TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அடிப்படை வசதிகள் இல்லாமல் தள்ளாடுது தலைநகர கோர்ட்டுகள்

Go down

அடிப்படை வசதிகள் இல்லாமல் தள்ளாடுது தலைநகர கோர்ட்டுகள் Empty அடிப்படை வசதிகள் இல்லாமல் தள்ளாடுது தலைநகர கோர்ட்டுகள்

Post by மாலதி Wed Feb 16, 2011 7:36 am

அடிப்படை வசதிகள் இல்லாமல் தள்ளாடுது தலைநகர கோர்ட்டுகள் Large_188867
சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை, ஐகோர்ட்
தலைமை நீதிபதி கடந்த 11ம் தேதியன்று திடீரென பார்வையிட்டார். அடிப்படை
வசதிகள் ஏதும் இல்லாமல் இருப்பதை அறிந்த தலைமை நீதிபதி
அதிருப்தியடைந்தார். இந்த வழக்கை தானாக முன்வந்து, ஐகோர்ட் விசாரணைக்கு
எடுத்தது.இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் தலைமை நீதிபதி கூறும் போது,
"ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு நான் சென்று பார்த்தேன்.
அங்கு அடிப்படை வசதிகள் இல்லை. அனைத்து வசதிகளையும் அளிக்க எத்தனை நாள்
ஆகும்?' என கேள்வி எழுப்பினார்.அதோடு, "ஜார்ஜ் டவுன் கோர்ட்டிற்கு 25
நாற்காலிகளை வழங்க முடியாத நிலையில் தான் அரசு உள்ளது. ஆனால்,
லட்சக்கணக்கில் கலர் "டிவி' வழங்குகின்றனர். அரசு நீதித்துறைக்கு
ஒதுக்கப்படும் நிதி மொத்தம் 5 சதவீதம் கூட வராது' என, தனது கருத்தை
வெளிப்படுத்தினார்.தலைமை நீதிபதி ஆய்வு செய்த ஜார்ஜ் டவுன் கோர்ட்
மட்டுமல்லாது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோர்ட்டுகள்
அனைத்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றன.
அவற்றின் தொகுப்பு:சென்னையில், செயல்படும் மூன்று குற்றவியல்
நடுவர் கோர்ட்டுகளில் பிரதானமானது எழும்பூர் கோர்ட். இதில், சென்னை
பெருநகர முதன்மை மாஜிஸ்திரேட், இரண்டு கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள்,
முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது, ஆறாவது, 10வது, 13வது, 14வது மாஜிஸ்திரேட்
கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில், முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில்,
மத்திய குற்றப்பிரிவு தொடர்பான வழக்குகளும், கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட்
கோர்ட்டுகளில் ஒன்றில் சி.பி.ஐ., வழக்குகளும், மற்றொன்றில் பொருளாதார
குற்ற வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன.
இரண்டாவது கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., தொடர்பான வழக்குகளும், ஆறாவது
கோர்ட்டில் ரயில்வே தொடர்பான வழக்குகளும், மற்றவற்றில் சென்னையில் உள்ள
ஒவ்வொரு காவல் மாவட்டத்தில் பதிவான வழக்குகளும்
விசாரிக்கப்படுகின்றன.நாளொன்றிற்கு 800 முதல் 1,000 வழக்குகள் இங்குள்ள
ஒன்பது கோர்ட்டுகளிலும் விசாரிக்கப்படுகின்றன. இந்த கோர்ட்டில் 600
வக்கீல்கள் பதிவு செய்துள்ளனர்; ஆனால், இங்கு வழக்காட வரும்
வக்கீல்களுக்கான சேம்பர் இல்லை.இது தவிர வழக்குகளில்
ஆஜர்படுத்தப்படுவதற்கான கைதிகள், பொதுமக்கள், போ லீசார் என தினசரி
பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கான
குடிநீர், கழிப்பறை, எந்த கோர்ட், எங்கு செயல்படுகிறது என்பதற்கான
அறிவிப்புகள், அமர்வதற்கான இருக்கைகள் இல்லை என, இல்லாத வசதிகளின்
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை
அடைத்து வைப்பதற்கான, சப்-ஜெயில் வசதி தற்போது இல்லை. எனவே, ஜெயிலில்
இருந்து கொண்டு வரப்படும் கைதிகள், வாகனங்களிலேயே பாதுகாக்கப்பட்டு,
கோர்ட்டிற்குள் தேவைப்படும் போது அழைத்து வரப்படுகின்றனர்.
வழக்கு தொடர்பான சொத்துக்களை பாதுகாப்பதற்கான வசதிகள் இல்லை. பல
ஆண்டுகளாக பழைய பொருட்கள் அனைத்தும் இரும்பு டன் குவித்து
வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு இன்ஸ்பெக்டர்
தலைமையில், தினசரி 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையும் வசதிகள் இன்றி உள்ளது. இந்த வளாகத்தில்
உள்ள ஐந்தாவது, ஆறாவது மற்றும் 13வது கோர்ட்டுகளில் முழுமையான மின்சார
வசதி இல்லை.கைதிகளுக்கோ, பொதுமக்கள் மற்றும் வக்கீல்களுக்கோ உடல் நிலை
பாதிக்கப்பட்டால், மருத்துவ உதவிக்கான டாக்டர், மருந்தக வசதிகள்
இதுவரையில் அமைக்கப்படவில்லை.
சென்னை சைதாப்பேட்டை கோர்ட் கட்டடம் 150 ஆண்டு கால பழமை வாய்ந்தது.
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோர்ட் வளாகத்தில் ஆறு
கோர்ட்டுகள் இயங்குகின்றன. இதில், விபசார தடுப்பு பிரிவு மற்றும் விபத்து
வழக்குகளை விசாரித்து வரும் நான்காவது கோர்ட், பொருளாதார குற்றங்களை
விசாரிக்கும் பதினோறாவது கோர்ட்டுகளில் சப்-ஜட்ஜ்கள்
பணியாற்றுகின்றனர்.ஒன்பது, பதினேழு, பதினெட்டு, இருபத்தி மூன்று ஆகிய
நான்கு கோர்ட்டுகளில் செக் மோசடி மற்றும் தென் சென்னை மாவட்டத்தில்
அடங்கிய 25 போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்குகள்
விசாரிக்கப்படுகின்றன. இந்த நான்கு கோர்ட்டுகளிலும் மாஜிஸ்திரேட்டுகள்
பணியாற்றுகின்றனர்.கடந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரம் வழக்குகள்
பதிவாகியுள்ளன.
ஆனால், பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோர்ட்டுகளின் எண்ணிக்கை போதாத
காரணத்தினால் வழக்குகள் தேங்கி நிற்கின்றன.விசாரணை கைதிகள், வக்கீல்கள்,
போலீசார், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என, தினமும் கோர்ட்டிற்கு 2,000
பேர் வந்து செல்கின்றனர். இவர்கள் பயன்படுத்த கழிப்பறை இல்லை. இதனால்,
பெண் விசாரணை கைதிகள் மற்றும் பெண்களும் இயற்கை உபாதை கழிக்க முடியாத
சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.கோர்ட்டில் பணிபுரியும் பணியாளர்கள்
உபயோகப்படுத்துவதற்காக, ஒரேயொரு கழிப்பறை நான்காவது கோர்ட் அருகே உள்ள
அலுவலக அறையில் உள்ளது. இந்த கழிப்பறையை தான், ஆறு கோர்ட்டுகளிலும்
பணிபுரியும் ஊழியர்கள் பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், "ரிமாண்ட்' செய்வதற்காக சில கோர்ட்டுகள்
இயங்கும். அந்த நேரத்தில் விடுமுறை காரணமாக அலுவலக அறை
பூட்டப்பட்டியிருக்கும். அப்போது பணியாற்றும் கோர்ட் ஊழியர்கள் இயற்கை
உபாதையை கழிக்க வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.கோர்ட் ஹாலில்,
பழங்காலத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறிகளும் சரியாக ஓடுவதில்லை.
டியூப்லைட்டுகளும் எரியாமல், "மக்கர்' செய்கின்றன.வக்கீல்கள்
உட்காருவதற்கு போதுமான பெஞ்சுகளும், நாற்காலிகளும் இல்லை. கோர்ட்
வளாகத்தில் பாழடைந்த ஒரு லாக்-அப் அறை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
அதேபோல ஜெயிலர் குடியிருப்பு, பிராப்பர்ட்டி அறை ஒன்றும் இருக்கிறது.
அங்கு குப்பை, கூளங்கள் மண்டி கிடக்கின்றன.
சென்னை நகரில் உள்ள கோர்ட்டுகள் மட்டுமின்றி, புறநகரில் இயங்கும் கோர்ட்டுகளுள் வசதிகளின்றியே காணப்படுகிறது.
அவற்றின் பரிதாப நிலை குறித்த ரிப்போர்ட்:
தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில் ஒருங்கிணைந்த கோர்ட் உள்ளது.
இதில், மாவட்ட உரிமையியல் கோர்ட், குற்றவியல் கோர்ட் மற்றும் சார்பு
கோர்ட் ஆகியவை இயங்கி வருகின்றன. தினசரி 2,000 பொதுமக்களும், 100க்கும்
மேற்பட்ட போலீசாரும், 300 வக்கீல்களும் இங்கு வந்து செல்கின்றனர். இந்த
கோர்ட்டிற்கு, குழாய் மூலம் தாம்பரம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி
வந்தது. கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுத்து, சுத்திகரித்து,
குடிநீராக பயன்படுத்துகின்றனர். கோர்ட் ஊழியர்கள், வக்கீல்களுக்கான
கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை.
பூந்தமல்லி: பூந்தமல்லியில் இரண்டு குற்றவியல் கோர்ட்டுகள்,
இரண்டு முனிசிப் கோர்ட்டுகள், ஒரு சார்பு கோர்ட் ஆகியவை பஸ் ஸ்டாண்டிற்கு
அருகில், ஒரே வளாகத்தில் தனித்தனி கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இங்கு
குற்றவியல் கோர்ட்டுகளுக்கு 186 வக்கீல்களும், சிவில் கோர்ட்டுகளுக்கு
200க்கும் மேற்பட்ட வக்கீல்களும் பணியாற்றுகின்றனர்.குற்றவாளிகள்,
போலீசார், பொதுமக்கள், வக்கீல்கள் என தினசரி இக்கோர்ட் வளாகத்திற்கு
3,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சிறுசிறு அறைகளுடன் பழைய
கட்டடத்தில் கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. அலுவலக பணிகளுக்கு தேவையான
நாற்காலி, டேபிள், வழக்கு ஆவணங்களை பாதுகாக்கும் பீரோ ஆகியவற்றை கூட அரசு
வழங்கவில்லை.பார் அசோசியேஷன் மூலம் அவ்வப்போது தேவையான டேபிள், சேர்களை
வக்கீல்களே வாங்கி, கோர்ட்டிற்கு தானமாக அளித்து வருகின்றனர். வழக்கில்
ஆஜராவதற்காக வரும் குற்றவாளிகள், பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு என
பொதுக் கழிப்பறை கிடையாது.அதுவும் மாதத்திற்கு இருமுறை மோட்டார் பழுதாகி
விடும். பார்க்கிங் வசதி கிடையாது. கேன்டீன் வசதி இல்லை. கடந்த இரு
ஆண்டுகளுக்கு முன் ஒன்றரை கோடி ரூபாய் செலவில், பூந்தமல்லி கோர்ட்
வளாகத்தில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டும் பணி துவங்கியது.லிப்ட்
அமைக்கும் பணியை தவிர மற்ற பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த கட்டடம் விரைவில்
திறக்கப்பட்டால், தற்போதைய கட்டமைப்பு குறைபாடு பிரச்னைகள் தீரும்.
அடிப்படை வசதியின்றி அல்லாடும் விரைவு கோர்ட்டுகள்:வழக்குகள்
தேக்கத்தை குறைக்க அமைக்கப்பட்ட சென்னை விரைவு கோர்ட்டுகளில், போதிய
அடிப்படை வசதியில்லாமல் இயங்கி வருவதால், ஊழியர்கள், வழக்காளிகள்
பாதிக்கப்படுகின்றனர். இந்தியா முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும்
லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்ததால், சிறப்பு கோர்ட்டுகள், விரைவு
கோர்ட்டுகள் மற்றும் "லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றங்கள்
அமைக்கப்பட்டன. தமிழகத்தில், கடந்த 2001 முதல் மாவட்டத்திற்கு ஐந்து
விரைவு கோர்ட்டுகள் வீதம் துவக்கப்பட்டன.சென்னையில் கலெக்டர் அலுவலக
கட்டடத்தில், ஐந்து விரைவு கோர்ட்டுகள் செயல்படுகின்றன. முதல் தளத்தில்
நான்காவது விரைவு கோர்ட்டும், இரண்டாவது தளத்தில் மற்ற நான்கு விரைவு
கோர்ட்டுகளும் உள்ளன. மிகச்சிறிய அறையில் இந்த கோர்ட்டுகள்
செயல்படுகின்றன. கோர்ட் ஆவணங்களை (ரெக்கார்டு) பத்திரமாக வைத்திருக்க
கோர்ட் ஹாலுக்குள், தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை சிறிதாக
இருப்பதால், மீத ஆவணங்களை கோர்ட் ஹாலில் பல இடங்களில் அடுக்கி
வைத்துள்ளனர். கழிவறைகள் பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் பயன்படுத்த
முடியாத நிலையில் உள்ளன.இதுகுறித்து, இரண்டாம் தளத்தில் பணிபுரியும்
ஊழியர்கள் கூறும்போது, "கழிவறைகளுக்காக முதல் தளத்துக்கு செல்ல
வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களுக்காக நீதிபதி
அழைத்தால் வர தாமதமாகும். இதனால், ஊழியர்களுக்கு நீதிபதிகள் "வாரண்ட்'
பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளது' என்றனர்.குறுகிய இடத்தில் நான்கு விரைவு
கோர்ட்டுகள் உள்ளதால், வழக்குகளில் ஆஜராக சிறையிலிருந்து அழைத்து
வரப்படும் குற்றவாளிகளை வராண்டாவில், ஒரே இடத்தில் நிற்க வைப்பதால்
நெரிசல் ஏற்படுகிறது. குற்றவாளிகள் காத்திருக்க அறை இல்லாததால் பாதுகாப்பு
குறைபாடும் ஏற்பட்டுள்ளது.கோர்ட் சுவர்களில் "பான்பராக்' புகையிலை
எச்சிலால் மாசு படிந்துள்ளன. "லிப்ட்' அருகில் உடைந்த நாற்காலிகள் மற்றும்
குப்பைகளை போட்டு குவித்துள்ளதால், அங்கு உற்பத்தியாகும் கொசுக்கள் கோர்ட்
அறைகளில் தொல்லை தருகின்றன. வழக்குகளில் பறிமுதலாகும் பொருட்கள், ஐகோர்ட்
வளாகத்தில் செஷன்ஸ் கோர்ட் அறைகளில் வைக்கப்படுவதால், வழக்கு விசாரணையின்
போது, இந்த பொருட்களை எடுத்து வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
ஒருங்கிணைந்த கோர்ட் அமையுமா?கடந்த 1915-16 ஆண்டுகளில்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பொறியியல் ஒப்பந்ததாரரான மாசிலாமணி
முதலியார் என்பவரால், இந்த கோர்ட் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நூற்றாண்டை
நெருங்கி நிற்கும் இக்கட்டடத்தை இடிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற
கோரிக்கையும் உள்ளது.இந்நிலையில், 300 கோடி ரூபாய் செலவில், எழும்பூரில்
ஒருங்கிணைந்த கோர்ட் கட்டப்படும் என பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடமான எழும்பூர் கோர்ட்டை இடித்து விட்டு,
ஒருங்கிணைந்த கோர்ட் அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சைதாப்பேட்டை வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: சைதாப்பேட்டை
கோர்ட்டில் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. பொதுமக்களுக்கு கழிப்பறை,
குடிநீர் வசதி இல்லை. சின்டெக்ஸ் தொட்டியில், வாரத்திற்கு ஒரு நாள் லாரி
மூலம் குடிநீர் வருகிறது. அந்த நீரை யாரும் குடிப்பதற்கு
பயன்படுத்துவதில்லை. லாரி வருவதற்கு 10 முறை போனில் தெரிவிக்க
வேண்டும்.நீதிபதிகள் அறை எதுவும் திட்டமிட்டு கட்டப்படவில்லை. இருக்கிற
அறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோர்ட் ஹாலில் இட நெருக்கடி
ஏற்படுகிறது. வக்கீல்களும், பொதுமக்களும் இடித்து செல்லும் நிலை உள்ளது.
முதியவர்களை உட்கார வைப்பதற்கும் இடவசதி இல்லை. வழக்கு தொடர்பான கட்டுகளை
வைப்பதற்கும் இடம் இல்லை.கோர்ட் ஹால் ஏதோ வராண்டா ஹால் போல்
காணப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட பெண் வக்கீல்கள் உள்ளனர். அவர்களுக்கு
உடை மாற்றுவதற்கு அறை வசதி இல்லை. கோர்ட்டில் டைப்பிஸ்ட் ஊழியர்களும்
பற்றாக்குறையாக உள்ளனர். கோர்ட் வெளியே மாநகர பஸ்சுகளும் நின்று
செல்வதில்லை. கோர்ட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum