Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழனத்தின் துரோகி இந்திராகாந்தி
Page 1 of 1
தமிழனத்தின் துரோகி இந்திராகாந்தி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு காங்கிரசு கட்சி துரோகம்
செய்வது வாடிக்கையாகிவிட்டது. 1967ல் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில்
தோற்கடிக்கப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தது முதல், தமிழ்நாட்டை அழித்துவிட
வேண்டும் என்று கொள்கையோடு இந்திராகாந்தி செயல்பட்டார். தமிழனத்தில்
துரோகியாக இந்திராகாந்தி செயல்பட்டார் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
இலங்கை தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒன்று
சேர்ந்து இந்தியாவில் காங்கிரசு எதிரான அணி ஏற்படுத்திவிடுவார்களோ என்று
இலங்கையில் உள்ள தமிழர்களை அழிக்கும் முயற்சி 1974ல் காங்கிரசு கட்சி
தொடங்கிவிட்டது.
காங்கிரசு ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு, தமிழக மக்கள் என்ன
நினைக்கிறார்கள் என்ற கருத்தை அறிய விரும்பவில்லை.
அப்போது காங்கிரசு கட்சியின் தமிழக பொறுப்பில் இருந்தவர்கள், தமிழ்நாட்டிற்கு, தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்பட்டார்கள்..
இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை
காட்டுகிறது” என்று பாராளுமன்றத்தின் மக்களவைஇல் பூபேஷ்குப்தா (வ.கம்.)
பேசி, பிரதமர் இந்திராகாந்தியின் பாராட்டை பெற்றார். வலது, இடது
கம்யூனிஸ்டு கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க,
பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார்கள்..
தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள
கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான
ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர்
திருமதி பண்டாரநாயகாவும் 1974-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி
கையெழுத்திட்டனர்.தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது
கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது.
முன்பு இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை
கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா கடந்த ஜனவரி மாதம் டெல்லி
வந்திருந்தபோது பிரதமர் இந்திராகாந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.
கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது
தீர்மானிக்கப்பட்டது.
“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு
தரக்கூடாது” என்று தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. முதல்-அமைச்சர்
கருணாநிதி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது இதை
வலியுறுத்தினார்.இப்போது கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று இந்திய
அரசு முடிவு செய்துவிட்டது. 28-6-1974 அன்று, கச்சத்தீவு பற்றிய
ஒப்பந்தத்தை இலங்கையில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே
டெல்லிக்கு விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார்.
அதேபோல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங்,
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார். அதில் இலங்கை பிரதமர்
திருமதி பண்டார நாயகா கையெழுத்திட்டார். இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில்
கையெழுத்து போடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல்
நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில்
ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது,
இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில்
செல்வார்கள். இருதேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு
சென்றுமீன் பிடிப்பது உண்டு. அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள்
நிரந்தரமாக வசிக்கவில்லை.
[You must be registered and logged in to see this image.]
கச்சத்தீவு தொடர்பாக பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானத்தில் எம்.பிகள் பேசியதை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தானம் செய்ததற்கு,
பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனசங்க உறுப்பினர்,
ஆவேசத்துடன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
செய்தனர். தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின்
ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு
கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி
கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா
மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது அதன் மீது காரசாரமான விவாதம்
நடந்தது.
இரா.செழியன் (தி.மு.க.) பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு உரிய
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை
நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.
மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:- “என்னுடைய
ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்கு கொடுத்தது
தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச்
செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லை கொடுத்து வருகிறது.
எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாக
பயன்படுத்தும் அபாயம் உள்ளது.” இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.
ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், “இலங்கைக்கு கச்சத்தீவை
தானம் செய்யும் பேரம், ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப்
பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுப்பது கேவலம்!” என்று கூறினார்.
மதுலிமாயி (சோசலிஸ்டு), பி.கே.தேவ் (சுதந்திரா), முகமது செரீப் (முஸ்லீம்
லீக்), நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.) ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப்
பேசினார்கள்.
வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில்,
“இந்தியா – இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும். இரு தேசங்களுக்கும்
நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது” என்று கூறினார்.
ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.கழகம்,
சுதந்திரா, பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், ஜனசங்கம்,
அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகளில் வலது கம்ïனிஸ்டு, இடது கம்ïனிஸ்டு கட்சிகள் மட்டும்
வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.சபையை விட்டு வெளியேறும் போது கச்வாய்
என்ற ஜனசங்க உறுப்பினர், கச்சத்தீவு ஒப்பந்த நகலை கிழித்து, சபையில் வீசி
எறிந்தார்.
இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விவாதத்தின்போது
எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில், “கச்சத்தீவு பற்றி
தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே, ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார்
கையெழுத்திட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு” என்று
கூறினார்.
ராஜ்நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில், “ஒப்பந்தத்தில் கையெழுத்து
போடுவதற்கு முன், தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்” என்று
கூறினார்.
”ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது” என்று அப்துல் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.
கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு
தெரிவித்தார்கள். “இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை
காட்டுகிறது” என்று பூபேஷ்குப்தா (வ.கம்.) கூறினார். முடிவில்,
வ.கம்ïனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு
செய்தன.
இலங்கை பாராளுமன்றம் கூடியது. கச்சத்தீவை இலங்கைக்கு
பெற்றுத்தந்ததற்காக பிரதமர் திருமதி பண்டாரநாயகாவை உறுப்பினர்கள்
பாராட்டினார்கள். திருமதி பண்டாரநாயகா பேசுகையில், கச்சத்தீவு
பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியை பாராட்டுவதாக
தெரிவித்தார். சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங்
மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து
இந்திரா காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. “இலங்கைக்கு கச்சத்தீவை
இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்” என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ்
தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார். கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என்று
கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர் சொன்னார். இ.காங்கிரசை சேர்ந்த
மூத்த தலைவரான பழைய முதல்-மந்திரி பக்தவச்சலமும் கச்சத்தீவை இலங்கைக்கு
கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து,
முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து
கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது” என்ற தீர்மானத்தில்
கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர்
ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.
இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு
தெரிவித்தார். “அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும்,
ஆறுமுகசாமியும் கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க
வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதற்கு எதிரான தீர்மானத்தில்
அவர்கள் கையெழுத்திட்டது தவறு” என்று அவர் சொன்னார். சட்டசபை இ.காங்கிரஸ்
துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை ஆதரித்தார்.
ராமையாவுக்கு, மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில்
அளித்தார். அவர் கூறியதாவது:- “முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி
தலைவர்கள் கூட்டத்தில் நானும், மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான்.
மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை. நாங்கள்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினையில்
தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்றுதான்
நினைப்பார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம்
மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. மிக முக்கியமான இந்த பிரச்சினையில் நாங்கள்
ஓடி ஒளிய விரும்பவில்லை. அதனால் நாங்கள், இந்த கூட்டத்தில் கலந்து
கொண்டோம்.” மேற்கண்டவாறு ஆறுமுகசாமி கூறினார்.
கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து, ஜுலை 14-ந்தேதி தமிழ்நாடு
முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன.
முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த
கூட்டங்களில் பேசினார்.
கச்சத்தீவை தானம் செய்வது சட்ட விரோதம் என்றும், இந்திரா
காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது
என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு ஜனசங்கத்
தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார். விசாரணைக்குப்
பிறகு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பலத்த எதிர்ப்பு இருந்தாலும், கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.
[You must be registered and logged in to see this image.]
காங்கிரசு கட்சி தமிழனத்தின் துரோகி என்று சொல்வதில் தவறில்லை.
நேருவின் மகளே வருக…நிலையான ஆட்சித்தருக என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியதின் பின்னணியை தனி செய்தியாக பார்க்கலாம்..
தமிழனத்தின் துரோகியான காங்கிரசு கட்சியுடன், தமிழ்நாட்டில்
எந்த அரசியல் கட்சி கூட்டணி அமைத்தாலும், அந்த கட்சியும் தமிழனத்தின்
துரோகிதான் என்பதில் மாறுப்பட்ட கருத்து கிடையாது..
மக்கள்செய்திமையம் 29.3.13 மாலை 6.30மணி
தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு காங்கிரசு கட்சி துரோகம்
செய்வது வாடிக்கையாகிவிட்டது. 1967ல் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டில்
தோற்கடிக்கப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தது முதல், தமிழ்நாட்டை அழித்துவிட
வேண்டும் என்று கொள்கையோடு இந்திராகாந்தி செயல்பட்டார். தமிழனத்தில்
துரோகியாக இந்திராகாந்தி செயல்பட்டார் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
இலங்கை தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒன்று
சேர்ந்து இந்தியாவில் காங்கிரசு எதிரான அணி ஏற்படுத்திவிடுவார்களோ என்று
இலங்கையில் உள்ள தமிழர்களை அழிக்கும் முயற்சி 1974ல் காங்கிரசு கட்சி
தொடங்கிவிட்டது.
காங்கிரசு ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு முன்பு, தமிழக மக்கள் என்ன
நினைக்கிறார்கள் என்ற கருத்தை அறிய விரும்பவில்லை.
அப்போது காங்கிரசு கட்சியின் தமிழக பொறுப்பில் இருந்தவர்கள், தமிழ்நாட்டிற்கு, தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்பட்டார்கள்..
இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை
காட்டுகிறது” என்று பாராளுமன்றத்தின் மக்களவைஇல் பூபேஷ்குப்தா (வ.கம்.)
பேசி, பிரதமர் இந்திராகாந்தியின் பாராட்டை பெற்றார். வலது, இடது
கம்யூனிஸ்டு கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க,
பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தார்கள்..
தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் உள்ள
கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான
ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர்
திருமதி பண்டாரநாயகாவும் 1974-ம் ஆண்டு ஜுன் 28-ந்தேதி
கையெழுத்திட்டனர்.தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது
கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது.
முன்பு இந்தத் தீவு, ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.
ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று, சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை
கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா கடந்த ஜனவரி மாதம் டெல்லி
வந்திருந்தபோது பிரதமர் இந்திராகாந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார்.
கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று, அப்போது
தீர்மானிக்கப்பட்டது.
“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு
தரக்கூடாது” என்று தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. முதல்-அமைச்சர்
கருணாநிதி பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது இதை
வலியுறுத்தினார்.இப்போது கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று இந்திய
அரசு முடிவு செய்துவிட்டது. 28-6-1974 அன்று, கச்சத்தீவு பற்றிய
ஒப்பந்தத்தை இலங்கையில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே
டெல்லிக்கு விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார்.
அதேபோல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங்,
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்கு கொண்டு போனார். அதில் இலங்கை பிரதமர்
திருமதி பண்டார நாயகா கையெழுத்திட்டார். இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில்
கையெழுத்து போடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல்
நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில்
ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது,
இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில்
செல்வார்கள். இருதேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு
சென்றுமீன் பிடிப்பது உண்டு. அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள்
நிரந்தரமாக வசிக்கவில்லை.
[You must be registered and logged in to see this image.]
கச்சத்தீவு தொடர்பாக பாராளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானத்தில் எம்.பிகள் பேசியதை அப்படியே வெளியிட்டு உள்ளோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தானம் செய்ததற்கு,
பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனசங்க உறுப்பினர்,
ஆவேசத்துடன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
செய்தனர். தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின்
ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு
கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி
கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா
மந்திரி சுவரண்சிங் தாக்கல் செய்தார். அப்போது அதன் மீது காரசாரமான விவாதம்
நடந்தது.
இரா.செழியன் (தி.மு.க.) பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு உரிய
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை
நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.
மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது:- “என்னுடைய
ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்கு கொடுத்தது
தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே, கடலில் மீன் பிடிக்கச்
செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லை கொடுத்து வருகிறது.
எதிர்காலத்தில் போர் மூண்டால், இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாக
பயன்படுத்தும் அபாயம் உள்ளது.” இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.
ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், “இலங்கைக்கு கச்சத்தீவை
தானம் செய்யும் பேரம், ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப்
பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுப்பது கேவலம்!” என்று கூறினார்.
மதுலிமாயி (சோசலிஸ்டு), பி.கே.தேவ் (சுதந்திரா), முகமது செரீப் (முஸ்லீம்
லீக்), நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.) ஆகியோரும் ஒப்பந்தத்தை கண்டித்துப்
பேசினார்கள்.
வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங் பதில் அளிக்கையில்,
“இந்தியா – இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும். இரு தேசங்களுக்கும்
நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது” என்று கூறினார்.
ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.கழகம்,
சுதந்திரா, பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், ஜனசங்கம்,
அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகளில் வலது கம்ïனிஸ்டு, இடது கம்ïனிஸ்டு கட்சிகள் மட்டும்
வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.சபையை விட்டு வெளியேறும் போது கச்வாய்
என்ற ஜனசங்க உறுப்பினர், கச்சத்தீவு ஒப்பந்த நகலை கிழித்து, சபையில் வீசி
எறிந்தார்.
இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மேல்-சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விவாதத்தின்போது
எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில், “கச்சத்தீவு பற்றி
தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசாமலேயே, ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார்
கையெழுத்திட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு” என்று
கூறினார்.
ராஜ்நாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில், “ஒப்பந்தத்தில் கையெழுத்து
போடுவதற்கு முன், தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்” என்று
கூறினார்.
”ஒப்பந்தத்தை தமிழகம் ஒருபோதும் ஏற்காது” என்று அப்துல் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.
கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு
தெரிவித்தார்கள். “இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை
காட்டுகிறது” என்று பூபேஷ்குப்தா (வ.கம்.) கூறினார். முடிவில்,
வ.கம்ïனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு
செய்தன.
இலங்கை பாராளுமன்றம் கூடியது. கச்சத்தீவை இலங்கைக்கு
பெற்றுத்தந்ததற்காக பிரதமர் திருமதி பண்டாரநாயகாவை உறுப்பினர்கள்
பாராட்டினார்கள். திருமதி பண்டாரநாயகா பேசுகையில், கச்சத்தீவு
பிரச்சினைக்கு தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியை பாராட்டுவதாக
தெரிவித்தார். சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண்சிங்
மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து
இந்திரா காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. “இலங்கைக்கு கச்சத்தீவை
இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்” என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ்
தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார். கச்சத்தீவை கொடுக்கக்கூடாது என்று
கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர் சொன்னார். இ.காங்கிரசை சேர்ந்த
மூத்த தலைவரான பழைய முதல்-மந்திரி பக்தவச்சலமும் கச்சத்தீவை இலங்கைக்கு
கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து,
முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து
கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது” என்ற தீர்மானத்தில்
கையெழுத்து போட்டார். இதேபோல் மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர்
ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.
இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு
தெரிவித்தார். “அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும்,
ஆறுமுகசாமியும் கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க
வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதற்கு எதிரான தீர்மானத்தில்
அவர்கள் கையெழுத்திட்டது தவறு” என்று அவர் சொன்னார். சட்டசபை இ.காங்கிரஸ்
துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை ஆதரித்தார்.
ராமையாவுக்கு, மேல்-சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில்
அளித்தார். அவர் கூறியதாவது:- “முதல்-அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி
தலைவர்கள் கூட்டத்தில் நானும், மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான்.
மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை. நாங்கள்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சினையில்
தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்றுதான்
நினைப்பார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம்
மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. மிக முக்கியமான இந்த பிரச்சினையில் நாங்கள்
ஓடி ஒளிய விரும்பவில்லை. அதனால் நாங்கள், இந்த கூட்டத்தில் கலந்து
கொண்டோம்.” மேற்கண்டவாறு ஆறுமுகசாமி கூறினார்.
கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து, ஜுலை 14-ந்தேதி தமிழ்நாடு
முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன.
முதல்-அமைச்சர் கருணாநிதி தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த
கூட்டங்களில் பேசினார்.
கச்சத்தீவை தானம் செய்வது சட்ட விரோதம் என்றும், இந்திரா
காந்தியும், திருமதி பண்டாரநாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது
என்றும், சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு ஜனசங்கத்
தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார். விசாரணைக்குப்
பிறகு, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பலத்த எதிர்ப்பு இருந்தாலும், கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.
[You must be registered and logged in to see this image.]
காங்கிரசு கட்சி தமிழனத்தின் துரோகி என்று சொல்வதில் தவறில்லை.
நேருவின் மகளே வருக…நிலையான ஆட்சித்தருக என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியதின் பின்னணியை தனி செய்தியாக பார்க்கலாம்..
தமிழனத்தின் துரோகியான காங்கிரசு கட்சியுடன், தமிழ்நாட்டில்
எந்த அரசியல் கட்சி கூட்டணி அமைத்தாலும், அந்த கட்சியும் தமிழனத்தின்
துரோகிதான் என்பதில் மாறுப்பட்ட கருத்து கிடையாது..
மக்கள்செய்திமையம் 29.3.13 மாலை 6.30மணி
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமிழின துரோகி ஆற்காடு வீராசாமி
» பதில் அளிப்பாரா தமிழ் இன துரோகி கருணாநிதி
» கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்?
» கருணா ஒரு தமிழ் துரோகி! – மனைவியின் பரபரப்பு பேட்டி!
» தி மு க விற்கு ஏன் நாம் பாடம் புகட்ட வேண்டும் ? கலைஞர் கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்?
» பதில் அளிப்பாரா தமிழ் இன துரோகி கருணாநிதி
» கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்?
» கருணா ஒரு தமிழ் துரோகி! – மனைவியின் பரபரப்பு பேட்டி!
» தி மு க விற்கு ஏன் நாம் பாடம் புகட்ட வேண்டும் ? கலைஞர் கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|