TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 06, 2024 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம் என்ன?

Go down

பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம் என்ன? Empty பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம் என்ன?

Post by அருள் Mon Jan 19, 2015 6:48 am

பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் பலனில்லை... காரணம் என்ன? 10942742_1402192770079878_1807038577117045235_n
மத்தியில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 7 மாதங்களில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலையும் டீசல் விலை 5 முறையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. வரவேற்க தகுந்த விசயமே என்றாலும் இந்த விலைக் குறைப்பின் பின்னால் இருக்கும் அரசியல் சற்று கவலை அளிக்கக் கூடியதே.
விலைக் குறைப்பு அறிவிப்போடு இன்னொரு செய்தியும் கலந்து வருவதே கவலை தரும் ஒன்றாக எல்லோராலும் கவனிக்கப் படுகிறது.அது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வே காரணம் என்று கூறப்படும் நிலையில், 9 முறை பெட்ரோலும் 5 முறை டீசலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் விலைவாசியும் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களும் வெகுவாகக் குறைந்து நடுத்தர ஏழை மக்களின் மத்தியில் மகிழ்ச்சியை அல்லவா ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
மாறாக அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் காய்கறி, பழ வகைகளும், பேருந்து ரயில் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்களும் 7 மாதங்களுக்கு முன்பிருந்த அதே விலையிலும் பலநேரங்களில் கூடுதல் விலையிலும் இருக்கின்றன. இதுதான் புரியாத புதிராகவும் விலகாத மர்மமாகவும் இருக்கிறது.
கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய போதெல்லாம் எதிர்ப்பு காட்டிய பாஜகவின் தலைமையில் மத்தியில் ஆட்சியை அமைத்து 7 மாதங்கள் ஆகிய நிலையிலும் விலைவாசி உயர்வில் மாற்றம் இல்லை என்கிற யதார்த்தம் சுடத்தான் செய்கிறது.
இந்தியாவில் பெரும்பகுதி டீசல் விநியோகம் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கச்சா எண்ணையை சுத்திகரித்து பயன்பாட்டிற்கான பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் பணி என்பது 80 சதவீதம் ரிலையன்ஸ் குழுமத்திடம் தான் உள்ளது.இவற்றின் மூலம் தான் டூவீலர் முதல் விமானம் வரை ஏழை எளிய நடுத்தர கோடீஸ்வர மக்களின் பயணம் நடக்கிறது. உணவுப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் மருந்துப் பொருட்கள் என்று அனைத்து அத்தியாவசிய பொருட்களின் பரவலாக்கமும் நடைபெறுகிறது.அதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உடனடியாக மக்களை பாதிக்கிறது.
மன்மோகன் அரசு விலையையேற்றி மக்களை வதைத்தது என்றால் மோடி அரசு விலையைக் குறைத்து விலைவாசியின் விஷத்தின் கடுகடுப்பைக் குறைக்காமல் பார்த்துக் கொள்கிறதோ என்ற எண்ணம் 7 மாதங்களிலே பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குரல் எழுப்பும் அளவிற்கு சூழ்நிலை எற்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டியதே.
தனியார் எண்னை நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும் உள்நாட்டில் இருந்து தோண்டி எடுத்தும் எரிபொருளை அரசிற்கு கூடுதல் விலைக்கு விற்கின்றன. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் மன்மோகன் சிங் அரசு, பெட்ரோல் விலையை எண்னை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள சட்டம் கொண்டு வந்தது. அதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்ந்தது என்று காரணமும் அப்போது கூறப்பட்டது.
ஆனால் தற்போது விலைக்குறைப்பு செய்யப்பட்ட போதிலும் விலைவாசியில் மாற்றம் இல்லாமல் இருக்க காரணம் லாப வெறியா அல்லது மத்திய அரசின் கலால் வரி உயர்வா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு கேள்விகள் எழுகின்றன என்றால் அது மிகை இல்லை.
தற்போது குறைக்கப் பட்ட நிலையில், சென்னை மாநகரில் வரிகளையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.56 குறைந்து ரூ.61.38 ஆகவும், டீசல் விலை ரூ.2.44 குறைந்து ரூ.51.34 ஆகவும் உள்ளது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74 க்கும் டீசல் ரூ.54 அல்லது அதற்கு மேலும் விற்பனை செய்யப் பட்டது.
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருவது குறிப்பிடத் தக்கது. அதன் தொடர்ச்சியாக நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைந்தது. அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் வரிவிதிப்புக்கு ஏற்ப விலை மாறுபடும்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.56 விலை குறைந்து ரூ.63.94 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.61.38 க்கு விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.44 குறைந்து ரூ.53.78 ஆக இருந்த டீசல் ரூ.51.34 க்கு விற்கப்படுகிறது. இந்த விலைகுறைப்பின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.69-ம் டீசல் விலை ரூ.10.71-ம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி இப்போது வரை 9 ஆவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 5 ஆவது முறையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைக்கப்பட்டது.
ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் நேரத்தில், இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்படுவது கவனிக்கத் தக்கது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நேற்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வரி உயர்வு மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.00 வரை குறைந்திருக்கும். மத்திய அரசின் கலால் வரி உயர்வு காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் முழுமையான பயன்களை மக்களால் அனுபவிக்க முடியவில்லை என்பது கண்கூடான விஷயம்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பிறகு கடந்த 2 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால்வரி லிட்டருக்கு ரூ. 7.75 ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6.50 ம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.78,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது அரசிற்குத் தான் மகிழ்ச்சியளிக்கும். மாறாக, மக்களுக்கு இதே அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதே உண்மை என்று எதிர்க் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.
மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை 4.1% என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதை சமாளிப்பதற்கு கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் தான் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. அரசின் வருவாயை அதிகரிக்க வேறு வழிகளை ஆராயவேண்டும் என்பது சாமானியனின் எதிர்பார்ப்பு.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீதான விலைகளை உயர்த்த வேண்டுமா? என்று மத்திய அரசு ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது அதற்கு இணையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விலை கொடுத்த மக்களுக்கு, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதன் பயன்களை அனுபவிக்கவும் வாய்ப்பு தரப்படவேண்டும். இல்லையெனில் விண்ணை முட்டி கண்ணைக் கட்டும் விலைவாசியைக் கட்டுப் படுத்த முடியவே முடியாது.
ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசிக் கொடுமைக்கு முடிவில்லாமலே போகும். விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டிய தருணம் இது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum