TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Go down

  ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது   Empty ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Post by மாலதி Thu Feb 03, 2011 7:42 am

  ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது   Sudan

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த போதே தெற்குச் சூடானிலும் விடுதலைப்போர்
ஆரம்பமானது. 25 ஆண்டுகளுக்கு மேலான காலம் தொடர்ந்த அந்தப் போராட்டம்
தற்போது வெற்றியின் விளிம்பை எட்டிப் பிடித்துள்ளது. இன்னும் சில
வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களில் தென் சூடான் தனி நாடாகப்
பிரகடனப்படுத்தப்பட்டுவிடும்.

தென்சூடானில் கடந்த இருபத்திரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட
உள்நாட்டு விடுதலைப் போராட்டம், வெற்றியைத்தொட்டு நிற்கிறது. பட்ட
கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் எல்லாம் மறந்து உண்மை யான சுதந்திரக்
காற்றைச் சுவாசிக்க தென் சூடானியர்கள் தயாராகி நிற்கிறார்கள். 2005 ஆம்
ஆண்டில் கென்யாவின் மத்தியஸ்தத்துடன் வட சூடானுக்கும் தென் சூடானுக்கும்
இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை தனிநாட்டுக் கோரிக்கைக்கான
விருப்பு வாக்கெடுப்புவரை கொண்டு வந்துள்ளது. முழுச்சுதந்திர தேசமாகத்
தென்சூடான் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ள இன்னும் சில படிகளே
இருக்கின்றன. நடந்து முடிந்த கருத்துக் கணிப்பில் இதில் தென்சூடானிய
மக்களும், வடசூடானில் வாழும் தென்சூடானிய மக்களும் உலகம் முழுதும்
புலம்பெயர்ந்து வாழும் தென்சூடானிய பூர்வீகக் குடிகளும் ஆர்வம் காட்டினர்.
வாக்கெடுப்பில் 97.5% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் குழுத்
துணைத்தலைவர் டிமோன் வான் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார்.வடக்கு
சூடானில் நடத்தப்பட்ட ஆதரவு வாக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 116,857
வாக்காளர்களில் 67,597 பேர் வாக்களித்திருந்தனர். இவர்களில் 41%
ஒருங்கிணைவுக்கும், 55% தனிநாட்டுக்கும் ஆதரவாகத் தமது வாக்குகளைப்
பயன்படுத்தியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ
தேர்தல் முடிவுகள் பெப்ரவரி இடைப் பகுதியில் வெளியிடப்படும். அத்தேர்தல்
முடிவுகளின்படி ஜூலை நடுப்பகுதியில் தனி நாட்டு பிரகடனம் மேற்
கொள்ளப்படும். வெகுவிரைவில் ஆபிரிக்கா கண்டத்தின் ஐம்பத்து ஐந்தாவது தேசம்
உதயமாகும்.

தென்சூடானின் உருவாக்கம்

இன்றைய சூடான் தற்போது இருக்கும் இடத்தில் முன்னர் எகிப்திய
நாகரிகங்களுக்குச் சவால் விடும் வகையில் எழுச்சி பெற்றிருந்தது நூபியா
என்ற ஆபிரிக்கப் பேரரசு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பேரரசு நிலை
பெற்றிருந்தது என்று கூறப்பட்டாலும் ஆபிரிக்கா வில் நாகரிக உருவாக்க காலம்
அதையும் கடந்து செல்வதை ஆராய்ச்சிகள்தெரிவிக்கின்றன. இந்தப் பேரரசு
பல்வேறு தாக்குதல்களினால் மெல்ல மெல்ல நலிவுற்றுச் சிதைந்தது. இந்தப்
படையெடுப்பாளர்களில் பெரும் பகுதியினர் இஸ்லாமியராக இருந்தனர். அவர்கள்
வடசூடானில் வாழ்ந்த நூபியா பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே
தங்கிவிட்டனர். இதனால் சூடானிய அரேபியர்கள் என்ற புதிய இனம் வடசூடானில்
உருவாகியது. அரேபிய யர்கள் வணிகத்தையும் கடல்சார் பயணங்களையும் தமது
தொழிலாகக் கொண்டிருந்தமையால் பொருளாதார மற்றும் படை பலமுடையவர்களாக
வடசூடானிய அரேபியர்கள் விளங்கினர்.வடசூடான் வெளியாள்களின்
படையெடுப்புகளுக்கு உட்பட்ட அளவிற்கு சூடானின் தென்பகுதியானது, ஆரம்பம்
முதலே அதிகளவான படையெடுப்புகளால் தாக்கப்படவில்லை. எப்போதும் தனது
பழங்குடிப் பண்பாட்டுத் தனித்துவத்தை இழக்காமல் அது இருந்தது.
தென்சூடானியப் பிராந்தியத்தில் இன்னும் பண்டைய மக்களது பல்வேறு வாழ்வியல்
கூறுகளை அவதானிக்கலாம். இந்தப் போக்கு சூடானின் வடக்கு மற்றும் தெற்குப்
பகுதிகளில் பெருமளவு வெவ்வேறுபட்ட கலாசாரங்கள் தழைத்தோங்கி வளர்வதற்கான
உந்துதலைத் தந்தது. இவ்வாறு ஒரு தேசத்திற்குள்ளேயே வடக்கு தெற்கு என இரு
வேறு திசைகளில் பயணித்தவர்களை ஆங்கிலேயரது காலனித்துவம் வெகுவாகப்
பாதித்தது. ஆங்கிலேயர் தமது நலன் சார்ந்து செயற்பட்ட வடசூடானில் அதிகளவு
அபிவிருத்திகளை மேற்கொண்டனர். தென்சூடான் அடிமைகளை உற்பத்தி செய்யும்
நிலமாகவே அவர்களால் பார்க்கப்பட்டது. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என
அனைத்துத் துறைகளிலும் தென்சூடான் புறக்கணிக்கப் பட்டது. ஆங்கிலேயர்கள்
தமது மதம் சார் அமைப்புக்களுக்கூடாக தென்சூடானில் மக்களை நாகரிகப்
படுத்துவதாக அவர்கள் கூறிய பணியை மட்டுமே மேற்கொண்டனர். இறுதியில் நேரடிக்
காலனித்துவத்தை ஆங்கிலேயர்கள் உலகத்தி லிருந்து கைவிடும்போது அனைத்து
ஆட்சி அதிகாரங்களையும் வடசூடானிடம் வழங்கிவிட்டுச் சென்றனர். ஆட்சியை
ஏற்றுக் கொண்ட வடசூடானிய அரேபியர்கள் மொழி, மதம், கலாசார விழுமியங்கள்
என்ற விடயங்களில் தென்சூடானியர் மீதான அடக்குமுறையைக்
கட்டவிழ்த்துவிட்டனர். 1969 ஆம் ஆண்டில் இருந்து சதிப்புரட்சி மூலம்
வடக்கில் ஆட்சிக்கு வந்த கேணல் நிமேரி பல்வேறு அடிப்படைவாத
ஒடுக்குமுறைகளைக் கடைப்பிடித்தார். இஸ்லாமிய ஷரியாச் சட்டம்
தென்சூடானிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இது தென்சூடானியர்களை
மத, இன,கலாசாரரீதியாகப் புண்படுத்தியது. இதனால், அதிருப்தியுற்ற
தென்சூடானியப் பழங்குடியினர் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் குதித்தனர்.

சூடான் மக்கள் விடுதலைப் படையும் ஆயுதப் போராட்டமும்

தென்சூடானியர்கள் அரசுக்கு எதிராக ஆரம் பித்த வன்முறைப் போராட்டங்கள்,
கிளர்ச்சிகள் நீடித்துப் பெருகின. 1983 ஆம் ஆண்டளவில் பெரியளவிலான
வன்முறையாக அது வெடித்தது. இதனை அடக்குவதற்கு வடசூடானில் இருந்து படையினர்
அனுப்பப்பட்டனர். இப்படையினருக்குத் தலைமை வகித்து வந்த ஜோன் கரெங்
தென்சூடானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் சொந்த மக்களுடன் இணைந்து
அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார். இவரைத் தலைமையாகக் கொண்டு
உருவாக்கப்பட்டதே சூடானிய விடுதலை இயக்கம். இந்த இயக்கமானது இராணுவத்துறை,
அரசியல் துறை, வெளியுறவுத்துறை என்ற அமைப்பு வடிவில் போராட்டத்தை
முன்னெடுத்தது.
ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே வடசூடானின்
கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைச் சூடான் மக்கள் விடுதலைப்
படையினர் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவர்களுக்கான ஆயுத வழங்கலை
அமெரிக்கா கென்யாவூடாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. சூடானிய விடுதலை
இயக்கத்தின் வெளியுறவுத்துறை யானது அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய
வல்லரசுகளுடனும், உலகம் தழுவிய ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடனும் பரஸ்பர
நல்லு றவைப் பேணுவதில் கவனம் செலுத்தியது.எப்படித்தான் கட்டுக்கோப்புடைய
இயக்கமாக அது இருந்தாலும் அமெரிக்கா சார்புடைய ஒரு விடுதலைப் போராட்டக்
குழுவாகத் தான் மாறுவதை அதனால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை.
இயக்கத்துக்குள் உட்பிளவுகள் பலவும் சிக்கல் கள் பலவும் இருக்கின்றன.
பிரதேசரீதியான, இனரீதியான தன்னாதிக்கத்தையே இந்தப் பிளவுகள் காட்டுகின்றன
என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தென்சூடான் அந்தச்
சவாலையும் வென்றது

http://onlineuthayan...ssay_more&id=96


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்
» 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை
» ஜில்லா, வீரம் படங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: விஜய் பேச்சு ....
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
» ஈழ விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum