TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

Go down

மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Empty மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி

Post by ஜனனி Sun Oct 23, 2011 7:47 am


மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Jaya





புதுதில்லி,
அக்.22: இந்தியக் குடியரசின் கூட்டாட்சி அமைப்பில் மத்திய அரசுக்கு
இணையானவை மாநிலங்கள் என்ற நிலைமையை மாற்றி, மத்திய அரசின் கட்டளைக்கும்
கருணைக்கும் காத்திருக்க வேண்டிய முனிசிபல் கார்ப்பரேஷன்கள்தான் மாநில
அரசுகள் என்ற நிலைமையை ஏற்படுத்தி வருகிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு
என்று கடுமையாகச் சாடினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.புதுதில்லியில்
நடைபெறும் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்துக்கான உரையில் இந்தக்
குற்றச்சாட்டை அவர் பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.""மாநில
அரசுகளும் மத்திய அரசும் இணைந்த கூட்டாட்சிதான் இந்தியக் குடியரசு என்ற
நிலைமையை மத்திய அரசு மாற்றி வருகிறது. வரிகளை வசூலிக்கும் அதிகாரம் மத்திய
அரசிடமும், வசதிகளைச் செய்து தர வேண்டிய கடமை மாநில அரசுகளிடமும்
பகிர்ந்து தரப்படுகிறது.நாடு முழுவதற்கும் பொதுவான சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டம் போன்றவை மூலம் மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.""வகுப்புக்
கலவரங்களை தடுப்பதற்கான மசோதா'' என்ற பெயரில் மாநில அரசுகளைப்
பதவியிலிருந்து அகற்றவும், மத்திய அரசின் நேரடி ஆட்சியைப் புகுத்தவும்
அரசியல் சட்டத்தையே திருத்தும் அளவுக்கு கூட்டாட்சித் தத்துவம்
சிதைக்கப்படுகிறது.மக்கள் தொகையும் உயர்ந்து, சமையல் கேஸ்
கிடைப்பதும் தாமதப்பட்டு, கெரசின் பயன்பாடும் மிகுந்துள்ள இந்த வேளையில்
ஏற்கெனவே ஒதுக்கிய அளவாவது மாநிலத்துக்கு கெரசினைத் தாருங்கள்
என்பதற்குக்கூட மத்திய அரசிடம் கெஞ்சி, கையேந்தி பிச்சை கேட்க
வேண்டியிருக்கிறது. அப்படிக் கேட்டும்கூட அந்தக் கோரிக்கையும்
அலட்சியப்படுத்தப்படுகிறது.மின்சாரப் பற்றாக்குறையால் மாநிலம்
தத்தளிக்கும்போது பொதுத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தைத் தருமாறு
கேட்டும்கூட மத்திய அரசு கேளாச் செவியுடன் வாளாவிருக்கிறது'' என்று
உதாரணங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார் ஜெயலலிதா.இந்த தேசிய வளர்ச்சி
மன்றக் கூட்டமே வெறும் வருடாந்திரச் சடங்கு, எதையுமே நடைமுறைப்படுத்தாமல்
பேசிமட்டும் கலைவதற்கான கூட்டம் என்ற நிலைமையே நீடிக்கிறது. மாநில அரசுகள்
கூறும் யோசனைகள், முன்வைக்கும் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றன.மாநில
அரசுகளை மத்திய அரசு தனக்குச் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும், ஆனால்
அவற்றை அரசுகளாகக் கூட கருதி மத்திய அரசு செயல்படுவதில்லை. அவையெல்லாம் ஏதோ
தனக்குக் கட்டுப்பட்ட, ""கெüரவம் மிக்க முனிசிபல் கார்ப்பரேஷன்கள்'' என்ற
தோரணையிலேயே மத்திய அரசு நடத்துகிறது.நதி நீர்ப் பகிர்வானாலும்,
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வானாலும்,
கெரசின் ஒதுக்கீடானாலும், சிறப்பு நிதி கோரிக்கையானாலும், மின்சாரப்
பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மத்திய பொதுத்
தொகுப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்திலிருந்து கூடுதலாக ஒதுக்கக்
கோரினாலும், இலங்கைக்கு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச்
சென்று சுடப்பட்டு மாளும் தமிழக மீனவர் பிரச்னையானாலும் மத்திய அரசு
தொடர்ந்து அலட்சியமாகவே நடந்துகொள்கிறது. விலைவாசி உயர்ந்தாலும்
இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவும் கடமை
மாநில அரசுகளுக்கு விதிக்கப்படுகிறது.விலைவாசி உயர்வு, வேலையில்லா
திண்டாட்டம், தொழில், வர்த்தகத்துறைகளில் பிரச்னை, விவசாயத்தில் ஏற்படும்
சிக்கல்கள் போன்றவற்றை மாநில அரசுகள்தான் தீர்க்க வேண்டும்.
மாநிலங்கள் என்ன மாநகராட்சிகளா? - மத்திய அரசுக்கு ஜெயலலிதா கேள்வி Paneer




புது தில்லி விஞ்ஞான பவனில் தேசிய வளர்ச்சி
மன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில்
கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். முதல்வர்
ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை வலது பக்கம் உள்ளது.


உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தை மாநில அரசுகள்தான்
பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்குத் தேவைப்படும் நிதியை தான்
வசூலிக்கும் வருவாயிலிருந்து மாநில அரசே பகிர்ந்து தர வேண்டும்.கல்வி,வேலைவாய்ப்பு,
சுகாதாரம், அடித்தளக் கட்டமைப்பு போன்றவற்றை மாநில அரசுகள்தான் உருவாக்க
வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமை
மாநில அரசுகளுக்கும் வரி வசூலித்து அந்தத் தொகையை மனம்போன போக்கில்
ஒதுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு என்ற வகையில் கூட்டாட்சித் தத்துவம்
திரிக்கப்படுகிறது.விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி
குறைந்து வறுமைக்கோட்டுக்கும் கீழே தள்ளப்படுகின்றனர்; ஆனால் அப்படி
விலைவாசி உயரக் காரணமாக உள்ள பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை நிர்ணயம்
போன்றவற்றைக்கூட மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் விட்டுவிட்டு
விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் கடமை என்று உபதேசம்
செய்கிறது.சாமான்ய மனிதனின் பிரச்னைகளைப் பற்றி தனக்கு ஏதும் தெரியாது, அக்கறை இல்லை என்பதை மத்திய அரசு தொடர்ந்து பறைசாற்றி வருகிறது.ஜனநாயக விரோத, பாசிச போக்கு:
மத்திய அரசு சமீப காலமாகக் கொண்டுவர நினைக்கும் சட்டங்களும் திட்டங்களும்
அதன் ஜனநாயக விரோதப் போக்கையும் பாசிச மனப்பான்மையையுமே காட்டுகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் எப்படிச் செல்ல வேண்டும் என்கிற திசையைத்
தொலைத்துவிட்டு, மக்களுடைய கோபத்தைச் சந்திக்கும் நிலைமைக்கு மாநில
அரசுகளைத் தள்ளிவிட்டிருக்கிறது. இந்த நிலைமை மாறிவிடும் என்று
உளப்பூர்வமாக நம்புகிறேன். ஏழைகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் உதவ நாம்
பொறுப்புடன் கடமையாற்றும் காலம் உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.காங்கிரஸ் அல்லாத அரசுகளுக்கு தண்டனை:
காங்கிரஸ் கட்சி ஆளாத மாநிலங்களுக்கு தண்டனை தர ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசு தீவிரமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆளாத
மாநிலங்களில் வசிப்பவர்கள்கூட இந்தியர்கள்தான் என்பதை இந்த அரசு
புரிந்துகொள்ளவில்லை என்றே கருதுகிறேன். தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி
வேண்டும் என்று பல இடங்களில் பல தருணங்களில் கேட்டும்கூட தமிழ்நாட்டுக்கு
இன்னமும் நிதி ஒதுக்கவில்லை. ஆனால் எங்களுடைய அரசுக்குப் பிறகு பதவிக்கு
வந்த மேற்கு வங்க மாநில அரசுக்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது.
காங்கிரஸ் கட்சியின் கூட்டாளிக் கட்சி பதவியில் இருப்பதால்தானே இந்த உடனடி
ஒதுக்கீடு?வகுப்புக்கலவர மசோதா: வகுப்புக் கலவரங்களை
ஒடுக்குவதற்கு கொண்டுவரப்படுவதாகக் கூறப்படும் மசோதா, மாநில அரசுகளை
அதிகாரமற்றதாக்கவும், சட்டம் - ஒழுங்கைக் காக்கும் அதன் கடமையில் தலையிட்டு
மாநில அரசுகளை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்க முடியும் என்ற
அச்சுறுத்தலை ஏற்படுத்தவுமே கொண்டுவரப்படுகிறது.10% வளர்ச்சி இலக்கு:
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி இலக்கை 10% ஆக
நிர்ணயித்து அதை அடைய கடுமையாக உழைக்கலாம்; வறுமையை ஒழிக்க இதில்
துணிச்சலான நேரடி திட்டமோ அணுகுமுறையோ இல்லை.பதினோராவது
ஐந்தாண்டு திட்ட அமலில் நமக்கு ஏற்பட்ட தோல்விகள் என்ன என்று ஆராய்ந்து
அதிலிருந்து பாடம் பெற வேண்டும். அடுத்த திட்ட காலத்தில் அத்தகைய தவறுகளைத்
தவிர்க்க வேண்டும்.ஜி.எஸ்.டி. மசோதா: மதிப்புக் கூட்டப்பட்ட
வரிகளை (வாட்) விதிக்கும் மாநிலங்களின் அதிகராத்தைப் பறிப்பதற்காகவே
கொண்டுவரப்பட்டுள்ளதுதான் ஜி.எஸ்.டி. மசோதா.தமிழக மீனவர் பிரச்னை: மன்னார்
வளைகுடாவில் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கூட
இந்தியர்கள் தாக்கப்படுவதாக மத்திய அரசு கருதுவதில்லை; தமிழக மீனவர்கள்
வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்ற அலட்சியமே மத்திய அரசிடம்
காணப்படுகிறது. எனவே இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எதையும் அது இதுவரை
எடுக்கவில்லை.நிதி ஒதுக்குவதில் சதி: மாநிலங்களுக்கு நிதி
ஒதுக்குவதற்கு இதற்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் காற்றில்
பறக்கவிடப்பட்டுள்ளன. மத்திய அரசு சில திட்டங்களை மட்டும் முக்கியமானவை
என்று அடையாளம் கண்டு அவற்றை அமல்படுத்துவதற்காக மட்டும் நேரடியாக நிதியை
ஒதுக்குகின்றன. வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட அமல் ஒன்றே போதும்
மத்திய அரசு நிதியை எப்படி வீணடித்து மாநிலங்களுக்கும் பயன்படாமல்
செய்கிறது என்று காட்ட. மேலும் இது கூட்டாட்சித் தத்துவத்தின்
உணர்வுகளுக்கே முரணானது. மாநில அரசுகளுக்குச் சேர வேண்டிய நிதியை
முறையாகப் பிரித்துக் கொடுத்தால், அவை அந்தந்த மாநிலங்களின் தேவைகள்,
சூழலுக்கேற்ற திட்டங்களைச் சுயமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இதில்
மத்திய அரசின் நாட்டாமை அவசியமே இல்லை' என்றார் ஜெயலலிதா.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறு வணிகர்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» மின் உபரி, பற்றாக்குறை ஆனது ஏன்? திமுக அரசுக்கு ஜெயலலிதா கேள்வி
» இரண்டு ஏக்கர் நில திட்டத்தில் நடந்தது என்ன? அரசுக்கு கேள்வி
» 9 ஆண்டுகளாக காவிரி நீர் ஆணையத்தை கூட்டாதது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum