TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி!

Go down

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! Empty செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி!

Post by Tamil Wed Mar 30, 2016 9:21 pm

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி!
செலவு
தொழிலாளர்கள்கூட இல்லை… உற்பத்தி, விற்பனை, மார்க்கெட்டிங், பேலன்ஸ் ஷீட், ஆடிட்டிங் என கம்பெனிகளுக்கான தலைவலிகள் எதுவும் இல்லை. வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை இரைத்துவிட்டு, ஐந்தாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியை அள்ளலாம் என்பதுதான் பொலிட்டிக்கல் பிசினஸ் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை பணநாயகம் சூறையாட தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பறக்கிறது. தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கிறது. கூட்டணி பேரங்கள் நடந்துவருகின்றன. நேர்காணல்கள் சடங்குகள் எல்லாம் முடிந்து விட்டன. இந்த சம்பிரதாயங்களைத் தாண்டி ‘ஓட்டுக்குப் பணம் மற்றும் பொருட்கள்’ தருவதையும் திரைமறைவில் தொடங்கி விட்டன கட்சிகள்.
தேர்தல் ஆணையமும் அதிகளவில் பணம் கொண்டு செல்வதையும், பணப் பரிமாற்றம் நடப்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அது என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேலையைத் தேர்தலுக்குமுன் எப்படியோ வெற்றிகரமாக நடத்திவிடு கின்றன. அந்தத் தில்லாலங்கடி வேலையை அரசியல் கட்சிகள் எப்படித்தான் காதும் காதும் வைத்த மாதிரி கச்சிதமாக செய்து முடிக்கின்றன என்பது உலக மகா ரகசியம்.
ஒரு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்கின்றன, இந்தப் பணத்தை அரசியல் கட்சிகள் எங்கிருந்து எடுக்கின்றன, இப்படி செலவு செய்யும் பணம் மீண்டும் அந்தக் கட்சிக்கு திரும்பக் கிடைக்குமா என்பதெல் லாம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கே தெரிந்த மனக்கணக்கு. அந்தக் கணக்கின் விடை தேடி நாமும் புறப்பட்டோம்.
திருமங்கலம் ஃபார்முலா!
திமுக சின்ன லெவலில் தொடங்கி வைத்த ‘திருமங்கலம் ஃபார்முலா’ இப்போது ஒவ்வொரு பெரிய தேர்தலிலும் மிகப் பெரிய லெவலில் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் ரூ.2,000 வரை வாக்காளர்களுக்குக் கொடுப்பது ஒவ்வொரு தேர்தலிலும் நடப்பதுதான். இதற்காக எவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் ஓட்டுரிமை உள்ளவர்கள் 5 கோடிக்கும் மேல். ஓட்டுரிமை உள்ள வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் சரி, அனைத்துக் கட்சிகளும் ஓட்டுரிமை உள்ளவர் களுக்குக் ‘கொடுக்க வேண்டியதைக் கொடுத்து’ தங்களுக்கு ஓட்டுப் போடுமாறு கேட்பது வழக்கமாகிவிட்டது.
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை பெரிய கட்சிகள்தான் செய்கிறது என்று நினைக்கக் கூடாது. சிறிய கட்சிகள்கூட அவர்களின் ‘வசதி’க்கேற்க கொடுக்கத்தான் செய்கிறது. இந்த சிறிய  கட்சிகள் தங்களுக்கு வெற்றி சாதகமாக உள்ள சில தொகுதிகளில் மட்டும் செய்கின்றன. பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் இல்லாமல் போனதுக்கு கரன்சிகள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். பணம் தரவில்லை என்பதனால் நமக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! %E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-244x300

ஒரு கட்சி, ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 வீதம் தருகிறது என்று கணக்கிட்டால், 5 கோடி வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணம் தோராயமாக ரூ.10,000 கோடி! மாநிலம் முழுவதும் ஓட்டுப்பதிவு என்பது 70% வரைதான் எட்டும். ஆனால், ஒவ்வொரு தொகுதிக்கும் கணக்கில் 45 சதவிகிதத்தில் தொடங்கி 60% வரையில்தான் இருக்கும். அதனால் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் அத்தனை வாக்காளர்களுக்கும் பணத்தை இரைத்துவிட மாட்டார்கள். சுமார் ஐம்பது சதவிகிதத்துக்கும் கீழேதான் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் பாயும். அதுவும் கட்சிக்காரர்கள், நேர்மையானவர்கள் என வடிகட்டி விட்டு, ஏழைகள், பணத்துக்காக ஏங்குபவர்களுக்கு மட்டுமே அந்தப் பணம் போய்ச் சேரும். அந்த வகையில் பார்த்தால், ரூ.10,000 கோடிக்கு கீழேதான் கரன்சிகள் பாயும்.
ஆனால் பிரசாரம், பண விநியோகிக்கும் ஆட்கள், விளம்பரம் ஆகியவைகளுக்கு ஆகும் செலவுகளைச் சேர்த்தால், ரூ.10,000 கோடியை எட்டிவிடும். 10,000 கோடி ரூபாயா என்று வியக்காதீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த பணத்தை ஒன்றுக்கு இரண்டாக எடுத்துவிடுகின்றன அரசியல் கட்சிகள்.

கமிஷனோ கமிஷன்!  

ஓட்டுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது பற்றியும் இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து கட்சிகள் தேர்தல் சமயத்தில் கொண்டு வந்து கொட்டுகின்றன என்பது பற்றியும் சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவிடம் கேட்டோம்.

“இது ஊருக்கே தெரிந்த விஷயம். கட்சிக்காரர்களுக்குப் போஸ்டர் ஓட்டுவது மட்டும் வேலையல்ல; வாக்காளர்களிடம் பணத்தைக் கொண்டு சேர்ப்பதும் அவர்களுடைய வேலைதான். இங்கு அடிமட்டத்தில் ஒரு டிரைவர் வேலைக்கு லஞ்சம் கொடுப்பதில் இருந்து, பெரிய பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட்டுகள், கல்வித் துறை, ரோடு கான்ட்ராக்ட், கார்ப்பரேஷன், பணி நியமனம், அரசு ஊழியர்கள் இடமாற்றம் என்று எல்லாத் துறையிலும் லஞ்சம் தருவது இன்று நேற்றல்ல, காலங்காலமாக நடக்கிறது.
இதனால்தான் ராஜாஜி, பொதுப்பணித் துறையைத் தன்னுடைய இரண்டாம் எதிரி என்று குறிப்பிட்டார். அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள் மட்டும் வாங்கிக் கொண்டிருந்தது, இன்று அடிமட்டத்திலிருந்து உறிஞ்ச தொடங்கி இருக்கிறது. இப்படி உறிஞ்சப்படும் ஒட்டுமொத்த ஊழல் மற்றும் லஞ்சப் பணமும், மையப்படுத்தப் பட்ட ஊழலின் அடிப்படையில் ஆட்சியிலுள்ள கட்சிக்கு குவிகிறது. அதன்பிறகு கட்சிகாரர்களுக்குப் பிரித்து அளிக்கப்படும். அவர்களுக்குப் போக, தேர்தல் செலவுகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தைக் கட்சிக் காரர்கள் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று கொடுக்கிறார்கள்” என்றார்.
இந்த 10,000 கோடி ரூபாயையும் தொகுதி வாரியாகப் பிரித்து, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்காத வகையில் 234 தொகுதியிலும் உள்ள கட்சித் தொண்டர்களை வைத்தே இந்தப் பணம் பிரித்து தரப்படுவதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்சிப் பிரமுகர்களுக்கு சராசரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை பிரிக்கப்பட்டு அவர்களுக்கான தொகையைக் கொடுத்து பட்டுவாடா செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! P12a
அன்று இருட்டில், இன்று வெளிச்சத்தில்!  
ஜனநாயகத்தை வேரருக்கும் இந்த பணநாயகத்தை பற்றி காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் தமிழருவி மணியனிடம் கேட்டோம்.
“எம்.எல்.ஏ., எம்.பி சீட்டுக்கு தரும் தொகையை வைத்து எல்லாம் தேர்தல் செலவை முடித்துவிட முடியாது. கடந்த ஆட்சியில் கட்சிகள் ஊழல் செய்து சேர்த்த பணம்தான் பெரும்பாலும் செலவு செய்யப்படும். சேர்த்த பணத்தை அப்படியே கொடுக்கிறதா என்று நினைக்க வேண்டாம், கொடுப்பதே சேர்ப்பதற்காகத்தான். லஞ்சம் தராமல் அரசில் ஒருவேலையும் நடக்காது. திமுக தொடங்கிவைத்த இந்த லஞ்சத்தை, அதிமுக உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. திமுகவில் சில துறைகளில் ஊழல் உச்சத்தில் இருக்கும். ஆனால், அதிமுகவில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று சொல்லலாம். திமுக இருட்டில் செய்ததை, அதிமுக பட்டப்பகலில் செய்கிறது.
ஆனால், காசு வாங்கிக் கொண்டு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்வதைவிட வேறொரு பொய் இருக்கவே முடியாது. வாக்காளர்கள் மிகத் தெளிவானவர்கள். அவர்கள் முன்பே முடிவு செய்தவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். ஆனால், ஓட்டுக்குக் கட்சிகள் கொடுக்கும் பணம், தங்களிடமிருந்து திருடிய பணம் என்பதால், எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் வாங்கிக்கொள்கிறார்கள்” என்று கூறினார்.
ஓட்டுக்காக தரப்படும் பணம் தமிழகத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் தரப்படும் என்று சொல்ல முடியாது. கட்சி சாராதவர்களுக்கே இந்த பணம் தரப்படும். அப்போது ரூ.10,000 கோடிகூட செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது பெரிய கட்சிக்கு.

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! P12b
கதறும் கான்ட்ராக்டர்கள்!
கட்சிகளுக்கு முறைகேடாக கிடைக்கும் பணம் முழுவதும் பெரும்பாலும் கான்ட்ராக்ட்டுகள், டெண்டர்கள் மற்றும் பணியிட மாற்றங்கள், நியமனங்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக, பொதுப்பணித் துறையில், எந்தப் பணி செய்வதாக இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில், 45% வரை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.
இது பற்றி கான்ட்ராக்டர் ஒருவரிடம் கேட்டோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், பொதுப்பணித் துறை அல்லது நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட் என்றால் யாருக்கு எவ்வளவு சதவிகிதம் தரவேண்டும்  என்பதையெல்லாம் விவரமாகக் கூறினார்.
“நெடுஞ்சாலையில் ஒரு பிரிட்ஜுக்கு கான்ட்ராக்ட் எடுத்தால், அது தொடர்பான அமைச்சருக்கு மட்டுமே 8.5% கொடுக்க வேண்டும். பின்னர் எம்.எல்.ஏவுக்கு 3%, வட்டம் மற்றும் மாவட்டம் ஆகியோருக்கு தலா 2%, அமைச்சருடைய பிஏவுக்கு 1% என தந்தால்தான் காரியம் நடக்க ஆரம்பிக்கும். இதன்பிறகு அதிகாரிகள், சீஃப் இன்ஜினீயருக்கும், சூப்ரண்டன்ட் இன்ஜினீயருக்கும் தலா 1 சதவிகிதமும் தரவேண்டும்.

இதையெல்லாம் பைசல் பண்ணிய பிறகுதான் எங்களால் வேலையில் கைவைக்கவே முடியும். அதன்பிறகு, ஏஇ, ஏடிஇ, டிஇ ஆகியோருக்கு தனித்தனியே 2%, குவாலிட்டி கன்ட்ரோல் அதிகாரிக்கு 1%, பிறருக்கு மொத்தமாக 1% என கொடுக்க வேண்டும்.  இதுவே தார் ரோடு போடும் கான்ட்ராக்ட்டுக்கு அமைச்சருக்கு 14.5% சொலையா தரவேண்டும். அடுத்து எம்.எல்.ஏ, வட்டம் மற்றும் மாவட்டம் ஆகியோருக்கு மொத்தமாக 5% தரவேண்டும். மற்ற அதிகாரிகளுக்கு முன்பு சொன்னது போலவே கொடுக்க வேண்டும்.
பொதுப்பணித் துறையை எடுத்துக் கிட்டிங்கன்னா, அமைச்சருக்கு 11.5% பிற எம்எல்ஏ, வட்டம், மாவட்டம் எல்லாருக்கும் சேர்த்து 8 % கொடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வழக்கம் போல.

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! P13a
இப்படி கான்ட்ராக்ட் ஒதுக்கீடுல கிட்டதட்ட 30 சதவிகிதம் வரைக்கும் கொடுத்துட்டு மிச்சம் இருக்கிற 70 சதவிகிதப் பணத்துல வேலைகளைத் தரமா செய்யணும். நாங்க காசுல குறியா இருந்தா இப்ப கட்ற பிரிட்ஜெல்லாம் வர்ற போற லாரிகளின் லோடு தாங்க முடியாம லொடக்குன்னு  விழுந்துடும். அதனால பிரிட்ஜ், ரோடு கான்ட்ராக்டல எல்லாம் காசு மிஞ்சறதே கஷ்டம். முன்னபின்ன தெரியாம கான்ட்ராக்ட் எடுத்தா, லாபம் எதுவும் கிடைக்காம அடுத்து கான்ட்ராக்ட் எடுக்கவே மாட்டாங்க’’ என்று கூறினார்.
பொதுப்பணித் துறை விடும் பல டெண்டர்களில் அதிகபட்சமாக 30% கமிஷன் வசூலிக்கப்பட்டாலும், சில டெண்டர்களுக்கு 45% வரையிலும் கமிஷன் வசூலிப்பதாக சொல்கிறர்கள்.
சில கான்ட்ராக்டர்கள், கமிஷன் அதிகமா இருக்கே என சில அமைச்சர்களிடம் முனகி இருக்கிறார்கள். ‘‘அய்யா, உங்களுக்கு கட்டுப்படியான பண்ணுங்க. இல்லாட்டி விட்டுருங்க. உங்களுக்கு குடுத்த ரேட்டைவிட இன்னும் கம்மியான ரேட்ல வேலை செஞ்சு குடுக்குறதுக்கு ஆளுங்க நெறைய இருக்காங்க!’’ என்று பதில் வந்ததும் வாயை மூடிக் கொண்டார்களாம் கான்ட்ராக்டர்கள்.
மதுரையில் அதிமுக பிரமுகர்களின் சிபாரிசில் கான்ட்ராக்ட், டெண்டர் எடுத்து வேலை செய்யும் ஒருவரிடம் அவர் தருகிற கமிஷன் பற்றி கேட்டோம். தான் யார் என்று சொல்ல விரும்பாத அவர் தந்த கணக்கு இதோ.
“அரசு டெண்டர்கள் என்பதெல்லாம் ஒரு கண் துடைப்புதான். கட்சிகாரர்களுக்கு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குதான் டெண்டர் கிடைக்கும். அதுவும் டெண்டர் விடறதுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிடும். சும்மா நான்கு, ஐந்து பேர் டெண்டர் லிஸ்ட்டில் இருப்பது போல் காட்டப்படும். ஆனால், முன்பே முடிவு செய்யப்பட்ட நபருக்குத்தான் டெண்டர் போகும். முறைப்படி விளம்பரமும் தரப்படுவது இல்லை. அனைத்தும் மறைமுகமாகவே நடக்கும்.
கட்சிக்காரர்களுக்கு மட்டுமே 30 சதவிகிதத்துக்கு குறையாமல் கொடுக்கப்படும். இதுபோக அதிகாரிகள், அனைத்தையும் அப்ரூவ் செய்வது, பில் கொடுப்பது ஆகியவை இவர்கள் கையில் இருப்பதால், எங்களால் தப்பவே முடியாது. தரம் சரியாக இல்லையே என்று இழுத்தாலே, கொடுக்க வேண்டியதைக் கொடு என்றுதான் அர்த்தம். பணத்தைச் சரியாக கொடுத்துவிட்டால், ‘ஆஃப்’ ஆகிவிடுவார்கள். அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் கூட நாம் தேடிப் போய் பணம் கொடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி தீபாவளி, பொங்கல் என்று எல்லா விழா நாட்களிலும் அவர்களைத் தனியாக கவனிக்க வேண்டும். இல்லை என்றால் வேலையையே பல மாதங்களுக்கு நிறுத்தி விடுவார்கள். அதுவும் தேர்தல் நெருங்கிவிட்டால் போதும், நம்மை கொக்கி போட்டு தூக்கிவிடுவார்கள்.

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! P14a
மற்றொரு கான்ட்ராக்டரிடம் பேசியபோது, பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய ஐந்து மாதங்களில் கான்ட்ராக்ட்டுகள் அதிகம் விடப்படுவதாகக் கூறினார். “தேர்தல் சமயத்தில் வேக வேகமாக கான்ட் ராக்ட்டுகள், டெண்டர்கள் விடப்படும். ஆனால், அவை பெரும்பாலும் விளம்பரம் வெளியிடப்படாமல் வருபவை. அப்போதுதான் அவர்கள் பணம் ஒதுக்கீடு செய்து, அதிலிருந்து பெருந்தொகையை அடித்து கல்லாவும் கட்ட முடியும்.
அதிகமாக பணம் புரளும் டிபார்ட்மென்ட் என்று சொன்னால், அது பொதுப்பணித் துறை, கார்ப்பரேஷன் மற்றும் வடிகால் நீர் வாரியம் போன்றவைதான். அங்கேதான் அதிகமாக பைப் வாங்கினோம், அது வாங்கினோம், இது வாங்கினோம் என்று கணக்கு காட்ட முடியும். என்னதான் நாம் வேலை செய்து முடித்தாலும் அவர்களுக்கு பணம் தந்்தால்தான் கையெழுத்து போடுவார்கள்’’ என்றார் அந்த நபர்.
கான்ட்ராக்டர்கள் இப்படி புலம்பினாலும், கான்ட்ராக்ட்டுகளை எடுக்க போட்டா போட்டி நடப்பதால் வழக்கமாக கொடுக்கும் கமிஷன் தொகை அதிகரிக்கத்தான் செய்கிறது  என்கிறார்கள். ஒப்பந்தத் தொகையில் சுமார் 30%  கமிஷனாக தந்தால், அந்தக் கட்டுமானத்தின் லட்சணம் எப்படி இருக்கும்?
ஐந்து ஆண்டுகளில் ரூ.60 ஆயிரம் கோடி! 
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை, போக்குவரத்து துறை, இந்து அறநிலையத் துறை என்று கமிஷன் இல்லாத துறையே இல்லை. அடிமட்டத்திலிருந்து தலைமையிடம் வரையிலும் லஞ்சம் புரையோடிப் போயிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் சராசரியாக 10-லிருந்து 30% வரை கமிஷன் புழங்குவதாக கணக்கு சொல்கிறார்கள்.
பொதுப் பணித்துறை அரசு சார் கட்டுமானங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய பணிகளை உள்ளடக்கியது. கடந்த 2015-16 பட்ஜெட்டில் இவை சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து (பார்க்க பக்கம் 12, 13, 14, 15) குறைந்தபட்சம் 30% வரை கமிஷன் என்றால்கூட ரூ.9,000 கோடி கமிஷன் கிடைக்கும்.

செலவு ரூ.10,000 கோடி, வரவு ரூ.60,000 கோடி! P14b
தவிர, உணவு, எரிவாயு, வேளாண்துறை பொருட்கள் போன்றவற்றை மானியம் மூலம் வழங்க ஏறக்குறைய ரூ.59,185.47 கோடி  ஒதுக்கப் பட்டது. மேலும், இலவச பொருட்கள் வழங்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் குறைந்தபட்சம் 10% ஊழல் நடந்தாலும், ரூ.7,000 கோடி வரவாக கிடைக்கும்.
இது தவிர, அரசு ஊழியர்கள் இடமாற்றம், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி களுக்கான அனுமதி என பல்வேறு துறைகள் மூலமாக கிடைக்கும் ‘வருமானம்’ என அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் வருவாய் ரொம்பவே நீளம். ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 கோடி ஆளுகிற கட்சிக்கு கமிஷனாகவும் லஞ்சமாக வும்  கிடைக்கும் எனில், ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் சுமார் ரூ.60,000 கோடி கிடைக்கும். ரூ.60,000 கோடி  சம்பாதிக்க ரூ.10,000 கோடி செலவு செய்ய அரசியல் கட்சிகள் யோசிக்கவா போகின்றன?
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே,  ஆட்சியைப் பிடிக்க ஏன் இத்தனை போராட்டம் என்று!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum