TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?': விளக்கமளிக்கின்றது யாழ். உதயன் நாளேடு

Go down

'மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?': விளக்கமளிக்கின்றது யாழ். உதயன் நாளேடு Empty 'மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?': விளக்கமளிக்கின்றது யாழ். உதயன் நாளேடு

Post by Tamil Wed Feb 10, 2010 9:58 pm

'மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?': விளக்கமளிக்கின்றது யாழ். உதயன் நாளேடு Uthayanதமிழ்
மக்கள் மாத்திரமல்லர், அரசியல்வாதிகளும் தான் தேடுகின்றார்கள். முடிந்து
போகின்ற காலாவதியாகின்ற நாடாளுமன்றக் கதிரைகளை மீண்டும் பிடித்துக்
கொள்வதற்கான "தேடல்' இனி சூடு பிடிக்கப் போகின்றது என யாழ். உதயன்
எழுதியுள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் இன்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. அது முழமையாகக் கீழே:

அவசரகாலச்
சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை கடந்த வெள்ளியன்று
நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் உரை
யாற்றிய பலரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அம்மையாரும் ஒருவர்.

நடந்து
முடிந்த ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிக் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் மக்கள்
மனம் குழம்பிய நிலையில் இருக்கும் போது அவர்கள் மீது அடுத்தடுத்து
தேர்தல்கள் திணிக்கப்படுவதாகத் தெரிவித்து விசனம் வெளியிட்டிருக்கின்றார்.


தமிழ் மக்கள் மாத்திரமல்லர், தமிழ்த் தலைவர்களே - இக்கருத்தை
வெளியிட்ட பத்மினி அம்மா உட்படப் பல தமிழ்த் தலைவர்களே - தமிழ் அரசியல்
விவகாரத்தில் குழம்பிய நிலையில் இருக்கின்றனர் என்பது தான் ஸ்ரீமான்
பொதுஜனத்தின் கணிப்பாகும்.

"அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித்
தேர்தல் முடிவு இலங்கையில் இனங்கள் பிளவுபட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாக
எடுத்துக்காட்டுகின்றது. இனங்கள் முனைப்பாக்கம் பெற்றுள்ளமையை அது
காட்டுகின்றது.'' என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்றார் பத்மினி
சிதம்பரநாதன் அம்மா.

நல்லது. தென்னிலங்கை ஒரு பக்கமும்
தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு ஒரு பக்கமுமாகப் பிளவுபட்டு
நிற்பதையே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று கருதலாம்.

தென்னிலங்கை
தமது பக்கத்தைத் தனது வாக்குகள் மூலம் காட்டியிருக்கின்றது என்பது உறுதி.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தனது வாக்களிப்பின் மூலம்
தமது முடிவை வெளிப்படுத்தியிருக்கின்றன என அவர் கருதுகின்றாரா? அல்லது
வாக்களிக்காமல் பகிஷ்கரித்ததன் மூலம் காட்டியிருக்கின்றன என அவர்
கருதுகின்றாரா? என்பது தான் நமக்குத் தெரியவில்லை.

அவரது
நாடாளுமன்ற உரையில் அது தெளிவுபடுத்தப்படவில்லை. சில சமயம் இந்த
விடயத்தில் அவர் இன்னும் குழம்பித்தான் இருக்கின்றார் எனக் கருதவும்
இடமுண்டு. அதற்கு நியாயங்கள் உள்ளன.

பெரும்பாலான தமிழ்த்
தலைவர்களும், விமர்சகர்களும், நோக்கர்களும் வடக்கு, கிழக்குத் தமிழர்கள்
தமது வாக்குகள் மூலம் தென்னிலங்கைத் தெரிவை நிராகரித்துத் தமது
நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றனர் என்கின்றனர்.

ஆனால்,
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இதே பத்மினி சிதம்பரநாதன் எம்.பியுடன்
சேர்ந்து யாழ். ஆயரிடம் சென்று, இத் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு மன்றாடிய
மற்றொரு யாழ். மாவட்ட எம்.பியான செல்வராசா கஜேந்திரனோ வடபகுதியில் சுமார்
எழுபத்தியைந்து வீதமான தமிழர்கள் இத் தேர்தலைப் பகிஷ்கரித்து தமிழ்த்
தேசியத்துக்கு உரமூட்டியுள்ளனர் எனத் தேர்தல் முடிவுகளுக்குப் புதிய
வியாக்கியானம் அளித்துப் பெருமைப்பட்டிருக்கின்றார்.
பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. கூட ஜனவரி முதலாம் வாரம் வரை ஜனாதிபதித்
தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக ஒற்றைக் காலில் நின்றவர் தான். தமிழ்க்
கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்துக்குள்ளேயே அதற்காக வாதாடியவர்.

அதன்
பின்னர் இத் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவைப் பகிரங்கமாக
அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பிரசன்னமாகித் தலையசைத்த போதிலும்,
கூட்டமைப்பின் முடிவை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பிரசாரத்தில்
அவர் முனைப்பே காட்டாமல் இருந்தார்.

தமிழ்க் கூட்டமைப்பின்
கடைசிப் பிரசாரக் கூட்டத்தில் திடீரெனத் தலை காட்டிய அவருக்கு எதிர்பாராத
விதமாக அதில் பேசச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்ட போதிலும், அதில் கூட மக்களை
வாக்களிக்கச் செல்லும்படி கூட்டமைப்புத் தீர்மானத்தை வலியுறுத்தும்
விதத்தில் அவர் உரையாற்றவில்லை.

கூட்டமைப்புத் தலைவர்
சம்பந்தனுக்கு அக் கூட்டத்தில் "ஐஸ்' வைத்தமையைத் தவிர (அதற்கு வேறு
உள்நோக்கம் இருக்கக் கூடும் என்பது புரியத்தக்கதே) திட்டவட்டமாக அவர் ஒரு
கருத்தையும் சொல்லவில்லை என்பது பலரின் ஆதங்கமாகும்.

"உண்மையில்
தமிழ் மக்களில் பலர் இத் தேர்தலில் வாக்களிக்கும் மன நிலையில்
இருக்கவில்லை. தங்களுக்கு நடந்த அவலத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு
இருக்கின்றார்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைத் தேடுகின்றார்கள்.
மனைவிமார் தங்கள் கணவன்மாரைத் தேடுகின்றார்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர்களை அவர்களது புகைப்படங்களைக் கையில் வைத்துக் கொண்டு தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் தமிழ் மக்கள் தங்களின் நாளாந்த வாழ்க்கையைத்
தேடிக்கொண்டிருக்கின்றார்கள். தேடித் தேடிக் கிடைக்காத அந்த விரக்தியில்
இருந்து - வெறுப்பிலிருந்து - தமிழ் மக்கள் இன்னும் விடுபடவில்லை.''

என்றும் பத்மினி சிதம்பரநாதன் தமது நாடாளுமன்ற உரையில் கூறியிருக்கின்றார்.

உண்மை
தான். அவர் கூறுவது வாஸ்தவம் தான். தமிழ் மக்கள் மாத்திரமல்லர், அவர்
போன்ற அரசியல்வாதிகளும் தான் தேடுகின்றார்கள். முடிந்து போகின்ற
காலாவதியாகின்ற நாடாளுமன்றக் கதிரைகளை மீண்டும் பிடித்துக் கொள்வதற்கான
அவர்களின் 'தேடல்' இனி சூடு பிடிக்கப் போகின்றது.

ஜனாதிபதித்
தேர்தல் கதிரைக்குப் போட்டி போடக் கூடிய நிலையில் தாம் இல்லை என்பதால் அத்
தேர்தலைப் பகிஷ்கரிக்கவும் நிராகரிக்கவும் சொன்னவர்கள், அது சிங்கள
தேசத்தின் தலைமையைத் தீர்மானிக்கும் விவகாரம் என்று தமிழ்த் தேசத்தைத்
தக்க வைத்து அதிகாரம் பண்ணும் வலிமையிலும், தகைமையிலும் தாங்கள் இன்னும்
இருக்கின்றார்கள் என்ற கனவில் மிதந்தபடி அத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி
தமிழர்கள் மத்தியில் பேருபதேசம் செய்தவர்கள், இப்போது புதுக் கதை கூறத்
தயாராகி விட்டார்கள்.

தங்கள் எம்.பி. பதவியைத் தக்க வைப்பதற்காக,
இது மட்டும் தமிழர் தேசத்தின் பொதுத் தேர்தல் என்ற மாதிரியும், இதன் மூலம்
தாங்கள் எம்.பி.யானால் ஏதோ நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுவார்கள் என்ற
மாதிரியும் கதை விடத் தயாராகி விட்டார்கள்.

இவர்கள் பண்ணும் குழப்பத்தில் மக்கள் குழம்பாமல் என்ன செய்வார்கள்.......?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை பாவனா மரணம்? நினைவஞ்சலி பிரசுரித்த யாழ்.உதயன் பத்திரிகை!!
» "யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "
» ''மெட்ராஸ் கபே'' தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் - யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை
» 2 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை - இடம்பெயர்ந்து சாதாரண மக்கள் போல் வாழமுடியவில்லை
» யாழ். வடமராட்சி கிழக்கில் நடுத்தெருவில் கைவிடப்பட்ட மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள்!(video & photo)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum