஸ் எக்ஸும்
எனக்குச் சொன்னது. எல்லோரும் அவரது பெயரைத்தான் சொல்கிறார்கள்.
என்டிடிவியின் ஷிவ்நாத்(துக்ரால்)தை நான் சந்தித்தபோது அவரும் அது
ராசாதான் என்று சொன்னார். பிறகு டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் நான் பேசினேன்...
கேஸ் செய்தி பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதே பெயர்தான்
விவாதத்தில் இருக்கிறது... சட்ட அமைச்சரிடம் சொல்லப்பட்டிருக்கிறது... அது
ராசாதான்.சந்: ம்... எனக்குத் தெரியாது. நான் யாரிடமும் பேசவில்லை.ராடியா:
உங்களுக்குத் தெரியட்டும் என்றுதான்... நிறைய பேர் அவருடைய பெயரை பரப்பி
வருகிறார்கள்; அது உண்மையல்ல. அதனால்தான் உங்களுக்கு போன் செய்தேன்.உரையாடலைக் கேட்க...


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty வாஜ்பாய் மருமகன் - ராடியா உரையாடல் ஆடியோ

Post by மாலதி Tue Mar 29, 2011 7:32 am


2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Niira_radia





முன்னாள்
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகன் (வளர்ப்பு மகளின் கணவர்) ரஞ்சன்
பட்டாச்சார்யா,முகேஷ் அம்பானியுடனான தனது உரையாடல் குறித்து நீரா
ராடியாவுடன் பேசுகிறார். 2009-ம் ஆண்டு மே 31-ம் தேதி பதிவு செய்யப்பட்ட
இந்த பேச்சில், சுனில் மிட்டலை சுஹேல் சேத் வீட்டில் சந்தித்ததை ரஞ்சன்
உறுதி செய்கிறார்.உரையாடலைக் கேட்க...ராடியா: ஹாய்!ரஞ்சன் பட்டாச்சார்யா: வெல்கம் பேக்!ராடியா:
நன்றி! இப்போதுதான் வந்தேன்... பணமில்லாமல் ரூ.60 கோடி காசோலை
வங்கியிலிருந்து திரும்பும் ஆபத்திலிருந்து (யுனிடெக் நிறுவனத்தை)
இப்போதுதான் நான் காப்பாற்றியிருக்கிறேன்.ரஞ்சன்: ஓகே...
ஓகே.. கேளுங்கள்... நான் சொன்னேனே... நான் சந்தேகப்பட்டது உண்மைதான். அவர்
(முகேஷ் அம்பானி) போன் செய்தார். நீராவை ஒரு பொது நிகழ்ச்சியில்
சந்தித்தேன் என்று மட்டும் அவரிடம் சொன்னேன்... தமக்காக வேலை செய்ய
வேண்டும் என சுனில் (மிட்டல்) விரும்புவதாக நீரா சொன்னார் என்று கூறினேன்.
சில கட்டில்லாத ஏற்பாட்டின் அடிப்படையில் தமக்காக நீரா வேலை செய்ய
வேண்டும் என்று சுனில் விரும்புகிறார்.... நீங்கள்தான் அதை
ஊக்குவிக்கிறீர்கள் என நீரா என்னிடம் சொன்னார் என்றும் அவரிடம் கூறினேன்.
உடனே அவர், அதனால் என்ன பாஸ்? அது எந்த விதத்தில் என்னைப் பாதிக்கும்?
எல்லோரும் நன்றாக இருக்கட்டும் என்றார். ஆனால் எந்த ஆட்சேபமும் இல்லை.
அதனால் நான் எம்டிஏவிடம், இந்த வகையில் நான் பேசவில்லை என்று கூறினேன்.
ஆனால், இதற்கு உங்களுக்கு சம்மதமா என்று கேட்டேன். அவர் பேசியது இதுதான்:
பாஸ், உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் எவ்வளவோ பேருக்கு பெரும்
உதவி செய்திருக்கிறேன். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். உடனே
நான் குறுக்கிட்டு நீங்கள் தெளிவாக இல்லை என்றேன். அதற்கு அவர்,நேற்று
மாலை எனக்கு ஒரு போன் வந்தது. கட்டற்ற ஏற்பாட்டை விரும்புவதால் அவர்
(ராடியா) அவருக்காக வேலை செய்யப்போவதில்லை என்று. ஆனால் நீரா எதுவும்
முறையற்றதாக இருக்கக்கூடாது என்று கூறிவிட்டார். அதனால் நீரா அவருக்காக
வேலை செய்யப் போவதில்லை என்று முகேஷ் கூறினார்.ராடியா: உங்களிடம் இப்படிக் கூறியதாக அவர் அன்றைக்கே என்னிடம் சொல்லிவிட்டார்.ரஞ்சன்:
அதனால் நீரா, நான் என்ன நினைக்கிறேன் என்றால்... இது விஷயத்தில் நாம்
பிரச்னைக்கு மட்டும் தீர்வு காண வேண்டும்... மீண்டும் யோசியுங்கள்.ராடியா:
ம்... பிரச்னைக்கு மட்டும் தீர்வுகாண்பது... நீங்களும் நானும் இணைந்து
பணியாற்றலாம். அதைத்தான் நான் சொல்கிறேன். அதற்கு மேல் நாம் ஒன்றும் செய்ய
முடியாது. ஆனால், நான் அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க விரும்பவில்லை.ரஞ்சன்:
ஏன் சந்திக்க வேண்டும்? அவர் வரட்டும். சரி... நான் இப்படியே
செய்கிறேன்... அவரது கருத்துப்படி செவ்வாய்க்கிழமை வாக்கில்
செய்துவிடுகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள்.ராடியா: ஓகே. நான் அவரிடம் சொல்கிறேன். ஓரிருநாள் பயணமாக மும்பைக்கு நான் செல்ல வேண்டும்... உரையாடலைக் கேட்க...


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty ரிலையன்ஸ் மனோஜ் மோடி - ராடியா உரையாடல் ஆடியோ

Post by மாலதி Tue Mar 29, 2011 7:33 am


2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Niira_radia





ரிலையன்ஸ்
நிறுவனத்தின் மனோஜ் மோடியுடன் ராடியா பேசும்போது, சிவில் வழக்குகள்,
பொதுநல வழக்குகள் தொடர்வதற்கு சில தன்னார்வ அமைப்புகளின் (என்ஜிஓ)
பெயர்கள் பரிசீலிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கிறார். 2009-ம் ஆண்டு மே 29-ம்
தேதி இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.உரையாடலைக் கேட்க...மனோஜ் மோடி: ஹாய், நீரா.நீரா ராடியா: ஹாய்.மனோஜ் மோடி: எப்படியிருக்கிறீர்கள்?ராடியா: நலம். நீங்க எப்படியிருக்கிறீர்கள்?ம.மோடி: நலமாக இருக்கிறேன். ராஜா என்னுடன் இருக்கிறார்.ராடியா: ம்... ம்...ம.மோடி: நமது சட்ட வழக்கு, நிறுவன பிரிப்பு, வேறுசில பொதுநல வழக்குகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.ராடியா: ம்...ம.மோடி: இப்போது இந்த ஒரு என்ஜிஓ, ராம்ஜிபாய் மாவானி, நமது திட்டத்துக்காக வேலை செய்தவர்கள்.ராடியா: ம்.ம.மோடி: இரண்டாவது, தில்லியில் நீங்கள் பார்த்து வைத்திருப்பது.ராடியா:ம்.ம.மோடி: அதனால், எதுவென்றாலும் சரி. உங்களுடைய வசதியையும் விருப்பத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.ராடியா: இந்த ஆட்களைப் பற்றிய எனது கருத்து நல்லவிதமானது... அவர்கள் ஓகே என தெரிகிறது. எந்த வகையிலும் இதில் கவலைப்பட எதுவுமில்லை.ம.மோடி:
ம்... இந்த ராஜ்கோட் ஆட்கள் ஓகே. ஏதும் தப்பாகிப் போகாது... இருந்தாலும்
புது ஆட்களை இந்த விஷயத்தில் ஈடுபடுத்துவது நல்லது. இருந்தாலும், அவர்கள்
மீது உங்களுக்கு சிறிய சந்தேகம் இருந்தாலும் நாம் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த உடைக்க முடியாத வழக்காகப்
போகிறது.ராடியா:ம்... ஓகே. அவர்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட என்ஜிஓதான், மனோஜ். அவர்கள் பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ.ம.மோடி: நல்லது. பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ என்றால் நல்லது. ஆனால்,அவர்கள் பின்வாங்கிவிடக்கூடாதல்லவா... பின்னர்...ராடியா:
இல்லை மனோஜ், நான்... உங்களிடம் உண்மையைச் சொல்கிறேன்... அவர்களை
தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. அந்த ஒரு நபரை எனக்குத் தெரியும்.
அவர் தனது வாக்கில் இருந்து பின்வாங்குவார் என நான் நினைக்கவில்லை.ம.மோடி: உங்களுக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாதா?ராடியா:இல்லை,
அவர்களில் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் சொந்தமாக... அவர்கள் 5 பேர்.
மற்றொருவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அவர்
பின்வாங்குவார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் நம்பகமானவர் என அவரை
அறிந்தவர்கள் மூலம் தெரிந்துகொண்டேன். அவர்கள் மிகவும் சீரியஸôனவர்கள்.
அவர்களுக்கு டிஎல்எப் அதிக நெருக்கடி கொடுத்துப் பார்த்தது, ஆனாலும்
அவர்கள் பின்வாங்கவில்லை. பணம் கொடுத்தபோதும் அவர்கள் பின்வாங்கவில்லை.ம.மோடி: அவர்களது நம்பகம் பற்றி உங்களது முழுமையான சோதனைகளைச் செய்யலாமே? முடிவில்... நான் அதன்படி நடக்கலாம்...ராடியா:
செய்துவிட்டேன். அதனால்தான் அவர்களை நான் அணுகினேன். அப்போதுதான் டிஎல்எப்
அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பதும்
தெரிந்தது.ம.மோடி: டிஎல்எப் நெருக்கடி சாதாரணமானதுதான்.
நான் நம் ஆட்கள் எந்த அளவுக்கு நெருக்கடி தருவார்கள் என்று உங்களுக்குச்
சொல்லவேண்டியதில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே, நம் ஆட்கள் அதிக
நெருக்கடி தருவார்கள் என்று.ராடியா: ஆம்... ஆம்... மனோஜ், நமக்கு இன்னும் எவ்வளவு அவகாசம் இருக்கிறது?ம.மோடி:
(அருகில் யாருடனோ பேசுகிறார்) அடுத்து 2-3 நாள்களில் நாம் முடிவு செய்தாக
வேண்டும். அதனால் நான் உங்களது முடிவுப்படி செயல்படவேண்டும். நாம் 2-3-4
விஷயங்களை முடிக்க வேண்டும்... நாம் செய்தாக வேண்டும்...ராடியா:
மனோஜ், இந்த நபரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும் அவரை நான்
நம்புகிறேன். இந்த ஆள் மிகவும் நம்பகமானவர். மிகவும் நம்பகமான பின்னணியில்
இருந்து வந்திருக்கிறார். அதனால் இவர் சந்தேகப்படும்படியான ஆள் என்று
எனக்குத் தோன்றவில்லை.இன்னொரு குரல் (முன்னர் குறிப்பிட்ட
ராஜா என்பவராக இருக்கலாம்): நீரா, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால்
ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு நெருக்கடி இருக்கக்கூடாது... அதாவது...ராடியா:
இல்லை.. இல்லை.. அவர்கள் 3 பேர். அவர்களில் ஒருவரை தனிப்பட்ட முறையில்
எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் பின்வாங்க மாட்டார் என்று எனக்கு மிக
நன்றாகத் தெரியும். இன்னொருவர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்தவர். அவரும் நம்பகமானவர். ஏமாற்றமாட்டார். அவர் சர்தார். அவர் மீது
எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மூன்றாவது ஆள் மிகவும் கூலானவர்.
அவருக்கு எனது ஊழியர்களுள் ஒருவர், தல்ஜீத்தை நன்றாகத் தெரியும்.
அப்படித்தான் விஷயங்களை ஒருங்கிணைத்தேன். பெயர்களுடன் அவர் என்னிடம்
வந்தபோது, அவைகளைச் சரிபார்த்தேன். பின்னர் சுனீல் அரோராவை அவர்களுடன் பேச
வைத்தேன். ஏனென்றால் சுனீல் அரோராவை அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனக்குத் தெரியும் சுனீல் இறங்கிவிட்டால்... எப்போதெல்லாம் அவர் எனக்கு
பரிந்துரைக்கிறாரோ... எப்போதும் தவறாகப் போனதில்லை, மனோஜ், குறைந்தபட்சம்
இன்று வரைக்கும்... அவர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.ம.மோடி:
நாம் இதைச் செய்யும்போது, ராம்ஜிபாய் மாவானியையும் பார்க்க வேண்டும்.
அவர்கள் அவரது வீட்டுக்குப் போய் எல்லாவகையான பைகளையும்
எடுத்துவிட்டார்கள்.ராடியா: ஆம்... ஆம்... அவர் செய்வார் என்று எனக்குத் தெரியும். இதுபற்றியெல்லாம் தெரிந்துதான் நான் அதைச் செய்தேன்,மனோஜ்.ம.மோடி:
ஆம். இந்த வழக்கு மிக முக்கியமானது. எனவே எனது தேர்வு அவர்கள்தான்.
ஏனென்றால் அதே நபர் மீண்டும் நேரடியாக இதைச் செய்வதை நான் விரும்பவில்லை.
இன்னொரு சாதாரணமான உணர்வு வர வேண்டும். அவர்கள் செய்வார்கள்.ராடியா: அவர்கள் இருவரையும் கொண்டு நடத்திவிடலாம். அவரும் வருவார் அல்லவா?ம.மோடி: ஆமாம். ஆமாம். சில வேலைகள் நடக்கவேண்டியிருக்கிறது. வெவ்வேறு ஆள்களைக் கொண்டு அவைகளை முடிக்கலாம் என்றிருக்கிறேன்.ராடியா: மிகவும் நல்லது, இல்லாவிட்டால் நம்பகம் இல்லாமல் போய்விடும் இல்லையா?ம.மோடி:
அதைத்தான் நான் சொல்கிறேன். நான் முக்கியமாகக் குறிப்பிடுவது அதைத்தான்.
அதற்காகத்தான் இன்னொரு முறையும் சொல்கிறேன். நீங்கள் வைஷ்ணவ தேவி கோயில்
பயணத்தை முடியுங்கள். அந்த நேரத்தில் இதை இன்னொரு முறை பரிசீலியுங்கள்.
ஒன்றும் பிரச்னையில்லை. யோசியுங்கள்.ராடியா: ஓகே.ம.மோடி:
பின்னர் ராஜா தனது வழக்குத் தொடரும் வேலையைச் செய்வார், ஏனென்றால்,
வழக்குத் தொடர்வதற்கு அவருக்கு எல்லா வகையிலும் பச்சைக்கொடி
காட்டிவிட்டேன் ஆவணங்களைத் தயார் செய்வதற்கும்... மனுக்களைத்
தயாரிப்பதற்கும்.... எல்லாவற்றுக்கும்.ராடியா: ம்...ம.மோடி: ம்ம்...?ராடியா:
ம், கச்சிதம். நான் செய்ய வேண்டியது என் குழுவிடம் பேச வேண்டும், இன்னொரு
முறை சுனீலுடன் நான் பேச வேண்டும். நான்... (இணைப்பு துண்டிக்கப்படுகிறது)உரையாடலைக் கேட்க...


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல் Empty Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum