TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது.

Go down

நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது. Empty நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது.

Post by மாலதி Wed Jan 08, 2014 2:05 pm

நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது. B0fda45b-73a7-4cb3-94e9-b1ad77d9eda7_S_secvpf


ஆலந்தூர், ஜன.8-

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் நேற்று முன்தினம் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது.

நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தினார்.


அப்போது அந்த சிறுவன் தான் திருடவில்லை என கூறினான். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து திருடினாயா? என மிரட்டியதாக தெரிகிறது. இதை கண்ட சிறுவன் மிரண்டு போனான்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் கையில் இருந்த துப்பாக்கியின் பட்டனில் விரல் பட்டு சிறுவனின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. உடனே சிறுவன் மயங்கி விழுந்தான். இதை கண்ட நீலாங்கரை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவனை போலீசார் வேனில் ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் கண்ணன், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர்கள் ஞானசேகரன், முகமது அஸ்லாம், சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

இதற்கிடையே நீலாங்கரை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட இருப்பதாக வந்த தகவலை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தகவல் அறிந்த சிறுவனின் தாய் சபீனாபேகம், அண்ணன் ஜாகிர் உசேன் ஆகியோர் கதறி அழுதனர்.

அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று முன்தினம் இரவு முதல் எங்கள் மகன் வீட்டிற்கு வரவில்லை. எங்கு போனான் என எங்களுக்கு தெரியாது. இந்த நிலையில் போலீசார் வந்து துப்பாக்கி குண்டு பட்டு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்கள். போலீசார் அவனை விசாரணைக்கு அழைத்து செல்லும் முன்பும் எங்களுக்கு தகவல் தரவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், போலீசார் சிறுவனை விசாரிக்கலாம் ஆனால், துப்பாக்கி வைத்து விசாரிக்கும் அளவுக்கு அவன் என்ன தீவிரவாதியா? சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விசாரணையில், சிறுவனின் தந்தை அனிபா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவனது தாய் சபீனாபேகம் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். குண்டு பாய்ந்த சிறுவன் 6-ம் வகுப்பு வரை படித்து இருக்கிறான். அங்கு எடுபிடி வேலை செய்து வந்தான். அங்குள்ள மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டதாக தெரிகிறது.

திருட்டு வழக்கில் கைதாகி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும் அவன் அனுப்பப்பட்டு உள்ளான். அதுபோல் அங்கிருந்த கோவில் உண்டியலில் திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு விசாரணைக்காக அழைத்து வந்து உள்ளனர். விசாரணையின் போது தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரித்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உடனடியாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து வெட்டுவாங்கேணியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 50 பெண்கள் உள்பட 300 பேர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பார்ப்பதற்காக த.மு.மு.க.வினர் சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஸ்பத்திரி முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது. Empty Re: நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது.

Post by மாலதி Wed Jan 08, 2014 2:05 pm

நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டியபோது சிறுவன் தொண்டையில் குண்டு பாய்ந்தது. A1bd6b86-4544-420d-9438-5edd312f8e1c_S_secvpf


சென்னை, ஜன. 8–
நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் அனிபா. இவரது மகன் தமீன் அன்சாரி (15). அனீபா சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் தாய் சபீனாபேகம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்தார்.
இவரது மூத்த மகன் ஜாகீர், பிளஸ்–2 படித்து வருகிறான். மகள் நசிரா பானு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சிறுவன் தமிம்அன்சாரி 7–வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான்.
இந்நிலையில் வெட்டு வாங்கேணியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக நீலாங்கரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக விசாரிப்பதற்காக சிறுவன் தமீம்அன்சாரியை அவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
உண்டியல் திருட்டில் தமீன்அன்சாரிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும், எத்தனை பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
இதற்கு தமீம்அன்சாரி சரியாக பதில் அளிக்காததால் அவனது வாயில் துப் பாக்கியை வைத்து இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென தவறுதலாக புஷ்பராஜின் கைபட்டு துப்பாக்கி வெடித்தது. இதனால் ‘டூமில்’ என்ற சத்தத்துடன் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, சிறுவன் தமிம்அன்சாரியின் இடது பக்க தொண்டையில் பாய்ந்து பின்பக்கமாக வெளியேறியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான்.
இதனால் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மற்றம் போலீசாருடன் சேர்ந்து அவனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் தமீம்அன்சாரி அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
அப்போது தொண்டை ரத்தக்குழாய் மற்றும் எலும்பில் பலத்த குண்டு காயம் ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொண்டை பகுதியையொட்டிய கழுத்தில் பாய்ந்த குண்டு வெளியேறி இருந்தாலும், அதன் துகள்கள் ரத்தக் குழாய் பகுதியில் படர்ந்திருந்தன. குண்டு பாய்ந்ததில் ரத்தக் குழாயும், எலும்பும் சேதம் அடைந்திருந்தது. இதனை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் சரி செய்தனர்.
சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாலும், குண்டு உடலில் தங்காமல் வெளியேறியதாலும் அதிர்ஷ்டவசமாக தமிம் அன்சாரி உயிர் தப்பினான்.
நேற்று இரவு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்திருந்தாலும், அவன் இன்று காலை வரையிலும் மயக்க நிலையிலேயே காணப்பட்டான். பிற்பகலில் அவன் இயல்பு நிலைக்கு திரும்புவான் என்று டாக்டர்கள் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறுவன் தமீம்அன்சாரி இதற்கு முன்னர் திருட்டு வழக்கில் கைதாகி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் இருந்துள்ளான். இதன் காரணமாகவே அவனை விசாரணைக்காக அழைத்து சென்றோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்தும், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று இரவு வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தென்சென்னை கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ், இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் கண்ணன் ஆகியோரும் இச்சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
உதவி கமிஷனர்கள் சங்கர், ஞானசேகரன், முகமது அஸ்லாம் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போலீஸ் நிலையத்தில் சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் சென்னை போலீஸ் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையில் இந்த தகவல் என்கவுண்டர் பீதியையும் கிளப்பி விட்டது குறிப்பிடத்தக்கது


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» சென்னையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டது அம்பலம்: தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் வாக்குமூலம்
» என் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் ஜெகன்மோகன்:ஆந்திர சுரங்க அதிபர் பகீர்
» கோபியில் இறந்த பெண் குழந்தையை வாயில் கவ்வி கொண்டு வந்த நாய்: போலீஸ் விசாரணை
» கராச்சி ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum