TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சர்க்கரை நோய் Diabetes-2

2 posters

Go down

சர்க்கரை நோய் Diabetes-2 Empty சர்க்கரை நோய் Diabetes-2

Post by sakthy Sat Oct 15, 2011 1:15 pm

சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய்க்கான உணவு முறை என்ன?

விருந்துக்கும்,பொறுமைக்கும் அன்புக்கும் தாய்மையை மதிக்கும் பண்புக்கும் பெயர் போன தமிழர்கள் இன்றைய நிலை என்ன? ஒரு மருத்துவ நிலையம் அதில் பணியாற்றும் மருத்துவர், தாய்மைக்கும் பெண்மைக்கும் மதிப்பு தந்து தெய்வத்திற்கு சமமாக நிறுத்திய தமிழன், பணம் ஒன்றே குறியாகி ஒரு நிறைமாத இளம் கர்ப்பிணித் தாயை ஈவு இரக்கம் இன்றி துரத்தியதன் பலன், பஸ் நிறுத்தும் இடத்தில் சில பெண்களின் துப்பட்டாக்களின் மறைவில் குழந்தையை பெற்ற கொடுமை வேறு எந்த நாட்டில் நடக்கும். இந்நிலையில் அன்பு பணிவு கருணை பொறுமை பற்றி பேச முடியா விட்டாலும்,இன்றும் சில நல்லவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற சிறு நிம்மதியுடன்....

மனமது செப்பமானால் மந்திரம் செபிக்க வேண்டாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இப்படி எல்லாம் நாம் சொல்வதுண்டு. நீரிழிவு என்ற diabetes நோய்க்கு நேரடியாக உணவு முறை பற்றி சொல்வதை விட, சில வேறு முறைகளை சொல்ல முடியும்.
ஒரு மருத்துவர் ஒவ்வொரு நோயாளியையும் குழந்தையாக பார்க்க வேண்டும். அதாவது அன்பு கனிவு கருணை பொறுமை இவை எல்லாவற்றையும் சேர்த்து நோயாளியை அணுக வேண்டும். அப்படி அணுகுவதால் அந்த நோயாளியின் நோயின் பெரும் பகுதி குணமாகி விடுகிறது. அதன் பின் அந்த மருத்துவர் கொடுக்கும் மாத்திரை மருந்துகள் செயற்பட ஆரம்பிக்கும் போது மறு பகுதியும் குணமாகி விடும்.இது ஒரு பொதுவான அணுகு முறை.அதாவது உங்கள் மனத்தை அமைதியாக வைத்திருந்தால் நோயின் அள்வு குறையும்.

நமது உடல் நம் முதல் மருத்துவர் என்பதை மனதில் கொண்டு, அதற்கு மதிப்புக் கொடுத்து உடலை பாதுகாக்க வேண்டும். வயிறு போதும் எனும் போது நிறுத்தி விட வேண்டும். மூக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கக் கூடாது.கல்யாண சமையல் சாதம் என்றோ,சரவணபவன் உணவு விடுதிக்கு சென்று எல்லாவற்றையும் கொண்டு வா என்று ஒரு பிடி பிடிக்கக் கூடாது.நமது உடலும் தாங்காது,பாவம் பசியுடன் ருசி பார்க்க வரும் மற்றவர்களுக்கும் உணவு இல்லாது போய் விடும்.

நமது மூளையின் சரியான செயற்பாட்டால் இரத்த ஓட்டம் சீராக ஓடுகிறது. அதனால் தேவையற்ற குழப்பம்,கவலை, மன உளைச்சல் இவற்றை தவிர்த்து நேர்மறையான (positive)சிந்தனையுடன் செயற்பட்டால் இரத்த ஓட்டம் சீராகும். டயபிட்டிஸ் மட்டுமல்ல பல நோய்களையும் குறைக்க குணப்படுத்த முடியும்.நமது மனத்தில் குழப்பங்கள் குறையுமானால் குருதி சுற்று சீராகி பல உறுப்புக்கள் சரியாக செயற்பட ஆரம்பிக்கும்.அம்மாவை அமைதியாக சமைக்க விட்டால் அன்றைய உணவு மணக்கும் இனிக்கும் சுவைக்கும்.இல்லையேல்....
அதாவது வீணான குழப்பங்கள் டென்ஷன் தவிர்க்க வேண்டும்.

வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். அதிக செலவும் கூடாது.அதிக சேமிப்பும் கூடாது.அதாவது நாம் எவ்வளவு உணவை உட்கொள்கிறோமோ அதை சக்தியாக மாற்ற வேண்டும். எடுக்கப்படும் கலோறிக்கு ஏற்ப உடற்பயிற்சி தேவை. நாம் உண்ணும் உணவில் உள்ள விட்டமின் போன்றவை தேவைக்கதிகமாக உள்ளவை சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது. ஆனால் நாம் உண்ணும் உணவில் உள்ள மாச்சத்து carbohydrate குளுக்கோசாக மாற்றமடையும் போது, அதை இன்சுலின் சமநிலைப் படுத்தினாலும் கூட, அந்த குளுக்கோஸ் சக்தியாக மாற்றப்படா விட்டால்,இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது, எங்கோ ஒரு இடத்தில் சரணடைந்து உடல் எடையையும் அதிகமாக்குகிறது. அதனால் கலோறிகளை எரிக்க உடற்பயிற்சி அவசியமாகிறது.
டயபிடிஸ் நோயாளிகளுக்கு இன்சுலின் சுரக்காது விட்டால் அது டைப் 1 என்றும்,குறைவாக சுரப்பது டைப் 2 என்றும் சொல்லப் படுவதால், நாம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். உடலில் எவ்வளவு இன்சுலின் சுரக்கப் படுகிறதோ அத்ற்கு ஏற்ப நாம் கார்போ உணவுகளை எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன்,bloodsugar உம் கட்டுப்பாட்டில் இருக்கும்.குளுக்கோஸ் என்ற இரத்த சர்க்கரை நாம் உண்ணும் கார்போ உணவுகளாலேயே அதிகமாக கிடைக்கிறது. அரிசி, போன்ற மா சத்துள்ள உணவுகளில் அதிக கார்போ உண்டு. அதிக கார்போ உணவுகளை உண்ணும் போது அது குளுக்கோசாக மாற்றமடைய, டயபிடிஸ் நோயாளிகளுக்கு சுரக்கும் இன்சுலின் போதுமானதாக இருக்காத போது மேலதிக இன்சுலின் தேவைப்படுகிறது.மேலதிக இன்சுலின் கிடைக்காத போது அந்த குளுக்கோஸ் இரத்ததில் தங்கி விட bloodsugar அதிகமாகி விடுகிறது.அதனால் தான் உடலில் சுரக்கும் இன்சுலினிற்கு ஏற்ப நாம் உண்ணும் உணவை பிரித்து பல தடவைகளாக எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் உடலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பிளாட்பாரத்தில் குடித்தனம் பண்ணுவான் நோயே வராது. படித்து படித்து சத்துள்ள உணவை உண்பான் உடல் நிறைந்த நோய் இருக்கும்.பணம் படைத்தவனிடம் சொல்லும் உணவு முறையை ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் ஏழையிடம் சொல்ல முடியாது. அத்துடன் கூடவே ஒவ்வொருவர் வாழும் சூழ்நிலை,உடலமைப்பு,வேலை நேரம் போன்றவைகளும் கவனிக்க வேண்டியவை ஆகும்.உடற்பருமன் என்ற கட்டுரையில் கூறியது போல்,ஒருவர் தனக்கு சரியாகி விட்ட உணவு முறையை மற்றவருக்கு ஆலோசனையாக கூறுவது சரியல்ல. ஒவ்வொரு நோயாளியும் மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் சொல்வதை வைத்து தனக்கென ஒரு உணவு முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஆறு முறை உணவை சிறிய அளவில் எடு என்றால் முடியாது நான் நேரமாற்று வேலை,பத்து மணி நேரம் கணினியில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும் என்று சொன்னால் மருத்துவர் என்ன செய்ய முடியும். இதனால் தான் ,நீரிழிவு நோயாளி தன்னைத் தானே கன்னத்தில் அறைந்து கொள்கிறார் என்கிறார்கள். அதாவது மருத்துவர் சொல்லும் உணவு முறையை விட அதிக கவனைத்தை சரியான நடைமுறையில் காட்டாது விட்டு விடுகிறார்கள். ஆறுக்கு மேற்பட்ட தடவை உணவு உண்ணும் முறை, தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி அதிக பலனைத் தரும்.கூடவே எடுக்கும் உணவையும் கவனத்தில் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.நடப்பதை விட சிறந்த உடற் பயிற்சி வேறென்ன உண்டு.
Blood glucose ஐ மாற்றமடைய வைக்கும் நான்கு carbohydrate,fiber,fat,protein என்பதால்,இவற்றை கவனத்தில் கொண்டு,
கடைகளில் கிடைக்கும் சர்க்கரை,செயற்கை இனிப்பு வகைகள் தவிர்ப்பது சிறந்தது. மூன்று வேளை உணவு நேரத்தை மாற்றி, ஒரு நாளில் உண்ணும் உணவின் அளவை ஆறு முதல் எட்டு முறையாக பிரித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திய பலர் இன்சுலினை எடுத்துக் கொள்ளாமலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இப்படி அதிக முறை உணவை எடுக்கும் போது, நாம் சிறிய அளவில் எடுக்கும் உணவில் உள்ள கார்போ மாற்றமடைந்து blood glucose ஆகும் போது அதை கட்டுப்படுத்த கணையத்தினால் சுரக்கப்படும் சிறிய அளவு இன்சுலின் போதுமானதாக இருக்கும். மூன்று முறை அதிக அளவு உணவை உண்ணும் போது, சுரக்கும் இன்சுலின் போதுமானதாக இருக்காத நிலையில் இரத்த குளுக்கோஸ் அதிகரித்து விடுகிறது.
அதனால் எந்த உணவு வகைகள் என்று பட்டியலிடுவதை விட carbohydrate குறைந்த அதாவது குறைந்த கலோறிகள் உடைய உணவுகளை பல முறை பிரித்து உண்பது அதிக பலனைத் தரும்.
செயற்கை இனிப்பு பொருட்கள்,செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை தவிர்ப்பதும்,ஆப்பிள், பால், முளு தானிய வகைகள்,மரக்கறி வகைகள்,பழங்கள் சேர்ப்பதும் சிறந்தது.
Glycemic index,glycemic load என்ற அளவு முறைகளை வைத்து கார்போ எந்த அளவில் blood glucose ஐ கட்டுப் படுத்துகிறது என்று கணக்கிட்டு உணவு முறையை அமைக்கிறார்கள்.அந்த கணக்கு முறைகளை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஆனாலும் நாம் மூன்று முக்கிய விதிகளை கவனத்தில் கொண்டு செயற்பட்டால் அதிக பலனை பெற்று blood sugar ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
குறைந்த கலோறிகளை,குறைந்த கார்போவை உணவாக எடுப்பதும்,அதை ஆறு முதல் எட்டு முறையாக பிரித்து உண்பதும்,அதற்கேற்ற முறையில் உடற்பயிற்சியும்,stress அற்ற மனதை அமைத்து மகிழ்வுடன் இருப்பதும் மிக அதிக பலன் தரும். முக்கியமாக கருவுற்ற தாய்மார்கள் ஒரு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிடமாவது எழுந்து நடக்க வேண்டும்.ஒரே இடத்தில் தொடர்ந்து இருப்பது பல பிரச்சனைகளைக் கொண்டு வரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாவில் நீர் ஊற அது வேண்டாம் இது வேண்டாம் என்று இருப்பதை விட,நாம் உண்ணும் கார்போ உணவுகளை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப உடற்பயிற்சியும் செய்தால் வெற்றி நம் கையில்.

நல்லவை - முளு தானியம்,மரக்கறி வகைகள்,புதிய பழங்கள்,கொழுப்பு குறைந்த பாலுணவுகள்,உருளைக்கிழங்கு

கூடாதவை- சிப்ஸ், கோதுமை மா,தோல் நீக்கிய தானியம்,அரிசி,தயாரிக்கப்பட்ட அடைக்கப்பட்ட பழம்,பொரித்த உணவுகள்,அடைக்கப்பட்ட பானங்கள்,செயற்கை இனிப்பு வகைகள்,கொளுப்பு கூடிய உணவு,அதிக உப்பு சேர்ப்பது

மீண்டும் வருகிறேன்............சக்தி



avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சர்க்கரை நோய் Diabetes-2 Empty Re: சர்க்கரை நோய் Diabetes-2

Post by மாலதி Sat Oct 15, 2011 1:32 pm

அருமையான விளக்கம் நன்றி சக்தி அறிவிப்பு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum