TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:19 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 28, 2024 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 28, 2024 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!

Go down

விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்! Empty விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!

Post by Tamil Sat Feb 06, 2010 6:59 am

சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த 14 (பொங்கல் தினத்தன்று), 15ஆம் தேதிகளில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை செய்தது. இந்த விசாரணையில் கலந்துகொண்டு, நேரிடையாக சாட்சியமளித்தவர்களில் ஒருவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் முனைவர் பால் நியூமேன்.

இலங்கைக்குச் சென்று சமூக ஆய்வு மேற்கொண்டவர். அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தில் இவர் அளித்த சாட்சியம் மிக மிக முக்கியமானதாகும்.
சென்னை வந்திருந்த பால் நியூமேனை தமிழ்.வெப்துனியா. காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா. அய்யநாதன் பேட்டி கண்டார்.

தமிழ்.வெப்துனியா.காம்: சிறிலங்க அரசை போர்‌க் குற்றவாளி என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்றும் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் தனது ஆரம்பக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இக்குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது?

முனைவர் பால் நியூமேன்: போ‌ர் நடந்தபோது மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்க படையினர் கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்திய தாக்குதலை உறுதி செய்யும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வந்த மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. உலகமெங்கும் தடை செய்யப்பட்டுள்ள கிளஸ்டர் பாம்ஸ் என்றழைக்கப்படும் கொத்துக் குண்டுகள், ஒயிட் பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இவைகள் மட்டுமின்றி, தங்களிடன் சிக்கிய தமிழ் இளைஞர்களை சிறிலங்கப் படையினர் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். உண்மையானவைதான் என்று நீருபணமான அந்த ஆதாரமும் அளிக்கப்பட்டது.

இதேபோன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி, கற்பழித்த ஒரு மணி நேர வீடியோவும் இத்தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியைத்தான் ஆங்கில தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பியது. இவைகளின் அடிப்படையிலேயே சிறிலங்க அரசு போர்க் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது.

தமிழ்.வெப்துனியா: மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) எவ்வாறு நிரூபிக்கப்பட்டது?

பால் நியூமேன்: திட்டமிட்டப் படுகொலைகள், சித்ரவதை, கற்பழிப்பு, கருவுறச் செய்தல், அழித்தல் (Extermination), விருப்பத்திற்கு எதிராக மக்களை தடுத்து வைத்தல், இடம் பெயரச் செய்தல், மக்களை அழிக்கும் நோக்குடன் உணவு, குடி நீர் அளிக்காமல் திட்டமிட்டு செயல்படுவது ஆகிய நடவடிக்கைகளை மானுடத்திற்கு எதிரான குற்றங்களாக ஐ.நா.வின் பிரகடனம் கூறுகிறது. சிறிலங்க படையினரின் இப்படிப்பட்ட குற்றங்களால் பாதிப்பிற்குள்ளான பல தமிழர்கள் இத்தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்தார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, பல சிங்களவர்களும் சாட்சியமளித்தார்கள். இவர்கள் அனைவரிடமும் இன் கேமரா புரசீடிங்ஸ் என்று கூறப்படும் இரகசிய விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கே சென்று நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இந்த சாட்சிகளில் பலர் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இராணுத்திடம் பிடிபட்டு பிறகு முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள்.

தமிழ்.வெப்துனியா: சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றுக் குறித்து மேலும் விசாரணை நடந்த வேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளதே, ஏன்?

பால் நியூமேன்: இனப் படுகொலை என்பது மிகப் பெரிய குற்றச்சாற்று. அது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதாலும், அதில் சிறிலங்க அரசும் தன் நிலையை எடுத்துக் கூற வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாலும், இனப் படுகொலைக் குற்றத்தை உறுதி செய்யாமல் மேலும் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

தமிழ்.வெப்துனியா: இந்தத் தீர்ப்பாயத்தில் சிறிலங்க அரசுத் தரப்பில் யாரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லையா?

பால் நியூமேன்: சிறிலங்கத் தூதர் சாட்சியமளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக எந்த அடிப்படையில் சிறிலங்க அரசு தடை செய்தது என்பதை, அதன் சார்பாக, இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய கமாடோர் வாசன் நேர் நின்று சாட்சியமளித்தார்.

தமிழ்.வெப்துனியா: போரில் விடுதலைப் புலிகளும் போர் விதிமுறைகளை மீறிய, மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகள் செய்தனர் என்று குற்றம் சாற்றப்பட்டதே, அது குறித்து தீர்ப்பாயத்தின் நிலை என்ன?

பால் நியூமேன்: அது குறித்த தெளிவான தனது நிலையை தீர்ப்பாயம் விளக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் போராளிகள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வாய்ப்பு சிறிலங்க அரசிற்கு உள்ளது. இப்போது 11 ஆயித்திற்கும் அதிகமானவர்கள் (விடுதலைப் புலிகள் என்று அந்நாட்டு அரசால் சந்தேகிக்கப்படுபவர்கள்) சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களின் மனித உரிமை மீறல்களுக்கும், மற்ற குற்றங்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தண்டனை அளிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறிலங்க அரசு செய்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து யார் விசாரிப்பது? எனவேதான், ஒரு இறைமையுடைய அரசான சிறிலங்க அரசு தனது நாட்டு மக்களுக்கு எதிரான போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமைக் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது என்று மக்கள் தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்.வெப்துனியா: மக்கள் தீர்ப்பாயம் அளித்த ஆரம்பக்கட்டத் தீர்ப்பில் (Preliminary Findings) அளித்துள்ள மிக முக்கியமானத் தீர்ப்பு, சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வே அனுசரணையுடன் நடைபெற்றுவந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்குக் காரணம் சர்வதேச சமூகமே - குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமுமே - பொறுப்பாகும் என்று கூறியுள்ளது. எந்த அடிப்படையில் இம்முடிவிற்கு வந்தது தீர்ப்பாயம்?

பால் நியூமேன்: இதற்கான வாதத்தை முன் வைத்தவர் பேராசிரியர் பீட்டர் ஷால்க். புத்தம் உள்ளிட்டம பாரம்பரியங்களின் வரலாறு குறித்து ஆயவு செய்துவரும் பேராசிரியர் பீட்டர் ஷால்க், சிறிலங்க அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவோடும், அனுசரணையோடும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் போது, விடுதலைப் புலிகளை பயங்கரவாத அறிவித்து தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியதுடன், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்ததே பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு, இராணுவ நடவடிக்கையை சிறிலங்க அரசு துவக்கியதற்குக் காரணம் என்று கூறினார்.

விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தப் பிறகே அவர்களுக்கு எதிரான போரில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை சிறிலங்கா எளிதாகப் பெற முடிந்தது என்பதையும் ஷால்க் சுட்டிக்காட்டினார். ஆக, பேச்சுவார்த்தையில் பங்கேற்றுவந்த நிலையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடை செய்ததே, அமைதி பேச்சுவார்த்தை முறிவதற்குதபோர் துவங்கியதற்கும் காரணம
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்
» விடுதலைப் புலிகள் லிபிய விடுதலைப் போராளிகளுக்கு ஒப்பானவர்கள் !
» விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா?.
» ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா
» விடுதலைப் புலிகள் ஆதரவு: ஜெயலலிதா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum