TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 10:58 am

நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

நிலவே ....
எனக்கு ஒரு உதவி செய் ...
என்று உன் உதவியுடன் ...
அவர் அருகில் இருந்தேன் ...
இணையில்லா இன்பத்தை ...
பெற்றேன் ....!!!

இன்று அவரை ...
தேடுகிறேன் - காணும் ..
நிமிடம் வரை -நிலவே ...
நீ மறையாமல் இருப்பாயோ ...!!!

குறள் 1210
+
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 130

கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 10:21 am

என்னவன் மனமிரங்கி ....

கண்டது கனவல்ல ...
என்னவன் விட்ட தூது ....
நான் புலம்பிய புலம்பலுக்கு
என்னவன் மனமிரங்கி ....
அனுப்பிய எண்ண தூது....!!!

என்னிடம் வந்த கனவே ...
உன் மூலம் என்னவனுக்கு ...
என்ன விருந்து படைப்பேன் ....?
என்ன கைமாற்றை தருவேன் ...!!!

குறள் 1211
+
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 131
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 10:22 am

நினைவுகள் தூங்க வில்லை ...!!!

என்னவனே ....
என் கண்கள் தான் தூங்கி ...
நாடகமாடுகின்றன ....
நினைவுகள் தூங்க வில்லை ...!!!

என் கரு விழிகள் ...
தூங்குமானால் கனவில் ..
வந்து பார் நான் உயிரோடு ....
இருப்பதை சொல்வேன் ....!!!

குறள் 1212
+
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 132
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 10:24 am

என்றோ இறந்திருப்பேன் ....!!!

என்னவனே ....
நினைவில் நேரில் வந்து ...
இன்பத்தை தராதவனே ...
இன்னும் நான் உயிருடன் ..
இருக்கிறேன் ....!!!

கனவில் வந்து -நீர்
போவதால் தான் என் ...
உயிர் இருக்கிறது ....
கனவிலும் வராது போனால் ...
என்றோ இறந்திருப்பேன் ....!!!

குறள் 1213
+
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 133
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 10:25 am

இன்பத்தோடு இருக்கிறேன் ....

நீர் நேரில் வந்து ....
அன்பு காட்டாவிட்டாலும் ...
இன்பத்தோடு இருக்கிறேன் ....
அத்தனைக்கும் நீர் ...
கனவில் வந்து செல்வதே ...
காரணம் ....!!!

நீர்
இருக்கும் இடம் தெரியாது ....
என்ன செய்கிறீர் என்றும் ...
தெரியாது ....
கனவு எல்லாவற்றையும்...
எனக்கு காட்டுகிறது ....!!!

குறள் 1214
+
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 134
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 18, 2014 10:27 am

நீர் கனவில் வரும் இன்பம்

என்னவனே ...
உம்மை நேரில் கண்ட ...
இன்பம் போல் இருக்கிறது ..
நீர் கனவில் வரும் இன்பம் ....

உண்மையை சொன்னால் ....
எனக்கு ஒரு வேறுபாடும் ...
தெரியவில்லை நீர் ....
கனவில் வரும் வேளை ...!!!

குறள் 1215
+
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 135
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 20, 2014 2:31 pm

நினைவும் ஒரு எதிரி தான் .....!!!

நினைவும்
ஒரு எதிரி தான் .....
நினைத்து கொண்டே
இருப்பதால் ...
கனவு காண்பது எப்படி ...?

ஏய் நினைவே ...
நீ மட்டும் என்னில் ....
இல்லாமல் ...
இருந்திருந்தால் -கனவில்
என்னவன் என்னோடு ...
இருந்திருப்பாரே ....!!!

குறள் 1216
+
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 136
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 20, 2014 2:33 pm

வேடிகையாகிவிட்டது ....!!!

நேரில்
வருவார் வருவார்
என்று ஏக்கத்தை தருவதும் ....
வராமல் என்னை வேதனை ...
படுத்துவதும் அவரின் ....
வேடிகையாகிவிட்டது ....!!!

நேரில் வராமல் ...
கனவில் வந்து என்னை ...
துன்பப்படுத்துவது ....
துயரை பெரிதாக்குவதும் ...
என்ன காரணம் உயிரே ...!!!

குறள் 1217
+
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 137
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 20, 2014 2:35 pm

கனவில் இத்தனை இன்பமா ...?

தூக்கத்தில் கனவில் ...
வந்து என் தோள் மீது சார்ந்து ...
எனக்கு இன்பம் தந்த்தவனே ...
கனவில் இத்தனை இன்பமா ...?

கனவு கலைந்து...
என்னை விட்டு விலகாமல் ...
என் நெஞ்சில் இருப்பவனே ...
விழித்தாலும் மறைந்தாலும் ...
நீ என் அருகில் தானே ....!!!

குறள் 1218
+
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 138
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 20, 2014 2:36 pm

கனவில் காணாத ஜீவன்கள்

என்னவனே -நீ
வரவில்லை வரவில்லை ..
புலம்பிகொண்டிருந்தேன்....
இப்போ இன்பமடா ....
கனவில் வருகிறாயே ....!!!

கனவில் காணாத ....
ஜீவன்கள் தான் - அவர்
நினைவால் புலம்புவர் ....
நொந்து மடிவர் ....!!!
நேரில் வருவது கனவும் ...
ஒன்றுதானே மனமே ....!!!

குறள் 1219
+
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 139
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 20, 2014 2:41 pm

கனவு காண்பதில்லையோ...?

நேரில் வரவில்லை ...
மனம் நோகும் ....
நொந்துகொண்டிருக்கும் ...
காதலர்களே ....
நீங்கள் கனவு
காண்பதில்லையோ...?

கனவில் வருவதும் ...
நினைவில் வருவது ...
ஒன்றுதான் -நீங்கள்
கனவு காணாததால் .....
புலம்புகிறீர்கள் ....?


குறள் 1220
+
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 140
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 4:23 pm

உயிர்வாங்கும் பொழுது ...!!!

மாலை பொழுதே ....
நான் காதலருடன் இருந்த ...
இன்ப பொழுதில் -நீ
மாலை பொழுதாய் ...
இருந்தாய் .....!!!

என்னவனை ....
பிரிந்திருக்கும் பொழுது ...
இது மாலை பொழுதல்ல ...
என்னை கொல்லும்....
உயிர்வாங்கும் பொழுது ...!!!

குறள் 1221
+
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 141
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 4:27 pm

உன் காதலன் பிரிவுதானோ ...?

மயங்கும்
மாலை பொழுதே .....
உன் மயக்கத்துக்கும் ...
உன் காதலன் பிரிவுதானோ ...?

புரிந்து கொள் பொழுதே ....
துணை இல்லாவிட்டால் ...
எல்லோர் காதலும் ...
துன்பம் தரும் பொழுதே ...!!!
மயக்கமும் மங்களும் ...
நிறைந்த துன்பமே ....!!!

குறள் 1222
+
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 142
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 4:32 pm

துன்ப பொழுது ...!!!

என்னவன் அருகில் ....
இருக்கும் போது மெல்ல
மெல்ல பயந்து பயந்து ...
என் மேனியில் படர்ந்த ...
மாலை பொழுதே ....!!!

இப்போ அவர் இல்லாத ...
தருணத்தில் -நீ
நீ மாலை பொழுதல்ல ...
உயிரை பறிக்க வரும் ...
துன்ப பொழுது ...!!!

குறள் 1223
+
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 143
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 4:34 pm

அவர் இல்லாத போது ..

என்னவனோடு ...
நான் இருக்கும் பொழுது ...
இன்ப மாலை பொழுது ...
என் உயிரை வளர்க்கும் ...
உயிர் பொழுது ....!!!

எப்படி ...?
அவர் இல்லாத போது ..
நீ கொலை பொழுதாய் ...
மாறி என் உயிரை ...
எடுக்கிறாய் ....?
நீ மயங்கி மயங்கி வரும் ...
வேலை என்னை கொல்லும்
பகைவன் போல் -நீ

குறள் 1224
+
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 144
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 27, 2014 4:37 pm

இப்படி துன்பம் தருகிறதே ...!!!

இருள் சூழ்ந்து சூழ்ந்து ....
வரவர என் துன்பம் ....
தொடர் கதைபோல் ...
தொடர்கிறது பொழுதே ...!!!

காலை பொழுதுக்கு ...
என்ன நன்மை செய்தேன் ....
இனிமையாக இருக்க ....
மாலை பொழுதுக்கு ...
என்ன துன்பம் செய்தேன் ...
இப்படி துன்பம் தருகிறதே ...!!!

குறள் 1225
+
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 145
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 6:01 am

பூவாய் வாடுகிறேன்

என்னவனே ....!!!
நீர் இல்லாத மாலையின்
வலி புரிகிறது ....!!!
மாலை பொழுது வரும் ...
வேலையில் நெருப்பில் ..
விழுந்த பூவாய் வாடுகிறேன் ....

நீர் என்னருகில் ....
இருந்த மாலை ....
பொழுதின் இன்பம் ...
இத்தனை துன்பத்தை ...
தருமென்று அறிந்திலேன் ...!!!

குறள் 1226
+
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 146
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 6:15 am

வாடி வந்தங்குகிறது .....!!!

என்னவனே நான் ...
உணர்ந்தேன் -காதல்
காலையில் அரும்பும் ....
மொட்டு .....!!!

பகல் முழுதும் காதல்....
இன்பத்தால் பூரிக்கிறது ..
பூத்து குலுங்குகிறது ....
மாலையில் வாடி
வந்தங்குகிறது .....!!!

குறள் 1227
+
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 147
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 7:29 am

தணலில் வேகுதடா ...

காதலனே .....
மாலை பொழுது வேளை...
தணலில் வேகுதடா ...
என் மனமும் உடலும் ...!!!

ஆயனே ...
உன் புல்லாங்குழல் ஓசை ..
மாலை பொழுதில் என்னை ...
கொல்லவரும் கருவியின் ...
ஓசைபோல் இருக்குதடா ...!!!

குறள் 1228
+
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 148
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 7:41 am

என் ஊரையே வதைகிறாய் ...

மாலை பொழுதே .....
நீ பொல்லாத கொடுமை ...
செய்கிறாயே ....
உன் வரவு என்னை ....
கொடுமை படுத்துகிறதே ....!!!

என் அறிவையே ...
மயக்கும் மாலை பொழுதே ....
என்னை மட்டும் ....
துன்பபடுத்தவில்லை ....
என் ஊரையே வதைகிறாய் ...
பாவம் காதலர்கள் ....!!!

குறள் 1229
+
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 149
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 04, 2014 7:56 am

உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

என்னவனே ....
உழைப்புக்காக பிரிந்தவனே ...
ஊர் விட்டு சென்றவனே ....
நம்காதலை நினைத்து வாழ்ந்து ..
கொண்டிருக்கிறேன் ....!!!

உன் நினைவால் மாய்ந்து ...
போகாத என் உயிர் -மாலை
பொழுது வரும் வேளைகளில் ...
உயிரே மாய்ந்து போகிறதே ....!!!

குறள் 1230
+
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 150
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:13 am

உனை நினைத்து கலங்கிய...

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய...
கண்கள் அழகிழந்து
விட்டதடா ...!!!

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!

குறள் 1231
+
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 151
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:27 am

என்னவனை காணாமல் ....

என்னவனை காணாமல் ....
என் கண்களில் கண்ணீர் ...
பசந்து பசந்து வழிகின்றன ...!!!

விரும்பியவரை காணாத ...
கண்களால் வேறு என்ன ...
செய்ய முடியும் ....?
பார்பதற்கு மட்டும் இல்லை
கண்கள் - காதலர்
அழுவதற்கும் தான் ...!!!


குறள் 1232
+
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 152
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:39 am

என் தோள்கள் நலிவதை ..

என்னவனே
உமை மணந்த தருணத்தில் ....
இன்பத்தால் பூரித்தது
என் தோள்கள் ....!!!

உம்மை பிரிந்த ...
காலம் முதல் மெலிந்து ...
வருகிறது என் தோள்....
தவிக்கிறேன் துடிக்கிறேன் ..
என் தோள்கள் நலிவதை ..
பாராயோ ...?

குறள் 1233
+
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 153
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 7:58 am

நான் படும் துயரத்தை ....!!!

என்னவனே
அழுதழுது தோள்கள் ...
மெலிந்து விட்டன ...
முன்னைய அழகை ...
இழந்து விட்டன ....!!!

அழகாக நீர்
அணிந்த வளையல் கூட
கழண்டு விழுகின்றன ...
இதை விட என் சொல்வேன் ..
நான் படும் துயரத்தை ....!!!

குறள் 1234
+
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 154
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 23, 2014 8:16 am

கை நழுவி விழுகின்றன் ....

என்னவனின் பிரிவால் ....
அழகிய வளையல்கள் ...
கை நழுவி விழுகின்றன் ....
பூரித்த தோள்கள் நலிந்து ...
வருகின்றன ....!!!

என்னவனே ...
தேய்ந்த தோள்கள் ...
உன் பிரிவால் நான் ...
வாடுவதை ஊர் அறிய ...
செய்கிறதடா ....!!!

குறள் 1235
+
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 155
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் - Page 6 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum