TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அவசரகால கதவை திறந்து குதித்த பயணி : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Go down

அவசரகால கதவை திறந்து குதித்த பயணி : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு Empty அவசரகால கதவை திறந்து குதித்த பயணி : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Post by logu Tue May 15, 2012 7:18 am

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், பயணி ஒருவர் அவசர கால
கதவை திறந்து, கீழே குதித்து ஓடுபாதையில் ஓட முயன்ற சம்பவம், சென்னை விமான
நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து, நேற்று காலை 5.45 மணிக்கு ஏர்-
இந்தியா பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. விமானத்தில், 145 பேர்
பயணித்தனர். விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கி, பயணிகளை
இறக்கிவிட தயாரானது. பயணிகளும் எழுந்து வரிசையில் நின்றனர். அப்போது ஒரு
பயணி, விமானத்தின் அவசர கால வழியை வேகமாக திறந்தார்.

எச்சரிக்கை :
இதை பார்த்ததும் சக பயணிகளும், விமானத்தில் இருந்த பணியாளர்களும் அவரை அந்த
வழியை திறக்க வேண்டாம் என்று எச்சரித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத
அப்பயணி, அவசர கால கதவை திறந்து விமானத்தில் 15 அடி உயரத்தில் இருந்து,
தரையில் குதித்து ஓடுபாதையை நோக்கி ஓடினார். இது குறித்து, தலைமை விமானி
ஏர் -இந்தியா அதிகாரிகளுக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்
உடனடியாக தகவல் கொடுத்தார். மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் அந்த
நபரை துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர் திருச்சியைச் சேர்ந்த கமல்பாஷா,
27 என்பதும், இயந்திரவியல் பொறியாளர் என்பதும் தெரியவந்தது. தொடர்
விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். மனநிலை
பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை
உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

புதிர்
: கடந்த நான்கு மாதங்களுக்கு முன், துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில்
கமல்பாஷா வேலைக்கு சேர்ந்துள்ளார். பணி பிடிக்காததால், சொந்த ஊருக்கு
திரும்ப திட்டமிட்டார். இது குறித்து, கடந்த மாதமே வீட்டிற்கும் தகவல்
தெரிவித்துள்ளார். ஆனால், விமானத்தில் இருந்து அவசர கால கதவை திறந்து
இறங்கி ஓடியது ஏன் என்பது, புதிராகவே உள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட
முயன்றாரா அல்லது கடத்தல் பொருட்களை ஏதேனும் கொண்டு வந்தாரா என்பது
குறித்து விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாத தடுப்பு பிரிவு, கியூ
பிராஞ்ச், உளவுத்துறை போலீசார் இவரிடம் விசாரித்தனர். சுங்கவரித்துறை
அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். பின்னர், சென்னை விமான நிலைய போலீசாரிடம்
இவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போலீசார், கமல்பாஷாவிடம் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum