TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 17, 2024 11:51 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது

2 posters

Go down

சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது Empty சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது

Post by அருள் Sat May 04, 2013 6:45 am

சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது
***********************************************

சிறிலங்கா அரசாங்கம் மீது தற்போது சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள்,
கைதுசெய்தல், வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் அதிக விமர்சனங்கள்
எழுந்துள்ளதாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின்
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகிந்த ராஜபக்சவால் தலைமை தாங்கப்படும் சிறிலங்கா அரசாங்கமானது எவ்வாறு
தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றது என்பதை
விபரிக்கின்ற ‘Assault on Dissent’ என்கின்ற அறிக்கையை அனைத்துலக
மன்னிப்புச் சபை தற்போது வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது
நாட்டின் பாதுகாப்புப் படைகள் மற்றும் வேறு ஆயுதக்குழுக்களைப் பயன்படுத்தி
ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்த்தரப்பு
அரசியல்வாதிகள் போன்றோரை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்றனர்.

“வன்முறை அடக்குமுறைகள் சிறிலங்காவில்
அதிகரித்துள்ளதுடன், அரசியல் அதிகாரமானது ஒருவரின் கையில் குவிந்துள்ளது”
என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக்கிற்கான பிரதி இயக்குனர்
Polly Truscott என்பவர் தெரிவித்துள்ளார்.

“அண்மைய ஆண்டுகளாக
சிறிலங்காவில் விமர்சனத்திற்கான இடைவெளி என்பது குறைவாக காணப்படுவதை நாம்
அவதானித்துள்ளோம். சிறிலங்காவில் தற்போது அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக
கருத்துக்களை வெளியிட மக்கள் அச்சப்படுகின்றனர்” எனவும் பொலி ரஸ்கோற்
தெரிவித்துள்ளார்.

மே 2009ல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கம் தனது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்த தொடங்கியது.

முக்கிய அரசாங்கத் திணைக்களங்கள் சிறிலங்கா அதிபரின் நேரடிக்
கட்டுப்பாட்டின் கீழ் வரும் விதமாக செப்ரெம்பர் 2010ல் 18வது திருத்தச்
சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதேவேளையில், பயங்கரவாத தடைச்சட்டம்
தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதுடன், பாதுகாப்புப் படையினர் இதனை அதிகம்
பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை
விமர்சிப்போரை சிறிலங்கா அரச ஊடகங்கள் ‘தேசத் துரோகி’ போன்ற பெயர்களால்
விமர்சித்து வருகின்றன. சிறிலங்கா அரசாங்கமானது தன்னை விமர்சிப்பவர்களை
உடல் மற்றும் உளரீதியாகத் தாக்கி வருகிறது. இவ்வாறான தாக்குதல்களில் பலர்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது
தற்போது நீதித்துறையின் சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மனித உரிமை மீறல்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் நீதிபதிகளுக்கு எதிராக
சிறிலங்கா அரசாங்கம் அச்சுறுத்தலை விடுத்துவருகிறது.

2013
ஜனவரியில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அவர் பதவி விலக்கப்பட்ட போது
நாட்டில் குழப்பம் ஏற்பட்டது.

சிறிலங்காவில் செயற்படும் அதிக
ஊடகங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதேவேளையில்,
அரசாங்கத்தை எதிர்க்கும் அல்லது போரின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள்
தொடர்பாக விமர்சிக்கும் ஊடகங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன.

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அரச தலையீடுகள் காணப்படுவதுடன்,
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு,
தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றனர்.

2006லிருந்து குறைந்தது 15
ஊடகவியலாளர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பலர் நாட்டை விட்டு
வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகினர்.

அண்மைய தாக்குதல்
சம்பவம் ஒன்றில் சண்டே லீடர் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளர் பரஸ்
சவுக்கெற்றலி படுகாயமடைந்தார். துப்பாக்கிதாரிகளின் தாக்குதலால் கழுத்தில்
படுகாயமடைந்தார்.

2009ல் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்
லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இவர் படுகொலை
செய்யப்பட்டதுடன் தொடர்புபட்ட எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

அரசாங்கத்தை விமர்சிக்கும் இணையத்தளங்கள் மீது தொடர்ந்தும் சைபர்
தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இணையத்தள அலுவலகங்கள் திடீரென
சுற்றிவளைக்கப்படுவதுடன், எரிக்கப்படுகின்றன. இணையத்தளங்களைப் பதிவு
செய்யுமாறும் இதற்காக கட்டணங்களை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்க
அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

‘சுயாதீன ஊடகங்கள் மீது அவற்றின்
பத்திரிகைச் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கத்தால்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது உள்நாட்டு மற்றும் அனைத்துலகச்
சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது’ என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய
பசுபிக் பிராந்தியத்திற்கான துணை இயக்கனர் ரஸ்கொற் தெரிவித்துள்ளார்.

போரின் போது குறிப்பாக இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது சிறிலங்கா
அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் மற்றும் பல பத்தாயிரக்கணக்கான
மக்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்றவற்றை ஊடகங்கள் விமர்சிக்கக் கூடாது
என்ற நோக்கிலேயே ஊடகங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2012 மற்றும் 2013களில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்
தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்கள் இயற்றப்பட்டு போர்க்
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும் என
வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இவ்வாறான ஐ.நா கூட்டத் தொடர்களில்
பங்கு கொண்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மற்றும் சிறிலங்கா
ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா அரச ஊடகங்கள் உளவியல் பாதிப்பை உண்டுபண்ணும்
விமர்சனங்களை முன்வைத்ததுடன், உடல் ரீதியான தாக்குதல்களும்
அச்சுறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன.

மனித உரிமைச்
செயற்பாட்டாளர்கள், வர்த்தகசங்கத் தலைவர்கள், மனிதாபிமான பணியாளர்கள்,
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக
வாழும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் போன்றோரையும்
சிறிலங்கா அரசாங்கம் குறிவைத்துள்ளது.

இவ்வாறான சூழலில், நவம்பர்
2013ல் கொமன்வெல்த் தலைவர்கள் பங்குபற்றும் உச்சி மாநாட்டை சிறிலங்காவில்
நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு கொழும்பில்
இடம்பெற்றால் அடுத்த இரு ஆண்டுகளுக்கும் கொமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பை
சிறிலங்கா பிரதிநிதித்துவப்படுத்தும்.

“நவம்பர் மாதத்திற்கு
முன்னர், நாட்டில் ஏற்பட்டுள்ள மிகமோசமான மனித உரிமைச் சூழலை சிறிலங்கா
அரசாங்கம் நிவர்த்தி செய்யவேண்டும் என பொதுநலவாய அமைப்பு நாடுகள் அழுத்தம்
கொடுக்க வேண்டும்” என ரஸ்கொற் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறிலங்கா
அரசாங்கம் தனது நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்
செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால், கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின்
உச்சிமாநாட்டை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது. தனிப்பட்டவர்கள்
மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பாரபட்சமற்ற ரீதியில், பயனுள்ள வகையில்
விசாரிக்கப்பட்டு பொறுப்புக் கூறப்படவேண்டும்” எனவும் ரஸ்கொற் மேலும்
வலியுறுத்தியுள்ளார்.

“தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் காலக்
குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலான அனைத்து மீறல்களையும் அனைத்துலகச்
சட்டத்தின் பிரகாரம் நம்பகமான விசாரணையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா
அரசாங்கம் விருப்பமில்லாது காணப்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இது தொடர்பில் சுயாதீனமான, பாரபட்சமற்ற, அனைத்துலக சார் விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் ரஸ்கொற் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொழியாக்கம் : நித்தியபாரதி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது Empty Re: சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது

Post by Tamil Sat May 04, 2013 8:35 am

அப்பாட இப்போதான் புரிஞ்சதா ? சிறிலங்கா அரசு தனது ஆட்சி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றது 526513
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைக்க அரசு திட்டம்?
» அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்.
»  ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி - மத்திய அரசு யோசனை!
» அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஏக்கத்துடன் காத்திருக்கும் சிறிலங்கா அரசு!
» உண்மையை வெளிக் கொண்டுவர சிறிலங்கா அரசு விரும்பாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum