TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவில் பொது 3

3 posters

Go down

பொது அறிவில் பொது 3 Empty பொது அறிவில் பொது 3

Post by sakthy Mon Oct 01, 2012 3:22 pm

பொது அறிவை வளர்ப்போம்...3

உங்களுக்கு தெரியுமா?

கணினியின் முன் அதிக நேரம் இருப்பவர்கள்,IT போன்றவற்றில் வேலை செய்பவர்கள் அதிக ஓய்வை மூளைக்கு கொடுக்க வேண்டும் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்தது தான்.. ஒரு சினிமாவில் சொல்வது போல்,IT கம்பனியில் வேலை செய்கிறோம், stress அதற்காக மது அருந்தி சந்தோசமாக கொண்டாடுகிறோம்,என்பது அவர்களை அவர்களே ஏமாற்றுவதாகும். உடனே அவர்களுக்கு அது திசை திருப்புவதாக இருந்தாலும், பிற்கால வாழ்க்கையில் மிகப் பெரும் மன அழுத்தத்தையும் நோய்களையும் தரும், என்கிறது மருத்துவவியல். மூளைக்கு ஓய்வு என்பது, உடல் உழைப்பால் ஒய்வு பெற விரும்பும் ஒரு தொழிலாளியின் நிலை போன்றது. மதுவினால் மூளை மேலும் பாதிப்படைகிறதே தவிர ஓய்வைக் கொடுக்காது. மூளை என்றும் ஓய்வெடுப்பதில்லை என்பதும்,இரவில் தூக்கத்தில் கூட கணினி standby போலவே செயல்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்..அதனால் அந்த மூளையை வேறு திசைக்கு திருப்ப வேண்டும் என்பதற்கான ஒரு மாற்றம் தான் இந்த கேள்விகள்.

இது தவிர சிறந்த நூல்கள், கோயில் இறை தரிசனம்,பலருடன் சேர்ந்து திறந்த வெளி உடற்பயிற்சி, தியானம் போன்றவை பலன் தரும்.திறந்தவெளி உடற்பயிற்சியால் சூரிய ஒளியில்(UV) இருந்து சருமம்,நமக்கு தேவையான வைட்டமின் டி யின் ஒரு பகுதியையும்,உணவில் இருந்து இன்னொரு பகுதியையும் பெறுவதும்,கல்சியத்தை உடலில் பெற தூண்டவும் செய்கிறது.
24 மணி நேரம் கணினி விளையாட்டில் இருந்த மாணவன் மறு நாள் காலை உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டான் என்றும்,,சிலர் மன நோயாயாளிகளாக அலைகின்ற செய்திகளும், அதே சமயம் கணினி விளையாட்டினால் உடலுக்கு பயிற்சி உண்டென்றும் சொல்கிறது ஆய்வுகள்,அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தானே, வருகிறது. எனவே சிறிது உங்கள் மூளையை வேறு நல்ல திசையில் திருப்புங்கள். அது மூளைக்கு மட்டுமல்ல,கண்களுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.மதுவும் போதைப் பொருளும் மூளை நரம்புகள் நாளங்களை தூண்டுவதால், மேலும் மூளைக்கு பழுவைக் கொடுக்கிறது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.உடற் பயிற்சியால் உடல் மெருகேறுவது போல், மூளையும் பயிற்சியினால் சேமிக்கும் திறனையும்,மீட்டெடுக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

1.நாய்களின் தீவு எது?
2.கங்காரு பிறக்கும் போது அதன் நீளம் என்ன?
3.Destruction of the Library of Alexandria என்பது என்ன?
4.ஒரு புகைப்படத்தில் உள்ள பையனைக் காட்டி ராம் சொன்னான்,இவன் என் அம்மாவின் ஒரே பையனுக்கு மகன் என்று சொன்னால், ராம் புகைப் படத்தில் உள்ளவனுக்கு என்ன உறவு?
5.ஒரு நாள் காலை சூரியாவும் ஜோவும் சென்னையில் அவர்கள் வீட்டு முன்னால் தெருவில் எதிர் எதிராக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.ஜோவின் நிழல் சூரியாவின் இடப் புறமாக விழுந்தால்,சூரியா எந்த திசையை நோக்கி நின்றிருந்தார்?
6.ஒருவன் 5 கி.மீ தெற்கு நோக்கி நடந்து பின்னர் வலது பக்கம் திரும்புகிறான்.பின் அப்படியே 3 கி.மீ நடந்து இடது பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான்.இப்போது அவன் தொடங்கிய இடத்தில் இருந்து எந்த திசையில் நிற்பான்?
7.நான் எனது கடிகாரத்தை மேசையில் மாலை 6 மணிக்கு கழற்றி வைக்கும் போது மணிக் கம்பி வடக்கை நோக்கி காட்டியது. இரவு 09.15 ற்கு நிமிடக் கம்பி எத் திசையைக் காட்டும்?
8.ஒரு மணிக்கூண்டின் கம்பிகள் ஒரு நாளில் எத்தனை முறை ஒன்றை ஒன்று சந்தித்து முத்தமிட்டு செல்கின்றன?
22 முறைகள். ஒவ்வொரு 12 மணிகளுக்கும் 11 தடவை சந்திக்கின்றன.11 மணிக்கும் 1 மணிக்கும் இடையில்
9.சம்பா,நெல் அல்ல, என்பது என்ன?
10.செப்பு துத்தநாகம் கலந்த கலப்பு உலோகம் பித்தளை,brass. இது காற்றில் உள்ள ஒரு வேறொரு காற்றுடன் சேர்ந்து நிறம் மாறுகிறது.இந்த காற்றின் பெயர் என்ன?
11.நான் Necrophobia அல்ல. நீங்கள்?Necrophobia என்றால் என்ன?
12.நாம் இன்று பல இடங்களிலும் பாவிக்கும் பணத்தைப் போட்டு தானியங்கி தொலைபேசி அழைப்புக்கள், குடிநீர் பானங்கள் போன்றவற்றவற்றைப் பெறுகிறோம். இதற்கு முன் மாதிரியாக முதல் பணத்தைப் போட்டு பெறும் தானியங்கி இயந்திரம், Coin operated machine, எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது?
13. மரண தண்டணையை நிறைவேற்றும் electric chair யாரால் கண்டு பிடிக்கப்பட்டது?
14.சாளினியின் தந்தைக்கு ஐந்து மகள்கள். இவர்களில் முதல் நான்கு பிள்ளைகளின் பெயர்கள் முறையே சாரி,சானி,சான்னி,சாந்தி என்பதாகும். ஐந்தாவது மகளின் பெயர் என்ன?
15.சீப்பு வாங்க கடைக்கு வந்த வாய் பேச முடியாத ஒருவர் , சைகையால் விற்பனையாளருக்கு காட்டி சீப்பை வாங்கி சென்றார். அடுத்து கண் தெரியாத ஒருவர் கண்ணாடி,Sun glasses, வாங்க வந்தார்.அவர் எப்படி சைகையால் விற்பனையாளருக்கு காட்டி பொருளை வாங்கி இருப்பார்?

பதிலகள்......................

1.நாய்களின் தீவு எது?
மொரக்கோ நாட்டில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள Canary Island என்ற தீவுக்கு, நாம் நினைப்பது போல் கனரியன் பறவைகள் காரணமாக அப்பெயர் வரவில்லை. உண்மையில் நாய்களின் தீவு என்பது தான் லத்தின் மொழியின், Insula Canaria , பெயர்ப்பாகும்.
2.கங்காரு பிறக்கும் போது அதன் நீளம் என்ன?
ஒரு அங்குல நீளம் என்றால் ஆச்சரியப்பட வேண்டி உள்ளது. அது தான் உண்மை. பின்னர் வயிற்றில் உள்ள பையில் வளருகிறது.
3.Destruction of the Library of Alexandria என்பது என்ன?
கி.மு. 48 ல் ஜூலியஸ் சீசர் தன் மீது வெறுப்புக் கொண்டு எகிப்தில் தரித்து நின்ற தனது கப்பல்களுக்கு தீ வைத்த போது, தற்செயலாக இந்த நூலகமும் தீக்கிரை ஆயிற்று.இந்த நூலகம் இருந்த இடத்தில் 2002 ம் ஆண்டு புதிய நூலகம்,Bibiliotheca Alexandrina , உருவாக்கப்பட்டது. இதே போல், ஆனால் திட்டமிட்டு சிங்களக் காடையர்களால் தென் கிழக்காசியாவிலேயே சிறந்த நூல் நிலையம் என்று அன்று சொல்லப்பட்ட தமிழ் ஈழம், யாழ்ப்பாணம் நூல் நிலையம் 1981 மே 31, ஜூன் 2 , தினங்களில் இரவிரவாக தீக்கிரையாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது.இங்கே 97,000 ற்கு மேற்பட்ட நூல்களும் கிடைக்க முடியாத பழைய ஏடுகளும் இருந்தன. இன அழிப்பிலும்,கலாச்சார பண்பாட்டு சீரழிவிற்கும் காரணமான,இன்றும் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களத்துடன் தமிழ் ஈழ மக்கள் இணைந்து வாழ வேண்டுமா இல்லை வாழ முடியுமா?
4.ஒரு புகைப்படத்தில் உள்ள பையனைக் காட்டி ராம் சொன்னான்,இவன் என் அம்மாவின் ஒரே பையனுக்கு மகன் என்று சொன்னால், ராம் புகைப் படத்தில் உள்ளவனுக்கு என்ன உறவு?
அப்பா
5.ஒரு நாள் காலை சூரியாவும் ஜோவும் சென்னையில் அவர்கள் வீட்டு முன்னால் தெருவில் எதிர் எதிராக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.ஜோவின் நிழல் சூரியாவின் இடப் புறமாக விழுந்தால்,சூரியா எந்த திசையை நோக்கி நின்றிருந்தார்?
வடக்கு.
6.ஒருவன் 5 கி.மீ தெற்கு நோக்கி நடந்து பின்னர் வலது பக்கம் திரும்புகிறான்.பின் அப்படியே 3 கி.மீ நடந்து இடது பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான்.இப்போது அவன் தொடங்கிய இடத்தில் இருந்து எந்த திசையில் நிற்பான்?
தென் மேற்கு திசையில்
7.நான் எனது கடிகாரத்தை மேசையில் மாலை 6 மணிக்கு கழற்றி வைக்கும் போது மணிக் கம்பி வடக்கை நோக்கி காட்டியது. இரவு 09.15 ற்கு நிமிடக் கம்பி எத் திசையைக் காட்டும்?
மேற்கு
8.ஒரு மணிக்கூண்டின் கம்பிகள் ஒரு நாளில் எத்தனை முறை ஒன்றை ஒன்று சந்தித்து முத்தமிட்டு செல்கின்றன?
22 முறைகள். ஒவ்வொரு 12 மணிகளுக்கும் 11 தடவை சந்திக்கின்றன.11 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் ஒரு தடவை மட்டுமே, 12 மணிக்கு,சந்திக்கிறது.60 நிமிடங்களுக்கு ஒரு தடவை சந்திப்பதில்லை,மாறாக 65 நிமிடங்களுக்கு ஒரு முறையே சந்திக்கின்றன.
9.சம்பா,நெல் அல்ல, என்பது என்ன?
இந்த மாசி மாதம் உலகெங்கும்,முக்கியமாக பிரேசில்,பிரிட்டிஷ் கயானா,ஜேர்மன் நாடுகளில் நடந்து வரும் வீதிக் கொண்டாட்டம் பிரபலமானது. தெருக்களில் ஊர்வலமாக அரை குறை ஆடைகளுடனும் வினோத உடைகளுடனும் மக்கள் செல்வார்கள். இத்தாலியில் தோடம்பழங்களை எறிந்து வாகனங்களில் சென்றவர்களும், வீதியில் நின்ற மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.பிரேசிலில் பெண்களும் ஆண்களும் சம்பா என்ற கவர்ச்சியான நடனங்களை ஆடிக் கொண்டு சென்றார்கள். கவர்ச்சியோ கவர்ச்சி.
10.செப்பு துத்தநாகம் கலந்த கலப்பு உலோகம் பித்தளை,brass. இது காற்றில் உள்ள ஒரு வேறொரு காற்றுடன் சேர்ந்து நிறம் மாறுகிறது.இந்த காற்றின் பெயர் என்ன?
Hydrogen sulphide ,H2S,என்ற காற்றாகும்.
11.நான் Necrophobia அல்ல. நீங்கள்?Necrophobia என்றால் என்ன?
பொதுவாக phobia என்றால் பயத்தைக் குறிக்கும். பலர் பலவிதமான பயங்களுக்கு உட்பட்டு இருப்பர். இறப்பு,சிலந்தி,இடி முழக்கம், விமானப்பயணம்,நோய் இப்படி பலவித பயங்கள்.Necrophobia என்றால் இறப்புக்கு பயம் கொள்பவர்.
12.நாம் இன்று பல இடங்களிலும் பாவிக்கும் பணத்தைப் போட்டு தானியங்கி தொலைபேசி அழைப்புக்கள், குடிநீர் பானங்கள் போன்றவற்றவற்றைப் பெறுகிறோம். இதற்கு முன் மாதிரியாக முதல் பணத்தைப் போட்டு பெறும் தானியங்கி இயந்திரம், Coin operated machine, எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது?
கி.மு. 150 அளவில் கிரேக்க விஞ்ஞானி ஹீரோ,Hero, என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு நாணயத்தைப் போட்டு புனித நீரை பெறும் இயந்திரமாகும் இது.இவரால் கண்டு பிடிக்கப்பட்ட சிலவற்றில் aeolipile ( Hero`s engine) என்ற நீராவி இயந்திரமும் ஒன்றாகும்.
13. மரண தண்டணையை நிறைவேற்றும் electric chair யாரால் கண்டு பிடிக்கப்பட்டது?
Alfred Southwick என்ற பல் வைத்தியரால் கண்டு பிடிக்கப்பட்டது.
14.சாளினியின் தந்தைக்கு ஐந்து மகள்கள். இவர்களில் முதல் நான்கு பிள்ளைகளின் பெயர்கள் முறையே சாரி,சானி,சான்னி,சாந்தி என்பதாகும். ஐந்தாவது மகளின் பெயர் என்ன?
சாளினி.
15.சீப்பு வாங்க கடைக்கு வந்த வாய் பேச முடியாத ஒருவர் , சைகையால் விற்பனையாளருக்கு காட்டி சீப்பை வாங்கி சென்றார். அடுத்து கண் தெரியாத ஒருவர் கண்ணாடி,Sun glasses, வாங்க வந்தார்.அவர் எப்படி சைகையால் விற்பனையாளருக்கு காட்டி பொருளை வாங்கி இருப்பார்?
அவர் சைகையால் ஏன் கேட்கிறார்.தன் வாயினாலேயே கேட்டிருப்பாரே.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொது அறிவில் பொது 3 Empty Re: பொது அறிவில் பொது 3

Post by மாலதி Mon Oct 01, 2012 5:02 pm

பொது அறிவில் பொது 3 917304 பொது அறிவில் பொது 3 917304அருமை .....சக்தி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பொது அறிவில் பொது 3 Empty Re: பொது அறிவில் பொது 3

Post by d.anburaja Sat Oct 06, 2012 8:35 pm

super
d.anburaja
d.anburaja
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 29/09/2012
Location : india

http://dha.raja26@gmail.com

Back to top Go down

பொது அறிவில் பொது 3 Empty Re: பொது அறிவில் பொது 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum