TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: தொடரும் மரணங்கள்… வதை முகாம்!

Go down

மிஸ்டர் கழுகு: தொடரும் மரணங்கள்… வதை முகாம்! Empty மிஸ்டர் கழுகு: தொடரும் மரணங்கள்… வதை முகாம்!

Post by Tamil Sat Apr 23, 2016 8:12 am

மிஸ்டர் கழுகு: தொடரும் மரணங்கள்… வதை முகாம்!
மரணங்கள்
‘ ‘ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால், 300 ரூபாய்… இறந்தால், 3 லட்சம் ரூபாய்’ இப்படியொரு செய்தி வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது’’ என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘விருத்தாசலம் கூட்டத்தில் இரண்டு பேர் இறந்த சோகம் மறைவதற்குள் சேலத்தில் இரண்டு பேர் மாண்டது கோடை வெப்பத்தைத் தாண்டிக் கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘மக்களுக்காக நான்… மக்களுக்காகவே நான்’ என மேடைக்கு மேடை முழங்கும் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்தில்தான் மக்கள்
வதைபடுகிறார்கள் என எதிர்க் கட்சிகள் கண்டனக் கனைகளைத் தொடுத்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசார ஸ்டைல் கொஞ்சம் மாறிவிட்டது. பொட்டல்வெளியில் மக்கள் அமர்ந்திருக்க… ஜெயலலிதாவின் மேடை மட்டும் குளுகுளு ஊட்டிபோல காட்சி அளிக்கிறது. ஜெயலலிதா அமரும் மேடைக்குள் 20 ஏர் கூலர்களும் 8 ஏஸிகளும் போடப்பட்டிருக்கின்றன. அதையும் தாண்டி வெப்பம் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக மேடையை ஒட்டி எதிரே 5 மீட்டர் அகலம் 50 மீட்டர் நீளத்துக்கு செயற்கை புல் தரை போட்டுவைத்திருக்கிறார்கள். கடைசியாக நடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரையில் மேடை பிரசாரம் என்றால், ஜெயலலிதா அருகிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது வழக்கம். வேன் பிரசாரம் என்றால், பக்கத்தில் ஒரு ஜீப்பில் வேட்பாளர் நிற்பார். ஆனால், இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைக்கூட மேடை ஏற்றாமல் இரட்டை மேடைகள் போட்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா மேடைக்குக் கீழே சிறிய மேடை போட்டு அதில்தான் அந்தந்த பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அமர வைக்கப்பட்டனர். பாவம் அவர்களும்கூட வெயிலில்தான் காய்கிறார்கள்.’’
‘‘ஜெயலலிதா பிரசாரக் கூட்ட ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன?’’
‘‘பொட்டல்வெளியில்தான். பிரசார மைதானத்தில் ஜெயலலிதா பேசும் மேடையைத் தவிர, மற்றப் பகுதிகள் எல்லாம் திறந்தவெளிகள்தான். பிரசாரம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டு அதற்குள்தான் ஆட்களைக் கொண்டுவந்து அடைக்கிறார்கள். இப்படி அடைக்கப்படு கிறவர்கள்தான் வெயில் கொடுமை தாங்க முடியாமலும், நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையமும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரித்திருந்தது. ‘பகலில் வீட்டைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்’ எனப் பல கலெக்டர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால், ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்கள் எல்லாம் மாலை மூன்று மணிக்குதான் நடைபெறுகின்றன. ஆனால், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு காலை 11 மணிக்கே கூட்டத்தைத் திரட்டிவந்து உணவுப் பொட்டலமும் தண்ணீர் பாக்கெட்டும் கொடுத்து கம்பி வேலிக்குள் திணிக்கிறார்கள்.’’
[You must be registered and logged in to see this image.]
‘‘ஐயோ!’’
‘‘சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 46 வேட்பாளர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் சேலம் மகுடஞ்சாவடி கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த மாவட்டங்களில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்குதான் ஜெயலலிதா உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியில் இருந்தே ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு வார்டு, கிளைச் செயலாளர்களும் தலா 500 பேரையும் ஊராட்சி செயலாளர்கள் 1,000 பேரையும் கட்டாயம் கூட்டத்துக்கு அழைத்துவர வேண்டும் என்பது உத்தரவு. சரக்கு லாரி, கல், மண் ஏற்றும் டிப்பர் லாரி, மினிடோர் வாகனங்களில் நீண்ட தூரத்தில் இருந்து மக்கள் ஏற்றி வரப்பட்டனர். இந்த வாகனங்கள் அனைத்தும் திறந்தநிலையில் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மக்கள் அழைத்து வந்து சேரும்போதே பலரும் சோர்ந்துவிடுகிறார்கள். அவர்களை இரும்புத் தடுப்புகளால் அமைக்கப்பட்டிருந்த மைதானத்துக்குள் வெட்ட வெளியில் 106 டிகிரி பாரன்ஷீட் சுட்டெரிக்கும் வெயிலில் அமர வைக்கிறார்கள்.’’
‘‘கேரள தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் நடத்தியதே சாதனைதான்!’’
‘‘ஆமாம்! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பொதுமக்கள்தான். உணவு, வாட்டர் பாக்கெட் தவிர, ஒரு தொப்பி மட்டுமே தரப்படுகிறது. அதை தலையில் போட்டுக்கொண்டு உட்காருகிறார்கள். ஆனாலும், வெயில் வாட்டி வதைத்தது. ஜெயலலிதா பிரசாரக் கூட்டம் நடந்த அன்றுதான் தமிழகத்திலேயே சேலத்தில் அதிக வெயில் பதிவானது. தங்களுக்குத் தரப்பட்ட வாட்டர் பாக்கெட்டுகளில் தண்ணீரைத் தலையிலும் உடலிலும் பீச்சி அடித்தும் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை பலருக்குத் தணியவில்லை. காக்கிகளின் நிலையோ அதைவிடக் கொடுமை. கர்சிப்பில் தண்ணீரை நனைத்து அதை அப்படியே தலையில் போட்டு, அதற்கு மேல் தொப்பியைப் போட்டுக்கொண்டார்கள். இன்னும் சிலரோ, தொப்பியையும் சேர்த்து நனைத்து தலையில் அணிந்துகொண்டார்கள். பெண் போலீஸார் மயங்கிவிழுந்தார்கள். 106 டிகிரி வெப்பத்தில் மனிதர்கள் எம்மாத்திரம்? வயதானவர்களும் சிறுவர்களும்தான் அதிகம் வதைப்பட்டார்கள். வெயில் கொடுமை தாங்க முடியாமல் பலர் சுருண்டு மயங்கி விழுந்தார்கள். குழந்தைகளோடு வந்தவர்களின் நிலை இன்னும் பரிதாபம். வெயில் தாங்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுதன. வெளியேறிச் செல்ல முயன்றவர்களைக் காவல் துறையினர் வெளியே செல்லக் கூடாது என தடுத்து நிறுத்தியதுதான் உச்சபட்ச கொடுமை. கூட்டம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக உள்ளே வந்தவர்களை வெளியே போகவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனால், மீறி வெளியே செல்ல முயன்றவர்களை லத்தியை சுழற்றி விரட்டியடித்தனர் போலீஸ்.’’


‘‘போலீஸுக்கு பயம் இருக்காதா?’’
‘‘இப்படியான கொடுமையில்தான் பொதுக்கூட்ட மைதானத்திலேயே மூச்சுத்திணறி மயங்கி சுருண்டு விழுந்து இறந்தார் குப்பாண்டபாளையத்தைச் சேர்ந்த 58 வயது பச்சியண்ணன். இவரைப்போலவே 5 மணி நேரம் வெயிலில் தவித்த ஆத்தூர் கடம்பூர் ராமநாதன்புதூரைச் சேர்ந்த 65 வயது பெரியசாமியும் இறந்துபோனார். கூட்டம் முடிந்து தண்ணீர் குடிக்கப்போன இடத்தில் மூச்சடைத்து ஸ்பாட்டிலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதைவிடக் கொடுமை, அங்கிருந்த காவலர்கள், ‘பெரியசாமி வந்த லாரியிலேயே உடலை ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போங்கள். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். இந்தச் சம்பவம் பற்றி யாரும் வெளியில் வாய் திறக்கக் கூடாது’ என எச்சரித்திருக்கிறார்கள். பெரியசாமியின் உடலைப் படம் எடுப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் அவரது ஊருக்குப் போனார்கள். ஆத்தூர் தினகரன் நிருபர் சேகர் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெ. பேரவைச் செயலாளர் இளங்கோவன், ‘இவனை யாருடா உள்ளேவிட்டது? கேமராவை பிடிங்கிக்கொண்டு அடித்து துரத்தியடிங்க’ எனச் சொல்ல கேமராவைப் பிடிங்கி, அடித்து இருக்கிறார்கள். சேகர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 
சுட்டெரிக்கும் வெயிலில் சுருண்டு விழுந்த பெண் எஸ்.ஐ., கற்பகம் தனியார் மருத்துவமனையிலும் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி, இரும்பாலையைச் சேர்ந்த பஞ்சாமி மற்றும் அஞ்சலை என்ற பெண் சேலம் அரசு மருத்துவமனையிலும் கவலைக்கிடமாக சேர்க்கப்பட்டுள்ளனர். பச்சியண்ணன் மருமகன் சண்முகஜோதி, ‘மாமனாருக்கு எந்த நோய் நொடியும் இல்லை. நன்றாகத்தான் இருந்தார். கட்சிக்காரர் என்பதால், எல்லோரோடும் போனார். மூச்சுத்திணறி இறந்துவிட்டார். இரண்டு பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பையன் வரதராஜன் சென்னையில் கட்டட வேலைசெய்து வருகிறார். மாமியாருக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லை. அதிர்ச்சியான சம்பவம் எதுவும் அவரிடம் சொல்லக் கூடாது என டாக்டர்கள் சொல்லியிருப்பதால், கணவர் இறந்த செய்தியைக்கூடச் சொல்லவில்லை’ என்றார்.’

‘‘ஓஹோ!’’
‘‘கூட்டத்துக்கு 160 கி.மீ., தூரத்தில் இருக்கிற கோவை தொண்டாமுத்தூரில் இருந்தெல்லாம் ஆட்களை அழைத்து வந்திருந்தார்கள். அவர்களிடம் பேசியபோது, ‘காலை 10 மணிக்கு பட்டச்சாதம் கொடுத்தாங்க. சாப்பிட்டு முடிந்தும் 11 மணியில் இருந்து உட்கார்ந்திருக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ‘அம்மா கூட்டத்துக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். வந்தால் ஒரு நாள் வேலை செய்ததுபோல கணக்குக் காண்பித்து பணம் கொடுப்போம். அதோடு, 200 ரூபாய் சேர்த்து 300 ரூபாய் கொடுப்போம். வராமல் போனால், அடுத்த நாளில் இருந்து வேலை கொடுக்க மாட்டோம்’ என எங்க பஞ்சாயத்து தலைவர் சொன்னதால்தான் கூட்டத்துக்கு வந்தோம். துண்டுகூட எடுத்துவரவில்லை. வெயில் சுட்டெரிக்கிறது. வெளியில்கூட போகவிடாமல் போலீஸ்காரர்கள் தடுக்கிறார்கள்’ எனப் புலம்பினார்கள்.”
‘‘இதுவரை நடக்காத கொடுமை இது!”
‘‘மக்களின் வறுமையும், அறியாமையையும் பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிர்காலத்துக்காக உயிர்களைவைத்து விளையாடுகிறார்கள். விருத்தாசலத்தில் இரண்டு பேர் இறந்தும்கூட அரசியல்வாதிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடந்தும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது ஏன் என்கிற கேள்விகளை முன்வைக்கிறார்கள் எதிர்க் கட்சியினர். மனித உயிர்களை மதிக்காமல் ஆட்டு மந்தைகளைப்போல மக்களை அடைத்து வைப்பதை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணிக்காதா? ஆயிரக்கணக்கில் மக்களை அழைத்துவந்து சுட்டெரிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை சாதாரண விதிமீறலாகப் பார்க்க முடியாது. மக்களின் உயிர்களுக்குத் தெரிந்தே, ஆபத்தை ஏற்படுத்தியதாகத்தான் பார்க்க வேண்டும் எனப் புகார் எழுப்புகின்றனர்.
டாக்டர் ராமதாஸோ, ‘மகுடஞ்சாவடி சாவுகளுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-வது பிரிவின்படி ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மேடையில் தாம் மட்டும் அமர்வதற்காக 20 டன் அளவுக்கு 8 ஆளுயர குளிரூட்டிகளை பொருத்தும்படி நிர்வாகிகளுக்கு ஆணையிடும் முதலமைச்சர் ஜெயலலிதா, கட்சியினருக்கு அடிப்படை வசதிகூட செய்து தராததற்கு இதுவே சரியான தண்டனையாக இருக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார்.’’
[You must be registered and logged in to see this image.]
‘‘தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’’ 
‘‘2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லக்னோ தொகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்டார். அவரது தேர்தல் ஏஜென்டான லால்ஜி தாண்டன், லக்னோ சந்திரசேகர் ஆசாத் பூங்காவில் வாக்காளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார். இதை வாங்குவதற்காக கூட்டம் திரண்டிருந்தது. இந்த நெரிசலில் சிக்கி 22 பேர் இறந்துபோனார்கள். அப்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை எடுத்தார். வாஜ்பாய்க்கு நோட்டீஸ் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழகத்தில் இரண்டு இடங்களில் இப்படி நடந்தும் கண்டுகொள்ளவில்லையே ஏன் என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கால்நடைகள், பறவைகள் எல்லாம் முன்பு தேர்தல் சின்னமாக வைத்திருந்தார்கள். 1989 தேர்தலில் அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டை புறாவும் வழங்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சின்னங்களைப் பிரபலப்படுத்து வதற்காக கால்நடைகளையும் பறவைகளையும் கட்சியினர் கொடுமைப்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உயிரினங்களைச் சின்னங்களாகப் பயன்படுத்துதை ரத்து செய்துவிட்டது. இப்படி கால்நடைகள் மீதும் பறவைகள் மீதும் பரிவுகாட்டும் தேர்தல் ஆணையம், இப்படி வதை முகாம்களில் அடைக்கப்பட்டு வெயில் கொடுமையில் இறப்பவர்களைக் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் எப்போது துடைக்குமோ?”
‘‘ஏன் வெயிலில் கூட்டம் நடத்துகிறார்கள்?’’
‘‘எல்லா ஊர்களுக்கும் ஹெலிகாப்டரில்தான் ஜெயலலிதா போய் பிரசாரம் செய்துவருகிறார். மாலை ஐந்து மணிக்கு மேல் கூட்டத்தை முடித்துவிட வேண்டும். ஹெலிகாப்டரை இரவில் இயக்க மாட்டார்கள். அதனால்தான் ஹெலிகாப்டர்கள் கிளம்பி சென்னை வருவதற்கு வசதியாக பிரசாரக் கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டிய கட்டாயம். அதனால் ஹெலிகாப்டருக்கு ‘குட் டைம்’… ஜனங்களுக்கு ‘பேட் டைமாம்’. விருத்தாசலத்தில் இரண்டு பேர் இறந்த பிறகும் இது தொடர்வதற்குக் காரணம் ஹெலிகாப்டர்தான். ஹெலிகாப்டருக்கு வசதியாகத்தான் இந்த வெயில் ஜெயில் மீட்டிங். இந்தச் சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், இதுபோன்ற மரணங்கள் ஆளும் கட்சிக்கு இந்தத் தேர்தலில் அச்சுறுத்தலாக மாறிவிடும்’’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு ஜூட்விட்டார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum