TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால் எனக்கு தோல்வி.....!" - உருகும் கிருஷ்ணய்யர்!

Go down

"தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால் எனக்கு தோல்வி.....!" - உருகும் கிருஷ்ணய்யர்!  Empty "தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால் எனக்கு தோல்வி.....!" - உருகும் கிருஷ்ணய்யர்!

Post by அருள் Mon Dec 10, 2012 7:55 pm

வி.ஆர்.கிருஷ்ணய்யர்..இந்தியாவின்
மிக மூத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி.அன்றும் இன்றும் மனித உரிமையை
மட்டும் சுவாசிக்கும் நீதி தேவன்.நீதித்துறையில் மட்டுமில்லாமல்
அரசியல்,எழுத்து,சமூகம் என அனைத்து தடங்களிலும் தடம் பதித்த சமகாலத்தின்
முக்கிய ஆளுமை.

ஒரு காலத்தில் சிறையில் இருந்து, பின்னாளில் சிறைத் துறைக்கே அமைச்சர்
ஆனதோடு மட்டுமில்லாமல், பலரை சிறைக்கு அனுப்பும் நீதிபதியாகவும்
உயர்ந்தது,உலகிலே இவராக மட்டும் தான் இருப்பார்.

கடந்த மாதம் 98-வது பிறந்த நாளை கொண்டாடிய கிருஷ்ணய்யரை,ஓர் மழை ஓய்ந்த
மாலைப் பொழுதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அவரது
'சத்கமய'இல்லத்தில் சந்தித்தேன்.தொண்டு செய்து பழுத்த பழமாகி
விட்டார்.ஆனாலும் ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாகவும்,ஆழமாகவும்,அளவாகவும்
பதிலளித்தார்.

அவர் 'விகடனுக்காக' அளித்த சிறப்பு பேட்டி...

எப்படி இருக்கிறீர்கள்..நீங்கள் நினைத்திருந்த முதுமை வாய்த்திருக்கிறதா?"தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால் எனக்கு தோல்வி.....!" - உருகும் கிருஷ்ணய்யர்!  KRISHNA%20IYER%20in%20bed

"வயதாகி விட்டது.முதுமையின் காரணமாக பார்வை குன்றிப் போய்
இருக்கிறது.நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது.இருந்தாலும் உதவியாளர்களின்
கைகளைப் பிடித்து கொண்டு தினமும் அரை மணிநேரம் நடக்கிறேன்.கேட்கும் திறனை
வெகுவாக இழந்து விட்டேன்.முன்பு மாதிரி எழுத முடியவில்லை.நினைவுகளை
மீட்டெடுப்பதில் பெரும் யுத்தமே நடக்கிறது.

1980-ல் ஓய்வு பெற்ற பிறகு முழுவதுமாக பொது சேவையில் ஈடுபட்டேன்.ஓர்
எளிய‌வனின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்போது கூட நிறைய
அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு தலைவராக இருக்கிறேன்.உடல் தளர்ந்து
விட்டதால் முற்றிலுமாக பயணம் செய்வதை நிறுத்தி கொண்டேன்.

ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் இங்கிருந்தவாறே 'வீடியோ
கான்ஃபரன்சிங்'மூலம் உரை நிகழ்த்துகிறேன்.இன்றைக்கு காலையில் கூட 'நேஷனல்
ஸ்கூல் ஆஃப் லா' கல்லூரிக்காக ஒரு கட்டுரை எழுதி கொடுத்தேன்.

எனக்கு வயசு 98.ஆனால் நூறு நூல்களை எழுதி விட்டேன்.நான்
எதிர்பார்த்திருந்த முதுமை எனக்கு வாய்க்கவில்லை..அந்த வகையில் நான்
துரதிஷ்டசாலி..ஹா ஹா" என சிரித்து கொண்டே அவருக்கு எதிராக மிக பிரண்டமாக
பிரேம் செய்யப்பட்டிருந்த அவரது மனைவியின் புகைப்படத்தை வெறித்து பார்த்து
கொண்டிருந்தார்.

தினமும் மனைவியின் புகைப்படத்தோடு அரை மணி நேரத்திற்கு மேலாக பேசுவதாக அவரது உதவியாளர்கள் கூறினர்.

"தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால் எனக்கு தோல்வி.....!" - உருகும் கிருஷ்ணய்யர்!  KRISHNA%20IYER%20FAMILY

உங்களுடைய மனைவியை பற்றி....(கேள்வியை முடிக்கும் முன்னே)அவரது உதவியாளர் குறுக்கிட்டு, "வேண்டாம்..ப்ளீஸ்.பிறகு அவர் அழ ஆரம்பித்து விடுவார்!"என்றார்.

ஓ.கே.நீங்கள் அமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியில் சமீபமாக‌
பகிரங்க கொலை மிரட்டல்களும் அரசியல் கொலைகளும் அரங்கேறி
கொண்டிருக்கிறதே.உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்?'


தோழர்கள் கெட்டுப் போய் விட்டார்கள்.நம்பூதிரி பாட் போன்ற தோழ‌ர்கள்
வாழ்ந்த மண்ணிலா இந்த ரத்த கறை படிய வேண்டும்? எளிமையும், தியாகமும்,
நேர்மையும், நாணயமும் எல்லாம் எங்கே போனது?

கொலை..அடிதடி..ரத்தம்..மிரட்டல்...(குரல் தழுதழுக்கிறது..விழியோரம்
கண்ணீர் கசிகிறது)இன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் நடத்தை மிகவும் மோசமாக
இருக்கிறது.மிகவும் வருத்தமாக இருக்கிறது.மார்க்ஸ் இருந்தால் நொந்து
கொள்வார்.ஆனாலும் சிலர் அத்திப் பூ மாதிரி ஆங்காங்கே பூத்து கொண்டு தான்
இருக்கிறார்கள்!''

இந்தியாவில் கொஞ்சம் நம்பகமான துறை என்றால் நீதித் துறையை தான்
சொல்கிறார்கள்.ஆனால் நீதி நேர்மையை நிலைநாட்ட வேண்டிய‌ நீதிபதிகளும்
லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் நடைபெறுகிறதே?


"(சட்டென கோபமாக) நீதிபதிகள் ஒரு போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
அல்ல.பொதுமக்களின் அபரிதமான நம்பிக்கையும்,சமூக பொறுப்பையும்,அம்பேத்கர்
சட்டத்தின் மீது வைத்திருந்த விசுவாசத்தையும் உணர்ந்து நேர்மையாக நடந்து
கொள்ள வேண்டும்.பணத்திற்காகவும், பதவிக்காகவும் தன்நிலை கெடுதலை ஒரு
போதும் ஏற்று கொள்ளமுடியாது.அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்!"

சாமன்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டமும் நீதிமன்றமும்,இந்தியா
குடியரசு ஆகி 62 ஆண்டுகள் ஆன பிறகும் ஏழை எளியோருக்கு இன்னமும் எட்டா
கனியாகவே இருக்கிறதே?


"மருத்துவமனையும் கல்வி நிலையத்தையும் பார்த்து பயந்த மக்கள்,இன்றைக்கு
கோர்ட்டையும் பார்த்து பயப்படுகிறார்கள்.ஒரு சின்ன வழக்கு தொடுப்பதில்
ஆரம்பித்து மனு போடுவது,வக்கீல் கட்டணம்,தீர்ப்பு வரும் வரை..நினைத்து
பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

ஐகோர்ட்,சுப்ரீம் கோர்ட்டின் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.ஒரு
சாதாரண மனிதனால் சமாளிக்க முடியாத சுமையாக இருக்கிறது.அதுவும் சுப்ரீம்
கோர்ட் இந்தியாவின் 60 சதவீதற்கும் அதிகமான மக்களுக்கு எட்டா கனியாகவே
இருக்கிறது.

பொதுமக்களுக்கு பயன் தரக் கூடிய நீதித்துறையை அணுகுவதில் ஒரு போதும் பணம்
தடையாக இருக்க கூடாது.இது வேதனையான விஷயம்.இவை முற்றிலும் மாற்றப்பட
வேண்டும்!''

இந்தியாவில் தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான
வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.பேரன் காலத்தில் வழக்கு போட்டால்,அவன்
தாத்தா ஆன பிறகும் கூட தீர்ப்பு வராமல் இருக்கிறதே? இதற்காக‌ என்ன
செய்யலாம்?


"ஒரு பக்கம் கோர்ட்,கேஸ் எல்லாம் காஸ்ட்லியாக இருந்தாலும் மறுபக்கம்
இப்படியொரு தேக்கநிலை..மந்த நிலை!வெகு ஜனம் கோர்ட் பக்கமே
வருவதில்லை.இன்னும் சில‌ர் வழக்கு மேல் வழக்கு போட்டு கொண்டே இருப்பது,மனு
மேல் மனு போட்டு இழுத்தடித்து கொண்டே இருப்பது என திட்டமிட்டு வேலை
செய்கிறார்கள்.சில நேரங்களில் சட்டமும் நீதிபதியின் மெத்தன போக்கும்
அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இதனால் நீங்கள் சொன்ன மாதிரி தான் தீர்ப்பு வருகிறது.பல நேரங்களில் வழக்கு
போட்டவர் இறந்தும் போயிருக்கிறார்.நமது அரசியல் கட்டமைப்பு முற்றிலுமாக
ஊழலால் ஸ்தம்பித்து கிடக்கிறது.வன்முறை பலுகி பெருகி விட்டது.மோசமான
பாலியல் சித்ரவதைகள் நடந்த வண்ணமாகவே இருக்கிறது.



இன்னொரு பக்கம் விவாகரத்து வழக்குகளால் மூர்ச்சை நிலை
ஏற்பட்டிருக்கிறது.இதனை எல்லாம் முறையாக ஆராய்ந்து நீதி துறையில் புதிய
முறையில் வழக்கை விசாரிப்பது,கிளை நீதிமன்றங்கள் என பல உருவாக்கப்பட
வேண்டும்"

குற்றமே செய்யாத அப்பாவிக்கு பெரிய தண்டனை
நிறைவேற்றப்படுகிறது.குற்றங்களை மட்டுமே செய்யும்
அரசியல்வாதிகளும்,சமூகத்தில் செல்வாக்கானவர்களும் எப்படியோ தண்டனைகளில்
இருந்து தப்பி விடுகிறார்கள்.இத்தகைய‌ முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?


"இது மிகவும் முக்கியமான கேள்வி.என்னுடைய வாழ்க்கையிலே நிறைய
பார்த்திருக்கிறேன்.குற்றம் செய்தவன் படடோபமாக நிரபராதி என விடுதலை ஆகி
இருக்கிறான்.ஒரு பாவமும் செய்யாத நூற்றுக்கு நூறு வீதம் குற்றமற்றவர்கள்
தூக்கிலிடப்பட்டுள்ளார்கள்.என் கண் எதிரே கதறி கதறி
அழுதிருக்கிறார்கள்.ஆனால் நீதிபதிகள் அவர்களின் குரலுக்கு
செவிசாய்க்கவில்லை.
"தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால் எனக்கு தோல்வி.....!" - உருகும் கிருஷ்ணய்யர்!  KRISHNA%20IYER%20with%20kabutharஅவர்களுக்கு
இன்றும் நான் ரத்த கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன்.'இரு தரப்பையும்
நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் என்பதால் உண்மைதான் வெளியே
வந்திருக்கிறது.குற்றவாளி தான் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என ஒரு போதும்
எண்ணி விடாதீர்கள்'என புரட்சியாளர் லெனின் சொன்னதுதான் என்னுடைய
பதிலும்!''

மும்பை தாக்குதல் சம்பவத்தில் நிறைய சந்தேகங்கள் இன்னமும் தொக்கி
நிற்பதாக பலர் சொல்கிறார்கள்.அதற்குள் ரகசியமாக அஜ்மல் கசாப் தான்
குற்றவாளி என சொல்லி,அவரை திடீரென தூக்கில் போட்டு விட்டார்களே? அது
குறித்து உங்கள் கருத்து என்ன?


"உயிர் புனிதமானது.காந்தி சொன்னது போல 'உயிரை பறிக்கும் உரிமை மனிதனுக்கு
இல்லை' என்பதில் உறுதியாக இருக்கிறேன்.இந்த கேள்விக்கு விரிவான பதிலை
விரைவில் எழுதுகிறேன்.நிச்சயம் என்னுடைய பதிலுக்கு ஆதரவு குரலும் விமர்சன
அலையும் பெருகும்!"

'ராஜீவ் கொலையில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என
பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவரும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி
இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும்,பல நீதிபதிகளுக்கும்,மனித
உரிமை ஆர்வலர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.ஆனாலும்
அவர்களுக்கும் எப்போது தூக்கு தண்டனை வழங்கலாம் என மத்திய அரசு துடிப்பது
போல தெரிகிறதே?


"எனக்கும் பல முறை கடிதம் எழுதி இருக்கிறார்கள்.அவர்கள் தரப்பில் இருந்து
வந்து என்னை சந்தித்து இருக்கிறார்கள்.நானும் பல நேரங்களில் அவர்களுக்கு
வழி காட்டி இருக்கிறேன்.சமீபத்தில் கூட ஒரு சின்ன 'லீடு'கொடுத்தேன்.

ராஜீவ் காந்தியின் மனைவியின் பெயரென்ன?(சோனியா காந்தி என்றதும்) அவரே
தெளிவாக‌ சொல்லி விட்டார்.'அவர்களை தண்டிப்பதால் என்னுடைய கணவர்
திரும்பவும் வரமாட்டார் என்று. ராஜீவ் காந்தியை யார்
கொன்றார்களோ,அவர்களுக்கு நான் எதிரானவன்.

மூன்று பேரும் நீண்ட காலம் சிறையில் இருந்து விட்டார்கள்.அவர்களை இனியும்
தண்டிப்பது சரியல்ல.தூக்கு தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்
என்பதில் உறுதியாக இருக்கிறேன்.தூக்கு தண்டனையை ஒழிக்காமல் செத்து போனால்
நான் தோற்றுப் போனவனாக உணர்வேன்!"

முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான நீங்களே நீண்ட காலமாக
தொடர்ந்து தூக்கு தண்டனைக்காக போராடி வருகிறீர்கள்.ஆனாலும் தூக்கு
தண்டனையை ஒழிக்க முடியலை.இதற்கு தடையாக இருப்பது என்ன?


"மனிதர்களின் மனங்கள் தான்.சமீபத்தில் கூட ஐநா சபையில் தூக்கு தண்டனை
குறித்த விவாதத்தில் இந்தியா தூக்கு தண்டனை வேண்டும் என
வாக்களித்திருப்பதாக செய்திகளில் பார்த்தேன்.உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட
நாடுகளில் தூக்கு தண்டனை எனும் கொடூரத்தை நீக்கி இருக்கும்
போது,அஹிம்சையை போதித்த காந்தியின் தேசத்தில் இப்படியொரு அவல நிலை
நீடிப்பது வருத்தமாக இருக்கிறது.இது காந்திக்கு இழைக்கப்படும் மாபெரும்
அவமானம்!"

2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை
மீறல்களும் போர்க்குற்றங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது'என ஐநா சபையே
ஒப்புக் கொள்கிறது.ஆனால் 'இனப்படுகொலை'செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு
எந்த தண்டனையும் வழங்க முடியவில்லையே?


"இலங்கையில் ஆயிர கணக்கான மனித உயிர்கள் குண்டு மழைக்கு பறிபோனதை
நினைத்தால் இன்னும் மனம் பதைக்கிறது.(சட்டென கோபப்பட்டு)பௌத்த சித்தாந்தம்
பேசும் தேசத்தில் யுத்தமா....? போரின் துயரம் கொடுமையானது.என் இதயம்
ரணமாகி போன‌து.

1980களில் நம்முடைய ராணுவம் அங்கே போனதும் தவறு.இப்போது அந்த நாட்டு
ராணுவத்தை நம்முடைய நாட்டில் பயிற்சி அளிப்பதும் தவறு.இந்தியா உலக
அரங்கில் மனித உரிமை மீறலுக்காக குரல் கொடுக்க வேண்டும்.குற்றம் யார்
செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்!"

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?

"(சற்றும் யோசிக்காமல்) மேற்குலகில் புரட்சிகரமான சிந்தனைகளை மேடையேற்றிய
புரட்சி எழுத்தாளர் பெர்னாட்ஷாவையும்,இந்தியாவில் சட்டமேதை டாக்டர்
அம்பேத்கரையும் பிடிக்கும்!"

ஆனால் பெரும்பாலான‌ மக்கள் அம்பேத்கரை இன்னமும் தலித்
தலைவராகத்தானே பார்க்கிறார்கள்.முற்போக்கு கருத்துகளை பேசும்
அரசியல்வாதிகள் கூட அம்பேத்கரின் மீது தீண்டாமையை கடைப்பிடிக்கிறார்களே?


"அது தவறான பார்வை.வன்மையாக கண்டிக்கிறேன்.டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின்
மிக சிறந்த சிந்தனையாளர்.உலகின் பார்வையில் மிக சிறந்த சட்ட நூல்களில்
ஒன்றாக‌ கொண்டாடப்படும் இந்திய சட்டத்தை பல்வேறு இன்னல்களுக்கும்
மறுதலிப்புகளுக்கும் மத்தியில் இயற்றியவர் சட்டமேதை அம்பேத்கர்.அவருடைய
பெருமைகளையும், சிற‌ப்புகளையும், இந்நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகளையும்
ஜீரணிக்க முடியாதவர்கள்,அவரை தூற்றுகிறார்கள்.அம்பேத்கரை உலகமே
கொண்டாடுகிறது..நாம் கொண்டாட வேண்டாமா?"

ஒரு அரசியல்வாதி என்ற முறையில் சொல்லுங்கள்..உங்களுக்கு பிடித்த
அரசியல் தலைவர் யார்? இப்போது இருப்பவர்களில் யாரை நேர்மையானவர் என்று
நினைக்கிறீர்கள்?


"ஜவஹர்லால் நேரு.அவருக்கு பிறகு வேறு யாரும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இதனை சொல்வதற்கு எனக்கு வருத்தமாக இருக்கிறது!"

முல்லை பெரியாறு விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு ஆச்சர்யமாக இருக்கிறதே?

"கேரளா, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டும்.நான் அமைச்சராக இருந்த
போதும் இதையே தான் சொன்னேன்.இப்போதும் சொல்கிறேன்.தமிழகத்திடம் இருந்து
எத்தனையோ வளங்களை கேரளா பெறுகிறது.அதனால் நீர் வளத்தை தமிழகத்திற்கு வழங்க
வேண்டும்.ஏனென்றால் நாம் அனைவரும் சகோதரர்கள்..நண்பர்கள்.கேரள அரசு
தமிழகத்திற்கு எந்த இடைஞ்சலும் செய்ய கூடாது.ஓகே.போதும். பேட்டியை
முடித்து கொள்ளலாமா?

கடைசியாக ஒரே ஒரு கேள்வி.உண்மையை சொல்லுங்கள்.உங்களுக்கு சாதி பிடிக்குமா?

"பிடிக்காது.நான் சாதி மத இனம் மொழி என எல்லா பேதங்களுக்கும் எதிரானவன்!"

பிறகு ஏன் இன்னமும் உங்கள் பெயருக்கு பின்னால் சாதியை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?

"ஹா..ஹா..(சத்தமாக சிரித்து விட்டு..நாக்கை மடித்து கன்னத்தை
கிள்ளுகிறார்) இந்த கேள்விக்கு எத்தனையோ முறை பதில் சொல்லி
விட்டேன்.எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லை.வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்று
சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும்.

கிருஷ்ணன் என்று சொன்னால் உங்களுக்கு தெரியுமா? என் அப்பா
அம்மா வைத்த பெயர் என்பதால்,நானும் அப்படியே விட்டு விட்டேன்.வெறும்
அடையாளமே தவிர,சாதி வெறி இல்லை.!"என சிரித்து கொண்டே கைகளை உயர்த்தி
டாட்டா காட்டினார் அந்த 'பெரியார்!'

-இரா.வினோத்,


படங்கள்:
ந.வசந்தகுமார்
நன்றி:http://news.vikatan.com/?nid=11562#cmt241
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தூக்கு தண்டனையை குறைக்க சட்டசபையில் அதிரடி தீர்மானம்!
» தூக்கு தண்டனையை எதிர்த்து மூவரையும் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்! பழ. நெடுமாறன்
» தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை : முதல்வர் ஜெயலலிதா
» செத்து செத்து விளையாடுறது இது தான் போல ....
» மைனஸ் டிகிரி குளிரிலும் உருகும் பனிப்பாறைகள்: ஆராய்ச்சியாளர்கள் கவலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum