TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சத்திர சிகிச்சை எந்திரன்கள்

Go down

சத்திர சிகிச்சை எந்திரன்கள் Empty சத்திர சிகிச்சை எந்திரன்கள்

Post by logu Mon Jun 07, 2010 8:35 am

சத்திர சிகிச்சை எந்திரன்கள் Surgeryஇப்
பூமிப்பந்தில் உயிரினங்கள் தோன்றி அவற்றின் பரிணாம வளர்ச்சி
ஆரம்பித்ததிலிருந்து மருத்துவத் துறையும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதகுலம் முதிர்ச்சியடைந்து
நாகரீகமடையத் தொடங்கியபோது மருத்துவத் துறையின் வளர்ச்சி மேலும்
வேகமெடுத்தது. பல்வேறு காலகட்டங்களிற் தாக்கும் கொடிய நோய்களை எதிர்த்துப்
போரிடுவதற்காக மனிதன் மூலிகைச் செடிகளை ஓரிடத்தில் வளர்க்கவோ அல்லது
ஓரிடத்தில் சேமித்து வைக்கவோ தொடங்கினான். அவ்வாறு தொடங்கிய
மருத்துவத்துறைப் பயணத்தின் வளர்ச்சிப்படியே இன்றைய நவீன வசதிகளுடன்கூடிய
மருத்துவமனைகள்.



இந்தக் கட்டுரையில் பார்க்கவிருக்கும் விடையம், இன்றைய நவீன மருத்துவமனைகள்சத்திர சிகிச்சை எந்திரன்கள் Robotic-surgery-layout
சிலவற்றில் பரிசோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்படுவதும், எதிர்காலத்தில்
பெரும்பாலான மருத்துவ மனைகளின் பிரதான உபகரணங்களுள் ஒன்றாக
உருவெடுக்கப்போகும் சத்திரசிகிச்சை எந்திரன்கள் (surgery robotics) ஆகும்.
அதாவது, நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும்
எந்திரன்களே சத்திரசிகிச்சை எந்திரன்கள் எனப்படுகின்றன.
தொழிற்சாலைகள் மற்றும் பிற பயன்பாடுகளில் எந்திரன்கள் குறிப்பிட்டளவு
பணிகளை தன்னியக்கமாகச் செய்யவல்லனவாகக் காணப்படுகின்றன. ஆனாலும், சத்திர
சிகிச்சையைப் பொறுத்தளவில் எந்திரன்களின் செயற்பாடுகள்
தன்னியக்கமானவையாகக் காணப்படவில்லை. மாறாக மருத்துவர் ஒருவர் நேரடியாகக்
கையினால் செய்யும் சத்திர சிகிச்சையினை, எந்திரக் கைகளின் (robotics arms)
செய்யவல்லவையாக இவை காணப்படுகின்றன. இவ்விடத்தில் கையினால் செய்யும் ஒரு
சத்திர சிகிச்சையினை எந்திரக் கைகளின் உதவியுடன் செய்ய வேண்டிய தேவை என்ன
என்றொரு வினா எழுவது தவிர்க்கப்பட முடியாதது. எந்திரன்களின் உதவியுடன்
சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது சத்திரசிகிச்சைகளின் அதிகரித்த
துல்லியத்தன்மை, குறைவான வலி, குறைந்த நேரம் போன்ற பல்வேறு அனுகூலங்கள்
காணப்படுகின்றன. அது மட்டுமன்றி, வெவ்வேறு இடங்களில் இருக்கும் மருத்துவ
நிபுணர்கள் சேர்ந்து செய்யவேண்டிய சத்திரசிகிச்சைகளி அவர்கள்
இருப்பிடத்திலேயே இருந்தவாறு செய்வது சாத்தியமாகின்றது. இவ்வாறு
செய்யப்படும் சத்திர சிகிச்சைகள் தொலைசத்திரசிகிச்சை (telesurgery)
என்றழைக்கப்படுகின்றன.
இந்த தொலை சத்திரசிகிச்சை முறைகள் இதுவரை நோயாளிகளுக்குச்
சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படவில்லையாயினும், இது
சாத்தியமானதாகவே காணப்படுகின்றது. இருப்பினும் மருத்துவரின் அசைவுகளை
கட்டுப்பாட்டுக் கணனி புரிந்து அதற்கேற்ற இயக்கத்தை எந்திரக் கைகளின்
முலம் ஏற்படுத்துவதற்கு எடுக்கும் மிகச்சிறிய நேர இடைவெளி இந்த தொலை
சத்திரசிகிச்சையில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடாகும். ஆயினும்,
தொழிநுட்பங்களின் வேகமான வளர்ச்சி இவ்வாறான குறைபாடுகளை எதிர்காலத்தில்
களைந்துவிடும் என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது.
இவ்வாறு எந்திரன்களை சத்திர சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் போது, நீண்ட
நேரமெடுக்கும் சத்திர சிகிச்சைகளின்போது மருத்துவர்களின் உடற்சோர்வு
மற்றும் பிற காரணிகளினால், சத்திர சிகிச்சையில் ஏற்படக்கூடிய தவறுகள்
தவிர்க்கப்படுகின்றன. உதாரணமாக, மருத்துவர் ஒருவர் நீண்ட நேரம்
சத்திரசிகிச்சையில் ஈடுபடும்போது, உடற்களைப்பு காரணமாக அவரின் கைகளில்
சிறு நடுக்கம் ஏற்படலாம். ஆனால், இவ்வாறான எந்திரன்களைப்
பயன்படுத்தும்போது, அவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
எந்திரன்களின் உதவியுடன் சத்திர சிகிச்சை செய்யும் முறைகள் 3 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. supervisory-controlled system
  2. telesurgical system
  3. shared-control system

சத்திர சிகிச்சை எந்திரன்கள் Robotic-surgery-2இவற்றில்
முதலாவது வகையான supervisory-controlled system முறையில் தொழிற்படும்
சத்திர சிகிச்சை எந்திரன்கள், குறித்தவொரு சத்திர சிகிச்சைக்காக மருத்துவ
நிபுணர் ஒருவரினால் முற்கூட்டியே கொடுக்கப்படும் அறிவுறுத்தற்
கட்டகைளளுக்கேற்ப தொழிற்படவல்லன. அதாவது மருத்துவ நிபுணர், சத்திர
சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் எந்திரனுக்கான கட்டளைகளை
வழங்கிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக முற்கூட்டியே குறித்த சத்திர
சிகிச்சைக்கான கட்டளைகள எந்திரனுக்கு மருத்துவ நிபுணரினால்
வழங்கப்பட்டிருக்கும். இருப்பினும் சத்திர சிகிச்சை
நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சிகிச்சையை அவதானித்து எந்திரனை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்துவதற்கோ அல்லது ஏற்கெனவே திட்டமிட்டபடி எந்திரன்
செயற்படாது போனால் அதனைச் சரிசெய்வதற்கோ, மருத்துவ நிபுணர் தொடர்ச்சியாக
எந்திரனை அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.
அடுத்து தொலைக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை எந்திரன்கள்
(telesurgical system). இவை முன்னரே குறிப்பிடப்பட்டது போன்று மருத்துவ
நிபுணர் சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு வராது வேறோர் இடத்திலிருந்தபடி
தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியுடன் எந்திரனை இயக்கி சத்திர
சிகிச்சையை மேற்கொள்ளும் முறையாகும்.
அடுத்து shared-control system என்றழைக்கப்படும் சத்திர சிகிச்சை முறை.
இவ்வகையான சத்திர சிகிச்சைகளில், எந்திரன்கள் வைத்திய நிபுணர்களுக்கு
துல்லியமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு உதவி புரிகின்றன. அதாவது,
வைத்தியர்கள் சத்திர சிகிச்சை நேரத்தில் எந்திரக் கைகளை அவற்றுக்குரிய
கட்டுப்பாட்டுக் கருவிகளின் உதவியுடன் இயக்குவதன் மூலம் சத்திர சிகிச்சையை
மேற்கொள்கின்றனர். சத்திரசிகிச்சையின் போதான எந்திரனின் அனைத்துச்
செயற்பாடுகளும் வைத்தியரின் நேரடியான கட்டுப்பாட்டிலேயே இயக்கப்படும்.
நவீன வசதிகளுடன் கூடிய பல வைத்திய சாலைகளில், வயிறு, அடிவயிறு மற்றும் இடுப்பு சத்திர சிகிச்சை எந்திரன்கள் Robotic-surgery-3பகுதிகளில்
மேற்கொள்ளப்படும் சாதாரண சத்திர சிகிச்சைகள் எந்திரன்களின் உதவியுடனேயே
தற்போது நடைபெறுகின்றன. அதுமட்டுமன்றி, 1999 இல் அமெரிக்க மருத்துவமனை
ஒன்றில் எந்திரன்களின் உதவியுடனான இருதய அறுவைச்சிகிச்சை ஒன்று
வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வறுவைச் சிகிச்சையின் வெற்றியைத்
தொடர்ந்து நுரையீரல் அறுவைச் சிகிச்சை மற்றும் புற்றுநோய்க் கட்டிகளை
அகற்றுவதற்கான அறுவைச்சிகிச்சை போன்றனவும் எந்திரன்களின் உதவியுடன்
மேற்கொள்ளப்பட்டன.
இதேபோன்று, ஒவ்வொரு வகையான இறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான
பிரத்தியேக எந்திரன்களை வடிவமைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்பட்டவண்ணமுள்ளன.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum