TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு

Go down

யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Empty யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு

Post by mmani Sun Jun 23, 2013 7:48 am

யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு Dhoni,-Alastair-Cook-300
 
பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பை வெல்ல இந்திய அணி காத்திருக்கிறது. 
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில்(மினி உலக கோப்பை) பங்கேற்க, இந்திய அணி இங்கிலாந்து சென்றது. உள்ளூர் பிரச்னைகளில் இருந்து விரைவாக மீண்ட இந்திய அணியினர் வெற்றி மேல் வெற்றி பெற்றனர். லீக் சுற்றில் நூறு சதவீத வெற்யுடன், அரையிறுதிக்குள் நுழைந்தது. பின் அரையிறுதியில் இலங்கையை வென்று, பைனலுக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றிகளுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மாவின் சிறப்பான துவக்கம் முக்கிய காரணம். "பவர்-பிளே' ஓவர்களில் (முதல் 10 ஓவர்) இதுவரை அவுட்டாகாத ஜோடி என்ற பெருமை பெற்றது. 
இதில் ஷிகர் தவான் இரண்டு சதம், ஒரு அரைசதத்துடன் மொத்தம் 332 ரன்கள் குவித்து (சராசரி 110.66) மிரட்டுகிறார். ரோகித் சர்மா தன்பங்கிற்கு 168 ரன்கள் (2 அரைசதம்) எடுத்துள்ளார். 
பின்வரிசை பலவீனம்:
இவர்கள் கொடுக்கும் நல்ல துவக்கத்தை, அடுத்து வரும் வீரர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக் இருவரும் நம்பிக்கை தருகின்றனர். அடுத்து ரெய்னா, கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
அதேநேரம், இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் "டாப் ஆர்டர்' வீரர்களே விளையாடியதால், பின் வரிசை வீரர்களின் உண்மையான திறமை இத்தொடரில் சோதிக்கப்படாமல் உள்ளது பலவீனம் தான். 
ஜடேஜா நம்பிக்கை:
பவுலிங்கை பொறுத்தவரையில் இங்கிலாந்து மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்துகின்றனர். துவக்கத்தில் களமிறங்கும் எதிரணியின் இடதுகை வீரர்களுக்கு புவனேஷ்வர் குமார் (6 விக்.,), "சிம்ம சொப்பனமாக' உள்ளார். இவரது அசத்தல் தொடரும் பட்சத்தில், துவக்கத்தில் வரும் கேப்டன் அலெஸ்டர் குக்கிற்கு சிக்கல் தான். 
அடுத்து இஷாந்த் சர்மா, இதுவரை 8 விக்கெட் வீழ்த்திய இவருடன், உமேஷ் யாதவும் கலக்குகிறார். சுழற்பந்து வீச்சில் ரவிந்திர ஜடேஜா (10 விக்.,) ரசிகர்களுக்கு நம்பிக்கை தருகிறார். இவருடன் அஷ்வினும் (6 விக்.,) சேர்ந்து, "இரட்டைக் குழல்' துப்பாக்கியாக தொல்லை தருகின்றனர்.
டிராட் மிரட்டல்:
சொந்த மண்ணில் நடந்த முக்கிய தொடர் ஒன்றில், இப்போது தான் இங்கிலாந்து அணி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அனுபவ வீரர் கெவின் பீட்டர்சன் இல்லாத நிலையிலும், குக், இயான் பெல் சீரான துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' வரும் டிராட் (209 ரன்கள்), ஜோ ரூட் (166) இருவரும் அசத்தல் பார்மில் உள்ளனர். அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்களில், முதல் இரு இடத்தில் <உள்ள இவர்களை விரைவில் அவுட்டாக்குவது முக்கியம். பின்வரிசையில் அதிரடி மார்கன், அனுபவ ரவி போபரா, பட்லர் உள்ளனர்.
ஆண்டர்சன் பலம்:
வேகப்பந்து வீச்சில் "சுவிங்' செய்வதில் வல்லவரான ஆண்டர்சன் அசத்துகிறார். இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய இவரைத் தவிர, நல்ல உயரம் கொண்ட ஸ்டூவர்ட் பிராட்(6.5), ஸ்டீவன்(6.7) "வேகத்தில்' மிரட்டலாம்.
"சுழலில்' அனுபவ சுவான் பல்போன பாம்பாக உள்ளார். இவருக்குப் பதிலாக களமிறக்கப்படும் டிரட்வெல் இன்றும் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடைசி கோப்பை:
இது தான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர். இதில், இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்ல துடிப்கடந்து வந்த பாதை...
இந்தியா
லீக் சுற்று
* 26 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றது
* வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
* "டக்-வொர்த்' லீவிஸ் விதிப்படி பாகிஸ்தானை, வென்றது (8 விக்கெட்).
அரையிறுதி
இலங்கைக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
--------
இங்கிலாந்து
* ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
* 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி
* நியூசிலாந்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
அரையிறுதி
தென் ஆப்ரிக்காவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
-------
30 ஆண்டுக்குப் பின்...
கடந்த 1983, ஜூன் 25ல் இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இதில் வெஸ்ட் இண்டீசை வென்று கோப்பை கைப்பற்றியது. 
* தற்போது, 30 ஆண்டுக்குப் பின் மீண்டும் இங்கிலாந்து மண்ணில், சாம்பியன்ஸ் டிராபி(மினி <உலக கோப்பை)தொடரின் பைனலுக்கு முன்னேறி உள்ளது. இதில் சாதித்து கோப்பை வெல்லும் என நம்புவோம்.
---
1983க்குப் பின் 2013
கடந்த 1983ல் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான,இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கைப்பற்றியது. 
* கடந்த 2011ல் கேப்டன் தோனி தலைமையில், இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வென்று அசத்தியது. தற்போது இரு ஆண்டுக்குப் பின், 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. 
----
முக்கிய தொடரில் இதுவரை...
இந்தியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை தொடர்களில், இதுவரை 7 போட்டிகளில் மோதின. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி (2011) "டை' ஆனது. 
இதன் விவரம்:
தொடர் வென்ற அணி வித்தியாசம் இடம்
1975 இங்கிலாந்து 202 ரன்கள் லார்ட்ஸ்
1983 இந்தியா 6 விக்கெட் மான்செஸ்டர்
1987 இங்கிலாந்து 35 ரன்கள் மும்பை
1991 இங்கிலாந்து 9 ரன்கள் பெர்த்
1999 இந்தியா 63 ரன்கள் பர்மிங்காம்
2003 இந்தியா 82 ரன்கள் டர்பன்
2011 ------ "டை' பெங்களூரு
* சாம்பியன்ஸ் டிராபி தொடரை பொறுத்தவரையில், இரு அணிகளும் இதுவரை 2 முறை சந்தித்தன. இந்த இரண்டிலும் இந்திய அணி வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விவரம்:
தொடர் வென்ற அணி வித்தியாசம் இடம்
2002 இந்தியா 8 விக்கெட் கொழும்பு
2006 இந்தியா 4 விக்கெட் ஜெய்ப்பூர்
-----
பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
 
கிடைக்குமா மூன்றாவது கோப்பை
இந்திய அணியின் கேப்டனாக கடந்த 2007ல் தோனி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பங்கேற்ற முதல் தொடர் "டுவென்டி-20' உலக கோப்பை. இதில் தனது பணியில் அசத்திய இவர், இந்தியாவுக்கு முதன் முறையாக "டுவென்டி-20' உலக கோப்பை வென்று தந்தார்.
* கடந்த 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்தார். இப்போது, மினி உலக கோப்பை தொடர் பைனலுக்கு அணியை கொண்டு சென்றுள்ளார். இதில் தனது வழக்கமான "கூல்' வியூகங்களால் அசத்தி, இந்தியாவுக்கு மூன்றாவது முறையாக கோப்பை கொண்டு வருவாரா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
---
பரிசு ரூ. 12 கோடி
இன்று பட்டம் வெல்லும் அணிக்கு "ஸ்டெர்லிங் சில்வர்' கொண்டு தயாரிக்கப்பட்ட, 3.1 கி.கி., எடையுள்ள, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வழங்கப்படும். இது, உயரம் 46 செ.மீ., உயரம், கீழ்பகுதி 47 செ.மீ., மேற்பகுதி 48 செ.மீ., விட்டம் கொண்டது. கோப்பையின் மதிப்பு ரூ. 12 லட்சம். தவிர, சாம்பியன் அணிக்கு ரூ. 12 கோடி பரிசாக கிடைக்கும்.
----
ஒன்னே ஒன்னு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் மூன்று பெரிய தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதில் இங்கிலாந்து அணி 10 உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. இதில் மூன்று முறை பைனலுக்கு (1979, 1987, 1992) முன்னேறிய போதும் கோப்பை வென்றது இல்லை. 
* 6 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதில் 2004ல் வெஸ்ட் இண்டீசிடம் கோப்பையை பறிகொடுத்தது.
* "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் நான்கு முறை விளையாடிய இங்கிலாந்து, அணி 2010ல் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றது. 
* மொத்தம் 20 பெரிய தொடர்களில், இங்கிலாந்து அணி ஒரே ஒருமுறை மட்டும் தான் சாம்பியன் ஆகியுள்ளது.
---
எல்லாமே வீரர்களுக்கு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்லும் பட்சத்தில், பரிசுப் பணமாக கிடைக்கும் ரூ. 12 கோடியை, 15 வீரர்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. ஒருவேளை கோப்பை வெல்லவில்லை என்றாலும், ரூ. 6 கோடி உறுதி. இது 15 வீரர்களுக்கு சமமாக பிரித்து தரப்படும்.
----87
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 87வது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய 86 போட்டியில் இந்தியா 46, இங்கிலாந்து 35 போட்டியில் வெற்றி பெற்றன. இரண்டு போட்டிகள் "டை' ஆனது. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை.
---
3
சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மூன்றாவது முறையாக மோதவுள்ளன. முன்னதாக விளையாடிய இரண்டு (2002, 2006) போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
---
271
கொழும்புவில், 2002ல் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 271 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இப்போட்டியில் 269 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக சிறந்த ஸ்கோரை பெற்றது.
---
126
ஜெய்ப்பூரில், 2006ல் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான மிகக் குறைந்த ஸ்கோர். இப்போட்டியில் 125 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்த ரன்னை பதிவு செய்தது.
---
50-50
சாம்பியன்ஸ் டிராபி பைனல் நடக்கவுள்ள பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி 6 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் மூன்று வெற்றி, மூன்று தோல்வியை பெற்றது.
* இங்கிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய இரண்டு போட்டியில், ஒன்றில் மட்டும் இந்தியா (1999) வென்றது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து (2007) வெற்றி பெற்றது.
---
239
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 239 ரன்கள் (எதிர்-இங்கிலாந்து, 2007). இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இங்கு, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் 281 (2007).
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum