TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வான் அஞ்சலுக்கு நூறு வயது!

Go down

வான் அஞ்சலுக்கு நூறு வயது! Empty வான் அஞ்சலுக்கு நூறு வயது!

Post by mmani Sat Feb 26, 2011 7:09 pm


வான் அஞ்சலுக்கு நூறு வயது! 26s10



அஞ்சல் பணிக்கும் வருவாய் பணிக்குமான ஒரே அஞ்சல் தலை


தொலைதூரத்தில்
இருப்பவர்களையும், அருகில் இருப்பவர்களையும் இணைக்கும் பாலமாக இருப்பது
அஞ்சல். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசியின் பயன்பாடு இல்லாத
காலத்தில் அஞ்சல் சேவைதான் நமக்குத் தகவல் தரும் சாதனமாகவும், பணப்
பரிமாற்றம் செய்யும் தோழனாகவும் விளங்கியது. இன்று அஞ்சல் துறையில்
வியக்கத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைபேசியும்,
கைபேசியும், கணினி வசதிகளும் அதிக அளவில் ஏற்பட்ட பின்பு, தகவல்
பரிமாற்றமும் பணப்பரிமாற்றமும் மிகவும் சுலபமாகியிருக்கின்றன.இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலைஇங்கிலாந்தில்
6. 5. 1840 - ஆம் ஆண்டு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. பிறகு இது
படிப்படியாக நம் நாட்டிலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவின்
முதல் அஞ்சல் தலை, 1. 7. 1852 அன்று ,தற்போது பாகிஸ்தானில் உள்ள
சிந்து மாகாணத்தில் வெளியிடப்பட்டது. இதை, சிந்து மாகாணக்
கமிஷனர் "பார்டில் பிரிரே' என்பவர் வெளியிட்டார். அந்த அஞ்சல் தலைகளை
"சிந்தெ டாக்' (நஇஐசஈஉ ஈஅரஓ) என்று அழைத்தனர். ஆசியாவிலேயே முதன் முதலாக
இந்தியாவில் வெளியிடப்பட்ட சிந்தெ டாக் அஞ்சல் தலைகள் அப்போது மிகவும்
வியப்பிற்குரியவையாகக் கருதப்பட்டன. அதைத் தொடர்ந்து மற்ற மாகாணங்களிலும்
அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.இரண்டு விதமாகப் பயன்பட்ட ஒரே அஞ்சல்தலைலண்டனில்
உள்ள "தாமஸ் - டி - லா' என்ற நிறுவனம் 1856 - ஆம் ஆண்டு முதல் 1882- ஆம்
ஆண்டுவரை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அஞ்சல் தலைகளை அச்சிட்டுக்கொடுத்தது.
பிறகு 1883 - ஆம் ஆண்டிலிருந்து 1926 - ஆம் ஆண்டுவரை இந்திய அரசிற்கு
அஞ்சல் தலைகளை அச்சிட்டுக் கொடுத்தது. அந்த நிறுவனம் கிழக்கிந்தியக்
கம்பெனிக்கு அச்சிட்டுக் கொடுத்த அஞ்சல் தலைகளில் "கிழக்கிந்தியக் கம்பெனி'
என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 1883 -ஆம் ஆண்டு ஏற்பட்ட
ஆட்சி மாற்றத்தால் இந்தியாவின் மகாராணியாக "விக்டோரியா மகாராணி'
பொறுப்பேற்றுக்கொண்டார்கள். எனவே அதற்குப் பிறகான அஞ்சல் தலைகளில் அந்த
மகாராணியின் படத்துடன், "இந்தியா போஸ்டேஜ்' எனும் வார்த்தைகளும்
அச்சிடப்பட்டன. பொதுவான "இந்தியா போஸ்டேஜ்' அஞ்சல் தலைகளையே, தபால்களை
அனுப்புவதற்கும், மற்ற பண விவகாரங்களுக்கான ரெவின்யு ஸ்டாம்பாகவும்
பயன்படுத்தினார்கள். இந்த அஞ்சல் தலைகளில் "இந்தியா போஸ்டேஜ் - ரெவின்யு'
என்று அச்சிடப்பட்டிருக்கும்.உலகிலேயே முதல் வான் அஞ்சல் சேவைஅஞ்சல்களை
விமானம் மூலம் தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லும் முறையை
நடைமுறைப்படுத்த ஆங்கிலேய அரசு 1911 - ஆம் ஆண்டு திட்டமிட்டது. உலகிலேயே
இந்தியாவில்தான் முதன் முதலாக விமானம் மூலம் தபால்களை எடுத்துச் செல்லும்
சேவை தொடங்கப்பட்டது. அந்தத் தொடக்கத்தின் முதல் நாள்
நிகழ்ச்சி 18. 2 1911 அன்று நடைபெற்றது. "சபிக்கியூட்' எனும் பெயருள்ள
பிரெஞ்சு விஞ்ஞானி அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார். அலகாபாத் நகரிலிருந்து
நைனி வரை பறந்த அந்த விமானத்தில் 6500 அஞ்சல் உறைகளும், 40 சிறப்பு அஞ்சல்
அட்டைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த அஞ்சல்களின் மேல் சிறப்பு அஞ்சல்
முத்திரை இடப்பட்டது. அந்த முத்திரையில் "முதல் வான்
அஞ்சல்' என்ற வாசகமும் விமானத்தின் படமும், 1911 என்ற எண்களும் இடம்
பெற்றிருந்தன. அப்போது வான் அஞ்சலுக்காகத் தனியாக அஞ்சல் தலைகள்
வெளியிடப்படவில்லை. பொதுவான அஞ்சல் உபயோகத்தில் இருந்த "அரை அணா' அஞ்சல்
தலைதான் வான் அஞ்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது.வான் அஞ்சல் சேவையைச்
சிறப்பிக்கும் அஞ்சல் தலைகள் 22. 10. 1929 அன்று ஆறு வண்ணங்களில், ஆறுவித
பண மதிப்புடைய வான் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. அந்த அஞ்சல் தலைகளில்
வான் அஞ்சல் எனும் வாசகமும் அச்சிடப்பட்டது. வான் அஞ்சல்
தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 18. 2.
1961 அன்று, மூன்று சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. இவை மூன்றும்
ஒரு ரூபாய், பதினைந்து பைசா, ஐந்து பைசா மதிப்புடையவையாக இருந்தன. இந்த
அஞ்சல் தலைகளில் வான் அஞ்சல் என்ற வார்த்தைகள்
அச்சிடப்படவில்லை. 22. 10. 1929 - இல் முதன் முதலாக வான்
அஞ்சல் தலைகள் வெளியிட்டு, ஐம்பது ஆண்டுகள் ஆனதைச் சிறப்பிக்கும் வகையில்,
டில்லியில் 15. 10. 1979 அன்று அனைத்து நாடுகளின் அஞ்சல் தலைக் கண்காட்சி
நடந்தது. அந்த நிகழ்ச்சியில் வானூர்திகளின் படங்கள் அச்சிட்ட அஞ்சல் தலைகள்
வெளியிடப்பட்டன. அவை முப்பது பைசா, ஐம்பது பைசா, ஒரு ரூபாய் மற்றும்
இரண்டு ரூபாய் மதிப்புடையவை.பின்னர், வான் அஞ்சல் சேவையைத்
தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிறப்பிக்கும் வகையில் 18. 2. 1986
அன்று ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அந்த அஞ்சல் தலையின்
மதிப்பு ஐம்பது பைசா.வான் அஞ்சல் சேவையைத் தொடங்கி நூறு
ஆண்டுகள் (18. 2. 1911 - 18. 2. 2011) முடிவடைவதைச் சிறப்பிக்கும்
வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானூர்தியின் படம் அச்சிடப்பட்ட ஒரு அஞ்சல் தலையின் விலை இருபது லட்சம் ரூபாய்!அமெரிக்காவில்
உள்ள புளோரிடா மாநிலத்தில் 1936 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளாட்சித்
தேர்தல்கள் நடந்தன. வாக்குப் பெட்டிகளைத் திறந்து வாக்குகளை எண்ணிப்
பார்த்தபோது ஒருவரிடம், இருபத்து நான்கு சென்ட் மதிப்புள்ள அமெரிக்க அஞ்சல்
தலை ஒட்டிய உறை ஒன்று கிடைத்தது. அவர் அந்த அஞ்சல் உறையை
அருகிலிருந்த அதிகாரி ஜான் ராஸ்டர்டாம் என்பவரிடம் காட்டினார். அந்த
அதிகாரி சிறுவயதிலிருந்தே அஞ்சல் தலைகளைச் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்.
அவர் அந்த அஞ்சல் தலையைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார். அந்த அஞ்சல்
தலை 1918 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் உலகப்போர் நடந்தபோது
பயன்படுத்தப்பட்ட வானூர்தியின் படம் அந்த அஞ்சல் தலையில்
அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் தலைகீழாக அச்சிடப்பட்டிருந்தது என்பதுதான்
முக்கியமான விஷயம்! அவர் அதை எடுத்து வைத்துக்கொண்டதும், அதிர்ஷ்டம்
அவரைத் தேடி வந்தது. அவர் அந்த அஞ்சல் தலையை 1983 - ஆம்
ஆண்டு ஏலம்விட முடிவு செய்தார். அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் அந்த அஞ்சல்
தலை இருபது லட்சம் ரூபாய் விலைபோனது. விமானத்தின் படம் தவறுதலாக, தலைகீழாக
அச்சடிக்கப்பட்டிருந்த காரணத்தால்தான் இது இவ்வளவு மதிப்பிற்குரியதாக ஆனது.
அதை ஏலம் எடுத்தவரின் விவரம் வெளியிடப்படவில்லை. பொதுவாக அதிக மதிப்புடைய
அஞ்சல் தலைகளை வைத்திருப்பவர்களின் பெயர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக
வெளியிடப்படுவதில்லை.அஞ்சல் தலைகளிலோ, ரூபாய் நோட்டுகளிலோ,
நாணயங்களிலோ ஏதாவது பிழையோ, குறையோ இருந்தால் அவற்றின் மதிப்பு பன்மடங்கு
அதிகரிக்கிறது என்பது உண்மை!
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நூறு வயது கிழவிக்கு முளைத்த கொம்பு
» "நூறு வயது தரும் நோய் நீக்கி" சோற்றுநீர் எனப்படும் நீராகாரம் !
» ஒரே புகைப்படத்தில் ஆறு தலைமுறையினர். 111-வயது,88-வயது,70-வயது,39-வயது,16 வயது,7 வாரம்.
» 24 வயது ஆண்மகனை சேர்த்து வைக்க போலீசிடம் உதவி கேட்ட 50 வயது பெண்
» 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியர் ஓட்டம்! துரத்தி பிடிக்கச் செல்கிறது பொலிஸ் படை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum