TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொலை தொடர்பு கண்காணிப்பு......(தொலைதூர தோற்ற பிம்பங்கள்.)

Go down

தொலை தொடர்பு கண்காணிப்பு......(தொலைதூர தோற்ற பிம்பங்கள்.) Empty தொலை தொடர்பு கண்காணிப்பு......(தொலைதூர தோற்ற பிம்பங்கள்.)

Post by Tamil Mon Jan 27, 2014 7:46 am

தொலை தொடர்பு கண்காணிப்பு......(தொலைதூர தோற்ற பிம்பங்கள்.)

தொலை தொடர்பு கண்காணிப்பு......(தொலைதூர தோற்ற பிம்பங்கள்.) 1497508_273285366158866_1641718528_n
இன்றைய நவீன அறிவியல் ஆளுமை ஆட்கொண்ட உலகில் “தூரம்” என்ற வார்த்தை அகராதிகளில் காணாமல் போய் கொண்டிருக்கிறது. தூரம் என்பது வெகுதூரமாக இருந்து இப்பொழுது நம் கைக்குள் கொண்டு வந்ததற்கு தொலைத்தொடர்பு மிக உன்னத பங்கு வகிக்கிறது. ஒரு திரைப் படத்தில் நடிகரை இரட்டை வேடத்தில் காட்டுவார்கள். பொழுதுபோக்கு அம்சத்திற்காக எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் இப்பொழுது நிஜமாகப் போகிறது. “தொலை தோற்றம்” எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம்.

நீங்கள் இனிமேல் நியூயார்க்கில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் கலந்து கொள்ளலாம். என்ன நம்பமுடியவில்லையா? வீட்டில் இருந்துகொண்டே கணிணி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுடன் அங்கு நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய ஒரு கருத்தரங்கில் வீட்டிற்கு வெளியில் செல்லாமல் உங்களைக் கொண்டு நடைபெறும் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தும் இந்த அறிவியல் படைப்பை பற்றிய விளக்கங்களை காணத்தயாராகுவோம்!

நாசாவின் ரோபோனாட் திட்டத்தில் தொலைத்தோற்ற முறையில் தலைக்கவச திரைகள் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்ட கையுறைகள் மூலம் இயக்கங்களை கை மற்றும் தலைகளின் இயக்கங்கள் மூலம் சமிக்ஞை அனுப்பப்படுகிறது. தொலை தூரத்தில் இருக்கும் ரோபோட் அப்படியே இவர் செய்யும் இயக்கங்கள், பணியை அப்படியே செய்யும்.

ஆராய்ச்சியாளர்கள் தொலைத்தோற்ற முறையை கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு முறையில் கண்டுபிடித்து வருகிறார்கள். தொலைதொடர்பு முறையை பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து கொண்டே வேறொரு இடத்தை கண்காணிக்கலாம், அங்குள்ள நிலைமையை கையாளலாம் மற்றும் கட்டளைகளை நாம் நினைத்த வண்ணம் அப்படியே பிறப்பிக்கலாம். இதற்காகவே பிரத்தியேகமாக காதுகளில் மாட்டிக்கொள்ளும் விதமாக ஹெட்போன், நம்முடைய அசைவுகள் மற்றும் சமிக்ஞைகளை விளக்குவதற்காக கம்ப்யூட்டருடன் தொடர்பு செய்யப்பட்ட கையுறை மற்றும் தொடு உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் காட்சி திரைகள் கணினி மற்றும் நுண்கணினி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

மேலும் தொலைத் தோற்ற முறைக்கு முக்கியமான தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளான நுண்ணோக்கிகள், தொடு உணரிக் கருவிகள், உணரிகள் அதிநவீன நுண் செயலிகளைக் கொண்ட கட்டுப்பாடு மற்றும் சமிக்ஞை செயலிகள் மற்றும் இதர தொலை மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் தேவைப்படுகின்றன. தரவு பரிமாற்றம் வீதத்தைப் பொருத்து வீடியோ காட்சிகளின் தரவுகள் இறுக்கம் செய்யப்பட்டு பின்பு பரிமாற்றம் செய்யப்படுகிறது.

ராணுவத்தில் பணிபுரியும் ரோபோட்டிற்கு தொலைத் தோற்ற முறையில் அங்குள்ள நிலைமைகளை கண்காணித்து அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப கட்டளைகளை அல்லது அதனை நாம் விரும்பியவாறு இயக்கலாம். நாம் கொடுக்கும் சமிக்ஞைகள் மூலம் அங்குள்ள ரோபோட்டும் அதற்கேற்றவாறு செயல்படும்.

இதற்கு கணிணி, நுண் கணிணி, ஹெட்செட், கையுறை மற்றும் தொடு உணரிகள் தேவைப்படுகின்றன. ராணுவத்தில் போரில் அங்குள்ள நிலைமையை கையாள்வதற்கு நேரடியாக மனிதன் ஈடுபடும்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை இந்த தொலைதொடர்பு முறையால் தவிர்க்கப்படுகிறது. இம்முறையின் மூலம் அங்குள்ள நிலைமையை தொலைத் தொடர்பு முறையில் கண்காணித்து உடனடியாக சமிக்ஞைகள் மற்றும் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.

போர் எல்லைகளில் எதிரிகள் ஊடுருவல் மற்றும் பதட்டமான சூழ்நிலைகளில் தொலைத்தோற்ற முறையில் முறியடிக்கலாம். இம்மாதிரியான பதட்டமான சூழ்நிலைகளில் உடனடி பதிலடி மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தொலைத்தோற்ற முறையில் நேரடியாகக் களத்தில் இருப்பது போலவே நாம் அங்குள்ள சூழ்நிலைகளைக் கையாள முடியும். ரோபோட் உணரிகள் மூலம் பதட்டமான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு எங்கோ தொலைவில் இருக்கின்ற தொலைதோற்றக் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. இக்கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர் மூலம் பதட்டமான சூழ்நிலைகளை ஹெட்செட், கம்ப்யூட்டர் மற்றும் தொலைத் திரை மூலம் பெறப்பட்டு உடனடி நடவடிக்கைகளை சமிக்ஞைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் முறியடிக்கப்படுகிறது.

இதன்மூலம் களத்தில் நேரடியாக இல்லாமலேயே அங்குள்ள நிலைமையை நேரடியாக இருந்தால் எப்படி சமாளிக்க முடியுமோ அதேமாதிரி இத்தொலை கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டே சமாளிக்க முடியும்.

மருத்துவத்துறையில் தொலைத்தோற்ற முறை மிகவும் இன்றியமையாததாகிறது. எங்கோ வேறு நாட்டிலோ அல்லது தொலைவில் இருக்கின்ற நோயாளியின் உடல்நிலையை அறிந்து அதற்கேற்ப மற்றொரு இடத்தில் இருக்கும் மருத்துவரால் சிகிச்சை அளிக்க முடிகிறது.

நோயாளியின் தன்மையை ரோபோட் உணரி மூலம் வரைபடங்கள் மற்றும் முப்பரிமான படங்கள் மூலம் அறிந்து அதற்கேற்ப மற்றொரு தொலைவில் இருக்கின்ற மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம். உதாரணமாக கோயம்புத்தூரில் இருக்கும் நோயாளியின் தன்மையை சென்னையில் இருக்கும் மருத்துவர் தொலைத்தோற்ற முறையில் அறிந்து இவர் கொடுக்கும் சமிக்ஞைகள், இயக்கங்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

மருத்துவர் சென்னையில் இருந்துகொண்டே ரோபோட் உணரி மூலம் நோயாளியின் சிகிச்சைக் கொடுக்கப்படவேண்டிய உறுப்புகளின் வரைபடம் மற்றும் 3D பரிமாணப் படங்களைப் பெற்று அதற்கேற்ப சமிக்ஞைகள் மற்றும் இயக்கங்கள் மூலம் அங்குள்ள ரோபோட் அதற்கான சிகிச்சையைக் கொடுக்கும். மருத்துவர் இவர் பெற்றுள்ள படத்தில் எந்த இடத்தில் எந்த செயலை செய்கிறாரோ அதை அப்படியே அங்குள்ள ரோபோட் அப்படியே செயல்படுத்தும்.

அதேபோலவே அறுவை சிகிச்சை நடைபெறும் ஒரு இடத்திற்கு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து மருத்துவர்கள் வரவேண்டிய கட்டாயம் இருக்கும். பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைகளையும் பெறவேண்டி இருக்கும். இவ்வாறு ஒரே இடத்தில் ஒன்று சேரமுடியாத மருத்துவர்கள் குழு தொலைத்தோற்ற முறையில் தங்களது ஆலோசனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இது மருத்துவத் துறையில் மிகப்பெரிய புரட்சி என்றே சொல்லலாம்.

அறிவியல் முன்னேற்றம் நாம் இதுவரை கற்பனை செய்தும் பார்க்க முடியாத அளவிற்கு போய்க்கொண்டிருக்கின்றது. கற்பனையில் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் முடியாது. இப்படியுமா? இப்படியும் செய்யமுடியுமா? என்று மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யபடக்கூடிய அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி சென்றுக் கொண்டிருக்கின்றது.

கற்பனையில் நாம் ஒரு இடத்தில் இருப்பதுபோல் நினைப்பதை தொலைத்தோற்றம் (Telepresense) முறை நிஜமாக்கிவிட்டது. இனி பாராளுமன்றத்திற்கு செல்லாமலேயே அங்குள்ள நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் பங்கெடுக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை இம்முறையில் கூட பார்வையிடலாம் (இம்முறையின் மூலமாவது தொகுதி பக்கம் எட்டிப்பார்ப்பார்களா?). எங்கோ நடக்கும் கருத்தரங்கிற்கு உங்கள் இடத்தில் இருந்துகொண்டே ஆஜராகலாம். தொலைக்காட்சிகளில் பார்க்கும் சக்திமான், மைடியர் பூதம் போலவே தொலைத்தோற்ற முறை வந்துவிட்டது என்று சொல்லலாம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்வு
» இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்க‌ள் தோற்ற‌ம் காட்டும் இணைய‌த‌ள‌ம்
» தொலை-/வலைக்காட்சியில் எனக்கும் ஒரு இடம் தரப்படுமா...?
» இணைய தள குற்றங்களுக்கு மின்னஞ்சல் , தொலை பேசி வழியாகவும் புகர் பதிவு செய்யலாம்...
» புதிய தலைமுறை தொலை காட்சியில் ஒளிபரப்பட்ட இது வரை நாம் அறிந்திராத பல உண்மைகளை கொண்ட ஒரு வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum