TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது

3 posters

Go down

சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது Empty சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது

Post by Tamil Wed Mar 05, 2014 10:11 pm

சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது
சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது 1901171_676673299056460_1119874657_n
போர் இடம்பெற்ற வலயத்திற்கு தற்போது சென்றால் அங்கே போர்க் குற்றங்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளைக் காணமுடியாது. இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கம் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது.

இவ்வாறு கரைமுள்ளிவாய்க்காலில் இருந்து thestar.com என்னும் ஊடகத்திற்காக Josh Wood எழுதியுள்ள Sri Lanka turns killing fields into tourist attraction

செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வங்களா விரிகுடாவின் ஒடுங்கிய கரையோரத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்ப் புலிகள் மீது மிகவும் முக்கியமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த ஒடுங்கிய சதுப்பு நிலப் பகுதிக்குள் அகப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக இந்த வலயங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் இங்கு தங்கியிருந்த மக்கள் குறிவைக்கப்பட்டனர். போரின் இறுதிக்கட்டத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போர் இடம்பெற்ற பகுதிக்குள் அகப்பட்டனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு படுகொலைகள், மக்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை போன்றன உள்ளடங்கலாக சிறிலங்கா இராணுவப் படைகள் பல்வேறு போர் மீறல்களைப் புரிந்துள்ளதற்கான சாட்சியங்கள் காணப்படுகின்றன.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அடுத்த மாதம் அமெரிக்கா அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துலக விசாரணை இடம்பெற வேண்டும் என்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையும் தனது ஆதரவை வழங்கிவருகிறார். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற மீறல் சம்பவங்களுக்கு தனது உள்ளக விசாரணையின் மூலம் பொறுப்புக்கூற முனைந்தாலும் இந்த முயற்சி அதிகம் வெற்றி பெறவில்லை.

போர் இடம்பெற்ற வலயத்திற்கு தற்போது சென்றால் அங்கே போர்க் குற்றங்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளைக் காணமுடியாது. இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கம் இந்த இடத்தை சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது. தமிழ்ப் புலிகள் இறுதியாக அழிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிடும் பௌத்த சிங்களவர்கள் இங்கு காணப்படும் போர் வெற்றிச் சின்னங்களை ஒளிப்படம் எடுக்கின்றனர். இதேபோன்று சிறிலங்கா இராணுவத்தினர் முன்னால் போர் வலயத்தில் குளிர்களிகள் மற்றும் சிற்றுண்டிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் உணவகங்களை நடாத்துகின்றனர். இவர்கள் மதுபான விற்பனை நிலையத்தையும் நடாத்துகின்றனர். விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா அறிவித்தது. போர் முடிவடைந்த பின்னர் தமிழ்ப்புலிகளின் நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் போன்றவற்றை சிறிலங்கா அரசாங்கம் அழித்தது. தமிழ்ப் புலிகள் பல்வேறு ‘மீள்புனர்வாழ்வுத்’ திட்டங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமுல்படுத்தியிருந்தனர். சிறிலங்காப் படைகள் போரின் பின்னர் தமிழ் மக்களின் வாழிடங்களில் போர் வெற்றிச் சின்னங்களை உருவாக்கினர். பொதுமக்களின் பார்வைக்காக பல மையங்களை உருவாக்கினர்.

பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காது வீரம்மிக்க இராணுவ வீரர்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக நந்திக்கடலுக்குக் குறுக்காக உள்ள பாலத்தின் முன்னால் நாட்டப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னார் புலிகளால் நீச்சல் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆழமான நீச்சல் தடாகத்தில் ‘பயங்கரவாதிகளின் நீச்சல் தடாகம்’ எனவும் புதுக்குடியிருப்பு போர் அருங்காட்சியகத்தில் காணப்படும் படகுகளில் ‘பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் படகுகள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் போர் வலயங்களில் சுற்றுலா மையங்கள் முற்றாக நிர்மாணிக்கப்பட்டு இவற்றைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற போதிலும் இதற்கு அருகிலுள்ள கிராமங்களில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படவில்லை. தமிழ் மக்களின் காணாமற் போன உறவுகள் தொடர்பில் இன்னமும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

புலிகள் அமைப்பின் அரசியற் தலைவர்களில் ஒருவராக இருந்த தனது கணவர் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கப் படைகளிடம் சரணடைந்ததாகவும் ஆனால் இன்று வரை இவரின் தொடர்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் இவர் அரசாங்கத்தின் இரகசிய தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரபலமான தமிழ் அரசியல்வாதி அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி நினைவுச் சின்னங்களை அமைப்பதில் ஈடுபடுகிறது. ஆனால் இங்கு வாழும் தமிழ் மக்கள் போரில் கொல்லப்பட்ட தமது அன்புக்குரிய உறவுகளுக்காக அழக்கூட முடியவில்லை” என அனந்தி சசிதரன் கூறுகிறார்.

புதினப்பலகை

மொழியாக்கம் – நித்தியபாரதி.

March 4, 2014
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது Empty Re: சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது

Post by logu Thu Mar 06, 2014 7:56 am

இந்த இடத்தில புரட்சி தலைவர் பாடல் வரிகள் தான் நினைவில் வருகிறது ...என் காலம் வரும் என் கடமை வரும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது Empty Re: சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது

Post by அனுராகவன் Thu Mar 06, 2014 8:14 am

அருமை..........
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது Empty Re: சிறிலங்கா: போர்க் குற்றங்கள் இடம்பெற்ற இடங்கள் சுற்றுலா மையமாக மாறியுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum