TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

2 posters

Go down

26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை Empty 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

Post by logu Tue Jun 08, 2010 7:13 am

போபால் : சுமார் 15 ஆயிரம் உயிரை கொன்ற போபால் விஷ வாயு வழக்கில்
சேர்க்கப்பட்ட 8 பேர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இன்றைய
தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட்
முன்பாக கூடினர். தீர்ப்பு கடுமையாக வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள்
எழுப்பினர். இதனையொட்டி கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடைய 8 பேரும் குற்றவாளிகள் என
காலையில் கோர்ட் அறிவித்தது. மதியம் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதிகம்
பட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட
குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். நீதிக்கு எதிராக கோஷங்கள்
எழுப்பினர்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984ம் ஆண்டில், யூனியன் கார்பைடு
ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது குறித்த
வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில்
உள்ள நிறுவன தலைவர் வழக்கில் இருந்து தப்பித்து விட்டார் . போபாலில்
ஏற்பட்ட விஷவாயு கசிவில், அதன் பாதிப்பில் 15 ஆயிரம் பேர் இறந்ததாகக்
கூறப்படுகிறது; 2 ஆயிரத்து 259 பேர் இறந்ததாக அரசு தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின; 5 லட்சம் பேர்
பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மிக்' எனப்படும் "மீதைல்
ஐசோ சைனைடு ' என்ற நச்சு வாயு கசிவு, பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது.
கடந்த 26 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில், இன்று இறுதி தீர்ப்பு
வழங்கப்பட்டது. போபால் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி
தீர்ப்பு கூறினார்.
ஆண்டர்சன் தப்பினார் : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒன்பது
பேரில், இந்நிறுவனத்தின் துணை மேலாளர் ஆர்.பி.ராய் சவுத்ரி
காலமாகிவிட்டார்.விஷவாயு சம்பவம் நடந்த பின், மத்தியக் குழுவினர் சென்று
ஆலையை பார்வையிட்டனர். போதிய பராமரிப்பின்மை தான் விபத்துக்கு காரணம் என
கூறப்பட்டது. இந்த ஆலையின் தலைவரும், அமெரிக்கருமான வாரன் ஆண்டர்சன்
உள்ளிட்ட மூன்று பேர், இவ்வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்து விட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் அமெரிக்காவில் பதுங்கி விட்டதாக
போபால் செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது.
இன்று வழங்கப்பட்ட தீர்பை கேட்க கோர்ட்டில் ஏராளமனவர்கள்
கூடியிருந்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்; இந்த வழக்கில் முக்கிய
குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இவர்கள் ஏன் வழக்கில்
சேர்க்கப்பட்டு தண்டனை வாங்கி கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
குற்றவாளிகளுக்கு அதிப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக பேசினர்.
முன்னதாக பூட்டிய அறைக்குள் நீதிபதி தீர்ப்பை அறிவித்ததால் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
குற்றவாளிகள் யார் ? முழு விவரம் : இந்த வழக்கில் குற்றவாளிகளாக
சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் ( ஆர்.பி ராய்சவுத்ரி ) இறந்து விட்டார்.
ஏனையோர் விவரம் வருமாறு: பொறுப்புகள் அடைகுறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
கேசூப் மகிந்திரா ( யு.சி.எல்., சேர்மன்) , விஜய்கோகலே ( மானேஜிங்
டைரக்டர்) , கிஷோர்கம்தார்( உதவி தலைவர்) , முகுந்த் ( வொர்க்ஸ் மானேஜர்)
, எஸ்பி., சவுத்ரி( புரடக்ஷன் மானேஜர் ) , கே.வி., ஷெட்டி ( பிளான்ட்
சூப்பிரண்டு ) எஸ்.ஐ., குரேஷி ( புரடக்ஷன் அசிஸ்டன்ட் ) . ஆகியோர்
அடங்குவர்.
தீர்ப்பு விவரம் : குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத்ண்டனையும் ,
தலா ரூ . ஒரு லட்சம் அபராதமும், யூனியன் கார்பைடுக்கு ரூ. 5 லட்சம்
அபராதமும், விதிக்கப்பட்டுள்ளன. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில்
குற்றவாளிகள் ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பணம் செலுத்தி ஜாமீனில் விடுவித்தும்
தீர்ப்பளித்தது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை Empty Re: 26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை

Post by மாலதி Tue Jun 08, 2010 7:24 am


26 ஆண்டு இழுவைக்கு பின் தீர்ப்பு; 15 ஆயிரம் பேரை கொன்ற 8 பேருக்கு 2 ஆண்டு சிறை 08booopal1





போபால்,
​​ ஜூன் 7:​ மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8
பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.​ இந்தச் சம்பவம் நடந்து 26
ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​
குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.​ 1 லட்சம்
அபராதமும் விதிக்கப்பட்டது.உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்து
இதுவாகும்.​ போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் ஐசோசயனைடு
நச்சுவாயு கசிந்ததில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.​ 2 லட்சம் பேர்
பாதிக்கப்பட்டனர்.​ 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் இந்த கோர
விபத்து நிகழ்ந்தது.இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின்
முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக
அறிவிக்கப்பட்டனர்.​ 85 வயதான கேஸýப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர்
குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.திங்கள்கிழமை
இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால்,​​
நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.​ இதனால் நீதிமன்ற வளாகம்
முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.​ குற்றம்
சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில்
ஆஜராகியிருந்தனர்.குற்றப்பிரிவு 304-ஏ ​(மரணத்துக்கு காரணமாக
இருத்தல்)​ 304-2 ​(பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக
இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு
தொடரப்பட்டிருந்தது.​ ​இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின்
தலைவர் வாரென் ஆண்டர்சன் ​(89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும்
குறிப்பிடவில்லை.​ தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே
வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.இந்த வழக்கில்
குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா,​​
நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே,​​ நிறுவனத்தின்
முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார்,​​ செயல் மேலாளர் ஜே.என்.​
முகுந்த்,​​ உற்பத்தி மேலாளர் எஸ்.பி.​ செüத்ரி,​​ ஆலை கண்காணிப்பாளர்
கே.வி.​ ஷெட்டி,​​ உற்பத்தி உதவியாளர் எஸ்.ஐ.​ குரேஷி ஆகியோர்
சேர்க்கப்பட்டிருந்தனர்.​ இவர்களில் எஸ்.ஐ.​ குரேஷி மட்டும்
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இந்த வழக்கில் 9-வது குற்றவாளியாக
சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி.​ ராய்,​​ வழக்கு
விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.இந்த வழக்கு தொடர்பாக மொத்தம்
178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.​ இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க
ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.நிறுவனத்தின்
உரிமையாளரான வாரென் ஆண்டர்சன்,​​ இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை.​
2,000 டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப்
பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.​ ​மிக மோசமான இந்த விஷ வாயு
வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி
பதிவு செய்யப்பட்டது.​ பின்னர் டிசம்பர் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணை
சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.​ 1987-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வழக்குப்
பதிவு செய்து விசாரணையை சிபிஐ தொடங்கியது.​ இதையடுத்து இந்த வழக்கை
விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.சிபிஐ தரப்பில்
வழக்கறிஞர் சி.​ சஹாய் ஆஜராகி,​​ யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய
வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார்.​ இந்த
விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர்.​ காற்றில் பரவிய
மீதைல் ஐசோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர்
குறிப்பிட்டார்.​ 1982-ம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில்
பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.​ அமெரிக்காவிலிருந்து
நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை
மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.இந்த விபத்து நடந்த
பிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும்
நிர்வாக குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார்.ஆனால்
ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்ததாக
எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி.​ பிரசாத்,​​ அமித் தேசாய் ஆகியோர் ​
வாதாடினர்.​ 1982-ம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத்
தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து
ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர்.பாதுகாப்பு விஷயத்தில்
யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது
என்றும்,​​ ஆலை நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை
மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.அனைவருக்கும் ஜாமீன்குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.​ இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.​ ​2002-ம்
ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸýப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.​
இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு
வழங்கப்படவில்லை.மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி :தாமதமாகக்
கிடைக்கும் நீதி;​ நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும்
ஒரு உதாரணம்.​ எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு
விட்டது. பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்:ஏற்கெனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வலியைத் தருவதாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது.இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தேசியச் செயலர் டி.​ ராஜா:வழக்கை
விசாரித்த சிபிஐ,​​ நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து
விட்டது.​ சிபிஐ-யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பேற்க
வேண்டும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum