TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆட்டு இறைச்சி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆட்டு இறைச்சி Empty ஆட்டு இறைச்சி

Post by Tamil Thu Jan 07, 2010 10:05 pm

ஆட்டு இறைச்சி Mutton


உலகில் பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் மற்றொரு இறைச்சி இது. ஆட்டு
இறைச்சியில் கொழுப்பு (
Fat)
சற்று அதிகம். ஆட்டின் அனைத்து
பாகங்களுமே உணவாக உட்கொள்ளப்படுகின்றது.
மருத்துவ
ரீதியாக ஒவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது.



ஆட்டிறைச்சி வாங்கும் போது மிகவும் பார்த்து
வாங்குதல் அவசியம். இளம்

ஆட்டின் கறி சுவையாக இருக்கும்.
மிருதுவாகவும் இருக்கும். கறியின்
கொழுப்பு
வெண்மை நிறமாக இருத்தல் வேண்டும். மஞ்சள் நிறமாக இருந்தால் சற்று
முற்றின ஆடு என்று கொள்ளலாம். கறியின் நிறம் சற்று
மங்கிய சிவப்பாய்

இருக்க வேண்டும். முற்றின கறியாக
இருந்தால்
, சிறிது வினிகர், எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைப்பதின் மூலம் சற்று
மிருதுவாக்கலாம்.





ஆட்டு இறைச்சி Mutton_foods



ஆட்டு இறைச்சி 100 கிராம்
உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள்



சக்தி (Energy)

118 கலோரிகள்

ஈரப்பதம்/நீர் (Moisture)

74.2 கிராம்

புரதம் (Protein)

21.4 கிராம்

கொழுப்பு (Fat)

3.6 கிராம்

தாதுக்கள் (Minerals)

1.1 கிராம்

கால்சியம் (Calcium)

12 மி.கி

பாஸ்பரஸ் (Phosporous)

193 மி.கி

போலிக் அமிலம் (Folic acid)

4.5 மை.கி

Source: National Institute of
Nutrition - Hyderabad


Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty கொத்துக்கறி முட்டை

Post by Tamil Thu Jan 07, 2010 10:07 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டு இறைச்சி கொத்தியது - கால் கிலோ
  • முட்டை - 2
  • தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி பருப்பு - 2
  • சில்லி பவுடர் -2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -அரைஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - கால்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • வெங்காயம் - கால்கிலோ
  • தக்காளி - 1
  • மல்லி இலை - சிறிது
  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • முதலில் கறியை நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.தேங்காய் முந்திரி அரைத்து கொள்ளவும்.
  • பின்பு
    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது வெங்காயம்
    வதக்கி,இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கி,தக்காளி ,பச்சை
    மிளகாய்,உப்பு,சில்லி பவுடர்,சீரத்தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து அத்துடன்
    கொத்துகறி சேர்த்து வதக்கி மூடி 3 விசில் வைக்கவும்.
  • அரைத்த தேங்காயுடன்,கட் செய்த வெங்காயம்,முட்டை சேர்த்து கலந்து வைக்கவும்.
  • கறி
    வெந்தவுடன் முட்டை தேங்காய் வெங்காயம் கலவையை சேர்த்து பிரட்டி கொதி
    வந்ததும் அடுப்பை சிம்மில் போட்டு சுமார் கால் மணி நேரம் வைக்கவும்.
  • வெங்காயம்
    வெந்து முட்டையும் தேங்காயும் பார்க்க கறியுடன் கசகசா சேர்த்தது போல்
    இருக்கும்.தண்ணீர் இருந்தால் வற்ற வைக்கவும்.கொத்தமல்லி இலை தூவி
    இறக்கவும்.
  • சுவையான கொத்துக்கறி முட்டை ரெடி.இதனை சாதம்,சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறவும்.





குறிப்பு:

இதனில்
முட்டையை பொரித்தும் சேர்க்கலாம்.இப்படி செய்தும் சாப்பிடலாம். இது
வெங்காயம் அதிகம் சேர்ப்பதால் கொஞ்சம் இனிப்பு சுவையுடன் இருக்கும்.இதில்
மசாலா கறிமசாலா கூட சேர்த்துக்கொள்ளலாம்,மசாலா அவரவர்
விருப்பம்,மிளகுத்தூளும் சிறிது முட்டையுடன் விரும்பினால் சேர்க்கலாம்.


வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

15 நிமிடம்

39 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty ஆட்டுக்கால் சால்னா(பாயா)

Post by Tamil Thu Jan 07, 2010 10:09 pm

தேவையானப் பொருட்கள்





  • ஆட்டுக்கால் - 2 செட்
  • வெங்காயம் - 2 (பெரியது)
  • தக்காளி - 2 (பெரியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது
  • பச்சை மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
  • முந்திரி பருப்பு - 8
  • மைதா - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு



வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரையை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.


ஆட்டுக்காலை வக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இல்லையெனில் வக்கிய ஆட்டுக்காலே கடையில் கிடைக்கிறது.


சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.


ஆட்டுக்காலை
கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை,
மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு
தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.


கொதி
வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை
குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக
இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்.


கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.


சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.


பின்பு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்.


சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி. இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. ஆசியா உமர் அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.









இதனை
பரோட்டா, சப்பாத்தி, இடியப்பம், ஆப்பம், தோசை, சாதம் ஆகியவற்றுடன்
சேர்த்து சாப்பிடலாம். சில்லி பவுடர் விருப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்,
தனித்தனியாக மசாலா சேர்க்காமல் கறி மசாலா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
அவரவர் சுவைக்கு தக்க மசாலா சேர்த்து இந்த முறையில் சமைத்தால் அருமையாக
இருக்கும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty தன்சல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:10 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - 1/2 kg
  • பாசி பருப்பு - 100 g
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • மஞ்சள் பூசணிக்காய் - 1 கப்
  • பட்டை - சிறு துண்டு
  • ஏலக்காய் - 3
  • கிராம்பு - 3
  • சோம்பு - 1 tsp
  • சீரகம் - 2 tsp
  • மிளகு - 2 tsp
  • சிகப்பு மிளகாய் - 6
  • மல்லி விதை - 4 tsp
  • வெங்காயம் - 250 g
  • தக்காளி - 250 g
  • பசலை கீரை (ஸ்பினச்) - 1 சிறிய கட்டு
  • கத்தரிக்காய் - 1/4 kg
  • பச்சை மிளகாய் - 3
  • மஞ்சள் தூள் - 1/2 tsp
  • எலுமிச்சை - 1 சிறியது
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 tbsp




செய்முறை




  • சிகப்பு மிளகாய் (காய்ந்த மிளகாய்), மல்லி விதை, மிளகு, சீரகம், சோம்பு (1/2 tsp) ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
  • மட்டன்
    மற்றும் துவரம் பருப்பு, பாசி பருப்பு, கீரை, பூசணிக்காய், கத்தரிக்காய்,
    எல்லா தூள்களும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அரைத்து வைத்துள்ள விழுது,
    உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் விட்டு 2 ஸ்டீம் வைத்து இறக்கவும்.
  • எண்ணெய்
    சூடானதும் சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கீறின
    மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி வேக வைத்துள்ள
    கறியை கொட்டி நன்கு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் சுண்டி எண்ணெய் மேலே வந்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.





குறிப்பு:

இது
சப்பாத்தி அல்லது தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். சாதத்துடன் கூட
பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக
இருக்கும்.


வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

5 நிமிடம்

40 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் சுக்கா வறுவல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:11 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - 1/4 Kg
  • கடலை மாவு - 3 tsp
  • தனியா தூள் - 3 tsp
  • மிளகாய் தூள் - 2 tsp
  • சோம்பு - 1 tsp
  • பச்சை மிளகாய் - 3
  • வெங்காயம் - 200 g
  • தக்காளி - 100 g
  • இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
  • எண்ணெய் - 1 tbsp
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • கறியை முக்கால் பதம் வேகவைத்து கொள்ளவும்.
  • எண்ணெய் சூடாக்கி சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து வதிக்கி கறியை சேர்க்கவும்.
  • 5 நிமிடம் வதக்கிய பின் எல்லா தூளையும் சேர்த்து, உப்பு மற்றும் கீறின பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  • தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வறுக்கவும்.
  • மசாலா கறியுடன் சேர்ந்தவுடன் கடைசியாக கடலைமாவு சேர்த்து வறுத்தெடுக்கவும்.





வழங்கியவர்


Ms. Moorthy, USA





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty கல்டாக் கறி குழம்பு

Post by Tamil Thu Jan 07, 2010 10:11 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டுக்கறி - 1 கிலோ
  • வெங்காயம் - 400 கிராம்
  • மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
  • தயிர் - 250 கிராம்
  • எண்ணைய் - 200 கிராம்
  • எலுமிச்சை - 2
  • செட் 1
  • மிளகாய் - 20 கிராம்
  • தனியா - 35 கிராம்
  • செட் 2
  • பட்டை - 2 துண்டுகள்
  • லவங்கம் - 5
  • ஏலக்காய் - 5
  • இஞ்சி - 12 கிரம்
  • செட் 3
  • தேங்காய் - 35 கிராம்
  • கசகசா - 12 கிராம்




செய்முறை




  • செட் 1ஐ, நன்றாக அரைக்கவும்.
  • செட் 2ஐ, வறுத்து அரைக்கவும்.
  • செட் 3ல், தேங்காயை வறுத்து அத்துடன் கசகசாவை சேர்த்து அரைக்கவும்.
  • சுத்தம்
    செய்த கரியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு முக்கால் லிட்டர் தண்ணீர்
    விட்டு வெங்காயம், மஞ்சள் பொடி, செட் 1 கலவை, தயிர் செர்த்து அடுப்பின்
    மீது வைத்து நன்கு வேகவிடவும்.
  • கறி வெந்தவுடன், செட் 2ல் அரைத்த விழுதும், எண்ணெயையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறி மூடவும்.
  • 5 நிமிடத்துக்கு பிறகு செட் 3 கலவையையும், எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து குழம்பு கெட்டி ஆனவுடன் இரக்கவும்.





வழங்கியவர்


Kanthimathi
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty ஈசி மட்டன் பிரியானி

Post by Tamil Thu Jan 07, 2010 10:12 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - 1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி - 2 கப்
  • வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • பட்டை - 2
  • லவங்கம் - 4
  • ஏலக்காய் - 2
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • பிரின்ஜி இலை - 1
  • வெங்காயம் - 1/2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி,பூண்டு விழுது - 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது - 15
  • தக்காளி - 3
  • புதினா - ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி தலை - ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
  • கருவேப்பிலை - சிறிது




செய்முறை




  • குக்கரில்
    4 கப் தண்ணீர் விட்டு உப்பு,மஞ்சள் தூள்,(இஞ்சி,பூண்டு விழுது),மட்டன்
    சேர்த்து 15 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • குக்கரில் வெண்ணெய்,எண்ணெய்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்,சோம்பு,பிரின்ஜி இலை,வெங்காயம்,பாதி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
  • பின் பச்சை மிளகாய்,தக்காளி,புதினா,கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • பின்
    4 கப் தண்ணீர்(மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன் படுத்தி கொள்ளலாம்) விட்டு
    உப்பு,காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி
    விடவும்.
  • 15 நிமிடம் களித்து குக்கரை திறந்து கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.





குறிப்பு:


எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



20 நிமிடம்

45 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் வறுவல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:13 pm

இந்த வருவல் எனது பாட்டி செய்யும் முறை.







தேவையான பொருட்கள்




  • மட்டன் - 1 கிலோ
  • தக்காளி - 3 பெரியது
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
  • கறி மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
  • கருவேப்பிலை,கொத்தமல்லி - ஒரு கைபிடி
  • பச்சை மிளகாய் - 2 அ 4
  • அரைக்க தேவையானவை:
  • பட்டை - 4
  • லவங்கம் - 6
  • சோம்பு - 1 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 1 கப்
  • பூண்டு - 15 பல்
  • இஞ்சி - ஒரு பெறிய துண்டு
  • பொட்டு கடலை - 2 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 1/2 கப்




செய்முறை




  • மட்டனை குக்கரில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்தமல்லி தூள்,கறி மசாலா தூள்,தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
  • பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கிக் கொள்ளவும். பின் ஆறியதும் அரைத்து கொள்ளவும்.
  • பின் கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும்.
  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.(தேவையெனில் முழு பூண்டை சேர்க்கலாம்).
  • பின் 2 பச்சை மிளகாயை கீரி போடவும்.
  • பின் வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • பின் கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.





குறிப்பு:


இதை குழம்பாகவும் மாற்றிக் கொள்ளளாம்...



வழங்கியவர்


காந்தி - மஸ்கட்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

40 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty பாலக் உருளை மட்டன்

Post by Tamil Thu Jan 07, 2010 10:14 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - 1/2 கிலோ
  • பாலக்கீரை - 1 கட்டு
  • உருளைகிழங்கு - 1
  • பூண்டு - 5 பல்
  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சைமிளகாய் - 3
  • காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  • மஞ்சள்த்தூள் 1/2 டீஸ் ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - 1/2 கோப்பை (நறுக்கியது)
  • ஏலக்காய் - 2
  • பட்டை - சிறிய துண்டு
  • நல்லமிளகு - 5
  • சீரகம் - 3/4 டீஸ் ஸ்பூன்
  • பிரிஞ்சி இலை - 2
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • மட்டன்
    துண்டுகளை சுத்தம் செய்து வைக்கவும், பாலக்கீரையை கழுவி
    பொடியாகநறுக்கிவக்கவும், உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்,
  • இஞ்சி மற்றும் பூண்டுகளை நறுக்கிக்கொள்ளவும் பச்சைமிளகாயை 2 ஆக கீறி வைக்கவும்
  • அடுப்பில்
    குக்கரைவைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நல்லமிளகு
    ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை
    போட்டு வதக்கவும்
  • அடுத்து பாலக்கீரையைப்போட்டு கிளறிவிடவும், பாலக்கீரை வதங்கியதும் மட்டன் துண்டுகளைப்போடவும் போட்டு நன்றாக கிளறி விடவும்
  • 5
    நிமிடம் கிளறி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் தூவி மேலும் 5 நிமிடம்
    வேகவைக்கவும்.3 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு,
    கொத்தமல்லித்தழை தூவி 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
  • சப்பாத்தி, பிலைன்சாதம், இவற்றிக்கு நல்ல மேச்





வழங்கியவர்


மஹாலஷ்மி, China





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4

10 min

30 min
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty ஷீக் கபாப்

Post by Tamil Thu Jan 07, 2010 10:14 pm

தேவையான பொருட்கள்




  • கொத்திய ஆட்டு இறைச்சி – அரைகிலோ
  • இஞ்சி – 1 டீஸ்பூன் கட் செய்தது
  • பூண்டு – 1 டீஸ்பூன் கட் செய்தது
  • வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன் கட் செய்தது
  • முந்திரிபருப்பு பவுடர் – 1 டேபிள்ஸ்பூன்
  • கடலைமாவு அல்லது கார்ன் மாவு – 2 டீஸ்பூன்
  • சில்லி பவுடர் – 1 டீஸ்பூன்
  • பெருஜ்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2 கட் செய்தது.
  • மல்லி,புதினா,மேதி இலை – தலா 1 டேபிள்ஸ்பூன்
  • பப்ரிகா பவுடர் – கால்- அரைஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • முட்டை வெள்ளைக்கரு – 1




செய்முறை




  • கறியை சுத்தம் செய்த்து நீர் வடிகட்டி முட்டை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் சுற்றிக்கொள்ளவும்.
  • தயார் செய்ததை ப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.
  • பின்பு அரைமணி கழித்து முட்டை வெள்ளைகருவை கறிக்கலைவையுடன் சேர்த்து திரும்ப அரை மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
  • பின்பு கறிக்கலவையை 12 அளவாக பிரித்து கொள்ளவும்.
  • ஒவ்வொரு அளவை எடுத்து தண்ணீர் தொட்டுகொண்டு கபாப் கம்பியில் (skewer)நீள் உருளையாக பிடித்து வைக்கவும்.
  • இப்படி தயார் செய்தவைகளை சார்கோல் அடுப்பில் வைத்து அல்லது கிரில் செய்து எடுக்கவும்.
  • சுவையான ஷீக் கபாப் ரெடி.இதனை சூடாக கிரீன் சட்னியுடன் (மிண்ட் சட்னி)பரிமாறவும்.





குறிப்பு:


பப்ரிகா பவுடர் சேர்ப்பதினால் இறைச்சி விரைவாக வெந்து விடவும்,மெதுவாக்கவும் செய்ய உதவுகிறது.



வழங்கியவர்


ஆசியா உமர்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

ஒரு மணி நேரம்

15 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty இரத்தப் பொரியல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:15 pm

தேவையான பொருட்கள்




  • இரத்தம் -- 1 என்னம்
  • சின்ன வெங்காயம் -- 30 என்னம் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் -- 5 - 6 என்னம் (பொடியாக நறுக்கியது)
  • லச்ச கெட்ட கீரை -- 10 என்னம் (பெரிய இலையில் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கியது)




செய்முறை




  • எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
  • பின் ஆய்ந்த கீரையை போட்டு வதக்கி ஒரு கையளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின் இரத்தத்தை நன்கு பிசைந்து வாணலியில் ஊற்றி 1/4 டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • உப்பு இரத்தத்திலேயே இருக்கும் சிலசமயம் உப்பு போடத்தேவையில்லை.
  • நன்கு வெந்தபின் இறக்கி பரிமாறலாம்.
  • இரத்தப் பொரியல் ரெடி.





வழங்கியவர்


Subha Jayaprakash





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

25 mins

30 mins
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் முகலாய் மசாலா

Post by Tamil Thu Jan 07, 2010 10:16 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - அரை கிலோ
  • எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
  • நெய் - 4 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
  • வெங்காயம் - 250-400 கிராம்
  • பச்சை மிளகாய் - 3
  • காஷ்மீரி சில்லி -4- 5
  • பட்டை - ஒரு துண்டு
  • ஏலம் - 3
  • கிராம்பு - 3
  • மல்லி விதை - 3 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு - அரை ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - அரைஸ்பூன்
  • தயிர் - 1 கப்
  • புதினா மல்லி - கொஞ்சம்
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • மட்டனை மீடியம் சைஸ் துண்டுகளாக்கி சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்கவும்.
  • மட்டனை 4 டீஸ்பூன் நெய் விட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கி தனியே வைக்கவும்.
  • வெங்காயம்,மல்லி,புதினா,மிளகாய் கட் செய்து வைக்கவும்.
  • பட்டை,ஏலம்,கிராம்பு,காஷ்மீரி
    சில்லி,,மல்லி,சீரகம்,மிளகு,மஞ்சள் சேர்த்து பவுடர் செய்யவும்.பின்பு
    அதனில் வெங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • குக்கரில் எண்ணெய்
    விட்டு,இஞ்சி பூண்டு,அரைத்த மசாலா,சேர்த்து கொதிவந்ததும் சுருள
    வதக்கவும்,சிவந்து காணப்படும்,தயிர் கரைத்து சேர்த்து, மட்டன்
    சேர்க்கவும்.உப்பு போட்டு பிறட்டவும்.மிளகாய்,மல்லி புதினா
    சேர்க்கவும்,தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில்
    வைக்கவும்.கறி நன்கு வெந்துவிடும்.தண்ணீர் இருந்தால் ஓறளவு வற்ற வைக்கவும்.
  • சுவையான மட்டன் முகலாய் மசாலா ரெடி.மல்லி இலை தூவி பரிமாறவும்.





குறிப்பு:


இதனை பரோட்டா,சப்பாத்தி ,ரைஸ் உடன் பரிமாறலாம்.



வழங்கியவர்


ஆசியா உமர்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4-6 நபர்களுக்கு

20 நிமிடம்

30 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மூளை முட்டை பொரியல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:17 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டு மூளை - 2
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் அல்லது பெரியது - 100 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • சிறிய தக்காளி - 1
  • முட்டை - 2
  • மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
  • சீரகத்தூள் - அரை ஸ்பூன்
  • சில்லி பவுடர் - அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • மல்லி இலை - சிறிது
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • ஆட்டு
    முளையில் உள்ள மெல்லிய படலத்தை மெதுவாக உரித்தெடுத்து ஒரு மூளையை 8
    துண்டாக்கி கொள்ளவும்.ஒரு பவுலில் தண்ணீர் வைத்து 2-3 தண்ணீர் விட்டு
    அலசிகொள்ளவும்.
  • முட்டை யை உப்பு போட்டு அடித்து வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மல்லி இலை கட் செய்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,வதக்கி,தக்காளி,மிளகாய்,மல்லி இலை,உப்பு போட்டு மசிய விடவும்.
  • பின்பு
    சில்லி பவுடர்,சீரகத்தூள்,மிளகுத்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி
    சிறிது தண்ணீர் தெளித்து ,பின்பு மூளை போட்டு பிரட்டவும் ,உடையாதாபடி
    பிரட்டவும்,வெந்தவுடன்,அடித்து வைத்த முட்டை விட்டு வெந்தபின்பு மூளை
    முட்டை சேர்ந்து பிரட்டி இறக்கவும்.முளை பேஸ்ட் ஆகாதவாறு துண்டாக
    இருக்குமாறு வதக்கவும்.மல்லி இலை தூவி இறக்கவும்.
  • சுவையான மூளை முட்டை பொரியல் ரெடி.இதனை ரசம் ,தலைக்கறி சாலனா,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறவும்.





வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

10 நிமிடம்

15 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty குடல் கத்திரிக்காய்

Post by Tamil Thu Jan 07, 2010 10:18 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டுக்குடல் - மீடியம் சைஸ் 1
  • கத்திரிக்காய் - கால் கிலோ
  • துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • தக்காளி - 2
  • வெங்காயம் -2
  • பச்சை மிளகாய் - 2-3
  • மல்லி,கருவேப்பிலை - சிறிது
  • சில்லி பவுடர் - ஒன்னரை டீஸ்பூன்
  • மல்லி பவுடர் - 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் -அரைஸ்பூன்
  • மஞ்சள் தூள் -அரைஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்




செய்முறை




  • 1.குடலை
    பக்கெட்டில் தண்ணீர் வைத்து மூன்று நான்கு தண்ணீர் அலசி கொள்ளவும்.பின்பு
    சிறிய பாக்கெட் சுன்னாம்பு குடலில் தடவி துணிதுவைக்கும் அல்லது மீன்
    உரைக்கும் கல்லில் வைத்து நன்கு உரைத்து கழுவவும்.பின்பு வெண்ணீரில் அலசி
    அரிவாள்மனை கொண்டு துண்டு போடவும்.உட்புறம் இருக்கும் கொழுப்பை எடுத்து
    விடவும்.
  • வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,கத்திரிக்காய் கட் செய்து வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.
  • குக்கரில்
    அரிந்த குடல் துண்டுகள்,மஞ்சல் தூல்,சில்லி பவுடர் அரைஸ்பூன்,மல்லி
    பவுடர்,சீரகத்தூள்,ஊர வைக்காத அலசிய பருப்பு இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன் ,2
    தம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.விசில் வந்தவுடன் குறைத்து அரை
    மணினேரம் வைக்கவும்.உப்பு போடக்கூடாது.வெந்து விடும்.
  • வெந்ததை
    தனியாக எடுத்து வைக்கவும்.பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
    வெங்காயம் வதக்கி,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,மல்லி
    ,கருவேப்பிலை,மிளகாய் தக்காளி ,உப்பு,1 டீஸ்பூன் சில்லி பவுடர்
    ,கத்திரிக்காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில்
    வைக்கவும்.
  • பின்பு அத்துடன் வேக வைத்த குடல் ,பருப்பு
    சேர்க்கவும்.அரைத்த தேங்காய் விடவும்.உப்பு சரி பார்த்து சிம்மில் வைத்து
    தேங்காய் வாடை அடங்கியதும் இறக்கவும்.
  • சுவையான குடல் கத்திரிக்காய் ரெடி. இதனை ப்லைன் சாதத்தில் வீட்டு சாப்பிடலாம்.ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.





குறிப்பு:

வெளி
நாடுகளில் carrefour,மற்றும் ஹைப்பர் மார்கெட்டில் நன்றாக சுத்தம் செய்தே
கிடைக்கிறது.அதனை வெண்ணீரில் மூன்று நான்கு முறை அலசி கொழுப்பு நீக்கி
மீட் கட் செய்யும் கத்திரிக்கோலால் கட் செய்து சமைக்கலாம்.


வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



6 நபர்களுக்கு

30 -45 நிமிடம்

30- 45 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty கறி குழம்பு

Post by Tamil Thu Jan 07, 2010 10:18 pm

எங்கள் வீட்டில் இப்படி தான் மட்டன்,சிக்கன் குழம்பு வைப்பார்கள்,மசாலா ஆட்டுகல்லில் அரைத்து வைத்தால் அத்தனை சுவையாக இருக்கும்,







தேவையான பொருட்கள்




  • மட்டன் - 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 1 பெரியது
  • இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • மட்டன் மசாலா - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைக்க:-
  • மல்லி விதை - 3 டேபுள்.ஸ்பூன்
  • ஜீரகம் - 1 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 5
  • உப்பு
  • எண்ணெய் - 4 ஸ்பூன்




செய்முறை




  • வறுக்க கொடுத்துள்ளவைகளை லேசாக வறுக்கவும்,அடுப்பை மிதமாக வைத்து 5 நிமிடம் கருகாமல் வதக்கி ஆறவைத்து நைசாக மிக்ஸியில் அரைக்கவும்,
  • வெங்காயத்தை நீளமாகவும்,தக்காளியை பொடியாகாவும் நறுக்கிவைக்கவும்,
  • அடுப்பில்
    ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது
    சேர்த்து நன்றாக வதக்கவும்,தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்
  • மட்டன்,மட்டன் மசால் இரண்டும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த விழுதை சேர்க்கவும்,
  • எல்லாவற்றையும் நன்றாக வதக்கி உப்பு போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்,தேவையெனில் இன்னும் சேர்த்து கொள்ளவும்,
  • மட்டன் வெந்ததும் இறக்கி பறிமாறலாம்.
  • இதே போல் சிக்கனில் செய்யலாம்,





குறிப்பு:

இந்த
குழம்பு இட்லி,தோசை,சப்பாத்தி,பரோட்டா,சாதம் என அனைத்துக்கும் சூப்பராக
இருக்கும்,
குழம்பு ரெம்ப திக்காக இல்லாமல் லேசாக தண்ணியாக வைத்து சாதத்தில் ரசம்
போல் ஊற்றி சாப்பிடலாம்,அத்தனை ருசியாக இருக்கும்
மல்லியை வதக்கும் போது ரெம்ப வறுத்தால் குழம்பு கலர் மாறிவிடும்.அரைக்கும்
போது முதலில் தண்ணிரில் இல்லாமல் அரைத்துவிட்டு,பிறகு கொஞ்சம் நேரம்
தண்ணிர்விட்டு அரைத்தால் நல்லா மசியும்,


வழங்கியவர்


Renuka
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty ஆட்டுக்கால் சூப் (செட்டிநாடு )

Post by Tamil Thu Jan 07, 2010 10:19 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டுக்கால் - 1 செட் (4 கால்)
  • மிளகு -2- 3 டீஸ்பூன்
  • மல்லி - 2 டீஸ்பூன்
  • சீரகம் -2டீஸ்பூன்
  • பூண்டு - 6 பல்
  • மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 1 (விரும்பினால்)
  • நல்ல எண்ணெய் - 2டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • மல்லி இலை - சிறிது
  • கருவேப்பிலை - 2 இணுக்கு




செய்முறை




  • கால்களை
    சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உறித்து
    வைக்கவும்.ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.மீதியை அரைக்க
    முழுதாக வைக்கவும்.
  • மிளகு,சீரகம்,மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும்.மிக்ஸியில் மூன்றையும் போட்டு ,வெங்காயம்,பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • குக்கரில்
    ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட)தண்ணீர் வைத்து
    உப்பு போடாமல் , அரைத்த மசாலா,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்,இரண்டு
    விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  • ஆவி
    அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும். கடாயில் நல்ல எண்ணெய் விட்டு
    காய்ந்ததும் கட் செய்த வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.கொஞ்சம்
    திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம்.மல்லி
    இலை தூவவும்.
  • சுவையான,சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.இதனை அப்படியே பவுலில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.





குறிப்பு:


ஆட்டுக்கால் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்து கிடைக்காது.எனவே சுத்தம்
செய்ய ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.ஒரு
சிறிய பாக்கெட் சுண்ணாம்பு போடவும்,அதில் ஆட்டுக்காலை போடவும்,ஐந்து
நிமிடம் கழித்து மேல் இருக்கும் மயிரை கையால் இழுத்துப்பார்த்தால்
வந்துவிடும்,அப்பொழுது எடுத்து தனியாகவைக்கவும்.ஒவ்வொன்றாக கத்திக்கொண்டு
சூவில் இருந்து மேல் நோக்கி லேசாக தேய்த்தாலே முடி வந்து விடும்.பின்பு
கத்தியின் முனை கொண்டு சூவை கழட்ட வேண்டும்,இப்படியே நான்கையையும் சுத்தம்
செய்யவும்.கேஸடுப்பில் அல்லது விறகு அடுப்பில் காட்டி ஈரப்பதம் போகும்
அளவுக்கு சுட்டு எடுக்கவும்.கருகிவிடக்கூடாது.அதனை தேங்காய் உறிக்கும்
அருவாளால் ஒரு மரக்கட்டையில் வைத்து 2 அல்லது 3 -ஆக துண்டு போடவும்,பின்பு
இரண்டு சூவுக்கிடையில் கத்தியால் கீறினால் சிறிய புழு போல் இருக்கும்,அதனை
கவனமாக நீக்கவும்.பின்பு இதனை சிறிது மைதா மாவு ,தண்ணீரினால் தேய்த்து
நன்கு அலசவும்.சுத்தமான கால் ரெடி.எங்கள் வீட்டில் கால் வாங்கினால்
நாங்களே தான் இம்முறையில் சுத்தம் செய்வோம்.


வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

45 நிமிடம்

30 -40 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் மிளகு வறுவல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:20 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன்(அதிக எலும்பு இல்லாமல்) - 1/2 கிலோ,
  • பெரிய வெங்காயம் - 2,
  • தக்காளி - 2,
  • பூண்டு - 10 பல்,
  • இஞ்சி - சிறிது,
  • முந்திரி - 10,
  • மிளகு - 2 தேக்கரண்டி,
  • சோம்பு - 1 தேக்கரண்டி,
  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • கொத்தமல்லி தழை - சிறிது,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
  • நெய் - 1 மேசைக்கரண்டி.




செய்முறை




  • மட்டனை சுத்தம் செய்து, கழுவி வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, முந்திரி, இஞ்சி, பூண்டு, தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  • வதக்கியவற்றை நைசாக அரைக்கவும்.
  • அரைத்த
    மசாலா, உப்பு சேர்த்து மட்டனில் பிசிறி குக்கரில் தண்ணீர் அதிகம்
    சேர்க்காமல் ஆவியில் வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்கவும்.
  • வாணலியில் மீதி எண்ணெய், நெய்யை ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் வேக வைத்த மட்டனை கொட்டி கிளறவும்.
  • மிளகை தூள் செய்து சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.





குறிப்பு:


சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள காரசாரமான வறுவல் ரெடி. ரசம் சாதமும், வறுவலும் போதும்.




வழங்கியவர்


இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு.

30 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் பால்ஸ்

Post by Tamil Thu Jan 07, 2010 10:21 pm

தேவையான பொருட்கள்




  • கொத்தின ஆட்டிறைச்சி - 1/2 கிலோ,
  • பெரிய வெங்காயம் - 2,
  • மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
  • மைதா - 100 கிராம்,
  • முட்டை - 3,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.




செய்முறை




  • வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இறைச்சியை கழுவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
  • ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • மைதா சேர்த்து கெட்டியாக பிசைந்து, எழுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • முட்டையை உடைத்து உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
  • உருட்டிய உருண்டைகளை முட்டை கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • தக்காளி சாஸுடனோ அல்லது ஏதாவது க்ரேவியுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.





வழங்கியவர்


இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு.

30 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty கொத்துக்கறி வேர்கடலை மசாலா

Post by Tamil Thu Jan 07, 2010 10:21 pm

தேவையான பொருட்கள்




  • கொத்துக்கறி(மட்டன்) - கால் கிலோ
  • பச்சை வேர்கடலை -100 கிராம்
  • வெங்காயம் - 1
  • தக்காளி -1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - கால்ஸ்பூன்
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • மஞ்சல் தூள் - கால் ஸ்பூன்
  • மிளகாய் - 2
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • மல்லி இலை - கொஞ்சம்
  • தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி - 2
  • உப்பு - தேவைக்கு




செய்முறை




  • கொத்துக்கறியை நன்கு அலசி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.
  • தக்காளி,வெங்காயம்,மல்லிலை கட் செய்து வைக்கவும்,தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.வேர்க்கடலையையும் அலசி வைக்கவும்.
  • குக்கரில்
    எண்ணெய் விட்டு,வெங்காயம்,வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,தக்காளி,மல்லிலை
    ,மிளகாய்,உப்பு சேர்த்து வதக்கவும்,பின்பு சில்லி பவுடர் ,மஞ்சல் தூள்
    சேர்க்கவும்.கொத்துக்கறி சேர்த்து பச்சை வேர்க்கடலையை சேர்க்கவும்.ஒரு
    கொதிவந்ததும்,தேங்காய் முந்திரி அரைத்தது சேர்த்து பிரட்டி 3 விசில்
    வைத்து இறக்கவும்.
  • ஆவி அடங்கியதும் நீர் நின்றால் வத்தவைத்தால் கொத்துக்கறி வேர்க்கடலை மசாலா ரெடி.
  • சுவையான கொத்துக்கறி வேர்க்கடலை மசாலாவை சாதம்,சப்பாத்தி உடன் சாப்பிடலாம்.





குறிப்பு:

பச்சை
வேர்க்கடலை என்பதால் ஒரு வித இனிப்புச்சுவையுடன் வித்தியாசமாய் இருக்கும்,
கடலூரில் கடலை சீசனில் இது செய்வது வழக்கம்.இது போல் முந்திரி பருப்பும்
போட்டு செய்வார்கள்.


வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4-- 6 நபர்களுக்கு

15 நிமிடம்

15 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty அரேபியன் மீட் பால்ஸ்

Post by Tamil Thu Jan 07, 2010 10:22 pm

தேவையான பொருட்கள்




  • கொத்துக்கறி - அரை கிலோ
  • முட்டை - 1
  • பால் - கால் கப்
  • ஓட்ஸ் - கால் கப்
  • ப்ரெட் கிரெம்ப்ஸ் - கால் கப்
  • வெங்காயம் - 1
  • காய்ந்த பார்சிலி இலை- 1 டேபிள் ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • அல்லது கொத்தமல்லி இலை.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • மிளகுத்தூள் - அரை - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணை - 200 மில்லி




செய்முறை




  • கொத்துக்கறியை அலசி வடிகட்டிக்கொள்ளவும்.தண்ணீர் நன்றாக வடித்து விடவும்.
  • முட்டையை பீட் பண்ணி வைக்கவும்,வெங்காயத்தை சாப் செய்து வைக்கவும்.
  • ஒரு
    பவுலில் முட்டை,பால்,ஓட்ஸ்,ப்ரெட் கிரெம்ப்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து
    வைக்கவும்.சிறிது நேரம் கழித்து கொத்துக்கறி,உப்பு,பெப்பர் ,பார்சிலி
    அல்லது கொத்தமல்லி இலை,இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்றாக மிக்ஸ் செய்து
    வைக்கவும்.24 உருண்டைகளாக பிடிக்கவும்.
  • பேனில் எண்ணை விட்டு
    பொறித்து எடுக்கவும்.அல்லது ஒவனிலும் 10- 15 நிமிடம் வைத்து எடுத்து
    நீர்,எண்ணெய் வடித்து விட்டு திரும்ப 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  • சுவையான அரேபியன் மீட் பால்ஸ் ரெடி.





குறிப்பு:


இது பார்ட்டி சமயம் செய்து அசத்தலாம்.தக்காளி கெட்ச்சப் ,பூண்டு சாஸ் ,பார்பிக்யூ சாஸ் உடன் பரிமாரலாம்.



வழங்கியவர்


ஆசியா உமர்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



8 - 10

20 நிமிடம்

15 - 20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் வெண்டைக்காய் சால்னா.

Post by Tamil Thu Jan 07, 2010 10:23 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் - கால் கிலோ
  • வெண்டைக்காய் -கால் கிலோ
  • எண்ணை - 3 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
  • சீரகத்தூள் -அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூல் - கால் ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • மல்லி இலை - கொஞ்சம்.
  • தேங்காய் -2 டேபிள் ஸ்பூன்
  • முந்திரிபருப்பு - 2




செய்முறை




  • மட்டனை கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்,வெண்டைக்காய் கழுவி சின்ன விரல் அளவிற்கு கட் பண்ணி வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி,மல்லி இலை கட் பண்ணீ வைக்கவும்.தேங்காய் ,முந்திரிபருப்பை அரைத்து வைக்கவும்.
  • குக்கரில்
    2 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்தவுடன்,வெங்காயம்,இஞ்சி பூண்டு,கரம்
    மசாலா பொட்டு வதக்கவும்,தக்காளி,மல்லி இலை, மிளகாய்,உப்பு சேர்த்து மூடி
    வைக்கவும்.மசிந்தவுடன்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்.மஞ்சள் தூள்
    சேர்த்து பிரட்டவும்.மட்டனை சேர்க்கவும்,ஒரு கப் தண்ணீர் விட்டு 3 விசில்
    வைக்கவும்.விசில் அடங்கி வெந்தவுடன் இறக்கவும்.
  • நான் ஸ்டிக் பேனில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு வெண்டைக்காயை சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
  • குக்கரை
    திறந்து மட்டன் குழம்புடன் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அரைத்த தேங்காய்
    விடவும்,கொதித்து சிம்மில் வைத்து எண்ணை தெளிந்து இறக்கவும்.
  • சூப்பர் சுவையுள்ள மட்டன் வெண்டைக்காய் சால்னா ரெடி.





குறிப்பு:


ப்லைன் ரைஸ் உடன் பரிமாறவும்.எல்லோரும் மட்டன் சால்னாவில் உள்ள வெண்டைக்காய் விரும்பி சாப்பிடுவார்கள்.



வழங்கியவர்


ஆசியா உமர்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

10 நிமிடம்

20 நிமிடம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty குர்பானி கறி வறுவல்

Post by Tamil Thu Jan 07, 2010 10:23 pm

தேவையான பொருட்கள்




  • தனிக்கறி - 1 கிலோ
  • எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • மிளகாய் வற்றல் - 8
  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்




செய்முறை




  • சிறு துண்டுகளாக்கிய கறியை 5- 7 தண்ணீர் விட்டு கழுவி வடிகட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.
  • அடிகனமான
    கடாயில் எண்ணை விட்டு மிளகாய் வற்றலை கிள்ளி போடவும்.கறியை போட்டு மூடி
    போடவும்.தண்ணீர் ஊறிக்கொண்டே யிருக்கும்.தண்ணீர் வற்றி வேக வைத்து
    எடுக்கவும்.
  • வறுத்த கறியை ஆற வைத்து கைபடாமல் ஒரு பாட்டிலில்
    போட்டு மூடி வைக்கவும்.ஸ்பூன் போட்டு எடுத்து சாப்பிடவும்.வெளியே வைத்தால்
    ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்.ஃப்ரிட்ஜில் என்றால் ஒரு மாதம் வைக்கலாம்.
  • சிம்பிளான ருசியான வறுவல் எல்லோருக்கும் பிடிக்கும்.





குறிப்பு:

இது
தயிர் சாதம்,ரசம் சாதம் மற்றும் அனைத்து சாதத்திற்கும்
தொட்டுக்கொள்ளலாம்.வெளிநாடு செல்பவர்கள் இப்படி செய்து
எடுத்துச்செல்லலாம்.


வழங்கியவர்


ஆசியா உமர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் கிச்சடி

Post by Tamil Thu Jan 07, 2010 10:24 pm

வட மாநிலத்தவர் அரிசியில் செய்யும் வித்தியாசமான கிச்சடி இது.








தேவையான பொருட்கள்




  • அரிசி - 2 டம்ளர் (400 கிராம்),
  • பாசிப்பருப்பு - 1 டம்ளர் (200 கிராம்),
  • மட்டன் - 250 கிராம்,
  • பெரிய வெங்காயம் - 1,
  • தக்காளி - 1 (நடுத்தரம்),
  • பச்சைப்பட்டாணி - 1 கைப்பிடி,
  • பட்டை - சிறிது,
  • கிராம்பு - 2,
  • ஏலக்காய் - 1,
  • பிரிஞ்சி இலை(பிரியாணி இலை) - 1,
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • நெய் - 1 மேசைக்கரண்டி,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு.




செய்முறை




  • அரியையும், பாசிப்பருப்பையும் ஒன்றாக கழுவி வைக்கவும்.
  • மட்டனை சின்ன துண்டுகளாக்கி, கழுவி வைக்கவும்.
  • வெங்காயத்தை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், பட்டாணி, மட்டன் சேர்த்து வதக்கவும்.
  • எல்லாம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • வதங்கிய பின், ஐந்தரை டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும் கழுவிய அரிசி, பருப்பு, உப்பு சேர்த்து கலக்கி மூடவும்.
  • வெயிட்
    போட்டு ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, மெதுவாக கேஸை வெளியேற்றி திறந்து,
    நெய் விட்டு கலக்கி நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சூடாக கத்தரிக்காய் கிரேவியுடன் நன்றாக இருக்கும்.





குறிப்பு:


சாதமோ, பருப்போ குழையாமல் பிரியாணி போல் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்க வேண்டும்.




வழங்கியவர்


இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.





பரிமாறும் அளவு


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு.

30 நிமிடங்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty நெல்லை தம் பிரியாணி

Post by Tamil Thu Jan 07, 2010 10:25 pm

தேவையான பொருட்கள்




  • மட்டன் அல்லது சிக்கன் - ஒண்ணேகால் கிலோ
  • பிரியாணி அரிசி - 1 கிலோ.
  • எண்ணை - 150 மில்லி
  • நெய் - 150 மில்லி.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 3 டேபிள் ஸ் பூன்.(100 கிராம் இஞ்சி, 100 கிராம் பூண்டு அரைத்துக்கொள்ளவும்)
  • கரம் மசாலா- 1 டீஸ்பூன்( ஏலம்,பட்டை,கிராம்பு கலவை)
  • பச்சை மிளகாய் - 6.
  • சில்லி பவுடர்- 2 டீஸ்பூன்
  • வெங்காயம்- 300 கிராம்.
  • தக்காளி - 400 கிராம்
  • தயிர் - 200 மில்லி
  • எலுமிச்சை - சிறியது என்றால் 2.
  • புதினா - ஒரு கட்டு.
  • கொத்தமல்லி தழை - ஒரு கட்டு.
  • ஆரஞ்சுரெட் ,லெமன் யெல்லொ கலர் - 2 பின்ச்
  • உப்பு - தேவைக்கு.




செய்முறை




  • முதலில்
    கறியை சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைக்கவும்.பின்பு தயிர் ,ஒரு டேபிள்
    ஸ்பூன் இஞ்சி பூண்டு, ஒரு டீ ஸ்பூன் சில்லி பவுடர் ,உப்பு சேர்த்து கலந்து
    ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வென்காயம் ,தக்காளி நீளவாக்கில்
    மெல்லியதாக கட் பண்ணி வைக்கவும்,கொத்தமல்லி,புதினா தழைகளை சுத்தம் செய்து
    சிறிதாக கட் பண்ணி வைக்கவும்.
  • பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்,.
  • ஒரு பெரிய பாத்திரத்தில்,150 மில்லி எண்ணை ,100 மில்லி நெய் விட்டு காய்ந்ததும்,வெங்காயம் முழுவதும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • பின்பு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து ,கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
    சேர்து சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்,பின்பு பாதி கொத்தமல்லி ,புதினா
    தழைகளை சேர்த்து வதக்கவும்,தக்காளி சேர்க்கவும்.உப்பு .சில்லி பவுடர்
    சேர்த்து சிம்மில் வைத்து மூடி போட்டு எண்ணை ்தெளிந்து தக்காளி
    குழைவானதும் மட்டன் கலவையை சேர்த்து மூடிவைத்து அரை மணி நேரம் வேக
    வைக்கவும்.
  • பின்பு மட்டன் பாதி வெந்திருக்கும்,எலுமிச்சை
    பிழியவும்.10 நிமிடத்தில் கறி நன்கு வெந்து விடும்.மீதி இருக்கும் கொத்த
    மல்லி புதினா தழைகளை சேர்க்கவும்.கறி மூழ்கும் அளவுக்கு கிரேவி
    இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
  • அரிசியை முக்கால் வேக்காட்டில் வெந்து வடிகட்டிக்கொள்ளவும்.
  • வடிகட்டிய
    சாதத்தை வெந்து வைத்த கறிகலவையில் போட்டு பரத்தி மேலே லெமன் யெல்லோ
    கலர்,ரெட் கலர் ஆங்காங்கே கொஞ்சம் தூவவும்,மீதி இருக்கும் 50 மில்லி
    நெய்யை மேலே விட்டு அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி,பியாணி பாத்திரம்
    மூடியாயும் மூடி சிம்மில் அரை மணீ நேரம் வைக்கவும்.
  • பிரியாணி பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் இருந்தால் வைத்தால் நெருப்பு அதிகம் இல்லாமல் தேவையான அளவுக்கு கிடைக்கும்.
  • கால் மணி நேரம் கழித்து சிம்மில் உள்ள அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்பு திரும்பவும் கால் மணி நேரம் கழித்து திறந்து ஒரு போல் பிறட்டி பறிமாரவும்.
  • கமகமக்கும் நெல்லை தம் பிரியானி ரெடி.





குறிப்பு:

சிக்கன்
என்றால் அதற்கு தகுந்தபடி டைம் பார்த்து செய்யவும்.சிக்கன் விரைவில்
வெந்து விடும்.இது மாதிரி பிரியாணி செய்வது சுலபம்.பொருட்களூம் அளவாக
உபயோகிப்பதால் தெவிட்டாமல் நல்ல ருசித்து சாப்பிட முடியும்.இத்னை
தாழிச்சா,தயிர் பச்சடி,சிக்கன் ஃப்ரை,தக்காளி ஸ்வீட் உடன் பரிமாரவும்.






வழங்கியவர்


ஆசியா உமர்.





பரிமாறும் அளவு



8 நபர்களுக்கு.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty மட்டன் புளிக்குழம்பு

Post by Tamil Thu Jan 07, 2010 10:26 pm

தேவையான பொருட்கள்




  • ஆட்டுகறி- அரைக்கிலோ
  • கத்திரிக்காய்- கால்க்கிலோ
  • புளி- சிறிய எலுமிச்சையளவு
  • வெங்காயம்- ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது- தலா ஒருதேக்கரண்டி
  • மிளகாய்த்தூள்-ஒரு மேசைக்கரண்டி
  • தனியாத்தூள்- ஒரு தேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-அரைத்தேக்கரண்டி
  • மிளகு சீரகத்தூள்- தலா அரைத்தேக்கரண்டி
  • சோம்பு-அரைத்தேக்கரண்டி
  • காய்ந்தமிளகாய்-நான்கு
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • உப்புத்தூள்- இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய்- கால் கோப்பை




செய்முறை




  • கறியை
    சிறியத்துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து,அதில் மஞ்சத்தூள் மற்றும்
    அரைத்தேக்கரண்டி உப்பைச் சேர்த்து ஒரு கோப்பை நீரை ஊற்றி குக்கரில்
    வேகவைத்துக் கொள்ளவும்.
  • புளி, இரண்டு கோப்பை கரைசல் வருமாறு கரைத்துவைக்கவும்.
  • கத்தரிகாயை நான்காகவும்,வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.
  • ஒரு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், சோம்பு கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
  • பிறகு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் வேகவைத்த கறியை போட்டு இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
  • அதை தொடர்ந்து கத்திரிக்காயை போட்டு எல்லாத்தூளையும் சேர்த்து கிளறிவிட்டு புளிக்கரைசல், மற்றும் கறி வெந்த சூப்பையும் ஊற்றவும்.
  • எல்லாவற்றையும்
    நன்கு கலக்கிவிட்டு உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும், குழம்பு நன்கு
    கொதித்தவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைக்கவும்.
  • காய்கள் நன்கு வெந்து எண்ணெய் மேலே தெளிந்ததும் இறக்கிவிட்டு நன்கு ஆறியப்பின்பு பரிமாறவும்.





வழங்கியவர்


மனோகரி





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



5-6 நபர்களுக்கு

15 நிமிடங்கள்

40 நிமிடங்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆட்டு இறைச்சி Empty Re: ஆட்டு இறைச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum