TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விநாயகர் விரதங்கள்

Go down

விநாயகர் விரதங்கள் Empty விநாயகர் விரதங்கள்

Post by mmani Sat Jun 29, 2013 6:54 am

விநாயகர் விரதங்கள்
விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் நான்கு ஓவ்வொரு வாரத்திலும் வரும் வெள்ளிக்கிழமையிலும் (சுக்கிரவாரம்) ஓவ்வொருமாதத்திலும் வரும் வளர்பிறை சதுர்த்தியும் தேய்பிறைசதுர்த்தியும் (சங்கட வறா சதுர்த்தி ) விநாயக சஷ்டியுமே அவை. சிறப்பாக ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே மக்கள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகின்றார்.மிகப் பழங்காலத்தில் ஆவணித் திங்களை முதல் மாதமாகக் கொண்டு மாதங்களைக் கணித்தல் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைக்குரியது. சிங்க ஒரை (சிம்ப ர்லக்கணம்) என்றும் அதற்குரிய திங்கள் ஆவணி ஆதலின் ஆவணி தொடங்கி மாதங்களை கணக்கிடுதல் ஓரு முறை என்றும் பண்டையோர் கொண்டிருந்தனர். இந்த ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியே விநாயகர் அவதரித்த நாளாகும் என்பர் ஓரு சமயம் உமாதேவியார் விநாயகர் மந்திரமாகிய ஏகாகஷரத்தை உபதேசமாகக் கேட்டுப் பிள்ளையாரை உபாசித்து வந்தார். விநாயகர் ஆறு திருக்கரங்களோடும் யானை முகத்தோடும் வெண்ணிறமான குழந்தையாகப் பாலசந்திர விநாயகர் என்ற திருப்பெயர் தாங்கி உமாதேவிக்கு மகனாகத் தோன்றினார்.
அந்த ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் (முருகன் அவதரித்தும் விசாக நட்சத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.) சோமவாரமும் (திங்கட்கிழமை) சிம்ம இலக்கணமும் கூடிய நாளாகும் ஆகையால் ஆவணிச் சதுர்த்தி மிகச் சிறப்புடையதாகக் கருதப்பெறுகிறது. விநாயக சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவம் அமைத்து. அதில் விநாயகரை மந்திரம் பாவனை கிரியைகளால் எழுந்தருளச் செய்து அபிஷேக அலங்காரங்கள் செய்து நிவேதனப் பொருள்கள் வைத்துப் போற்றி வழிபடுதல் முறையாகும். நிவேதன வகையில் மோதகம் அப்பம் எள்ளுருண்டை அவல் பெரி கரும்பு விளாம்பழம் முதலியவை சிறந்தவையாகும். அவருக்கு உகந்த மலர்கள் தும்பை வன்னி எருக்கு அறுகு கொன்றை முதலியவையாகும் இவ்விதம் பொருமானை வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ புண்ணியஆறுகளிலோ விட்டு விடுவார்கள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறைகளில் வரும் சதுர்த்தி திதிகள் வழிபாட்டுக்கு உகந்தவை. வளர்பிறை ( சுக்லபட்ச) சதுர்த்தி திகதியின் அதிபதியான தேவி தன்னை அவருடைய இருப்பிடமாகச் செய்து கொள்ளுமாறு வேண்டினாள் அதற்கு அருள் புரிந்த விநாயகர் நான் உனக்குமத்தியானத்தில் காட்சி அளித்த படியால் சுக்லபட்ச சதுர்த்தியும் மத்தியானமும் கூடிய நன்னாளில் என்னை வழிபடுவோர் என் அருளைப் பெறுவர். சதுர்த்தியன்று ஆகாரமில்லாமல் என்னை வழிபடுவோருக்கு அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பேறுகளையும் வழங்குவேன் என்றார்.
ஆவணித் திங்கள் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இந்தச் சதுர்த்தி விரதத்தைத் தொடங்க வேண்டும் அன்று விடியற்காலையில் எழுந்து நீராடி அன்றாடக் கடமைகளைச் செய்த பிறகு அர்ச்சனைக்குரிய மலர்களையும் மாற்றும் அபிஷேகப் பொருட்கள் தூபதீபம் ப10சைக்குரிய பொருட்களையும் சேகரித்துப் பூசை மண்டபத்தை அமைத்து விநாயகரை வழிபடுதல் வேண்டும் ர்வ்வாறு அடுத்த மாதவளர்பிறைச் சதுர்த்தி வரையில் நாள்தோறும் முறைப்படி பூசைவேண்டும்.இந்த முப்பது நாள்களிலும் ஆகாரம் பகலில் உறக்கம் இல்லாமல் இந்திரிய ஆசைகளை நீக்கி இறைஎண்ணத்திலேயே ஈடுபட வேண்டும் 31வது நாள் விருந்தினர் ஏழைகளோடு இருந்து உணவு உண்ணவேண்டும.முப்பது நாள் உண்ணாவிரதம் இருக்க இயலாதவர்கள் பூசைக்கு முதல்நாளாவது அப்படி இருந்து மற்ற நாட்களில் பால் பழம் அவிசு (உப்பின்றி சமைத்த உணவு) முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை உண்ணலாம். முப்பது நாள் விரதம் ர்ருக்கமுடியாதவர்கள் பூசை தொடங்கிய ஒரு நாளாவது உணவு உறக்கம் இச்சை முதலியவற்றை நீத்து இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தியின் அதிபதியான சக்தி விநாயகரை வழிபட்டபோது அவர் கூறினார் சந்திரோதயத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்ச சதுர்த்தியும் சந்திரோதயமும் கூடிய காலம் முக்கிய விரதநோரமாகும்.அப்பொழுது என்னை வழிபடுவோருக்கு என் அருள் நிச்சையம் கிடைக்கும். சங்கடவறர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்போரின் சங்கடமெல்லாம் தீர்ந்து விடும் உனக்கும் சங்கஷ்டவறரணி என்ற பெயர் உண்டாகட்டும் என்றார்.அங்காரகன் விநாயகரை ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தியில் (மாசி மாததேய்பிறை சதுர்த்தி) பூசை செய்து பேறு பெற்றான் அதனால் செவ்வாயும் சங்கடவறர சதுர்த்தியும் சேரும் நாள் மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். மாசி மாததேய்பிறைச் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி வருமானால் அன்று கணபதிக்கு உகந்த சங்கடவறர சதுர்த்தி விதரத்தைத் தொடங்குவார்கள்.சுங்கடவறர சதுர்த்தியன்று காலை முதல் சந்திரோதயம் வரை நீர் தவிர வேறு ஏதும் உட்கொள்ளாமல் சந்திரனைப்பார்த்து பின்னர் அருக்கியம் கொடுத்து (மந்திர நீர் இறைத்தல்) 21 அறுகம்புல் கொண்டு விநாயகரின் 21 திருப்பெயர்களை அர்ச்சித்து அதன்பின் உப்பு காரம் சேர்க்காத உணவை உட்கொள்ளவேண்டும்.இரவு கண்விழித்து விநாயகரின் கதைகளைக் கேட்க வேண்டும் இவ்வாறாக ஒராண்டு காலம் சதுர்த்தி நாட்கள் தோறும் விடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
ஆண்டு முழுவதும் 24 சதுர்த்திகளிலும் விரதம் மேற்கொண்டு ஆவணி சுக்கில சதுர்த்தியில் விதரத்தைப் பூர்த்தி செய்து விநாயகரை வழிபடுவதன் வழி பெறற்கரிய பேறுகளைப் பெறலாம்.விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற 21 பத்திரங்கள்( இலைகள்) வருமாறு: அலரி துளசி மருதமர இலை எருக்கு அறுகு ( வேருடன்கூடிய வெள்ளறுகு மிகச் சிறந்தது என்று கூறுவர்) கையாந்தகரை (கரிசிலாங்கண்ணி) முள்ளி அரசமர ர்லை பச்சை(மாசிப்பச்சை) நாயுருவி நாவல்மர ர்லை எலுமிச்சைர்லை நொச்சி சாதிப்பூ ர்லை ர்லுப்பைமர ர்லை இலந்தைமர இலை தேவதாருமர இலை மாதுளை இலை விஷ்ணுகாந்தி இலை.விநாயகர் சஷ்டி ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் சோம வாரமும் சிம்ம இலக்கணமும் கூடிய நன்னாளில் கயமுகாசுரனைச் சம்ஹாக்கும் பொருட்டு விநாயகர் அவதரித்தார். அவர் கயமுகாசுரனை அடக்கி வாகனமாக்கிக் கொண்டு வரலாற்றையும் அறிந்துள்ளோம். முருகளைப் போலவே விநாயகப் பெருமானுக்கும் சஷ்டி விரதம் உகந்ததாகிறது. ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது. அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டுமலைப்பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.
விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப்பாம்பாக மாறிஇருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார். விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி குமார சஷ்டி பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.
 
  
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum