TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் !

Go down

வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் ! Empty வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் !

Post by ஜனனி Fri Dec 13, 2013 8:29 am

வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் !
வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் ! 1468760_640518572678785_2050592290_n
வட மாகாண சபையின் அமர்வுகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சிற்கான விவாதங்கள் நடைபெறவுள்ளது.
வட மாகாண சபையின் மூன்றாவது நாள் அமர்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. மீன் பிடி அமைச்சிற்கான விவாதம் நடைபெற்று மீன்பிடி அமைச்சுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக எதிர்ப்புகள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சிற்கான விவாதம் நடைபெற்று அந்த அமைச்சின் ஒதுக்கீடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் ! 1504071_640518582678784_1054572949_n
மேலும் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியன சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளில் அதிரடி அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாகக் கடமையாற்றிய முன்னாள் தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் ஒரேயடியாக 4,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 462 பேர் பயனடைவர்.

வடக்கைச் சேர்ந்த கலைஞர்கள் 50 பேருக்கு அடுத்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த 3,000 ரூபா கொடுப்பனவு நவம்பர் மாதத்திலிருந்து மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 1,800 பேர் பயனடைவர்.

வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று நடந்தது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட்டன.
வட மாகாண சபை : 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! அதிரடி அறிவிப்புக்கள் ! 988834_640518632678779_1324718443_n
அலுவலர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் படிகள், எரிபொருள், மின்சாரம், தொலை பேசிக்கட்டணங்கள், போக்கு வரத்துப்படிகள் என்பனவற்றை உள்ளடக்கிய மீண்டுவரும் செலவினமாக 6 ஆயிரத்து 424 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாகாண கல்வி அமைச்சுக்கு 206 மில்லியன் ரூபாவும், மாகாண கல்வித் திணைக் களத்துக்கு 6 ஆயிரத்து 182 மில்லியன் ரூபாவும், விளையாட்டுத் திணைக்களத்திற்கு 36 மில்லியன் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மூலதன செலவினத்தில் மாகாண கல்வி அமைச்சுக்கு 200 மில்லியன் ரூபாவும், விளையாட்டுத் திணைக்களத்திற்கு 14 மில்லியன் ரூபாவும், கலாசார பிரிவிற்கு 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்: 

தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பில் முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

நிறைவான திட்டமொன்று தயாரிக்கப்பட்டு அது முன்னெடுக்கப்படும். உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மீண்டும் கொடுப்பனவு. மாகாணமட்ட கண்காட்சி, கலைவிழா, கோட்டமட்ட, மாவட்டமட்ட விளையாட்டு விழாக்கள், ஆசிரியர்களுற்கான பயிற்சி, முன்பள்ளி முகாமைத்துவ குழுக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

வடக்கில் உள்ள 34 பிரதேச செயலகங்களிலும் கலாசார வேலைத்திட்டத்திற்காக தலா 5 லட்டசம் ரூபாவழங்கப்படும். கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 50 கலைஞர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா. கலைத்துறையில் தேசிய மட்டத்தில் சிறப்பான அடைவு மட்டத்தினைப் பெறும் மாணவர்கள், சிறப்பான முறையில் கலைத்துறைக்கு பங்காற்றி வரும் ஆசிரியர்களுக்கான இந்திய கல்விச் சுற்றுலா. புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 4 ஆயிரத்து 500 பேருக்கு தலா 500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கின் முதலாம் கட்ட வேலை, வவுனியா மாவட்டத்தில் கபடி விளையாட்டிற்கான மைதானம் மறுசீரமைப்பு, மன்னார் மாவட்டத்தில் பொது மைதான உள்ளக விளையாட்டரங்கின் மிகுதி வேலைகள், யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளக விளையாட்டு அரங்கின் வேலைத் திட்டங்கள் என்பவற்றிற்காக 14 மில்லியன் ஒதுக்கீடு. கிளிநொச்சி மாவட்டத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான முதல் கட்ட வேலைகளுக்காக 4 மில்லியன் ஒதுக்கீடு.

போதாத ஒதுக்கீடுகளும் முன்மொழிவுகளும் பாடசாலைகளில் சிறு திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு 42 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. ஆனால் 200 மில்லியன் ரூபா தேவை. பாடசாலைகளின்

மின் கொடுப்பனவுகளுக்காக 10.8 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. இதன் இரு மடங்கு தேவை. ஆசிரியர்களின் சம்பள நிலுவைக்கு 100 மில்லியன் ரூபா தேவை. ஆசிரியர் இடர் கடன் கொடுப்பனவுகளை மேற்கொள்ள 100 மில்லியன் தேவை. 12 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடங்களின் நிர்மானம் மற்றும் மறுசீரமைப்புக்கும் ஆசிரிய விடுதி அமைத்தல் போன்ற அவசிய வேலைகளுக்கும் மேலும் 500 மில்லியன் ரூபா தேவை.

விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் போன்ற வேலைத் திட்டங்களுக்காக மேலும் 100 மில்லியன் தேவை. கலாசார மண்டபம் அமைத்தல், அரும்பொருட் காட்சியகத்தினை உருவாக்குதல் போன்ற வற்றிற்கு 100 மில்லியன் ரூபா தேவை.

போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் இணைப்பு

வடமாகாண சபையின் கன்னி வரவு செலவு திட்டம் மற்றும் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு எதிர்ப்புக்கள் இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 2014ம் ஆண்டில் மாகாணசபையினால் விசேடமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையின் கன்னி வரவு செலவு திட்டம் கடந்த 10ம் திகதி முதலமைச்சரும் மாகாண நிதி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றும், இன்றும் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை மீதான குழுநிலை விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதன் பின்னர் இரு அமைச்சுக்களுக்குமான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சபையினால் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் எதிர்ப்புகள் எவையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது.

நிறைவாக 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் எதிர்ப்புகள் எவையுமில்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி. யானை பசிக்கு சோளப் பொரி இட்டதைப் போன்று அமைந்திருப்பதாக சபையில் கூறப்பட்டபோதும் இருக்கும் நிதியினை கொண்டு மக்களுக்காக தொடர்ந்தும் ஆக்கபூர்வமான சேவையினை வழங்குவோம் என அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum