TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: ஆண்டவன் லிஸ்ட்! – சசி ஆன்மிக டூர் பின்னணி

Go down

மிஸ்டர் கழுகு: ஆண்டவன் லிஸ்ட்! – சசி ஆன்மிக டூர் பின்னணி Empty மிஸ்டர் கழுகு: ஆண்டவன் லிஸ்ட்! – சசி ஆன்மிக டூர் பின்னணி

Post by Tamil Wed Apr 06, 2016 6:50 am

மிஸ்டர் கழுகு: ஆண்டவன் லிஸ்ட்! – சசி ஆன்மிக டூர் பின்னணி
மிஸ்டர் கழுகு
அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலுடன் லேண்ட் ஆன கழுகார், ‘‘தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்ட கட்சி என்கிற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறது அ.தி.மு.க’’ என்கிற பீடிகையுடன் பேச ஆரம்பித்தார். துண்டுச் சீட்டில் எழுதிய பேப்பர்களை நம் முன்பு போட்டார். ஒவ்வொன்றிலும் ஒரு தலைப்பு எழுதப்பட்டிருந்தது. ‘‘என்ன சீட்டு இது’’ எனச் சொல்லி சீட்டை எடுத்தோம். ‘சசிகலா’ என எழுதப்பட்டிருந்தது.
‘‘வழக்கமாக வேட்பாளர் பட்டியலில் சசிகலாவின் கை ஓங்கும். அடையாளம் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைவைத்தே புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? இந்த முறையும் சசிகலாவின் கைதான் ஓங்கியிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வமும் நத்தம் விசுவநாதனும் ஓரம்கட்டப்பட்ட போது இது சசிகலா கைங்கர்யம் என்று கட்சிக்காரர்கள் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் எதிர்பார்த்தது ஒரே ஒரு தொகுதியின் வேட்பாளரைத்தான். அங்கே அந்த பிரமுகருக்கு சீட் தரப்பட்டால், மொத்த வேட்பாளர் லிஸ்ட்டும் சசிகலாவின் கண் அசைவில்தான் ரெடியானது என்று சொல்லியிருப்பார்கள். சசிகலாவின் தம்பி திவாகரன் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் எஸ்.காமராஜ். உள்ளூரில் பெரிய புள்ளி. இவர் வீட்டில் அண்மையில் நடந்த துக்க நிகழ்ச்சிகளில் திவாகரன் வந்து கலந்துகொண்டார். இதையெல்லாம் வைத்து இவர்தான் மன்னார்குடி வேட்பாளர் என்றே உறுதியாக பேச ஆரம்பித்தனர் அ.தி.மு.க-வினர். ஆனால், வேட்பாளர் பட்டிலியலில் எஸ்.காமராஜ் பெயர் இல்லை. திவாகரனின் எதிர்ப்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜின் முக்கிய ஆதரவாளரான சுதா என்பவரின் பெயர்தான் இடம்பெற்றிருந்தது.’’
அடுத்த சீட்டை எடுத்தோம். ‘பதவி இழந்த 10 அமைச்சர்கள்’ என்று இருந்தது!
‘‘விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தரராஜ், சமீபத்தில் புதுக்கோட்டையில் மாணவிகளிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியது. வாட்ஸ் அப்பிலும் அது வைரல் ஆனது. அதன் எதிரொலி யாகத்தான் அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. சண்முகநாதன், ஜெயபால் இருவரும் பெண்கள் தொடர்பான புகார்களில் சிக்கியவர்கள். முக்கூர் சுப்ரமணியன், கந்தவர்வக்கோட்டை சுப்ரமணியம், திருப்பூர் ஆனந்தன், பூனாட்சி, அப்துல் ரஹீம், மோகன் ஆகியோரின் பணிச் செயல்பாடுகளும் ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவர்களுக்கும் சீட் இல்லை. கல்தா லிஸ்ட்டில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனின் பெயர் இருந்ததுதான் பலருக்கும் ஆச்சர்யம். முதல்வர் தொகுதியில்கூட இல்லாத வகையில் ஆறு கல்லூரிகளை பாபிரெட்டிப்பட்டி தொகுதியில் கொண்டுவந்திருக்கிறார். இவரின் சாதனைகளைவைத்து இவர்தான் மீண்டும் வேட்பாளர் என்றே கட்சிப் பிரமுகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சமீபத்தில் இவர் வாங்கிக் குவித்த சொத்துக்கள் பற்றி கார்டன் விசாரித்து வந்தது. இந்த நிலையில்,  சில சொத்துக்களின்  விவரங்களை யாரோ சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பொய் என்று சொல்லி பதறினார் பழனியப்பன். ஆதாரங்களைச் சேகரித்து போயஸ் கார்டன் வரை ஓடினார். உளவுத் துறையினரிடம் மன்றாடினார். ஆனால், இவரின் புலம்பல் ஜெயலலிதாவைச் சென்றடையவில்லை. ஆட்சிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி  மூன்று நாட்களாக வீட்டுக்கே போகாமல் போயஸ் கார்டனிலே தங்கிவிட்டார். இவர் ஏன் கார்டனில் தங்கினார் என்பது பலருக்கும் புரியவில்லை. இந்தப் பெண்மணி சொன்னதை, முன்பு பழனியப்பன் செய்யவில்லையாம். அதனால்தான், அந்தப் பெண்மணி ஸ்கெட்ச் போட்டு பழனியப்பனை காலி செய்துவிட்டதாகப் பேச்சு’’
[You must be registered and logged in to see this image.]
அடுத்த சீட்டை எடுத்தோம். ‘சர்ச்சைக்குரிய பிரமுகர்கள்’ என இருந்தது.
‘‘அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜியின் பெயர்கள் முதல் லிஸ்ட்டில் இல்லை. ஆனால், சைபர் க்ரைம் போலீஸ் உபயத்தில் இருவருக்கும் கடைசி நேரத்தில் சீட் கிடைத்தது. ஏழு கோணிப் பைகளில் தங்கம், பணம் ஆகியவற்றைத் தனியார் பஸ்ஸில் மன்னார்குடியில் இருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்படுவதாக 10 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இதெல்லாமே டுபாக்கூர் என்பதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்தனர். பஸ்ஸின் உண்மையான உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து டகால்டி வேலை செய்த ஆலந்தூர் பிரமுகரை அமுக்கியது போலீஸ். இந்த விஷயம் போயஸ் கார்டனுக்குத் தெரிவிக்கப்பட்டதாம். அடுத்து, ராஜேந்திரபாலாஜியின் கொலை மிரட்டல்  ஆடியோ உரையாடல் விவரங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இவையெல்லாம் பக்காவாக சென்னையில் ஒரு ஆடியோ ஸ்டுடியோவில் எடிட் செய்து வேண்டுமென்றே வெளியிடப்பட்டதாக சைபர் க்ரைம் போலீஸ் கண்டுபிடித்து கார்டனுக்குச் சொன்னது. அதையடுத்து, இருவரின் பெயர்களும் கடைசி நிமிடத்தில் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டதாம். ஆனால், பச்சைமாலுக்கு குளச்சல் தொகுதி தரப்பட்டதுதான் பலருக்கும் ஆச்சர்யம். அவர் மீது புகார்கள் இருந்தனவாம். கடந்த எம்.பி தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதனால், அப்போது அமைச்சர் பதவியும் பறிபோனது. ஆனால், அவர் பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்துப் பதவியை வாங்கிவிட்டாராம்.’’
மூன்றாவது சீட்டை எடுத்தோம். ‘அதிர்ஷ்டசாலிகள்’ என்று தலைப்பு இருந்தது.
‘‘பா.ம.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தார் முன்னாள் எம்.பி பு.தா.இளங்கோவன். அதன் பிறகு, ஆளே ஆரவாரமில்லை. அவருக்கு அடித்தது சான்ஸ். ஒருகாலத்தில் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்த சி.வி.சண்முகம் ஒரங்கட்டப்​பட்டிருந்தார். அவருக்குத் திடீர் சான்ஸ் அடித்தது. தே.மு.தி.க-வில் இருந்து முகாம் மாறிய பண்ருட்டி ராமச்​சந்திரனுக்கு ஆலந்தூர் தொகுதி தரப்பட்டிருக்கிறது. பொன்னையனுக்கு திருச்செங்கோடு தொகுதி கிடைக்கலாம் என்று பேசிக்கொண்டனர். ஆனால், சம்பந்தமே​இல்லாமல் சைதாப் பேட்டை தொகுதியில் நிறுத்தப்பட்​டிருக்கிறார். இதற்கு முன்பு, ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவர் கும்ப​கோணம் ராமநாதன். அதன்பிறகு நான்கு முறை சீட் தந்தும் ஜெயிக்காத அவருக்கு மீண்டும் இந்த முறையும் சீட். முன்பு ஒருமுறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் கற்பகம். இப்போது அவருக்கும் லக் அடித்து இருக்கிறது.’’
நான்காவது சீட்டை எடுத்தோம். ‘சீட் கிடைக்காதவர்கள்’ என்ற தலைப்பைப் படித்தோம்.

‘‘அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ வைகைச் செல்வன் அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் மாறுதலில் எழுந்த சில புகார்களை அடுத்து, பதவியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. அவருக்கு இந்தமுறை சீட் தரப்படவில்லை. தி.நகர் எம்.எல்.ஏ-வாக இருந்த கலைராஜன், சைதை
எம்.எல்.ஏ-வாக இருந்த செந்தமிழன் ஆகியோருக்கும் சீட் தரப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வெற்றிவேலுக்கு பெரம்பூரை ஒதுக்கியிருக்கிறார். கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த முன்னாள் அமைச்சர்
கே.பி.முனுசாமிக்கு இந்தமுறை வேப்பணஹள்ளி தொகுதி தரப்பட்டிருக்கிறது. சிலரை வேண்டுமென்றே தொகுதி மாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. முன்பு நத்தம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த அமைச்சர் விசுவநாதனை இந்த முறை ஆத்தூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். ஐ.பெரியசாமியுடன் ரகசியத் தேர்தல் உடன்பாடு வைத்திருக்கிறார் என்கிற புகாரையடுத்து இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார். இதுபற்றி ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். அதன்படி நத்தம் ஆத்தூரில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல், அரவக்குறிச்சியின் தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏ கே.சி.பழனிச்சாமியுடன் செந்தில்பாலாஜிக்கு ரகசிய அரசியல் நட்பு இருந்ததாகப் புகார் எழுந்தது. கடந்த முறை கரூரில் ஜெயித்த செந்தில்பாலாஜியை இந்த முறை அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரை மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். காரணம், உள்ளூரில் முக்குலத்தோர் சமூகத்தினரின் எதிர்ப்பு உதயகுமாருக்கு இருந்ததால், தொகுதி மாறி அறிவித்தாராம். அதேபோல், கடந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனை எதிர்த்து ஜெயித்த அ.தி.மு.க வேட்பாளரான ஜே.சி.டி.பிரபாகரை, இந்த முறை மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.’’

[You must be registered and logged in to see this image.]
‘‘அடடே… ஒருசிலரை தி.மு.க வி.ஐ.பி-க்களை தோற்கடித்து அக்னிப்பிரவேசம் செய்யச் சொல்கிறாரா ஜெயலலிதா?’’
‘‘இருக்கலாம். தே.மு.தி.க-வில் இருந்து தாவியவர்களில் ‘மாஃபா’ பாண்டியராஜனை தவிர, மற்றவர்களுக்கு சீட் இல்லை. இவரும்கூட தனக்கு சிவகாசி என்றுதான் சொல்லிவந்தார். ஆனால், லிஸ்ட்டில் ஆவடி தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இவரிடம் ஜெயலலிதா நேர்காணல் நடத்தியபோது, ‘நீங்கள் எங்கே குடியிருக்கிறீர்கள்?’ என்று ஜெயலலிதா கேட்டாராம். சென்னை அண்ணா நகர் என்றாராம். அப்போதே பாண்டியராஜனுக்கு ஏதோ பொறி தட்டியிருக்கிறது. அவர் சந்தேகப்பட்டதைப் போலவே, நடந்துவிட்டதாம். குஜராத்தில் வல்லபபாய் பட்டேலுக்கு சிலை வைப்பதற்காக இரும்பு மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதற்காக நாடு முழுவதும் பி.ஜே.பி சார்பில் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதில் முன்னாள் டி.ஜி.பி நட்ராஜும் கலந்துகொண்டார். அவர்தான் மயிலாப்பூர் வேட்பாளர். ‘முதல்வரை மத்திய அமைச்சர்கள் சந்திக்க முடியவில்லை. அப்பாயின்மென்ட் கேட்டும் தரவில்லை’ என பி.ஜே.பி திரி கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கும் சூழலில் நட்ராஜுக்கு சீட் தரப்பட்டதும் சர்ச்சை ஆகியிருக்கிறது. தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த முறையும் திருச்சுழியில்தான் நிற்பாராம். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்த சிலரை ஜெயலலிதா நேர்காணலுக்கு அழைத்திருந்தார். தினேஷ்பாபுவுக்கு அழைப்பு இல்லை. இவர் ஒரு வக்கீல், இளைஞர், இளம்பெண் பாசறையைச் சேர்ந்தவர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரானவர்களில் ஒருவரான நாமக்கல் செந்தில் உபயத்தில் தினேஷ்பாபுவுக்கு ஸ்பெஷல் அழைப்பு வந்து நேர்காணலில் கலந்துகொண்டாராம். அப்போதே இவரைப்பற்றி வேறு சில புகார்கள் கார்டனுக்குப் போனதாம். அதெல்லாம் கண்டுகொள்ளப்பட வில்லையாம்’’ எனச் சொல்லி முடித்து அ.தி.மு.க வேட்பாளர் லிஸ்ட்டில் டிக் அடிக்கப்பட்ட வேட்பாளர்களை எண்ணிக் கொண்டிருந்தார்.
[You must be registered and logged in to see this image.]
‘‘எப்படி கூட்டினாலும் 234 தொகுதிகள்தான் வரும்’’ எனக் கிண்டல் அடித்தோம்.
‘‘நான் சொல்ல வருவது என்ன என்றால்… 36 பெருமாள்கள், 26 முருகன்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள். பெருமாள் பெயர் கொண்டவர்களும் முருகன் பெயர் கொண்டவர்களும்தான் வேட்பாளர் பட்டியலில் நிரம்பியிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலே ஆண்டவன் லிஸ்ட்போல இருக்கிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயில் என்று கடந்த ஒரு மாதமாக ஆன்மிக டூரில் இருந்தார் சசிகலா. அதற்கு அர்த்தம் சொல்வதுபோல இருந்தது அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல். 227 வேட்பாளர்கள் பட்டியலில் முதலில் ஜெயலலிதா, கே.எஸ்.விஜயகுமார் என்று இந்து பெயரில் தொடங்கி மேரி கமலா பாய் என்று கிறிஸ்தவ பெயரில் பட்டியல் முடிகிறது. ‘தொகுதியில் செல்வாக்கானவர்கள் என்று பார்த்து பட்டியல் தயாரித்தார்களா  அல்லது பெருமாள் பெயர், முருகன் பெயர் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்களா?’ என்று சந்தேகம் வருகிறது. இவை போக நிறைய சாமிப் பெயர்களும் இருக்கின்றன!”
[You must be registered and logged in to see this image.]
‘‘நல்ல சகுனமாக நினைத்து இருக்கலாம்!”
‘‘நடிகர் செந்தில், சிங்கமுத்து, ஃபாத்திமா பாபு, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் சீட் கேட்டு பணம் கட்டி இருந்தனர். பணம் கட்டாவிட்டாலும், நடிகர் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், விந்தியா, குயிலி, சி.ஆர்.சரஸ்வதி என்று பலரும் சீட் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இவர்கள் யாருக்கும் சீட் இல்லை.’’
‘‘பிரசாரம் செய்தால் போதும் என்று நினைத்திருப்பார்கள்!’’
‘‘திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் முத்தரையர் வாக்கு வங்கி அதிகமாக உள்ளது.
அ.தி.மு.க-வுக்கு மத்திய மண்டலத்தில் பெரும் செல்வாக்காக விளங்குவது முத்தரையர் வாக்கு வங்கிதான். இதில் முன்னாள் அமைச்சர்களான கு.ப.கிருஷ்ணன், சிவபதி, பரஞ்சோதி, கே.கே.பாலசுப்பிரமணியன், தற்போதைய அமைச்சர் பூனாட்சி என பெரும் பட்டாளத்துக்கே இந்த முறை கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்குப் பதிலாக திருச்சியில் உள்ள 9 தொகுதிகளில் ஸ்ரீரங்கத்தில் மீண்டும் வளர்மதி, லால்குடி விஜயமூர்த்தி, மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி முருகன், முசிறி செல்வராஜ் ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் ஞான.கலைச்செல்வன், தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மா.கோவிந்தராஜன் எனப் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார் ஜெயலலிதா. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர் சங்கங்கள் போராடியபோது  அந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்களின் பங்கு இருந்ததாக உளவுத்துறை அறிக்கைபோட்டது. முத்தரையர் சமூகத்தின் சில அமைப்புகள் அ.தி.மு.க-வுக்கு எதிராக இருந்த நிலையில், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அதைத் தக்கவைத்துக்கொள்ள ஜெ. திட்டமிட்டு உள்ளாராம். வேட்பாளர் பட்டியலில் சில குளறுபடிகளும் உண்டு. ஓ.பி.எஸ். மற்றும் நத்தம் ஆதரவாளர்களுக்கு  வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
சில தொகுதிகளில் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்த நபர்களே லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளார்கள். மூன்று முறை ஹாட்ரிக் வெற்றியைக் கண்ட மேலூர் சட்டமன்ற உறுப்பினர் சாமிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது’’ என்றபடியே எழுந்த கழுகார்,
‘‘ஜெயலலிதா அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 4-ம் தேதியான இன்று விபூதி துவாதசி திருநாள். சுபமுகூர்த்த நாள். அதனால்தான் இன்று வெளியிட்டாராம்” என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை படம்: சு.குமரேசன்
பட.ங்கள்:  ஆ.முத்துக்குமார், ரா.ராம்குமார்


இறங்கி வராத ஜி.கே.வாசன்!
[You must be registered and logged in to see this image.]
ஜெயலலிதாவிடம் 32 தொகுதிகள் கேட்டார் ஜி.கே.வாசன். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார் ஜெயலலிதா. 23 தொகுதிக்கு வாசன் இறங்கி வந்தபோது 10 தொகுதிகள் எனக் கூட்டினார் ஜெயலலிதா. 18 தொகுதிகளாவது வேண்டும் என்று வாசன் சொல்ல,
12-க்கு மேல் தர முடியாது என்றாராம் ஜெ. வாசனுக்காகக் காத்திருந்தார் ஜெயலலிதா. அநேகமாக வியாழக்​கிழமை வரை ஜெயலலிதா காத்திருப்பதாக இருந்தது. ஆனால், திங்கள் கிழமை காலையில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.க-வும் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டார்கள் என்றதும் உடனே பட்டியலை வெளியிட்டு விட்டார் ஜெயலலிதா. இப்போது ஜி.கே.வாசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

‘‘ஏற்கெனவே மக்கள் நலக் கூட்டணிக்கு அவரை அழைத்தார்கள். அங்கும் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் போக முடியாது. எனவே, வாசன் நிலைமை திண்டாட்டம்தான்” என்று ஒரு குரூப் சொல்ல, ‘‘ஜி.கே.வாசனுடன் தி.மு.க பேச்சு​வார்த்தை நடத்தி வருகிறது’’ என்று இன்னொரு குரூப் சொல்கிறது.


நிபந்தனைகளை ஏற்காத வேல்முருகன்!
அ.தி.மு.க கூட்டணியில் ஆரம்பம் முதலே இருந்து வந்த  வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஓர் இடம்கூடக் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளிலேயே இரண்டு முறை ஜெயலலிதாவைச் சந்தித்தவர் வேல்முருகன் மட்டுமே.
[You must be registered and logged in to see this image.]
நெய்வேலி, சங்ககிரி, மேட்டூர், பென்னாகரம், மதுரவாயல், புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய ஆறு தொகுதிகளைக் கேட்டுள்ளார் வேல்முருகன். இதில் தொகுதிகளை மாற்றித் தருவதாக இருந்தால் விருதாசலம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை, பரமத்தி வேலூர் ஆகிய தொகுதிகளைச் சுட்டிக்காட்டி உள்ளார். இவரது செல்வாக்குப் பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் வட தமிழ்நாட்டில் 28 தொகுதிகளில் இந்தக் கட்சிக்கு சொல்லிக்கொள்வது மாதிரி செல்வாக்கு உள்ளது என்று சொல்லப்பட்டு உள்ளதாம். இதைவைத்துத்தான் இரண்டு முறை ஜெயலலிதா சந்தித்தார்.
முதலில் மூன்று தொகுதிகள் தருவதாகச் சொன்னவர்கள் கடைசியில் ஒரு தொகுதி தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.  வேட்பாளர் பட்டியல் வெளியாகிய அன்று காலை அமைச்சர் தங்கமணி வேல்முருகனை தொடர்புகொண்டு, ‘ஒரு தொகுதியை அம்மா வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள்’ என்று கூறியதும், ‘என்னிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 6 பேர் உள்ளார்கள். எனவே, நான்கு தொகுதிகளாவது வேண்டும். இல்லை என்றால், கூட்டணி வேண்டாம்’ என்று சொல்லி விட்டாராம் வேல்முருகன். மேலும், அந்த ஒரு தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கச் சொல்லி இருக்கிறார்கள். ‘எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் இரட்டை இலையில் நிற்கமாட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார் அவர். இழுத்த இழுப்புக்கு வராததால், பட்டியலை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum