TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் யாசிது மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை..

2 posters

Go down

பற்றிய - நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் யாசிது மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை.. Empty நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் யாசிது மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை..

Post by மாலதி Sat Aug 16, 2014 7:28 am

தயவு கூர்ந்து படியுங்கள், இது முன்னர் இட்ட பதிவு கிடையாது நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் யாசிது மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை...
-----------------------------------------------------------------------------

இராக் நாடு முஸ்லீம் நாடு. ஒரு காலத்தில் பாபிலோனிய சுமேரிய நாகரீகங்கள் கொடிகட்டிப் பறந்த நாடு.

இப்போது சுடுகாடு என்னும் அளவுக்குச் சண்டை, மண்டை உடைகிறது. இது பற்றி லண்டன் நாளேடுகளில் ஆகஸ்ட் 12ம் தேதி கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியானது. ‘’500 பெண்களும் குழந்தைகளும் உயிருடன் புதைப்பு’’ ---என்பதுதான் அந்தச் செய்தி. அதாவது முஸ்லீம் தீவிரவாதிகள், மதம் மாற மறுத்த 500 பழங்குடி மக்களை உயிருடன் புதைத்துவிட்டனர். இந்த விஷயத்தை உலகிற்கு அற்வித்தவர் இராக்கிய மந்திரி சுடானி ஆவார்.

புதைக்கப்பட்ட பழங்குடி மக்கள் யாசிதி இனத்தவர். இவர்களைப் பற்றிய செய்திக்கு அருகிலேயே இவர்கள் யார்? இவர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்ற வியப்பான செய்திகளும் வெளியாகின. அதைப் படித்த உடனே அவர்கள் இந்துக்கள் என்பது புரிந்தது! இதோ அவர்கள் பற்றி பத்திரிக்கைகள் மற்றும் பி.பி.சி. வெளியிட்ட செய்திகளும் அது பற்றிய எனது விளக்கங்களும்:--

யாசிதி இன மக்கள் 4000 ஆண்டுப் பழமையான இனம். இவர்கள் பாரசீக சொராஸ்ட்ரியன் மதம், பழங்கால இரானிய (வேத) மதம், கொஞ்சம் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை பின்பற்றுகின்றனர். இப்போது 1,60,00 பேர் மட்டுமே வடக்கு இரக் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் குர்தீஷ் மொழி பேசுகின்றனர்.

கிறிஸ்தவர்களாக இருந்தால் ஜிஸியா வரி கொடுத்தால் வாழலாம் என்றும் யாசிதி இன மக்களாக இருந்தால் இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அல்லது படுகொலை செய்வோம் என்றும் ‘ஐஸிஸ்’ இஸ்லாமிய தீவிரவாதிகள் அறிவித்தனர். அதன்படி படுகொலை நீடிக்கிறது என்று லண்டன் ஆங்கிலப் பத்திரிக்கைகள் படங்களுடன் செய்திகள் வெளியிட்டுள்ளன. காரணம் இவர்கள் இந்து மதம் சொல்லும் எல்லா விஷயங்களையும் சொல்லுகிறார்கள். இதோ நீங்களே படித்து முடிவுக்கு வரலாம்:

1.யாசிதி இனமக்களுக்கு மறு பிறப்புக் கொள்கையில் நம்பிக்கை உண்டு: உலகில் மறு பிறப்பை நம்புவோர் இந்துக்களும் அதன் கிளை மதங்களான புத்த, சமண, சீக்கிய மதங்களும் தான். செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவ, யூத, இஸ்லாமிய மதங்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை.

2.யாசிதி இனத்தினர் ஒரே கடவுளை நம்புகின்றனர்: இதுவும் இந்து மதத்தின் கொள்கையே. உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் -----ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி ---- என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது உண்மை ஒன்றே, அதை முனிவர்கள் பல பெயர்களால் அழைப்பர் என்பது இதன் பொருள்.

3.அந்த ஒரே கடவுள் ஏழு தேவதைகள் மூலம் உலகைப் படைத்தார்: இதுவும் இந்து மதக் கொள்கையே! சப்த ரிஷிக்கள் என்னும் அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரச ரிஷிக்கள் மனித இனத்தைப் படைத்ததை புராணங்கள் கூறும். பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த 7 பெயர்களையும் கூறுவர். சங்க இலக்கியமும் ‘’கை தொழு எழுவர்’’ என்று சப்தரிஷிக்களை விதந்து ஓதும். சப்த ரிஷிக்களில் வசிஷ்டர் என்னும் நட்சத்திரம் அருகில் வலம் வரும் அருந்ததி நட்சத்திரத்தை சங்க இலக்கியம் ஆறு, ஏழு இடங்களில் பாராட்டுவதோடு ஒவ்வொரு இந்து தம்பதியும் முதலிரவு அறைக்குள் போவதற்கு முன் அருந்ததியைக் காண வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

4.இவர்கள் வணங்கும் முக்கியக் கடவுள் மாலக தாவூஸ். இவர் மயில் தேவதை என்று யாசிதிக்கள் கூறுவர்: உலகில் மயில்வாகனக் கடவுளான கார்த்திகேயனை (முருகனை) வணங்குவோர் இந்துக்கள் மட்டுமே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மாலக தாவூஸ் என்பதை நான் பால தேவன் என்றே படிப்பேன். ப— வ --- ம—என்ற மூன்று எழுத்துக்களும் இடம் மாறும் என்பது மொழி நூலார் அறிந்த உண்மை.
yazid boys plait like girls
இளைஞர்களும் பெண்களைப் போல பின்னல் முடி அணிவர்.

5.அவர்களுக்கு மயில் புனிதச் சின்னம். இந்தியாவின் தேசியப் பறவையான மயில் சிந்து சமவெளிப் பானை ஓடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதோடு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதை பைபிளும் கூடப் பகர்கிறது.

6.அவர்கள் தீயை வணங்குவர்: யாகத் தீயை பிராமணர்களும், பாரசீக மதத்தினரும் இன்றுவரை வணங்குவதை உலகம் அறியும். பிராமண பிரம்மச்சாரிகள் தினமும் தீ வளர்த்து சமிதாதானமும், கிருஹஸ்தர்கள் தீ வளர்த்து அக்னிஹோத்ரம்/ஔபாசனமும் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று வரை இதைச் செய்கின்றனர். காலத்தின் கோலம்!!!

7.அவர்கள் சுன்னத்து செய்து கொள்வர், ஐந்து முறை தொழுவர்: இவை இரண்டும் இந்து வழக்கம் அல்ல. இது செமிட்டிக் இன மதங்களின் வழக்கம் அல்லது மத்திய கிழக்கில் செமிட்டிக் மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே இருந்த வழக்கம் என்று கொள்ளலாம்.

8.யாசிதி இனத்துக்கு அப்பெயர் வரக் காரணம் அவர்கள் யஸ்தான் என்னும் தேவனை வணங்குவதாகும். இது யது நந்தன் (யாதவ குல கிருஷ்ணனின் பெயர்) அல்லது யக்ஞ (யாகம்) என்பதன் மரூஉ --- ஆக இருக்கும் என்பது என் ஊகம். வேதத்தில் யக்ஞ சேன, யாக்ஞவல்க்ய, யக்ஞேசு எனப் பல பெயர்கள் வருகின்றன. மேலும் பாரசீக மொழியில் இசட் என்பதன் பொருள் ‘’ஜோதி’’ (தீ/அக்னி) என்பதாகும். இவர்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி புனிதர்களை வணங்குகின்றனர். சுருங்கச் சொன்னால் இவர்கள் வாழும் இஸ்லாமிய நாட்டுக்கும் இவர்களின் நம்பிக்க்கைகளுக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை!!

9.யாசிதி இன மக்களின் மயில்தேவனான மாலக்தேவூஸை அராபிய மொழியில் சைத்தான் (பேய்) என்பர். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தெய்வங்களை ஏற்காதவர்களை சைத்தானை கும்பிடுவோர் (காபிர், பேகன்) என்று அழைப்பதை உலகமே அறியும்.

10.இராக்கில் இந்து மத வாகனங்கள் போல ஏழு கடவுள், வாகனங்களில் பவனி வருவது பற்றிய ஆங்கிலக் கட்டுரையை ஏற்கனவே எழுதி உள்ளேன். அந்தப் பிண்ணனியில் யாசிதி இன மக்களைக் காண்கையில் அவர்கள் இந்து மத எச்ச சொச்சங்களே என்பதில் எள்ளவுக்கும் ஐயம் இருக்காது.

11. இங்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894—1994) தனது சென்னைப் பிரசங்கத்தில் கூறியதை நினைகூறுதல் பொருத்தம். ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சிவா நடனம் முதல் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு 1400 சம்ஸ்கிருதக் களிமன் படிவ கல்வெட்டு வரை பல விடயங்களைப் பிரஸ்தாபித்த பின்னர் அவர் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்: “ இதை எல்லாம் கேட்டபின்னர் இந்துக்கள் அங்கெல்லாம் சென்று தங்கள் மதத்தைப் பரப்பினர் என்று எண்ணீ விடாதீர்கள். அங்கும் பழங்காலத்தில் இந்து மதமே இருந்தது. அதன் மிச்சம் மீதியைத்தான் நாம் இப்படிக் காண்கிறோம். அதனால்தான் நமது மதத்துக்கு சநாதன மதம் என்று பெயர்” என்றார்.

ஆக அவர் சொன்னதை நூற்றுக்கு நூறு உண்மை என்று நிரூபிக்கிறது இந்த வார இராக்கிய செய்திகள்!!!!

ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:1232; தேதி 14 ஆகஸ்ட் 2014.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பற்றிய - நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் யாசிது மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை.. Empty Re: நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் யாசிது மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை..

Post by sakthy Tue Sep 09, 2014 4:22 pm

இந்தக் கட்டுரையாளருக்கு ஆசிரியப் பெருந்தகை முனைவர் அவர்கள் ஏற்கனவே பதில் கொடுத்திருந்தும் பதில் கிடைக்கவில்லை.

இந்தக் கட்டுரை ஒருதலைப்பட்சமாக இந்துக்களுக்கு வக்காலத்து வாங்கும் நோக்குடன் எழுதப்பட்டுள்ளதை நடு நிலையுடன் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

முதலில் இப்படியான தமிழர் எதிர்ப்புக் கட்டுரைகளை பதிவாக கொண்டு வந்து நம் மக்களை மீண்டும் ஆரிய இந்து மத சாக்கடையில் தள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து இவர்களின் அதாவது ரோமான் மக்கள்,யாசிது மக்கள் போன்ற மத்திய ஐரோப்பிய மக்களின் DNA க்கள் இந்திய ஆரியர்களுடன் ஒத்துப் போவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக இந்திய ஆரியர்களும் மத்திய ஐரோப்பியர்களும் ஒரே இனத்தவர்கள் என்பதுடன் இந்து மதம் என்பது எகிப்திய இஸ்ரேலிய ஆதி மதப் பிரிவினர்கள் -இஜேசுவுக்கு முந்தைய மதக் கொள்கையுடைவர்கள் என வரலாறு சொல்கிறது. இயேசு காலத்திற்கு முன்னர் துரத்தப்பட்டவர்கள் தான் இந்த இந்துமதக் கொள்கை உடைய பல உருவ வழிபாட்டைக் கொண்ட ஆரியர்கள் ஆவர்.

இந்தியாவுக்கு வந்த பின்னர் தமிழர்களின் மறைக் கருத்துகளை எடுத்து தங்கள் மதக் கருத்தாக்கிக் கொண்டவர்கள்.

தமிழர்கள் அன்றும் இன்றும் செய்த தவறு - தங்கள் கருத்துகளை நூல்களாக கொண்டு வரத் தவறியதுதான். சிலவற்றைக் கொண்டு வந்த அவர்கள் பலவற்றை பரம்பரையாக  அடுத்த தலைமுறைக்கு சொல்லியே வந்தார்கள். உதாரணமாக வைத்திய முறைகளைச் சொல்லலாம். அடுத்து பல நூல்கள் இயற்கையாலும்,ஆட்சியைக் கைப்பற்றிய வெளி நாட்டவர்களாலும் அழிக்கப்பட்டன.

இந்த ஆரிய இந்துமத-வேதக் கருத்தை எதிர்த்தே வள்ளுவன் குரல் கொடுத்தான். அவனை இல்லாமல் ஆக்கிய இந்துக்கள் அவனின் நூலை அழிக்க முடியாமல் போய் விட்டது.

மேலே சொல்லப்பட்ட யாசிது ரோமான் மக்கள் யார் என்பதை கட்டுரையாளர் சரியாக தரவில்லை.

வரலாறு சொல்வதைப் படியுங்கள். இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள் வர்ணம்- தங்கள் கருத்துக்களை ஏற்காதவர்கள் என சாதி பிரிவை ஏற்படுத்தினார்கள். இதில் முதலில் சிக்கியவர்கள் அவர்களின் சந்ததியினரே.

தமிழ் நாட்டில் அவர்கள் தங்கள் மதக் கருத்துக்களைப் பரப்பி இருந்தாலும்,சாதி போன்ற பிரிவினையால் பாதிக்கப்பட்ட  மக்கள் பஞ்சாப்பை விட்டு -முதலில் ஆரியர்கள் பஞ்சாப்பில்  கைபர் கணவாய் ஊடாக தான் வந்து குடியேறினார்கள்-
வெளியேறி மீண்டும் மத்திய ஐரோப்பிய பகுதிகளுக்குச் சென்று குடியேறினார்கள்.

இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பு,ஆசிரியர் தினம் மாற்றம் இப்படி அனைத்தையும் மெல்ல தமிழர்களிடம் இன்று திணிப்பது போல்,அன்றும் இந்து மதக் கருத்துக்கள் திணிக்கப்பட்டு  தமிழர்கள் திசை மாறிப் போக்கடிக்கப்பட்டார்கள்.

இல்லை என்றால் பெரு நிலப்பரப்பைக் கொண்டிருந்த தமிழர்களுக்கு இன்று ஒரு நாடு கூட இல்லாமல் அனாதையாய் ஏதிலியாய் அலைவானா ?

கொஞ்சம் சிந்தியுங்கள். எடுத்தவுடன் படித்தவுடன் இந்து மதம் என்ற பேயரில்தமிழர் எதிர்ப்பு பதிவுகளைக் கொண்டு வராதீர்கள்.

தமிழனே தமிழனை அழிக்கும் கொடுமை,தாயே பிள்ளையைக் கொல்லும் கொடுமைக்கு ஒப்பானது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்
» தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்
» பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நவநீதம்பிள்ளை விஜயம்! - மக்கள் கண்ணீர் மல்க கதறியழுதனர்
» மகிந்த ராஜபக்‌ஷவிற்கு மக்கள் மத்தியிலுள்ள மதிப்பை நாடிபிடித்துப் பார்க்க அரச புலனாய்வுப் பிரிவினர் மக்கள் கருத்தறிய தயாராகி நடவடிக்கை எடுத்துள்ளனர்
»  உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையோடு இந்திய மாநிலங்களில் வாழும் மக்கள் தொகை ஒப்புமை வரைபடம். நாம் அறிய வேண்டியது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum