TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள்.

2 posters

Go down

உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள். Empty உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள்.

Post by sakthy Thu Aug 07, 2014 10:44 pm

உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள்.

கமல் பக்தர்கள் மன்னிக்கவும்.

சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை……..நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற பதினைந்து அரசாங்கத்தையும் தான் சொல்கிறேன்.  என்று உலக நாயகன் கமல்காசன் சமீபத்தில் வாலிப ராசா பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார்….. ஆமாம்,இந்தியாவில் இருப்பது 15 அரசாங்கம் அல்ல - 29 மாநில அரசுகள், யூனியன் ஆட்சிப் பிரதேசங்கள்,
மற்றும் மத்திய அரசு என்பது கமலுக்குத் தெரியாதா என்ன ?

11th Chennai International Film Festival -இந்த விழாவினை நடத்திட தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் ஜெயலலிதா, வழங்கினார். தமிழக அரசிடமிருந்து இவரது சொந்த அண்ணன் மகள் திருமதி சுஹாசினி தான் இந்த உதவியைப் பெற்று, தன் சித்தப்பா கமலஹாசனை வைத்துதான் விழாவைத் துவக்கினார்.

விழா நடைபெற்று 6 மாதங்கள் கூட ஆகவில்லை. வசதியாக மறந்து விட்டார்…அதற்குள் கமல் குற்றம் சாட்டுகிறார். எந்த அரசும் சினிமாத்துறைக்கு எந்த உதவியையும் செய்யவில்லையென்று.
ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்னர், கமலஹாசனே முதல்வரை நேரில் சந்தித்து, இது போன்ற வேறு ஒரு நிகழ்ச்சிக்கு 50 லட்சம்
ரூபாய் நன்கொடை பெற்றது,படிக்கும் உங்களுக்கு  நினைவில் இருக்கிறதா?.

சில மாதங்கள் முன்னர், இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் சென்னையில் நடைபெற தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் கொடுத்தது நினைவில் இருக்கிறதா?. (இதிலும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பரிசும் பெற்றார் )

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசும் , அனைத்து மாநில அரசுகளும் , சிறந்த படங்களுக்கு என்று தனியாக தேர்வுகள் நடத்தி சிறந்த படங்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முதலிய சகலருக்கும் பணத்தொகையுடன் கூடிய பரிசுகளை அளிக்கின்றன.

தமிழக அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல தமிழ்ப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பண உதவியும் செய்கிறது.

இவையெல்லாவற்றையும் மறந்து கமல்காசன் பேசுவதெப்படி ..?
உண்மையில் கமல் எத்தகைய உதவி வேண்டும் என்கிறார் …?
தனது நியாயமான கோரிக்கைகள் எதையாவது மத்திய, மாநில அரசுகளின் முன் வைத்திருக்கிறாரா ..?

கமலிடம் இங்கு சில கேள்விகள்.
1) சினிமாத் துறைக்கு இதைவிட அதிகமாக அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்….? ஏன் -எதற்காக செய்ய வேண்டும் ..?

2)மற்ற துறைகளை விட சினிமாத்துறை எந்த விதத்தில் சிறந்தது ? எந்த விதத்தில் அது விசேஷ உதவிக்கு தகுதியான்து ?

3) இன்றைக்கும் கூட, நவீன வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமங்களில், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு, இரவு பகல் எப்போதாக இருந்தாலும் சளைக்காமல், அலுக்காமல் பிரசவம் பார்க்கிறாரே ஒரு மருத்துவச்சி, -அவரை விட,
- ரணம் புழுத்து நெளியும் இறுதிகட்ட நோயாளிகளுக்கு, கேன்சர் ஆஸ்பத்திரியில், முகம் சுளிக்காமல், புண்ணைத் துடைத்து, பணி புரிகிறாரே – அந்த செவிலியரை விட,
- கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரும் – கண் மூடாமல், துப்பாக்கியைக் கையில் பிடித்துக்கொண்டே காஷ்மீர் எல்லையில் பணியில் ஈடுபட்டிருக்கிறாரே – அந்த ராணுவ வீரரை விட -
உங்களைப் போன்ற சினிமா நடிகர்கள், இந்த சமுதாயத்திற்கு என்ன சேவை செய்து கிழித்து விட்டீர்கள் – ஸ்பெஷலாக கவனிக்க …?

4) ஒரு ரிக்சா ஓட்டியோ, காய்கறிவண்டி தள்ளிக்கொண்டு வீதி வீதியாக வருபவரோ, ஒரு மூட்டை சுமப்பவரோ, ஒரு முடிதிருத்துபவரோ, தையல்காரரோ, ஒரு பள்ளி ஆசிரியரோ -
இந்த சினிமாக்காரர்களை விட நிச்சயமாக இந்த சமுதாயத்திற்கு அதிகமாக உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் செய்யாமல் சினிமாக்காரர்களுக்கு அரசு ஏன் விசேட சேவை செய்ய வேண்டும் ….?

5) பெரும்பாலான சினிமாக்கள் சமூகத்தின் நலனில் சிறிதும் அக்கரையின்றி தான் எடுக்கப்படுகின்றன….
2 மணி நேர படத்தில், ஒன்றரை மணி நேரம் ஹீரோவும், அவனது நண்பர் கூட்டமும்
சாராயக்கடையில் கூத்தடிப்பதாகத் தான் இன்றைய தினம் படங்கள் வருகின்றன. நாலு சண்டை, அரைகுறை ஆடைகளோடு கூச்சலுடன் கன்னா பின்னாவென்று இரண்டு குத்துப்பாட்டு, சாராயக்கடை அசிங்கங்கள் – இவற்றை கலை என்று சொல்லி
அவர்கள் காசு சம்பாதிக்க – அரசு உதவி வேறு வேண்டுமா …?

6) ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் பிழைப்பு நடத்தும் நீங்கள் என்றைக்காவது தமிழ்த் திரைப்படங்களின் இத்தகைய போக்கை கண்டித்திருக்கிறீர்களா ?
அரசைக் குறைகூறத் தெரிந்த உங்களுக்கு இன்றைய திரைப்படங்களின் அவலமான போக்கை கண்டிக்க ஏன் தோன்றவில்லை ?
நீங்கள் கலந்து கொண்டிருக்கும் விழாவில், படத்தின் பெயர் என்ன …? (வாலிப ராஜா…..!)
அந்தப்படம் சமூகத்திற்கு தரப்போகும் செய்தி என்ன ….?
செய்யப்போகும் சேவை என்ன ….? என்ன…? என்ன….?

7) உங்கள் படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் - பாப்கார்ன் என்ன விலைக்கு விற்கப்படுகிறது தெரியுமா …?
கோக்…? மற்ற குளிர்பானங்கள் …? காப்பி/தேநீர் ….?
ஏன் வெறும் தண்ணீர் பாட்டில் என்ன விலை தெரியுமா …?
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் - திருட்டு சிடியில் படம் பார்க்காதே – தியேட்டரில் சினிமா பார் என்று மக்களுக்கு புத்தி சொல்கிறீர்களே - தியேட்டரில் ஏன் இந்த விலை விற்கிறது என்று யாரையாவது, எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா …? கண்டித்திருக்கிறீர்களா ….?

8) உங்கள் புதிய திரைப்படத்தை வெளியிடும் முன்னர் ஒவ்வொரு முறையும் எதாவது பிரச்சினையையும் பரபரப்பையும் கிளப்பி இலவச ஆதாயம்-விளம்பரம் பெறும் நீங்கள் விஸ்வரூபம் – 2ஆம் பகுதியை முடித்து 7 மாதங்களாகியும் இன்னும் வெளியிடாமல்
வைத்திருப்பதன் காரணமென்ன …? தகுந்த சூழ்நிலை இன்னும் உருவாகவில்லையா அல்லது உருவாக்க திட்டம் இன்னும் தயாராகவில்லையா ….?

9) இவ்வளவு அனுபவமும், திரைப்படத்துறையில் விசய ஞானமும் உள்ள நீங்கள் – ஆண்டுக்கு இரண்டு, நல்ல தரமான, குறைந்த பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிட்டால் என்ன ? எது தடுக்கிறது ?
ஏன் – உங்கள் எல்லா படங்களிலுமே நீங்கள் தான் நாயகனாக நடிக்க வேண்டுமா..?

10) வெளியில், பொது நிகழ்ச்சிகளில் இளையராஜாவை இவ்வளவு சிலாகித்துப் பேசும் நீங்கள் – உங்கள் படங்களில் அவரைப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் …? உங்கள் படத்தின் “தரத்”திற்கு அவர் பொருத்தமற்றவர் என்பதாலா ….?

11) அண்மையில் நீங்கள் ஒரு விளம்பரத்தில் சொல்லி இருந்தீர்கள். “நான் உரிய நேரத்தில், ஒழுங்காக வரி கட்டுகிறேன். மக்கள் அனைவரும் ஒழுங்காக வருமான வரி கட்ட வேண்டும். நான் ஒரு பைசா கூட வரி பாக்கி வைக்கவில்லை என்பதில் பெருமை கொள்கிறேன்”.
ரொம்ப சந்தோஷம். ஆனால் இதே போல் கொஞ்சம் வெளிப்படையாக கடந்த ஆண்டு உங்களுக்கு வந்த வருமானம் எவ்வளவு….? கட்டிய வருமான வரி எவ்வளவு ?

ஒரு படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் ..? - போன்ற விவரங்களையும் சொல்ல முடியுமா ….?
நாங்கள் எல்லாம் சொல்கிறோமே எங்கள் வருமானத்தை வெளிப்படையாக…! நீங்கள் ஏன் சொல்ல மாட்டேனென்கிறீர்கள் ..?

12) ஆமாம் – இரவு பகலாக கண்விழித்து பணிபுரியும் மருத்துவர்களை விட, விஞ்ஞானிகளை விட, ராணுவ வீரர்களை விட, ஸ்விட்சர்லாந்திலும், நியூசிலாந்திலும், இள வயது ஹீரோயின்களை கட்டிப்பிடுத்துக் கொண்டு டூயட் பாடும் உங்கள் உழைப்பு எந்த விதத்தில் உயர்ந்தது ? எந்த விதத்தில் கடுமையானது …?
பின் உங்களைப் போன்ற நடிகர்களுக்கு மட்டும் ஏன் கோடிகளில் சம்பளம் …..?

13) இத்தனை ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களிடமிருந்து இவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறீர்களே … உங்களுக்கு
இத்தனை பணத்தையும், புகழையும் கொடுத்த இந்த மக்களுக்கு, நீங்கள் திரும்பக் கொடுத்திருப்பது என்ன …..?
(அதான் சினிமாவிற்கு இரண்டு வாரிசுகளைக் கொடுத்திருக்கிறேனே என்று சொன்னாலும் சொல்வீர்கள் …)
ரொம்பப் பெரியதாக வேண்டாம் …. உங்கள் அம்மா நினைவாக, அம்மா பெயரில் …(பெண்டாட்டி பெயர் தான் வைக்க முடியாதே … !! )
பச்சைப் பிள்ளைகளுக்காக சின்னதாக ஒரு இலவச பள்ளிக்கூடம்… ?
சின்னதாக ஒரு இலவச ஆஸ்பத்திரி ….?
அட்லீஸ்ட் ஒரு இலவச திருமண மண்டபம் ….?
(திருமணத்தில் தான் நம்பிக்கை இல்லையோ..?)
சரி அட்லீஸ்ட் ஒரு முதியோர் காப்பகம் அல்லது குழந்தைகள் காப்பகம் அல்லது ஆதரவற்ற பெண்கள் காப்பகம் …?
இப்படி எதாவது ஒரு தானம் …. தர்மம் ….?

இவை ஒன்றுமே இல்லையா – சரி குறைந்த பட்சம் உங்களுக்குப் பிடித்த கலைத்துறைக்காக - நாடகங்கள் நடத்த ஒரு நல்ல மண்டபம்- அரங்கம் ….?
இன்னமும் கூட எழுதலாம் தான். ஆனால் அதிகம் எழுதவும் பயமாக இருக்கிறது.

நீங்கள்பாட்டுக்கு கோபித்துக் கொண்டு -எனக்கு இங்கு உரிய மரியாதை இல்லை நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டால் ….?
(இந்த நாட்டின் மீது அவ்வளவு பற்று ஆயிற்றே உங்களுக்கு …!)
பிறகு என் கதி என்ன ஆகும் ….!

ஐயா உலக நாயகனே உங்களிடம் இருந்து ஒரு சில கேள்விகளுக்காகவாவது பதில் கிடைக்குமா?

காத்திருக்கிறோம் ஆவலுடன்.

பயணிகளே, நீங்கள் எதையும் எழுத வேண்டாம்.உங்களிடமாவது இப்படியான கேள்விகளைக் கேளுங்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் தொலைத்தது,தொடர்ந்து தொலைத்துக் கொண்டிருப்பது....................
கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் பின்னால் வரும் சந்ததியினருக்காகவாவது............ சிந்தியுங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள். Empty Re: உலக நாயகனே ஐயா கமல் காசனே, உங்களிடம் சில கேள்விகள்.

Post by Tamil Fri Aug 08, 2014 7:17 am

நடிப்பது தொழில் அதை எல்லா இடத்திலும் நடிக்ககூடாது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum