TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 06, 2024 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எச்சரிக்கை முனி அடித்தால் நான் பொறுப்பல்ல

2 posters

Go down

எச்சரிக்கை முனி அடித்தால் நான் பொறுப்பல்ல Empty எச்சரிக்கை முனி அடித்தால் நான் பொறுப்பல்ல

Post by sakthy Sat Jul 09, 2011 1:18 pm

விரும்பினால் படியுங்கள் 7

ஆராய மனமில்லாதவன் கண்மூடி,
ஆராய மாட்டாதவன் மடையன்,
ஆராய துணியாதவன் அடிமை,
ஆராய்ந்து தெளியாதவன் சிந்திக்கத் தெரியாத மனிதன்.
இதில் நீங்கள் எந்த ரகம்?
அம்மாவின் மடியில் தூங்கும் சுகமே சுகம் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன் அந்த சுகத்தை என்னைப் போல் பெறாதவர்களுக்கும், இழந்தவர்களுக்குமாக மறு பிறவி ஒன்று இருந்தால், கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
ஒரு சினிமாவில் வரும் காட்சி,ஏன் நீங்களும் கூட அனுபவித்திருக்கக் கூடிய காட்சி. இன்றும் பல அம்மாக்களிடம் இருப்பதும் கூட. நீண்ட தூரம் செல்லும் போது நாம் எடுத்துச் செல்லும் உணவுப் போட்டலத்தில் ஒரு சிறிய கரித்துண்டொன்று அம்மாக்களால் எங்கோ ஒரு மூலையில் வைக்கப்படும். அதற்கு காரணம் பேய் பிசாசு பிடிக்காமல் இருக்க என்றும் பதில் வரும்.
கரி என்ற கார்பன், வேண்டாத வாயுக்களை தன்னகத்தே எடுத்து விடும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. சமைக்கப்பட்ட உணவு வேண்டாத வாயுக்களை உறிஞ்சி விசமாவதை தடுக்க கரித்துண்டை அம்மாக்கள் உணவுப் பார்சலில் வைத்து விடுகிறார்கள். அவர்கள் காலத்தில் பேயாக, முனி, பிசாசாக இருந்தது நம் காலத்தில் விஞ்ஞான விளக்கத்தை தந்துள்ளது.இதே போல் கொள்ளிவாய்பிசாசு என்பது சதுப்பு நிலங்களில் உருவாகும் எரியும் தன்மை கொண்ட மீதேன் வாயு,எரியும் போது நமக்கு இந்த பயங்கர பிசாசாக தெரிகிறது. நம்மில் இருக்கும் சில மனிதர்களை விட இந்த கொள்ளிவாய்பிசாசு எவ்வளவோ மேலல்லவா? இதைவிட இன்னொரு பயங்கரமான பிசாசும் உண்டு.அதுதான் அடித்துக் கொல்லும் முனி,கண்டதுண்டா?
அன்றைய நாட்களில்,சன நெருக்கமற்ற,காடுகள் நிறைந்த பாதையால் நெடுந்தூரப் பிரயாணம் இருக்கும். வேலையை முடித்துவிட்டு வரும் நம்ம ஆள், அலுப்புத் தீர இடை வழியில் ஏதாவது அரச,ஆல மர நிழலில் தங்கிச் செல்வார். இந்த ஓய்வு மாலை இரவு நேரங்களானால், சிறிது தூங்கிவிட்டு செல்லலாம் என்று தோன்றும். ஆல,அரச மரத்துப் முனி சும்மா பார்த்துக் கொண்டு இருந்து விடுமா? இது தான் தருணம் என்று நம்ம ஆளை அடித்துப் போட்டு விட்டு தூங்கி விடும். நம்ம ஆளைக் காணவில்லை என உறவினர்கள் காலையில் தேடிவரத் தொடங்குவார்கள். நம்ம ஆளோ வாயால்,மூக்கால் இரத்தம் கொட்டி குற்றுயிராய் அல்லது உயிர் போன நிலையில் கிடப்பார். வந்தவர்களோ முனி அடித்து விட்டது என்று புரளியை கிளப்பி விட்டு அந்தப் பக்கமே போக மாட்டார்கள்.
நமது ஆறாம் வகுப்பு விஞ்ஞான ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி, மரங்கள் மற்ற உயிரினங்கள் போல் சுவாசிக்கின்றன. அவை பகலில் கரியமாலவாயுவை,CO2, உள்ளேடுத்து சூரிய ஒளியைக் கொண்டு இலைப் பச்சயத்தை உணவாக மாற்றுகிறது. இது photosynthesis எனப்படும். இரவில் சுவாசிப்பதால் வெளியிடப்படும் கரியமலவாயு என்ற CO2 ,பாரமான வாயு என்பதால் கீழே தங்குகிறது. இதை சுவாசித்த நம்ம ஆள் தொடர்ந்து அந்தக் காற்றை சுவாசித்து, உயிருக்கு ஆபத்தை தேடிக் கொள்கிறான். தற்போதய காலத்தில் மக்கட் பெருக்கமும்,காடுகள் அழிக்கப்பட்டதாலும் முனிகள், நாம் அவற்றை அடித்துக் கொன்றால் தவிர, அவை நம்மை அடித்துக் கொல்லுவதில்லை.
இந்த பேய் பிசாசு,முனிகளிடமிருந்து வெளியே வந்தாலோ, நம் சாமியார்கள் தாங்கள் கடவுளிடமிருந்து நேராக வந்தது போல், நம்மை எங்கோ கூட்டிச் சென்று விடுகிறார்கள். குண்டலினி யோகா அல்லது குண்டலினி சக்தி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் சாமியார் சொல்வார்,தாமரை போல் இருக்கும் இந்த சக்கரங்களில் இருந்து சக்தியை திரட்டி மேலே கொண்டு வந்து மிகப் பெரும் சாதனைகளை செய்ய முடியும். இது ஸ்தூல உடலில் இல்லை சூட்சும உடலில் தான் இருக்கும். எல்லோராலும் இந்த சக்தியை மேலே கொண்டு வர முடியாது என்று டனால் தங்கவேலு போல், டூப் அடிப்பார்கள். நாம் தான் கேணைப் பயலுகளாச்சே, அரோகரா,ராமா ராமா சொல்லிக் கொண்டு,சாமியார் ஆச்சிரமத்தில் மணிக்கணக்காக தவமிருப்போம்.அதில் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்காக செல்வார்கள். விவேக் சொல்வது போல், சாமியார்கள் சொன்னால் பொய்யைக் கூட உண்மை என்று நம்புவார்கள்.ஆனால் ஆசாமி சொன்னால் உண்மையைக் கூட போய் என்பார்கள். சாமி நித்தியானந்தர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் நடைபெற்ற பூசைக்கு எண்பது வீதமான பெண்கள் சென்றார்களாம். அது மட்டுமல்ல மண்டபம் நிறைந்து வெளியேயும் நின்றார்களாம்.
இந்த சக்கரங்கள் எவை? மூலாதாரம் சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம்,விசுத்தி,ஆக்ஞை,சகஸ்ரதாளம் என்ற ஏழு சக்கரங்களாகும். இதை இப்போது உடலின் உள்ளே உள்ள நம் உறுப்புக்களுடன் இணைத்துப் பாருங்கள். உடலுறவுக்கு உரிய ஆண்,பெண் உறுப்புக்கள்-மூலாதாரம்;என்று ஆரம்பித்து சிறுநீரகம்;வயிறு;இதயம் நுரையீரல்; மூளை, என்று முடிகிறது. உடலுறவு தவறான முறையில் செல்லுமானால்,சிறுநீரகம் பிழைக்குமானால், வயிற்றை கல்யாண சமையல் சாதம் என்று அதன் போக்கில் விட்டு விட்டால், தேகப்பயிற்சி இன்றி நுரையீரலுக்கு அதிக அளவு காற்று உள்ளே எடுக்கப்படா விட்டால், சிந்திக்க தெரிந்த மனிதன் மனத்தை அலைபாய விட்டு விட்டால் என்ன நடக்கும்? அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வரும்,காம எண்ணம் அதிகரித்தால் தந்தையே மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கொடுமை நடக்கும். இவை எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்குமானால் நாம் எழுத்தாளர்களாக, விஞ்ஞானிகளாக, பல திறமை மிக்கவர்களாக வர முடியுமா இல்லையா? நம் உள் உறுப்புக்களை நல்ல வளியில் கவனிப்போமானால் நம் கையில் நம் சக்தி அதுவே கடைசி சக்கரம். அன்று சொல்லப்பட்ட விளக்கம் திரிபு படுத்தப்பட்டு இன்று சாமியார்கள் சொல்லும் அந்த குண்டலினி சக்தியாகி, நாம் ஏமாற்றப்பட்டு திசை திருப்பப்பட்டு கொண்டு செல்லப்படுகிறோம். உண்மைகளை சொல்ல பல வழிகளை பயன்படுத்துவதில் தவறில்லை.ஆனால் இப்படியா?
மூலாதாரத்திற்கு ஒருவன் - ஒருத்தியாக வாழலாம்.சிறுநீரகத்திற்கு நல்ல அதிக தண்ணீர்,டாஸ்மார்க் தண்ணீர் அல்ல, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு அளவோடு நல்ல உணவை உணவாக்கலாம். நுரையீரலுக்கு சிறந்த தேகப் பயிற்சி, காற்றோட்டமான இடம்,பிராணாயாமம், மூளைக்கு சிறந்த நூல்கள்,சிறந்த சிந்தனை. இதைவிட கழுத்துப் பகுதியில் இருக்கும் தைரோயிட் சுரப்பிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் கூட, உடல் மெலிவு, பருமன், கோபம்,வெறுப்பு,பசி,களைப்பு,இரத்த அழுத்தம் போன்ற பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது. உங்களை நீங்களே கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், பிறகென்ன நீங்களும் சிறந்த யோகி தான். பலவற்றுக்கு சரியான விஞ்ஞான விளக்கம் தர முடியாத அன்றைய மக்கள் செயல்களை, தங்களுக்கு சாதமாக ஆக்கிக் கொண்டு நம்மை ஏமாற்றிவரும் போலி சாமியார்களின் கால்களில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? விஞ்ஞான விளக்கத்துடன் சிந்தியுங்கள் சாதியுங்கள். தோஷம் என்றால் என்ன? அறிவியலும்,மருத்துவமும் கூறுவதென்ன? காத்திருங்கள்.
நம் உடம்பு நம்முடைய முதல் மருத்துவர். இரண்டாவது மருத்துவரே நமது டாக்டர். நமக்கு வலிமை தேவைப்படும் போது, தேவையான சக்தியை பெற்றுக் கொள்ள பசிக்கிறது. தேவையான உணவைப் பெற்றுக் கொண்டதும் போதும் என்கிறது. ஆனால் நண்பர், உறவினர்,திருமண வீட்டிற்கு சென்றால் மூக்கு முட்ட வடை பாயாசத்துடன் குடும்பமாக சென்று ஒரு பிடி பிடிக்கின்றோம். முடிந்து வெளியே வந்தால் முடியவில்லை,சிறிது வயிற்றின் சுமையை குறைக்க நடந்தால் ஐஸ்கிரீம்காரன் வருகிறான்.பையனோ அப்பா என்கிறான். பிறகென்ன, குடும்பமே ஐஸ்கிரீம் சாப்பிடுகிறது. இன்று ஆபீசுக்கு விடுமுறை எடுத்து கல்யாண வீட்டிற்கு வந்தோமே,சிறிது நேரம் காலாற என்று கடற்கரைக்கு போகின்றோம். சுண்டல் கடலை என்று பையன் ஒருவன் நம்மை சுற்றி சுற்றி வருகிறான்.சின்னப் பொண்ணோ அம்மா கடலை என்கிறாள். விட்டோமா? அதையும் முடித்து வீட்டிற்கு வந்தால் வயிறு சொல்லுக் கேட்க மறுக்கிறது.
வாழ்க்கையில் வடை பாயாசம் கண்டதே இல்லையா? அப்போதே வயிறு சொல்லும் போதே நிறுத்தி இருக்கலாமே! அம்மாவோ,மனைவியோ,யாரோ இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்றால், அன்பா, நம் உடம்பா என்று சிறிது சிந்திக்கலாமே! யாரோ வருவார்கள்,கேட்பார்கள் அதற்காக சினேக்பாபு வடிவேல் போல், மூக்கு முட்ட பிடித்து விட்டு, கை எலும்பை முறித்துக் கொள்ள வேண்டுமா,முறிவது நம் உடம்புமில்லையா? போதும் என்று மனம் சொல்லும் போது நிறுத்தி விட வேண்டாமா? பகலில் ஏதாவது செய்கின்றோம். இரவில் வேலை எதுவும் கிடையாது. இரவில் உண்ணும் தேவையற்ற உணவு உடம்புக்கு தேவை இல்லாமல் போகவே, உடம்பின் எங்கோ ஒரு இடத்தில் போய் அழையா விருந்தாளியாக தங்கி விட, weight டை குறைக்க exercise என்று காற்றில்லா அறையில் நாகரீக தேகப்பயிற்சி. அதுவும் பணத்தை கொடுத்து செய்கிறோம். ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். ஒருமணி நேர நாகரீக அறை தேகப்பயிற்சி, ஒரு மணி நேர சைக்கிள் ஓட்டம், ஒரு மணி நேர அம்மாக்கள் வீட்டுப் பொருட்களை கடையில் வாங்கி நடந்து வீட்டிற்கு கொண்டு வருதல்.இது மூன்றிலும் அதிக கலோறியை இழந்ததும் சுகதேகிகளாக பார்க்கப்பட்டதும் அம்மாக்களே. அறைப்பயிற்சி பலத்தை தந்தது, சுகத்தை தரவில்லை. இயற்கையுடன் செயற்கை என்றும் எங்கும் போட்டி போட முடியாது என்பதே உண்மை.
காதலிக்க மறுத்தற்காக ஆசிட்டை முகத்தில் வீசுகிறான்,காதை வெட்டுகிறான், கொலை செய்கிறான்,உயிரோடு தீ வைக்கிறான்,கடிதக் குண்டையும் அனுப்புகிறான் காதல்மனநோயால் பீடிக்கப்பட்ட ஒருவன். கைது செய்து நடவடிக்கை எடுங்கள் என்று கூச்சல் போடுகிறது ஒரு கூட்டம். கைது செய்து நீதிமன்றங்களில் நிறுத்தினால், வருடக்கணக்காக வழக்கை இழுத்தடித்து விட்டு விடுதலை செய்கின்றனர். அந்த காம மனநோயாளி மீண்டும் தன் வேலையை தொடங்குகிறான்.. நாமும் சிந்திக்கவில்லை. சட்டமும்,நீதியும்,சட்டம் இயற்றுபவர்களும் கண்ணை மட்டுமல்ல மனத்தையும் மூடிக் கொண்டு செயல்படுகிறார்கள். எதை மூட வேண்டுமோ அதை மூட மாட்டார்கள்.
தன்னை காதலிக்க முற்பட்டதாக கூறி அவளின் மார்பகங்களையும், காதையும், மூக்கையும் வெட்டி எறிகிறான் ஒருவன்.அவனை நாம் கடவுள் அவதாரமாக்கி, நாமம் போட்டுக் கொண்டு என்னென்னவோ செய்கிறோம். இராமன் செய்தால் தர்மம், அவதாரம்,கோயில் கட்டி கூப்பாடு போடுகிறோம். காதலித்து தோல்வி அடைந்தவன் செய்தால் கைதா? ஊரார் சீதை மீது பழி சுமத்தியதற்காக, கர்ப்பிணி என்றும் பாராது ஊரை விட்டு துரத்துகிறான் இராமன். காட்டில் உள்ள ஆச்சிரமத்தில் லவனையும் குசனையும் பெற்றெடுக்கிறாள். அவனை அவதாரம் என்கிறீர்களே! வாயு,அக்னி,வருணன்,சூரியன் என்று சிறு தெய்வ வழிபாடு நடத்த இறைவன் ஒத்துக் கொள்வானா? இரண்ணியாய நமக சொல்லச் சொன்னதற்கே இரண்ணியனை அழித்த இறைவன், எப்படி சிறு தெய்வ வழிபாடுகளுக்கு எல்லாம் சம்மதித்தான்?
கல்விக்கு அரசி சரஸ்வதி
தனத்திற்கு தலைவி லட்சுமி
சக்திக்கு பார்வதி,
கற்புக்கு கண்ணகி.
இந்த பெண் திலகங்களுக்கு கோயில் கட்டி, விழாக் கொண்டாடி, கடவுளாக்கி விட்டு, நாட்டிலோ சகோதரிகளை மாட்டி மடக்கி ஆபாச படம் பிடித்து இணையத் தளத்திலே, ஏதும் அறியாக் பெண் குழந்தைகள் கதறக் கதற பலாத்காரம் செய்து வீதியிலே, தந்தையின் தலைமையில் 14 வயது மகளை பல நூறு இராட்சதர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதும் இந்த மண்ணிலே தானே! இந்தப் பச்சிளங் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? பெண்களை தெய்வமாக்கி விட்டு தேவடியாள் ஆக்குகிறார்களே! அரசியல்வாதி மூன்று நான்கு பெண்களுடன் உல்லாச வாழ்வு வாழ்கிறான். கேட்பார் யாருமில்லை.பசிக் கொடுமையால் விபச்சாரத்திற்கு தள்ளப்படுகிறாள் ஒரு பெண். அவள் மீது குற்றம் சுமத்தவும் ,உபதேசம் செய்யவும் வருகிறார்கள் பலர்.ஆனால் பாஞ்சாலி செய்ததை தர்மத்திற்குள் கொண்டு வந்து கற்புக்கரசி ஆகவும் மகா புருசர்களாகவும் ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.
பெண்கள் விடுதலை கோரும் பெண் கூட்டம், ஆண்களின் ஆசைக்கு விருந்தாகி விட்டில் பூச்சியாய் மடிகிறதே,யார் குற்றம்? ஆண்கள் மட்டும் தான் காரணமா? மேலாடையை நழுவ விடுகிறேன் கோடி கொடு என்கிறது ஒரு கூட்டம், எதற்கும் தயார் எவ்வளவு கொடுப்பாய் என்கிறது இன்னுமொரு நாகரீக கூட்டம், ஆறு அங்குலத்தில் அலங்காரமாய் நின்று சாமரை வீசுகிறேன் இலட்சம் தா, என்று விளையாட்டு திடலில் நிற்கிறது ஒரு அலங்காரக் கூட்டம். நடிக்க ஆசையுடன் வந்த சிலரோ எல்லாவற்றையும் இழந்து,,எதற்கும் தயார்,சான்ஸ் தருகிறாயா என்கிறது. மாடல்கள் என்ற பெயரில் மாசு பட்டு நிற்கிறது இன்னொரு கூட்டம். பணம்,பதவி,புகழ்,ஆசை வளமான வாழ்வு இவற்றுக்காக கனவு கண்டு வாழ்வை தொலைத்து விட்டு நிற்கும் இவர்களெல்லாம் ஏமாறுகிறார்களா, ஏமாற்றபடுகிறார்களா, இல்லை தெரிந்தே வலையில் விழுகிறார்களா? யாரும் யாரையும் பார்க்காது ஓடிக் கொண்டிருக்கிறது இந்த 21 ஆம் நூற்றாண்டு பாவையர் கூட்டம். ஒன்றும் தெரியாமல் ஏங்கி நிற்கிறது ஒன்று,இன்னொன்றோ வெட்கி வேதனையுடன் தலை குனிந்து நிற்கிறது. யார் யாருக்கு ஆறுதல்?
இந்த உலகில் உங்களைப் போல் நல்லவர்களும் மனிதர்களும் வாழத்தான் செய்கிறார்கள். கொலைக்காரனால் பலி எடுக்கப்பட ஈழத் தமிழர்களுக்கு நினைவு மண்டபங்களும்,மெரினாவில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக மனிதநேயம் படைத்தவர்கள் கூடி, மேளுகுவர்த்தி ஏற்றி நினைவு கூர்ந்ததையும் மறக்க முடியுமா? வெளியே எடுக்கப்படும் சினிமா காட்சிகளுக்காக மக்களை நிறுத்தி விட்டு சண்டை போடுவார்கள்,கொலை செய்வார்கள்,பலாத்காரம் செய்வார்கள். மக்கள் வேடிக்கை தான் பார்க்க முடியும். ஆனால் நாம் நிஜத்திலும் நல்லவர்களாய் இருந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறோம் இல்லையேல் மறு பக்கம் பார்த்துக் கொண்டு சென்று விடுகிறோமே! இதயம் வலிக்கத்தான் செய்கிறது.எனக்கு மட்டுமல்ல நல்லவர்களான உங்களுக்கும் தான்.
உள்ளதச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு சிந்தனையுடன்....
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எச்சரிக்கை முனி அடித்தால் நான் பொறுப்பல்ல Empty Re: எச்சரிக்கை முனி அடித்தால் நான் பொறுப்பல்ல

Post by mmani Sat Jul 09, 2011 1:42 pm

கட்டுரை மிகவும் பயனுலதாக அமைத்துள்ளது .தொடர்ந்து பதிவுகளை தரவும் . ஆவலுடன் எதிர் பார்கிறோம் ஆச்சரியம் ஆச்சரியம்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum