TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: பேனாவை தூக்கி வீசிய கருணாநிதி!

Go down

மிஸ்டர் கழுகு: பேனாவை தூக்கி வீசிய கருணாநிதி! Empty மிஸ்டர் கழுகு: பேனாவை தூக்கி வீசிய கருணாநிதி!

Post by Tamil Sat Apr 16, 2016 7:21 am

மிஸ்டர் கழுகு: பேனாவை தூக்கி வீசிய கருணாநிதி!
கருணாநிதி
பெருமிதத்தோடு உள்ளே வந்தார் கழுகார். சர்க்கரைப் பொங்கல் பரிமாறினோம்.
‘‘துர்முகி ஆண்டுக் கொண்டாட்டமா?” என்றார். “தி.மு.க வேட்பாளர்  பட்டியலை முந்தித் தந்ததற்கான கவனிப்பு. நீர் சொன்னதில் 113 தொகுதிகள் மிகச் சரியாக இருந்தன. நிறைய வாசகர்கள் நமக்கு போன் செய்து இதனைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கழுகாருக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவிக்கச் சொன்னார்கள்” என்றோம்.
சர்க்கரைப் பொங்கலை ஒரு வில்லம் எடுத்து விழுங்கியபடியே, “அதற்குள் எண்ணி வீட்டீரா? 113 தொகுதிகள் என்பது சரிதான். நான்

சொன்னதில் தொகுதியும் நபரும் சரியாய் இருந்தது. நான் குறிப்பிட்டிருந்த ஆட்களுக்கு, சொல்லி இருந்த தொகுதி இல்லாமல்  வேறு தொகுதிகளைக் கொடுத்துள்ளார்கள். தாயகம் கவிக்கு எழும்பூர் என்று சொல்லி இருந்தேன். திரு.வி.க. நகர்    தரப்பட்டுள்ளது. தியாகராயர் நகர் தொகுதியில் நான் குறிப்பிட்ட கு.க.செல்வம் ஆயிரம் விளக்கிலும் பல்லாவரம் என்று  சொல்லியிருந்த, தா.மோ.அன்பரசன் ஆலந்தூரிலும் மாறி இருந்தது. மதுராந்தகம் என்று குறிப்பிட்டு இருந்த டாக்டர் அரசு செய்யூரிலும் வேப்பனஹள்ளி என்று சொல்லப்பட்ட, செங்குட்டுவன் கிருஷ்ணகிரியிலும், கோவை வடக்கு என்று சொல்லப்பட்ட  கார்த்தி, சிங்காநல்லூரிலும் உசிலம்பட்டியில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்ட சேடப்பட்டி முத்தையாவின் மகன்  மணிமாறன் திருப்பரங்குன்றத்திலும் போட்டியிடுகிறார்கள். சொன்ன ஆட்கள் சரி; ஆனால், அவர்களுக்குப் பக்கத்துத் தொகுதியில் பந்தி போடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 120 தொகுதிகளுக்கு மேல் சரியாக இருந்துள்ளன. இந்தப் பட்டியல் தாங்கிய  ஜூ.வி 12-ம் தேதி ரிலீஸ் ஆனது. தி.மு.க தனது அதிகாரப்பூர்வ பட்டியலை 13-ம் தேதி மாலையில் வெளியிட்டுவிட்டது. “12-ம் தேதி ஜூ.வி வெளியானதும் அதை வாங்கிய உடன்பிறப்புகள், ‘அவருக்குக் கிடைச்சிருக்கு; இவருக்குக் கிடைக்கல;  அவருக்கு எப்படி கொடுக்கலாம்; இவருக்கு ஏன் கொடுக்கல’ என்று அண்ணா அறிவாலயத்தில் பேசிக்கொண்டிருந்ததைப்  பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு நாம் வெளியிட்ட பட்டியல் பரபரப்பைக் கிளப்பிவிட்டது’’ என்று விவரித்தார்.
“தி.மு.க வெளியிட்ட பட்டியல் எப்படி?’’ என்றோம்.
‘‘இதே கேள்வியை தி.மு.க-காரர் ஒருவரிடம் கேட்டேன். ‘நிறைய புதுமுகங்களுக்குக் கொடுத்திருக்காங்க. பழைய முகங்களும் அப்படியே இருக்கு. நாங்க அவ்வளவு சீக்கிரம் திருந்திட மாட்டோம்ல’ என்றார். டாக்டர்கள் பரிமளம், கனிமொழி, ஆர்.டி.அரசு, அஞ்சுகம் பூபதி, ஸ்ரீபிரியா, தேன்மொழி என்று புதுமுகங்களைப் பார்க்க முடிகிறது. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன், மதுரை மத்தியத் தொகுதியில்  நிற்கிறார். தாயகம் கவி, இ.பரந்தாமன் என   புதுமுக  வழக்கறிஞர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், பழைய நந்திகள் விலகவில்லை.”
“இது தி.மு.க-வில் வழக்கம்தானே?”
“ஸ்டாலின் வந்தால் மாற்றம் வரும் என்று நினைத்த பலரும் சோர்வடைந்து போனார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த குறுநில மன்னர்களுக்கு எழுதி வைக்கப்பட்டனவோ, அதே குறுநில மன்னர்கள் தங்கள் ராஜ்யங்களை  விட்டுத்தரத்  தயாராக இல்லை. கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன்,  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.பி.பி.சாமி, மூக்கையா, சுரேஷ்ராஜன் என்று இந்தப் பட்டியலிலும் அதே மன்னர்களின்  ஆதிக்கம் இருக்கிறது.  இதைவிட முக்கியமாக வாரிசு அரசியல் தலைதூக்கி ஆடுகிறது. சு.ப.தங்கவேலனின் மகன், சேடப்பட்டி முத்தையாவின் மகன், வீரபாண்டி அறுமுகத்தின் மகன், டி.ஆர்.பாலுவின் மகன், தர்மபுரி மனோகரனின் மகன், ஆரணி சிவானந்தத்தின் மகன் என்று வாரிசுகள் பட்டியல் ரொம்ப நீளம். அப்பா திண்டுக்கல் பெரியசாமி ஆத்தூரில் போட்டியிடுகிறார். மகன் செந்தில்குமார் பழநியில் போட்டியிடுகிறார். ‘வேற ஆளே இல்லையா?’ என்கிறார்கள். கட்சியில்  அந்த அளவுக்கு ஐ.பெரியசாமி குடும்ப ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. ‘ஐ.பி-க்கு கொடுத்தது ஸ்டாலின் கோட்டா. ஐ.பி மகனுக்குக் கொடுத்தது துர்கா கோட்டா’ என்றும் சொல்கிறார்கள்.”
“கோபாலபுரத்தில் அப்பாவும் மகனும் விட்டுக்கொடுத்தார்களா? திண்டுக்கல்லில் விட்டுத் தருவதற்கு?”
“அதுதானே! தனக்கு வாங்குவது வாரிசுகளுக்கு வாங்குவதுகூட சொந்தப் பிரச்னை. ஆனால், தங்கள் அரசியல் எதிரிகளை வீழ்த்துவதில் இந்தக் குறுநில மன்னர்கள் இன்னும் துடித்துக் கிடந்தார்கள்.’’
‘‘அது என்ன?’’
“கலசப்பாக்கத்தை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டு, திருவண்ணாமலை ஸ்ரீதர் போட்டியிட வாய்ப்பு இல்லாதது மாதிரி பார்த்துக் கொண்டாராம் எ.வ.வேலு. விழுப்புரத்தை முஸ்லீம் லீக்குக்கு தாரைவார்த்துவிட்டு தனது எதிரிகளுக்குப் போய்விடாத  மாதிரி பார்த்துக்கொண்டாராம் பொன்முடி. மணப்பாறை தொகுதியை முஸ்லீம் லீக் கேட்கவே இல்லை. நேரு அதைத் தாரை வார்த்துவிட்டு சல்மாவுக்கு வாய்ப்பு இல்லாதது மாதிரி பார்த்துக்கொண்டார். தொகுதிகளை தாரை வார்த்தவர்கள், குறிப்பிட்ட தொகுதியில் தனது எதிரிகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத மாதிரி பார்த்துக்கொண்டார்களாம்.’’
“விழுப்புரம், பொன்முடியின் சொந்த தொகுதியாச்சே?’’
‘‘அ.தி.மு.க சார்பில் சி.வி. சண்முகம் நிற்கிறார் என்றதும் பொன்முடிக்கு உதறல் எடுத்துவிட்டது. அவர் திருக்கோவிலூர் தொகுதிக்குப் போய்விட்டார். வானூர் தொகுதி, பொன்முடிக்கு பிடிக்காத புஷ்பராஜுக்கும் விக்கிரவாண்டி தொகுதி, பொன்முடிக்கு ஆகாத அந்நியூர் சிவாவுக்கும் முடிவாகி இருந்ததாம். இந்த இரண்டு பேரையும் சமாளிக்க முடியாது என்று நினைத்த பொன்முடி, கருணாநிதிக்கு ஒரு கண்ணீர் கடிதம் எழுதி இருக்கிறார். ‘தனது அரசியல் எதிர்காலமே இந்த இரண்டு தொகுதிகளில்தான் இருக்கிறது’ என்று அதில் உருக… அந்தக் கடிதத்தை ஸ்டாலினிடம் தந்துள்ளார் கருணாநிதி. உடனே புஷ்பராஜுக்கு பேசிய ஸ்டாலின், ‘இந்த தடவை நீங்க விட்டுக் கொடுங்க. லோக்கல் ஆளைப் போடுவோம், என்று வானூர் தொகுதியில் மைதிலி என்பவரை நிறுத்தினார்கள். ‘இந்த லாஜிக் விக்கிரவாண்டி தொகுதிக்கு இல்லையா. வெளியூர்காரரான ராதாமணியை எப்படி விக்கிரவாண்டியில் நிறுத்தலாம்?’ என்று கேட்கிறது பொன்முடியின் எதிர்கோஷ்டி.”
‘‘சொல்லும்!”

[You must be registered and logged in to see this image.]

‘‘திரு.வி.க. நகர் அல்லது எழும்பூர் என்று தமிழன் பிரசன்னாவுக்கு முடிவாகி இருந்தது. ‘நீங்க நில்லுங்க தம்பி’ என்று முதலில் ஊக்கம் கொடுத்த மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, பின்னர் பின்வாங்க ஆரம்பித்தாராம். ‘தமிழன் பிரசன்னா நல்லா பேசுற ஆளு. ஜெயிச்சு வந்தார்னா மந்திரி கொடுத்துருவாங்க. பக்கத்துத் தொகுதிக்காரரான உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்காது’ என்று சேகர்பாபுவுக்கு சிலர் தூபம் போட, அவர் பேக் அடித்தார். சைதாப்பேட்டை தொகுதிக்காரரான தாயகம் கவியை கொண்டு போய் திரு.வி.க நகரில் போட்டுள்ளார்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூரில் குடியேறிய ரவிச்சந்திரனை எழும்பூரில் போட்டுள்ளார்கள். மாதவரத்தில் நின்று தோற்ற கனிமொழிக்கு தியாகராயர் நகர் தரப்பட்டுள்ளது. டாக்டர் கனிமொழியை விட்டுவிட முடியுமா என்ன?”
‘‘ஜின்னா என்ன ஆனார்?”
‘‘அவருக்கு இதயத்தில்தான் இடம்! ‘அன்பில் மகேஷ் திருவெறும்பூரில் நிற்கிறார். அதனால் அவர் என்னோடு சுற்றுப்பயணம் வரமுடியாது. நீங்கதான் கூட இருக்கணும்’ என்று ஜின்னாவுக்கு அல்வா கொடுத்துவிட்டார் ஸ்டாலின். குடும்ப கோட்டாவில் கு.க.செல்வம் ஆயிரம் விளக்கில் ஜொலிக்கிறார். அ.தி.மு.க-வில் போட்டியிடும் வளர்மதியும் கு.க.செல்வமும் அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ஒன்றாகக் கோலோச்சியவர்கள். இன்று எதிர் எதிராக நிற்கிறார்கள். முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஆயிரம் விளக்கில் முஸ்லீம் ஒருவரை நிறுத்தி இருக்கலாம் என்கிறார்கள். தி.மு.க-வில் போட்டியிடும் அனைத்து முஸ்லீம் வேட்பாளர்களும் ஆண்கள்தான். அதனால் ஒரு முஸ்லீம் பெண் வேட்பாளருக்குக் கொடுத்திருக்கலாம்’ என்கிறார்கள்.”
‘‘பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் சீட் கேட்டு இருந்தாரே?”
‘‘அன்பழகனே  தி.மு.க-வில் வேண்டாத ஆள் ஆகிவிட்டார். அவரது பேரனுக்கு எப்படிக் கொடுப்பார்கள்? தனக்கு வேண்டாம் என்று சொன்னால் தனது பேரனுக்குக் கொடுப்பார்கள் என்று அன்பழகன் எதிர்பார்த்தார். ஆனால் தரவில்லை. ‘நான் கேட்க மாட்டேன். அவங்களாக் கொடுத்தா வாங்கிக்கோ’ என்று அன்பழகன் சொல்லி இருக்கிறார். தொகுதி கேட்டுப் பணம் கட்டாமல் சீட் வாங்குவதற்கு வெற்றியழகன் என்ன சேகர்பாபுவா? அதனால், வெற்றியழகனுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அன்பழகன் ஒரு வேட்பாளருக்குப் பரிந்துரை செய்தார். ஆனால் அவருக்குத் தரப்படவில்லை!”
‘‘அது யார்?”

[You must be registered and logged in to see this image.]
‘‘கருணாநிதியின் நிழலாக 30 ஆண்டுகள் இருந்த ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதிக்கு, அண்ணாநகர் தொகுதியைக் கேட்டார் அன்பழகன். ஸ்டாலினிடம் சொன்னார்.வீராசாமி, கருணாநிதியிடமும் ஸ்டாலினிடமும் சொன்னார். கலாநிதி, ஸ்டாலினை சென்று பார்த்துள்ளார். ‘கட்சி நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்த்ததே இல்லையே… அப்புறம் எப்படித் தரமுடியும்?’ என்று ஸ்டாலின் கேட்டாராம். இதைச் சொல்லும் கழக உடன்பிறப்பு, வரிசையாக 20 பெயர்கள அடுக்குகிறார். ‘இவர்கள் எந்தக் கூட்டத்துக்கு வந்துள்ளார்கள்’ என்று போட்டோ ஆதாரத்தைக் காட்டட்டும். நான் இன்று முதல் கருப்பு சிவப்பு வேட்டியை கட்டுறதை நிறுத்திடுறேன்’ என்கிறார். இப்படி ஆள் ஆளுக்கு ஒரு தடையைப் போட்டு ஆற்காடு மகனைக் காலி செய்துவிட்டார்கள். ஆனால், பத்துக்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு பட்டியலில் இடம் கொடுத்துள்ளார்கள்!”
‘‘அண்ணா நகரில் போட்டியிடும் எம்.கே.மோகன் யார்?”
‘‘ஸ்டாலினுக்காக எல்லா புரமோஷன்களும் செய்வது ஓ.எம்.ஜி குரூப். அதன் உரிமையாளர் கார்த்தி. அந்த கார்த்தியின் அப்பாதான் இந்த மோகன். முன்பு தி.மு.க கவுன்சிலராக இருந்தவர். இந்த டீம் தான் யார் யாரை எந்தத் தொகுதிக்குப் போடலாம் என்று எடுத்துக் கொடுத்தது. அண்ணா நகரில் அப்பாவை நிறுத்தினால் ஜெயிக்கலாம் என்று மகனே எடுத்துக் கொடுத்தார்.”
‘‘சூப்பர்!”
‘‘இந்த ஓ.எம்.ஜி குரூப்பை முன்னாள் அமைச்சர்கள் சிலர் வசப்படுத்திவிட்டார்கள் என்று சில வாரங்களுக்கு முன்பே நான் சொல்லி இருந்தேன். நீரும் அதைக் கட்டம் கட்டிப் போட்டு இருந்தீர். பெரும்பாலும் எ.வ.வேலு கட்டுப்பாட்டில்தான் இந்த டீம் இயங்கி உள்ளது. ‘ஸ்டாலினை பார்த்தவர்களைவிட வேலுவை பார்த்தவர்கள் அனைவருக்கும் சீட் கிடைத்துவிட்டது’ என்கிறார்கள். வேலூரை சேர்ந்த நந்தகுமாருக்கு அணைக்கட்டு தொகுதி தரப்பட்டு உள்ளது. அணைக்கட்டு தொகுதி ஆட்கள் இப்போதே போராட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள். இது எல்லாமே இந்த மாதிரியான பரிந்துரைகள்தான் என்கிறார்கள்!”

[You must be registered and logged in to see this image.]
‘‘கருணாநிதி தலையிடவில்லையா?”
‘‘எனக்கு திருவாரூர், நான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதைத்தாண்டி பெரிய அளவில் கருணாநிதி முதலில் தலையிடவில்லை. மதுரைக்காரர் ஒருவர் வந்து கேட்டபோது, ‘எல்லாம் அவருதான்… அவரிடம் கேளு’ என்று கருணாநிதி சொல்லிவிட்டார். ஆனால் கனிமொழியும் ராஜாத்தி அம்மாவும் அப்படி இருப்பார்களா? தனது ஆதரவாளர்கள் பட்டியலை கனிமொழி கொடுத்துள்ளார். அவர்களில் யாருக்கும் சீட் தரப்படவில்லை. கண்கலங்கிவிட்டாராம் கனிமொழி. கருணாநிதியாலும் எதுவும் செய்யமுடியவில்லை. பட்டியல் வெளியிடத் திட்டமிட்ட 13-ம் தேதி அன்று காலையில் மீண்டும் சச்சரவு கிளம்பி, கோபாலபுரம் வீட்டுகே ராஜாத்தி அம்மாள் வந்துவிட்டாராம். கனிமொழி கேட்ட தொகுதிகளைத் தரவேண்டும் என்று ராஜாத்தி சொல்ல… ஸ்டாலினிடம் போனில் கேட்க… ‘லிஸ்ட்டை மாத்துறதா இருந்தா எல்லாத்தையும் நீங்களே பார்த்துகோங்க’ என்ற தனது வழக்கமான பாணியை ஸ்டாலின் கடைப்பிடிக்க, முட்டல் மோதல் தொடங்கியது. ‘ஒரே ஒரு சீட் சொல்லும்மா’ என்று கருணாநிதி கேட்க… வேறு வழியில்லாமல் கிள்ளை ரவிச்சந்திரன் பெயரை கனிமொழி சொல்ல… அவருக்கு சீர்காழி தொகுதி தரப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ராஜாத்தி அம்மாள் கோபமாக வெளியேறி இருக்கிறார்!”
‘‘அப்படியா?”
‘‘அடுத்த சிக்கல் கருணாநிதியின் உதவியாளர் நித்யா மூலமாக வந்தது. பல்லாவரம் தொகுதியை இ.கருணாநிதிக்குக் கேட்டார் நித்யா. ஆனால், அங்கு தா.மோ.அன்பரசன் போட்டியிட வேண்டும் என்றார் ஸ்டாலின். விட்டுத்தர மறுத்துவிட்டார்கள் ஸ்டாலினும் அன்பரசனும். ‘எனக்கு எல்லா உதவிகளையும் செய்ற நித்யாவுக்காக ஒரு சீட் தரமாட்டீங்களா?’ என்று பேனாவை தூக்கி அடித்துள்ளார் கருணாநிதி. 13-ம் தேதி காலையில் பட்டியல் வராததற்குக் காரணம் இதுதான். பிறகு வேறு வழியில்லாமல் ஆலந்தூர் தொகுதி மாற அன்பரசன் சம்மதித்தார். 13-ம் தேதி முழுக்கவே இந்த ரசாபாசங்கள்தான் நடந்தன. அதனால்தான் காலையில் பட்டியலை விடாமல் மாலையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விடுவதாகச் சொல்லிவிட்டு அதையும் செய்யாமல் அனைத்து ஊடகங்களுக்கும் மெயில் அனுப்பினார்கள்.”
‘‘ம்!”
‘‘செஞ்சி தொகுதிக்கு ஆனந்த்தை போட்டுவிட கடைசிக்கட்ட முயற்சிகளில் பொன்முடி இறங்க… ‘உங்களைத்தவிர கட்சியில யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா?’ என்று கேட்க, பொன்முடி மன்னிப்பு கேட்க… செஞ்சி தொகுதிக்கு மஸ்தான் பெயர் டிக் ஆகி இருக்கிறது. திண்டுக்கல் தொகுதியில் பஷீரைத் தடுக்க ஐ.பெரியசாமி எடுத்த முயற்சிகள் பலன்கொடுக்கவில்லை. கனிமொழி ஆதரவாளரான பத்மநாபபுரம் புஷ்பலீலா ஆல்பனை காலி செய்துவிட்டார்கள். ஸ்ரீரங்கம் தொகுதியில் இரண்டு முறை நின்று தோற்றவர் ஆனந்த். அவருக்குக் கொடுத்தால் இந்தத் தடவை ஜெயித்துவிடுவார் என்று நினைத்த நேரு, அவரைப் பரிந்துரை செய்யாமல் பழனியாண்டி என்பவரைக் கொண்டு வந்துவிட்டார்.

[You must be registered and logged in to see this image.]
இது எல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. ‘யாரைப் போட்டாலும் கட்சி ஜெயிக்கும் என்ற அலட்சியம்தான் தெரிகிறது’ என்ற கட்சிக்காரர் ஒருவர், ‘விழுப்புரம் மாவட்டத்தில் 11 தொகுதிகள். மூன்று பேர் எஸ்.சி., மூன்று பேர் முஸ்லீம், மூன்று பேர் உடையார், இரண்டு பேர் வன்னியர். அ.தி.மு.க-வில் 7 வன்னியர்களுக்கு சீட் கொடுத்துள்ளார்கள். ராமதாஸுக்கு செல்வாக்கான மாவட்டத்தில் வன்னியரே இல்லாமல் கட்சி நடத்துவது ஸ்டாலினினின் தைரியமா? அலட்சியமா?’ என்று இவர்கள் கேட்கிறார்கள்.
விளாத்திகுளம், அ.தி.மு.க வெல்லும் தொகுதி. ரெட்டியாரை போட்டு அ.தி.மு.க ஜெயிக்கிறது. தொடர்ந்து நாயக்கரை போட்டுத் தோற்று வருகிறது தி.மு.க. இந்த முறையும் அதே தவறைச் செய்துள்ளார்கள். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஏற்கெனவே கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர். இவரை மாற்ற வேண்டும் என ஆறு ஒன்றியச் செயலாளர்கள் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களாம். எத்தனை லட்சம் கொடுத்து ஏஜென்சி வைத்து என்ன பயன்?” என்றபடி பறந்தார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum