TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இதயத்தில் ஏற்படும் ஓட்டைகள் !

2 posters

Go down

இதயத்தில் ஏற்படும் ஓட்டைகள் !  Empty இதயத்தில் ஏற்படும் ஓட்டைகள் !

Post by ஜனனி Wed Jan 18, 2012 8:35 am






[You must be registered and logged in to see this image.]குழந்தைகளுக்கு
இதயத்தில் ஓட்டை அல்லது பிறவியிலேயே இதயத்தில் கோளாறு என்ற செய்தியை
மருத்துவர் மூலமாகத் தெரிந்து கொண்ட பெற்றோர்கள் தலையில் இடி விழுந்தது
போல துடித்துப் போவார்கள்.

ஆனால் இதயத்தில் ஏற்படும் பெரும்பாலான ஓட்டைகள் தாமாகவே அறுவை சிகிச்சை ஏதுமின்றி அடைந்துவிடும் என்பதுதான் உண்மை.

இதயத்தில் பழுது இருப்பதை எவ்வாறு அறியலாம்?

குழந்தை
அழும்போது உடல் நீல நிறத்தில் மாறும்போதும், குழந்தைக்கு அடிக்கடி சளி
பிடிப்பதன் மூலமும், குழந் தை பாலை தாயிடம் இருந்து உறிஞ்சிக் குடிக்க
இயலாது போகும்போதும் இதயத்தில் அல்லது நுரையீரலில் வியாதி இருக்கிறதா
என்பதை சிறப்புப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள்
சாதாரணமாக உணவு அருந்தலாம். சாதாரணமாக விளையாடலாம். சாதாரணமாக மற்ற
குழந்தைக¬ ளப் போலவே எல்லாம் செய்யலாம். அவர்களது வளர்ச்சியும், உடல் எடை,
பருமன் போன்றவையும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்றால் சில முன்
எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

என்னென்ன நடவடிக்கைகள்?!

1. குழந்தைக்கு எப்போதும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே கொடுக்க வேண்டும்.

2. சளி,
காய்ச்சல் போன்றவற்றின் முதல் அறிகுறிகளான மூக்கில் நீர் வடிதல், தும்மல்,
இருமல் போன்றவை ஏற்ப ட்ட உடனே மருத்துவரை அணுகி அது சரியாகும் வரை,
மருந்து, மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்படி கொடுக்க வேண்டும்.

3.
எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தை குளிரில் செல்லக் கூடாது. அவ்வாறு
கண்டிப்பாக செல்ல வேண்டிய நிலையில் கம்பளி, சாக்ஸ், குல்லா அணிவித்து
குளிர் தாக்காமல், மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண் டும்.
முடிந்தவரை குழந்தை தாயின் அரவணைப்பிலும் கதகதப்பிலும் பராமரிக்கப்பட
வேண்டும்.

4.
அனைத்து தடுப்பூசிகளையும் சரியான நேரத்தில் போட வேண்டும். இது குழந்தையின்
வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகுந்த அவசியம். நோய்த்
தாக்குதல் இல்லாமல் இருந்தால் உடல் மற்றும் மன வளர்ச்சி சரியானபடி
இருக்கும். அப்போதுதான் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதை குழந்தை
சாதாரணமாக எதிர்கொள்ள முடியும்.

5.
திடீரென்று குழந்தை நோய்வாய்ப்பட்டாலோ உடல் நீல நிறமாக மாறினாலோ, வாந்தி
எடுத்தாலோ, முகமோ, பாதமோ அல்லது இரண்டும் சேர்ந்து வீங்கினாலோ, லேசான
காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

6.
குழந்தை சிறுநீர் அதிகம் போக வேண்டி மாத்திரைகள் உட்கொண்டு வந்தால்,
அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி தேவையான அளவு தாராளமாக, பால்,
பழச்சாறுகள், தக்காளி, வாழைப்பழம், இளநீர் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த
நீர் கொடுக்க வேண்டும்.

7.
தாய்ப்பால் ஒரு குழந்தையின் பிறப்புரிமை. அது கிடைக்காதபோது மருத்துவரின்
ஆலோசனைப்படி மாட்டு ப்பாலோ அல்லது நீர் சேர்த்த எருமைப்பாலோ மற்றும் பால்
பவுடர் போன்றவற்றினை கொடுக்கலாம்.

8.
வளர்ந்த குழந்தைகளுக்கு, சாதாரண அளவில் சாப்பிட இயலாதபோது, அடிக்கடி
குறைந்த அளவில் உணவு மற்றும் திரவங்கள் கொடுக்க வேண்டும். மிகக் குறைந்த
அளவே சாப்பிடும் குழந்தைகளுக்கு வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை உணவோடு
சேர்த்துக் கொடுத்தால் உடலுக்குத் தேவையான கலோரிகள் குறைந்த அளவு உணவிலேயே
கிடைக்கும்.

9.
குழந்தை ஒரு இட்லி மட்டும்தான் சாப்பிடும் என்று இருந்தால் அதனுடன் ஒரு
ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், மூன்று இட்லி சாப்பிட்ட
சக்தி கிடைக்கும். குறைந்த அளவில் சாப்பிட்டாலும் நிறைந்த சத்தும், நிறைய
கலோரிகளும் கிடைக்கும் வண்ணம் குழந்தைகளுக்கு ருசியான பிடித்த உணவாகக்
கொடுக்க வேண்டும்.

10.
குழந்தைகளுக்கு உப்பைக் குறைவாக கொடுக்க மருத்துவர் பரிந்துரைத்தால் உணவு
தயாரிக்கும்போது சாதாரண அளவிலே உப்பு போட வேண்டும். ஆனால் அதிக உப்பு
சேர்த்துள்ள உணவுப் பண்டங்களான ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றையும், நூடுல்ஸ்,
பேக்கரி தயாரிப்புகள், எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள், அப்பளம்,
ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

11.
உப்பு அறவே இல்லாத பொருட்களை சாப்பிடச் சொன்னால், உணவுக்கு சுவை ஊட்ட
மிளகு, வெங்காயம், பூ ண்டு, இஞ்சி, கொத்துமல்லி, எலுமிச்சை போன்ற பொருட்களை
சேர்த்து சுவையாக தயாரித்துக் கொடுக்கலாம்.

12.
சாதாரணமாக இதயத்தில் சிறிய அளவு குறைபாடுள்ள குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு
அனுப்பலாம். பள்ளி வீட்டிற்கு அருகே இருப்பது நல்லது. ஆசிரியரிடம்
குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி வைப்பது மிகுந்த நன்மை பயக்கும்.
நீண்ட தொலைவுப் பயணம் செய்து பள்ளிக்குச் செல்லும்போது பயணக் களைப்பின்
காரணமாக குழந்தைக்கு பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம்.

13.
குழந்தையை சாதாரணமாக விளையாட அனுமதியுங்கள். இதயத்தில் சிறிய அளவு குறைபாடு
உள்ள குழந் தைக்கு எந்தத் தொந்தரவும் வராது. பள்ளியில் விளையாட்டுப்
போட்டிகளில் கலந்து கொள்ள மருத்துவரின் அனுமதி அவசியம். சாதாரணமாக குழந்தை
தனக்கு மூச்சு வாங்குகிறது என்று சொல்லும்போது விளையாடுவதை நிறுத்த
கற்றுக் கொடுக்க வேண்டும்.

14.
எப்போதுமே குழந்தையை மிக அதிக பாதுகாப்பு வளையத்தில் வைப்பது தவறு. அவன்
மற்ற குழந்தைகளைப் போல தாராளமாக வளர அனுமதியுங்கள். இது தனது உடல்
வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் நோயை ஏற்றுக்கொள்வதும், நோயுடன்
வாழ்வதற்கு மிகவும் அவசியமான மனத் திடத்தைத் தரும் என்கிறார் பாண்டிச்சேரி
செவிலியர் கண்காணிப்பாளர் புஷ்பா ஞானமுத்து.

15.
குழந்தை தனது வியாதியைப் பற்றி கேட்கும்போது தெளிவாகவும் பயப்படுத்தாமலும்
சொல்லுங்கள். அல்லது அதைப்பற்றி மருத்துவர் என்ன சொல்கிறாரோ, அதை
அவனுக்குப் புரியும் விதமாக சொல்வதன் மூலம் அவனுக்கு தாழ்வு மனப்பான்மையோ,
பயமோ வராமல் தடுக்கலாம்.

16.
மனதைத் தளர விடாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல் கடவுளிடம் நம்பிக்கை வைத்து
அதை சரி செய்ய அதை என்ன செய்ய முடியும் என்பதை மருத்துவர் மூலம் ஆலோசித்து
அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும். சில வியாதிகளுக்கு குறிப்பிட்ட எடை
வந்தவுடன் அறுவை சிகிச்சையும், சில சமயம் குறிப்பிட்ட வயது வந்தவுடன்
அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். தமிழக அரசு இலவசக் காப்பீட்டுத்
திட்டத்தின் மூலமாகவும் இளம் சிறார் அறுவை சிகிச்சைத் திட்டத்தின்
மூலமாகவும் ணிஷிமி திட்டம் இருந்தால் அதன் மூலமாகவும், இன்ஸூரன்ஸ் திட் டம்
உள்ளவர்கள் அதன் மூலமாகவும்,வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் பெங்களூரில்
உள்ள ஸ்ரீ சத்திய சாய் மருத்துவமனைகளிலோ, அல்லது ஆந்திரப் பிரதேசத்தில்
உள்ள புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய் மருத்து வமனைகளிலோ, இலவசமாக அறுவை
சிகிச்சை செய்து கொள்ளலாம். அமிர்தா மருத்துவமனை கொச்சியிலும், தி
ருவனந்தபுரம் சித்திரைத் திருநாள் மருத்துவமனைகளிலும், குறைந்த கட்டணத்தில்
சிகிச்சை பெறலாம்.

7.
குழந்தைக்குப் பல்வலி, பல்சொத்தைக்காக, சிறு மற்றும் பெரு அறுவை சிகிச்சை
செய்யும்போதும் மருத்துவரிடம் முன்னதாகவே, குழந்தையின் பிரச்னை பற்றிக்
கூறினால் அவர் தகுந்த முன் ஏற்பாடுகளையும் சில சிறப்பு மருந்து களையும்
சிகிச்சையின்போது கொடுப்பார்.

18.
குழந்தைகளுக்கு அதிக இனிப்பு, சாக்லெட் போன்றவற்றைக் கொடுப்பது, பல்
சொத்தை, டான்சில் போன்றவற்றை உண்டாக்கும் என்பதால் அதைத் தவிர்ப்பது மிக
நல்லது.

19.
வரும் முன் காத்தல் அவசியம் என்பதால் இரத்த சம்பந்தம் உள்ள சொந்தங்களை
திருமணம் செய்து கொள்ள £மல் இருப்பதும் மிகுந்த நன்மை தரும்.

20. நவீன
மருத்துவத்தின் மூலம், தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பிறந்த ஒரு சில
மணி நேரங்களிலேயே, பிறந்த சில நாட்களிலேயே இதய அறுவை சிகிச்சை என்று
செய்திகளில் வருவதை பெரிதுபடுத்த வேண்டாம். பெ ரும்பாலான இதய நோய்களுக்கு
12 வயதிற்கு மேல் சிகிச்சை செய்வதுதான் வழக்கம். உங்கள் மருத்துவர் எப்போது
செய்வது என முடிவு செய்வார்.

நாட்டு
வைத்தியம், சித்த வைத்தியம், ஆயுர்வேதம் போன்ற மற்ற மாற்றுமுறை சிகிச்சைகளை
மேற்கொள்பவர்களும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வழக்கமான சிகிச்சை
முறைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடரலாம்.

அறுவை
சிகிச்சைக்குப் பிறகு மருந்து மாத்திரைகள் அநேகமாக நீண்ட நாட்களுக்குத்
தேவைப்படாது. எனவே, அதன்பிறகு குழந்தையை வழக்கமான எல்லா குழந்தைகள் போலவே
வளருங்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இதயத்தில் ஏற்படும் ஓட்டைகள் !  Empty Re: இதயத்தில் ஏற்படும் ஓட்டைகள் !

Post by அருள் Fri Feb 07, 2014 3:22 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum