TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை

2 posters

Go down

தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை Empty தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை

Post by ஜனனி Thu May 13, 2010 2:19 pm


தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை Srilanka





கொழும்பு,
மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்
ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச
தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும்
திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி
(டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.இலங்கையில்
இப்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும்
கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிக்குப்
பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இலங்கையின் வடக்கிலும்
கிழக்கிலும் வசித்த தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும்
இடையில் நடந்த போரினால் சிதறடிக்கப்பட்டு அகதி முகாம்களிலும் பிற
பகுதிகளிலும் பிரிந்து வாழும் இந்த நிலையில்கூட, விகிதாசாரப்
பிரதிநிதித்துவம் காரணமாக 11 இடங்களில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற
முடிந்திருக்கிறது. தமிழர்கள் மட்டும் அல்லாமல்
முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மை இன மக்களும் கெüரவமான
பிரதிநிதித்துவம் பெற இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே உதவி
வருகிறது.இந்த நிலையில் இதை மாற்றி, ஒரு தொகுதியில் அதிக
வாக்குகள் மூலம் முதலிடத்தைப் பெறும் வேட்பாளரே (இந்தியாவில் உள்ளதைப்
போல), அந்தத் தொகுதியின் பிரதிநிதி என்று அறிவிக்க இலங்கையின் அரசியல்
சட்டம் திருத்தப்படவிருக்கிறது. இலங்கையின் வடக்கிலும்
கிழக்கிலும் தமிழர்கள் ஏராளமானோர் போரில் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள்
சிதறிவிட்டனர். இந்த நிலையில் அந்த இடங்களில் சிங்களர்கள் திட்டமிட்டு
அதிக எண்ணிக்கையில் குடியமர்த்தப்படுகின்றனர். இதனால் வடக்கு,
கிழக்குப்பகுதிகளில்கூட ஒவ்வொரு தொகுதியிலும் தமிழர்களைவிட சிங்களர்களே
அதிக எண்ணிக்கையில் இருப்பர். அதிக வாக்குகளைப் பெறும் முதல் வேட்பாளர்
என்றால் சிங்களர்தான் வெற்றி பெறுவார். தமிழர்கள் கணிசமாக இருந்தாலும்
அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே இருக்காது.இதனால் மத, மொழி,
இனச் சிறுபான்மை மக்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல்
அவர்களுடைய பிரதிநிதித்துவமே நாடாளுமன்றத்தில் இல்லாமல் போய்விடும்.இதனால்
இலங்கை அரசு சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராகக் கொண்டுவரும்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில்
எதிர்க்கப்படாவிட்டால் அது வெளியுலகுக்குத் தெரியவே தெரியாது. அத்துடன்
சிறுபான்மைச் சமூக மக்களின் நலனுக்காக உளப்பூர்வமாக வாதாடவும்,
கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறவும் பிரதிநிதிகளே இல்லாமல்
போய்விடுவார்கள். எனவே தமிழர்களால் இதை ஏற்க முடியாது என்று தமிழர்கள்
தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழர்கள் கோரிவரும்
சுயாட்சி அதிகாரம், அதிகாரப் பகிர்வு, தமிழர்களின் பாரம்பரிய வசிப்பிட
அங்கீகாரம் ஆகியவை குறித்து அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள சட்ட
திருத்தத்தில் ஏதும் இல்லை; மாறாக, தமிழர்களின் நலனுக்கு எதிரான யோசனைகளே
உள்ளன என்று தெரிவித்தார் யாழ்ப்பாண பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்
பிரேமசந்திரன்.இலங்கை நாடாளுமன்றத்தின் 225 தொகுதிகளில்
பெரும்பான்மையான தொகுதிகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை
நீக்கிவிட்டு, தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெறுகிறவரே
வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படும் முறைக்கு சட்ட திருத்தம்
கொண்டுவரப்படும் என்று இலங்கை அமைச்சர்கள் சுசீல் பிரேமஜயந்தவும்
மைத்ரிபால சிறிசேனவும் திங்கள்கிழமை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.25
உறுப்பினர்களைக் கொண்ட மேலவை, செனட் என்று அழைக்கப்படும் என்றும் அதில்
சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம்
தரப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.இலங்கை நாடாளுமன்றம்
இயற்றும் ஏதேனும் ஒரு சட்டம் ஒரு மாநிலத்தின் நலனைப் பாதிக்கும் என்று
கருதப்பட்டால், அந்த மாநிலப் பேரவையின் ஒப்புதலை மத்திய அரசு பெற வேண்டும்
என்று இப்போதுள்ள சட்டம் வலியுறுத்துகிறது. இதுவும் திருத்தப்பட்டு, செனட்
அனுமதித்தால் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் இயற்றிக் கொள்ளலாம் என்று
அனுமதிக்க வழி செய்யவிருக்கிறது.இதுவும் மாநிலங்களின்,
அதிலும் குறிப்பாக தமிழர்கள் போன்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளைப்
பாதிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது என்று தமிழர் தேசிய கூட்டணிப்
பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.இலங்கையின் அதிபராக ஒருவர்
இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று இப்போதுள்ள சட்டம் கூறுகிறது.
இதையும் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் அதிபராகப் பதவி
வகிக்கலாம் என்று அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.அதிபர்
ராஜபட்ச தன்னை நிரந்தர அதிபராக நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியே இது.
இதுவும் போதாது என்று தமிழர்களின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு மறுவரையறை
செய்யப்பட உள்ளன. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகள்
பிரிக்கப்பட்டு சிங்களர்களின் பகுதிகளோடு சேர்க்கப்பட்டு எல்லா
தொகுதிகளிலும் சிங்களர்களே வெற்றி பெற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.தமிழர்கள்
மட்டும் சிதறாமல் இருந்திருந்தால் நடந்துமுடிந்த தேர்தலில் தமிழ் தேசிய
கூட்டணிக்கு யாழ்ப்பாண தீபகற்பத்தில் மட்டும் 11 தொகுதிகள்
கிடைத்திருக்கும், மாறாக 9 தான் கிடைத்தன என்று சுரேஷ் பிரேமசந்திரன்
சுட்டிக்காட்டினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை Empty Re: தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை

Post by சிவா Thu May 13, 2010 6:28 pm

11 11
சிவா
சிவா
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்

Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு
» பெரியாறு அணையில் பராமரிப்பு: மேலும் ஒரு உரிமை பறிபோனது
» ஐ.நா., மனித உரிமை நடவடிக்கை: பிரதமரிடம் தி.மு.க., எச்சரிக்கை
» சிறீலங்கா மனித உரிமை மீறலுக்கு நடவடிக்கை வேண்டும்: மார்க் கார்னியு
» மின் வெட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கை : பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum