TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆட்டு இறைச்சி

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் புளிக்குழம்பு

Post by Tamil Thu Jan 07, 2010 10:26 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டுகறி- அரைக்கிலோ
  • கத்திரிக்காய்- கால்க்கிலோ
  • புளி- சிறிய எலுமிச்சையளவு
  • வெங்காயம்- ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது- தலா ஒருதேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்-ஒரு மேசைக்கரண்டி
  • தனியாத்தூள்- ஒரு தேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-அரைத்தேக்கரண்டி
  • மிளகு சீரகத்தூள்- தலா அரைத்தேக்கரண்டி
  • சோம்பு-அரைத்தேக்கரண்டி
  • காய்ந்தமிளகாய்-நான்கு
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • உப்புத்தூள்- இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய்- கால் கோப்பை




செய்முறை




  • கறியை
    சிறியத்துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து,அதில் மஞ்சத்தூள் மற்றும்
    அரைத்தேக்கரண்டி உப்பைச் சேர்த்து ஒரு கோப்பை நீரை ஊற்றி குக்கரில்
    வேகவைத்துக் கொள்ளவும்.
  • புளி, இரண்டு கோப்பை கரைசல் வருமாறு கரைத்துவைக்கவும்.
  • கத்தரிகாயை நான்காகவும்,வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.
  • ஒரு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், சோம்பு கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
  • பிறகு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் வேகவைத்த கறியை போட்டு இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
  • அதை தொடர்ந்து கத்திரிக்காயை போட்டு எல்லாத்தூளையும் சேர்த்து கிளறிவிட்டு புளிக்கரைசல், மற்றும் கறி வெந்த சூப்பையும் ஊற்றவும்.
  • எல்லாவற்றையும்
    நன்கு கலக்கிவிட்டு உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும், குழம்பு நன்கு
    கொதித்தவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைக்கவும்.
  • காய்கள் நன்கு வெந்து எண்ணெய் மேலே தெளிந்ததும் இறக்கிவிட்டு நன்கு ஆறியப்பின்பு பரிமாறவும்.





வழங்கியவர்


மனோகரி





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



5-6 நபர்களுக்கு

15 நிமிடங்கள்

40 நிமிடங்கள்

Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கறி பொடிமாஸ்

Post by Tamil Thu Jan 07, 2010 10:26 pm

தேவையான பொருட்கள்




  • கறித்துண்டுகள்- கால் கிலோ
  • பொடியாக அரிந்த வெங்காயம்-2 கப்
  • பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-5
  • மிலகு- அரை ஸ்பூன்
  • சீரகம்- அரை ஸ்பூன்
  • சோம்பு- ஒன்றரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
  • பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
  • தேங்காத்துருவல்-அரை கப்
  • முட்டை- 1
  • தேவையான உப்பு
  • எண்ணெய்- 4மேசைக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்





செய்முறை




  • கறித்துண்டுகளை நன்கு கழுவி சிறிது நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு கலந்து வேகவைத்துக் கொள்ளவும்.
  • அம்மியில் மசாலா சாமான்களை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு இஞ்சி பூண்டு விழுது, கறி சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில்
    எண்னெய் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
    இடித்த கறியை சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறவும். பின் அடித்த
    முட்டையை சேர்த்துக் கிளறவும். இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து
    கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கவும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் சுக்கா வறுவல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:27 pm

இதை ரூர் போகும் போது புளி சாதத்துடன் கொண்டு போகலாம் கெட்டு போகாது.








தேவையான பொருட்கள்




  • மட்டன் - கால் கிலோ (எலும்பில்லாதது)
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • தனியாதூள் - கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • எண்ணை - இரண்டு - தேக்கரண்டி
  • பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி
  • கொத்த்து மல்லி தழை - சிறிது
  • லெமென் ஜூஸ் - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒன்று சிறியது




செய்முறை




  • மட்டனை
    கழுவி சுத்தம் செய்து மிகச்சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை நன்கு வடித்து
    அதில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு,மஞ்சள் தூள்,உப்பு,தனியாதூள் அனைத்தும்
    போட்டு ஒரு டம்ளர் தண்னீரும் ஊற்றி வெளியிலேயே சிம்மில் வைத்து வேக
    விடவும்.
  • வெந்தததும் தண்ணீர் முழுவதும் நல்ல சுருளவிட்டு இரக்கவும்.
  • ஒரு
    இரும்பு வானலியில் எண்ணை + பட்டரை ஊற்றி அதில் பட்டையை போட்டு வெடித்ததும்
    அதில் வெந்த மட்டனை போட்டு நல்ல வறுத்து இரக்கும் போது லெமென்
    ஜூஸ்,கொத்துமல்லிதழை தூவி இரக்கவும்.





குறிப்பு:


குழந்தைகளுக்கும் சின்ன துண்டுகளாக எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும்.




வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

10 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் குழம்பு

Post by Tamil Thu Jan 07, 2010 10:28 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் -- 1/2 கிலோ (சுத்தம் செய்தது)
  • சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டமாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் -- 3 என்னம் (நீளமாக கீறியது)
  • இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
  • பூண்டு -- 10 பல் (நசுக்கியது)
  • தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
  • சாம்பார் பொடி -- 2ஸ்பூன்
  • அரைக்க:
  • தேங்காய் -- 1 துண்டு
  • மிளகு -- 3/4 டீஸ்பூன்
  • சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • சோம்பு -- 1/4 டீஸ்பூன்
  • கசகசா -- 1/4 டீஸ்பூன்
  • முந்திரி பருப்பு -- 10 என்னம்
  • தாளிக்க:
  • பட்டை -- 1 அங்குலம் அளவு
  • கிராம்பு -- 4 என்னம்
  • அன்னாசிப்பூ -- 1 என்னம்




செய்முறை




  • குக்கரில் 1 ஸ்பூன் எண்ணைய் விட்டு கறியுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவிடவும்.
  • பாதி வெந்த பின் சாம்பார் பொடி போட்டு 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
  • ஒரு கொதி வந்ததும் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
  • வாணலியில்
    எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவை களை தாளித்து தக்காளியை போட்டு நன்கு
    வதக்கி அதை கொதிக்கும் கல்வையில் கொட்டி குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும்
    வெயிட் போட்டு ஹைய்யில் ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 20 நிமிடம்
    வைக்கவும்.
  • குழம்பு ரெடி.
  • இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர்..
  • மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்





குறிப்பு:


இது இட்லிக்கு வைக்கும் குழம்பு. தண்ணி குழம்பு என்றே பெயர்..
மிகவும் சுவையாக 2 இட்லி கூடவே உள்ளே போகும்




வழங்கியவர்


Subha Jayaprakash -- Dubai





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

25 min

1 hr 20 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)

Post by Tamil Thu Jan 07, 2010 10:29 pm

இது
பெயர் தட்டு கறி, உப்பு கண்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும்
சொல்லலாம்.
முன்பு காலங்களில் ரங்கூன், பர்மா, மலேஷியா நாடுகலுக்கு பொருள் ஈட்ட
செல்லும் போது அங்கு ஹலால் உணவு கிடைக்குமோ இலையோ ஆகையால். நம் நாட்டவர்
கறி, இறால், பீஃப் போன்ற வற்றை பதப்படுத்து அல்லது காய வைத்து கொண்டு
செல்வார்கள் இது எத்தனை நாள் ஆனாலும் கெடாது.








தேவையான பொருட்கள்




  • துண்டு கறி - ஒரு கிலோ
  • உப்பு - இரண்டு மேசை கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
  • மிளகாய் தூள் - நாலு மேசை கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி




செய்முறை




  • கறி
    துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடனும் போட்டு நன்கு கழுவி
    தண்ணீரை வடித்து அதில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு, இஞ்சி
    பூண்டு பேஸ்ட் போட்டு வெறவி பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
  • பிற்கு
    சுத்தமான சணல் கயிறை கழுவி,சுத்தாமான பெரிய கோணி ஊசியில் ஒவ்வொரு கறியா
    கோர்த்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு துணி காய போடும் கொடியில் மாலை போல்
    தொங்க விட்டு வைக்கவேண்டும்.
  • காயவைக்கும் போது கூடவே ஒரு கருப்பு துணி வைப்பார்கல் அது காக்கா வரமால் இருக்க.
  • இப்போது நல்ல பத்து பதினைந்து நாள் காய்ந்த கறியை வீட்டிலும் உபயோகப்படுத்துவார்கள்.
  • வெளி ஊருக்கும் கொண்டு செலவார்கள்.
  • இது பொரிக்கும் போது அத கறிய ஒரு பேப்பரில் வைத்து நல்ல பஜ்ஜி மாதிரி தட்டி பிறகு கொஞ்ச்மா எண்னை வைத்து பொரித்து எடுக்கவேண்டும்.
  • தொட்டுக்க ஒன்றும் இல்லாத போது, திடீர் சமையலுக்கு இது மிகவும் கை கொடுக்கும்.
  • அதை தட்டி பொரிப்பதால் தட்டி பொரித்த கறி என்று பெயர்.





குறிப்பு:

இன்னும்
ஒன்று வருடா வருடம் ஹஜ் பெருநாள் வரும் போது எல்லா வீடுகளிலும் ஆடு
குர்பாணி கொடுப்பார்கள், அப்போது எல்லா வீட்டிலிருந்தும் கறி வந்து
குமியும் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது நிறைய பேர் வீட்டில், ஆகையால்
கூடுமான வரை சமைத்து விட்டு, கொஞ்சம் கறியை உப்பு, மஞ்ச பொடி போட்டு
சுருட்டி வைப்பார்கள். அது மறு நாள் சமைக்க மீதியை முழுவதும் இந்த மாதிரி
காய போட்டு பதப்படுத்தி வைப்பார்கள்.
உப்பு கண்டம் கறி (குர்பாணி கறி)
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் கொத்துக்கறி

Post by Tamil Thu Jan 07, 2010 10:29 pm

தேவையான பொருட்கள்




  • கொத்துக்கறி -- 1/2 கிலோ (உப்பு சேர்த்து வேகவைத்தது)
  • பட்டை -- 1 அங்குலம் அளவு
  • கிராம்பு -- 4 என்னம்
  • கடுகு, உளுந்து -- 1/2டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் -- 4 என்னம்
  • சின்ன வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு
  • மிளகுத்தூள் -- 3/4 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -- 3/4 டீஸ்பூன்
  • சோம்புத்தூள் -- 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் -- ஒரு கையளவு




செய்முறை




  • வாணலியில்
    எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு, கிராம்பு, உளுந்து தாளித்து
    மிளகாய் வத்தல், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி வேகவைத்த கறியை
    சேர்த்து வதக்கவும்.
  • 2 நிமிடம் கழித்து எல்லா பொடிகளையும்
    சேர்த்து கிளறி நன்கு எல்லாம் கலந்து வேகும் வரை வேகவைத்து தேங்காய்
    துருவலை போட்டு 2 நிமிடம் பிரட்டி எடுக்கவும்.
  • ரெடி.





வழங்கியவர்


Subha Jayaprakash -- Dubai





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 min

1 hr 15 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கறி உருண்டை

Post by Tamil Thu Jan 07, 2010 10:30 pm

தேவையான பொருட்கள்




  • கொத்திய கறி- கால் கிலோ
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • வற்றல் மிளகாய்-10
  • கடலைப்பருப்பு- 1 கப்
  • பொட்டுக்கடலை- 1 கப்
  • பூண்டு - 20 பற்கள்
  • கசகசா- 1 ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல்- 1 கப்
  • வதக்கிய வெங்காயம்-1 கப்
  • முட்டை-1
  • தேவையான உப்பு
  • தேவையான எண்ணெய் பொரிப்பதற்கு
  • மஞ்சள்தூள்- 1 ஸ்பூன்





செய்முறை




  • கறி,
    பருப்புகள், மிளகாய், மசாலா சாமான்கள், பூண்டு, தேங்காய் அனைத்தையும் ஒரு
    வாணலியில் போட்டு கால் கப் நீர் விட்டு மிதமான தீயில் வதக்கவும். நீர்
    சுண்டியதும் வதக்கியதை ஆற விடவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள், முட்டை, வதக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • சிறு சிறு உருண்டைகள் உருட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty குடல் தட்டாம்பயறு

Post by Tamil Thu Jan 07, 2010 10:30 pm

தேவையான பொருட்கள்




  • குடல் -- 1/2 கிலோ (நன்றாக சுத்தம் செய்து வேகவைத்தது)
  • தட்டாம்பயிறு -- 200 கிராம் (தனியே வேகவைத்தது)
  • இரத்தம் -- 2 கட்டி (நன்கு கரைத்தது)
  • கடுகு, உளுந்து -- 1/4 டீஸ்பூன்
  • பட்டை -- 1 அங்குலம் அளவு
  • சின்ன வெங்காயம் -- 1 கப் (வட்டமாக நறுக்கியது)
  • பச்சைமிளகாய் -- 4 என்னம் (நீளமாக நறுக்கியது)
  • சாம்பார் பொடி -- 1 ஸ்பூன்
  • அரைக்க:
  • தேங்காய் -- 1 துண்டு
  • சோம்பு -- 1/2 டீஸ்பூன்
  • கசகசா -- 1/2 டீஸ்பூன்




செய்முறை




  • வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து பட்டை போடவும்.
  • பின் வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி அரைத்த கலவையை ஊற்றவும்.
  • அதனுடன்
    வேகவைத்த தட்டாம்பயிறு, குடல் இரண்டையும் போட்டு இரத்தத்தை ஊற்றி கலந்து
    அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு
    எண்ணைய் மேலே மிதந்து வந்ததும் இறக்கவும்.
  • இது சாப்பாட்டிற்கும், தோசை, சப்பாத்தி, பரோட்டாவிற்கும் ஏற்றது.





வழங்கியவர்


Subha Jayaprakash -- Dubai





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

1 hr

45 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty உப்பு கறி

Post by Tamil Thu Jan 07, 2010 10:31 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் -- 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் -- 100 கிராம்
  • பச்சை மிளகாய் -- 10 என்னம்
  • கறிவேப்பிலை -- 2 இனுக்கு
  • அரைக்க:
  • தேங்காய் -- 1 துண்டு
  • மிளகு -- 1 டீஸ்பூன்
  • சீரகம் -- 3/4 டீஸ்பூன்
  • சோம்பு -- 1/2 டீஸ்பூன்
  • கசகசா -- 1/4 டீஸ்பூன்
  • முந்திரி பருப்பு -- 10 என்னம்
  • தாளிக்க:
  • கடுகு,உளுந்து -- 1/2 டீஸ்பூன்
  • பட்டை -- 1 துண்டு
  • கிராம்பு -- 4 என்னம்
  • பிரிஞ்சி இலை -- 1 என்னம்




செய்முறை




  • முதலில்
    கறியை சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையுடன்
    சேர்த்து குக்கரில் போட்டு ஒரு வதக்கு வதக்கி எண்ணைய் ஊற்றி உப்பு
    சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவேண்டும்.
  • அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊற்றி குக்கரை மூடவேண்டும்.
  • குக்கரில் 25 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  • கறி நன்றாக பஞ்சு போல வெந்து இருக்கும்.
  • உப்பு கறி ரெடி.





குறிப்பு:


சாதம், சப்பாத்தி, பரோட்டாவிற்கு நன்றாக இருக்கும்.



வழங்கியவர்


Subha Jayaprakash -- Dubai





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

15 min

45 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் கைமா ரொட்டி

Post by Tamil Thu Jan 07, 2010 10:33 pm

தேவையான பொருட்கள்




  • கோதுமை மாவு - 200 கிராம்,
  • கொத்தின ஆட்டுக்கறி - 1/4 கிலோ,
  • பெரிய வெங்காயம் - 1,
  • பச்சை மிளகாய் - 2,
  • மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
  • கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி,
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
  • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
  • உப்பு - தேவையான அளவு.




செய்முறை




  • கொத்தின ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ப்ரஷர்
    பேனில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் கரம் மசாலா, மிளகு தூள், கழுவிய மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் உப்பு, 1/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி, 3 விசில் விடவும்.
  • ஆறியதும் திறந்து, அதனுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசையவும்.
  • எழுமிச்சையளவு
    உருண்டைகளாக எடுத்து, லேசாக மாவு தொட்டு, சிறிது மொத்தமாக தேய்த்து,
    தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.





குறிப்பு:


மட்டன் கலவையில் தண்ணீர் அதிகமிருந்தால், சிறிது நேரம் அடுப்பில் வைத்து, கலவை திக்கானதும், மாவு சேர்த்து பிசையவும்.




வழங்கியவர்


இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



2 நபர்களுக்கு.

20 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty ஆந்திரா நல்லி எலும்பு கறி

Post by Tamil Thu Jan 07, 2010 10:33 pm

ட்டு நல்லி எலும்பை வைத்து ஆந்திராவில் செய்யும் ஒரு கிரேவி.






தேவையான பொருட்கள்




  • ஆட்டு நல்லி எலும்பு - 15,
  • பெரிய வெங்காயம் - 1/2 கிலோ,
  • தக்காளி - 5,
  • தயிர் - 1/2 கப்,
  • இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி,
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி,
  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • கொத்தமல்லி - 1 கைப்பிடி.
  • தாளிக்க:-
  • ========
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி,
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 5,
  • ஏலக்காய் - 4,
  • பிரிஞ்சி இலை - 2,




செய்முறை




  • தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
  • வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறி சேர்த்து வதக்கவும்.
  • கறி நன்கு வதங்கியதும் உப்பு, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 10,12 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.
  • ஆறியதும் திறந்து தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து தக்காளி நன்கு வெந்து, எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும்.
  • நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.





குறிப்பு:


சாதத்தில் கலந்து சாப்பிட, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.




வழங்கியவர்


இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு.

45 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் சாப்ஸ்

Post by Tamil Thu Jan 07, 2010 10:35 pm

தேவையான பொருட்கள்




  • கறி - அரை கிலோ
  • இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
  • பச்சமிளகாய் - இரண்டு
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • தனியாதூள்- ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணை - இரண்டு தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது
  • கரம் மசால தூள் - கால் தேக்கரண்டி




செய்முறை




  • கறியை (எலும்பு கறி)நன்றாக கழுவி அதில் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள்,தனியாதூள் சேர்க்கவும்.
  • பச்ச மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்றவும்.
  • மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிடவும்.
  • ஒரு
    இருப்பு தோசை தவ்வா (அ) நான் ஸ்டிக் தோசை தவ்வாவில் எண்ணை ஊற்றி கரம்
    மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து கறியை போட்டு நல்ல சிவற
    வருத்தெடுத்து பரிமாரவும்.இதற்கு எண்ணை அவ்வளவாக தேவையில்லை.





வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



5 person

பதினைந்து நிமிடம்

பதினைந்து நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கொத்து கறி முட்டை பரோட்டா

Post by Tamil Thu Jan 07, 2010 10:36 pm

இஸ்லாமிய இல்லங்களில் மாப்பிள்ளைக்கு வைக்கும் டிபன் வகைகளில் இதுவும் ஒன்று.
கொத்து ரொட்டி முட்டை பரோட்டாவும் ஹரீரா பாலும்.







தேவையான பொருட்கள்




  • மாவு குழைக்க
  • ---------------
  • மைதா மாவு - முன்று பெரிய டம்ளர்
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • சோடாமாவு - ஒரு பின்ச்
  • முட்டை - ஒன்று
  • டால்டா - இரன்டு மேசை கரன்டி (உருக்கியது)
  • முதலில் மேலே குரிப்பிட்ட பொருட்க்களை குழைத்து பத்து உர்ண்டைகள் வரும் அதில் எண்ணை தடவி வைக்கவும்.
  • கீமா தயாரிக்க
  • -------------
  • கீமா - இருநூறு கிராம்
  • வெங்காயம் - கால் கிலோ
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
  • கொத்து மல்லி தழை - அரை கட்டு ( பொடியாக நருக்கியது)
  • பச்ச மிளகாய் - இரண்டு
  • மிளகாய் தூள் - அரை தேக்கராண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தக்காளி - ஒன்று
  • பட்டை - ஒன்று
  • கரம் மாசாலாதுள் - காஅல் தேக்கரண்டி
  • முட்டை - ஒன்று
  • கடசீயில் மாவில் தேய்க்க
  • ------------------------
  • முட்டை - நான்கு
  • லெமென் - ஒன்று
  • மிளகு தூள் - கால் தேக்கரண்டி




செய்முறை




  • கீமாவை நல்ல கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
  • கீமாவில் வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்து மல்லி தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்ஹு சுருட்டவும்.
  • தனியாக
    ஒரு தேக்கரன்டி எண்ணை ஊற்றி ஒரு பட்டை போட்டு வெங்காயம் பசமிளகாய் லேசாக
    வதக்கி கீமாவையும் சேர்த்து கடைசீயில் கொத்து மல்லி கீரை ஒரு முட்டை
    கலக்கி ஊற்றி வதக்கி ஆறவைக்கவும்.
  • மாவில் கலக்க நான்கு முட்டையை நல்ல அடித்து அதில் லெமென் ஜுஸ், ஒரு பின்ச் உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கி வைக்கவும்.
  • ஊறிய
    மாவை ஒவ்வொன்றாக நல்ல் சப்பாத்தி பலகையில் மாவு தடவி பரத்தவும் நல்ல பெரிய
    ரவுண்டு வரும் அதில் கலக்கிய முட்டையை சாப்பாத்தி முழுவது தடவி கீமாகலவையை
    ஒரு மேசைக்கரண்டி வைத்து ரொட்டி முழுவது பரத்தனும் அப்போது தான் எல்லா
    இடட்திலும் பரவும்.
  • வைட்து விட்டு செவ்வக வடுவில் மடிக்கவும்
    இப்ப்டியே பத்து ரொட்டியையும் செய்து ஒரு தட்டில் மாவு தடவி ஒன்றுடன்
    ஒன்று ஒட்டாமல் வைத்து ப்ர்ரிஜரில் வைத்து விடால் தேவைக்கு எடுத்து
    சுடுவதற்கு பத்து நிமிடம் முன் வைத்து சுட்டால் போதும்.
  • சுடும் போது எண்ணையுடன் டால்டா (அ) பட்டர் கலந்து கொள்ளவும்.
  • தவ்வாவில்
    போட்டு இரண்டு பாக்கமும் பொன் முற்வலாக பொரித்து எடுக்குமுன் ஒரு
    பக்கத்தில் தோசை கரண்டியால் குருக்கிலும் நெடுக்கிலும் நீட்டாக கட்
    பன்ணிவிடவும்.பிச்சி சாப்பிடுவதற்கு வசதியாக.
  • இந்த முறயில் முட்டை கொத்து பரொட்டா செய்தால் வாசனை பத்து வீட்டு கதவை தட்டும்.





குறிப்பு:


ரொம்ப ஹெவி மாதத்தில் ஒரு முறை சாப்பிடலாம்.
ஒரு ஆளுக்கு இரன்டு ரொட்டி போதுமானது.இது பெரிய வேலை என்று எண்ணுபவர்கள் டைம் கிடைக்கும் போது செய்து வைத்து கொள்ளுங்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty நுரையீரல் சால்னா

Post by Tamil Thu Jan 07, 2010 10:37 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டு நுரை - ஒன்று
  • வெங்காயம் - மூன்று
  • தக்காளி - ஐந்து
  • மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
  • தனியா தூள் - நான்கு தேக்கரண்டி
  • பச்சமிளகாய் - முன்று
  • உப்பு - உப்பு - தே.அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • தாளிக்க
  • -------
  • எண்ணை - மூன்று தேக்கரண்டி
  • டால்டா - ஒரு தேக்கரண்டி
  • பட்டை - இரண்டு பெரிய துண்டு
  • கிராம்பு - முன்று
  • ஏலம் - ஒன்று
  • வெங்காயம் - அரை
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • கொத்து மல்லி தழை - அரை கட்டு
  • புதினா - கால் கட்டு
  • தேங்காய் - ஒரு சிறிய முறி
  • கத்திரிக்காய் - அரை கிலோ




செய்முறை




  • நுரையை
    நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள்,தனியாத்தூள்,மஞ்சள்
    தூள்,உப்பு, பச்ச மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மூன்று தேக்கரண்டி
    வெங்காயம், தக்காளி நீளமாக அரிந்தது போட்டு வெறவி வைக்கவும்.
  • சட்டியில்
    எண்ணியை காய வைத்து பட்டை,கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் அரை
    வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்து மல்லி புதினா போட்டு தாளித்து
    வெறவி வைத்துள்ல நுரைமசாலாவைபோட்டு கிளறி ஐந்து நிமிடம் வதைக்கி குக்கரில்
    முன்று விசில் விட்டு வேகாவைக்கவும்.
  • வெந்ததும் கத்திரிகாயை நான்காக அரிந்து போட்டு தேங்காயை அரைத்து ஊற்றி இரக்கவும்.





குறிப்பு:


இதற்கு கத்திரிக்காய் போட்டு செய்தால் தான் நல்ல இருக்கும்.கேரட்டும் சேர்க்கலாம்.








வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



எட்டு பேருக்கு

இருபது நிமிடம்

அரை மனி நேரம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் தக்காளி கூட்டு

Post by Tamil Thu Jan 07, 2010 10:38 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - கால் கிலோ
  • தக்காளி - நான்கு பெரியது
  • வெங்காயம் - இரண்டு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி
  • கொத்துமல்லி - அரை கொத்து (பாதி தாளிக்க,மீதி கடைசீயில் தூவ)
  • பச்சமிளகாய் - இரண்டு
  • மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரைதேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவயான அளவு
  • தயிர் - ஒரு மேசக்கரண்டி
  • எண்ணை - மூன்று தேக்கரண்டி
  • டால்டா - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒரு சிறிய துண்டு




செய்முறை




  • முதலில் கறியை சுத்தம் செய்து தன்ணீர் வட்கட்டி தனியாக வைக்கவும்.
  • குக்கரி எண்ணை, டல்டா இராண்டையும் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய பட்டை போட்டு வெங்காயத்தை பொடியாக அரிந்து போடவும்.
  • வங்காயம்
    நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல்ல வதக்கவும் பொண்
    முறுவல் ஆகனும். பிறகு கொத்து மல்லி தழைசேர்த்ஹ்டு ஒருனிமிடம் வதக்கி,
    தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சமிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்
    உப்பு ரெட் கலர் சேர்த்து நல்லாவதக்கி சிம்மில் முன்று நிமிடம் வேகவிடவும்.
  • வெந்த்ததும்
    இப்போது மட்டனை சேர்த்து நல்ல பிறட்டி தயிர் சேர்க்கவும் சேர்த்து அதிலேயே
    தண்ணீர் இருந்தால் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இல்லை என்றால் கால் டம்ளர்
    தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி முன்றாவது விசில் வரும் போது ஆஃப் பண்ணவும்.
  • ஆவி
    அடங்கியதும், திறந்தால் தண்ணீர் நிறைய இருந்தால் குக்கரை திறந்த நிலையில்
    சிம்மில் வைத்து கூட்டனதும் கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.





குறிப்பு:


இதை பிரைட் ரைஸ்,கீரைஸ், பிளெயின் ரைஸ் ரொட்டி,சப்பாதி போன்றவை களுக்கு தொட்டு சாப்பிடலாம்



வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



நான்கு ஐந்து நபர்களுக்கு

பத்து நிமிடம்

இருபது நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கிட்னி ஃபிரை

Post by Tamil Thu Jan 07, 2010 10:39 pm

தேவையான பொருட்கள்




  • கிட்னி - கால் கிலோ
  • மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • தக்காளி - அரை
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • எண்ணை - இரண்டு தேக்கரண்டி




செய்முறை




  • கிட்னியில்
    எண்ணை , கரம் மசால தவிர அனைத்து பொருட்களையும் போட்டு பிசறி பத்து நிமிடம்
    ஊறவைத்து வானலியில் எண்ணை ஊற்றி பிசறி வைத்ததை போட்டு நல்ல வதக்கி ஐந்து
    நிமிடம் சிம்மில் வைத்து கடைசீயில் கரம் மசாலா, கொத்து மல்லி தழை தூவி
    இறக்கவும்.





வழங்கியவர்


ஜலீலா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty மட்டன் சாப்ஸ்

Post by Tamil Thu Jan 07, 2010 10:40 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் -- 1 கிலோ
  • சிவப்பு மிளகாய் -- 12 என்னம்
  • மிளகு -- 1/2 டீஸ்பூன்
  • சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி -- 1/2 அங்குலம்
  • கிராம்பு -- 3 என்னம்
  • சிறிய வெங்காயம் -- 10 என்னம்
  • பூண்டு -- 8 பல்
  • கசகசா -- 1 டீஸ்பூன்
  • எண்ணைய் -- 6 டீஸ்பூன்
  • தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
  • உப்பு -- தே.அ
  • மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தழை -- 1/4 கட்டு (நறுக்கியது)
  • தாளிக்க:
  • பட்டை -- 1 அங்குலம்
  • கிராம்பு -- 2 என்னம்
  • பெருஞ்சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை -- 2 இனுக்கு




செய்முறை




  • சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, கிராம்பு, சிறிய வெங்காயம், பூண்டு, கசகசா இவற்றை எல்லாம் அரைக்கவும்.
  • கறியுடன் அரைத்த மசாலாவை சுத்தம் செய்த கறியுடன் கலந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து தக்காளியையும் சேர்க்கவும்.
  • தக்காளி
    நன்கு வதங்கிய பின் ஊற வைத்த கறியை 5 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர்
    சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதித்தபின் தீயை மிதமாக வைத்து கறி வெந்து மசாலா கெட்டியான பின் கொத்தமல்லி தழையை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பறிமாறலாம்.
  • மட்டன் சாப்ஸ் ரெடி





வழங்கியவர்


Subha Jayaprakash -- Dubai





பரிமாறும் அளவு



4 நபர்களுக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty வேலூர் பிரியாணி

Post by Tamil Thu Jan 07, 2010 10:41 pm

சுவைமிக்க இந்த பிரியாணியைப் பார்த்தாலே பரவசம்!
ருசித்தாலோ நவரசம்!







தேவையான பொருட்கள்




  • ஆட்டிறைச்சி 1 கிலோ
  • வெங்காயம் 1/4 கிலோ
  • தக்காளி 200 கிராம்
  • இஞ்சி விழுது 50 கிராம்
  • பூண்டு விழுது 50 கிராம்
  • பச்சை மிளகாய் 4
  • மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
  • தயிர் 200 மிலி
  • பட்டை 1 துண்டு
  • கிராம்பு 4
  • ஏலக்காய் 2
  • கொத்தமல்லித் தழை நறுக்கியது 6 மேஜைக்கரண்டி
  • புதினா 4 தேக்கரண்டி.
  • எலுமிச்சை 1 பழத்தின் ஜூஸ்
  • ரிஃபைண்டு கடலை எண்ணெய் 1/4 லிட்டர்
  • அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) 1 கிலோ
  • உப்பு தேவையான அளவு




செய்முறை




  • ப்ரஷர்
    குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு,
    ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு
    பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
  • இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும்வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
  • இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
  • மிளகாத்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
  • தயிர்,
    பச்சைமிளகாய், கொத்தமல்லி ,புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து,
    நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில்
    ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
  • அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
  • அதில் அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேகவிட வேண்டும்.
  • எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது.
  • இப்போது
    குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான
    தீயில், எண்ணைய் மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து,
    அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும்.
  • அடுப்பில் தோசைக்கல்
    வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள
    பாத்திரத்தின் விளிம்பில் ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப்
    புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல்
    வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
  • தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.
  • 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
  • அப்புறம் என்ன, வெட்ட வேண்டியதுதான்!





குறிப்பு:


'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் 'தம்' போடுவதற்கு பதிலாக, மைக்ரோவேவ்
பாத்திரத்தில்,கலவையைப் போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் 'குக்' செய்தால்
சுவையான, நறுமணம் கமழும் வேலூர் பிரியாணி தயாராகி விடும்.


வழங்கியவர்


வேலூர் ஜுபைதா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



8 பேர்

அரை மணி

ஒரு மணி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கறி வறுவல்

Post by அருள் Thu Jan 07, 2010 10:48 pm

தேவையானப் பொருட்கள்

* கறி - 1/4 கிலோ
* மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
* மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
* சீரகத்தூள் - 1 ஸ்பூன்
* தனியாத்தூள் - 1 ஸ்பூன்
* கரம் மசாலா - 1 ஸ்பூன்
* தயிர் - 3 ஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* வெங்காயம் - 2
* தக்காளி - 1
* கறிவேப்பிலை - சிறிது
* தேங்காய்ப் பால் - 4 ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
* எண்ணெய் - 2 ஸ்பூன்

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறைச்சியை துண்டங்களாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
step 1
இறைச்சியுடன் அனைத்து தூள்களையும் சேர்த்து, தேவையான உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்துப் பிரட்டவும்.
step 2
பின்னர் அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவைத்து வேகவிடவும்.
step 3
சுமார் 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்னர் எடுக்கவும். இப்போது தண்ணீர் சுண்டி கறி வெந்து இருக்கும்.
step 4
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும், பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அத்துடன் வேக வைத்த கறியை சேர்த்து வதக்கவும்.
step 5
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் தேங்காய்பால் ஊற்றவும். குழம்பு போல் அல்லாமல் திக்காக வந்தவுடன் இறக்கி, எலுமிச்சைசாறு ஊற்றி பரிமாறவும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கொத்துக்கறி பிரியாணி

Post by அருள் Thu Jan 07, 2010 10:49 pm

தேவையான பொருட்கள்

* கொத்துக்கறி (மட்டன்) - 1/4 கிலோ,
* சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
* பெரிய வெங்காயம் - 2,
* சின்ன வெங்காயம் - 10,
* தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்,
* கசகசா - 2 டீஸ்பூன்,
* இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
* தனியா தூள் - 1 டீஸ்பூன்,
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
* பட்டை - சிறிது,
* கிராம்பு - 2,
* ஏலக்காய் - 2,
* புதினா - 1 கைப்பிடி,
* கொத்தமல்லி - 1 கைப்பிடி,
* எண்ணெய் - 2 ஸ்பூன்,
* நெய் - 5 ஸ்பூன்,
* உப்பு - தேவையான அளவு.

செய்முறை

* அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
* கசகசா, தேங்காய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
* குக்கரில் பாதி நெய், எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
* பொரிந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அரைத்த விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கழுவிய கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.
* சிறிது நேரம் வதக்கிய பின் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி 2 மடங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
* 1 விசில் வந்ததும், 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
* மீதி நெய்யில் வெங்காயம், பச்சை மிளகாயை பொன்னிறமாக வறுத்து சாதத்தில் கொட்டி, குழையாமல் கிளறி பரிமாறவும்.

வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்
3 நபர்களுக்கு. 30 நிமிடங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty கொத்துக்கறி பிரியாணி

Post by அருள் Thu Jan 07, 2010 10:51 pm

தேவையான பொருட்கள்

* கொத்துக்கறி (மட்டன்) - 1/4 கிலோ,
* சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
* பெரிய வெங்காயம் - 2,
* சின்ன வெங்காயம் - 10,
* தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்,
* கசகசா - 2 டீஸ்பூன்,
* இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
* தனியா தூள் - 1 டீஸ்பூன்,
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
* பட்டை - சிறிது,
* கிராம்பு - 2,
* ஏலக்காய் - 2,
* புதினா - 1 கைப்பிடி,
* கொத்தமல்லி - 1 கைப்பிடி,
* எண்ணெய் - 2 ஸ்பூன்,
* நெய் - 5 ஸ்பூன்,
* உப்பு - தேவையான அளவு.

செய்முறை

* அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
* கசகசா, தேங்காய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
* குக்கரில் பாதி நெய், எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
* பொரிந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அரைத்த விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கழுவிய கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.
* சிறிது நேரம் வதக்கிய பின் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி 2 மடங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
* 1 விசில் வந்ததும், 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
* மீதி நெய்யில் வெங்காயம், பச்சை மிளகாயை பொன்னிறமாக வறுத்து சாதத்தில் கொட்டி, குழையாமல் கிளறி பரிமாறவும்.

வழங்கியவர்
இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்
3 நபர்களுக்கு. 30 நிமிடங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆட்டு இறைச்சி - Page 2 Empty Re: ஆட்டு இறைச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum