TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கசக்க வைக்கும் சர்க்கரை

Go down

கசக்க வைக்கும் சர்க்கரை Empty கசக்க வைக்கும் சர்க்கரை

Post by மாலதி Fri Jan 31, 2014 9:30 pm

கசக்க வைக்கும் சர்க்கரை
நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு இன்சுலின் மருந்தை சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவருடன் இணைந்து கண்டுபிடித்த பிரெட்ரிக் பேண்டிங்கை கவுரபடுத்தும் விதமாக, அவரது பிறந்த தினமான நவ., 14, உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அமைப்பால் அறிவிக்கப்பட்டது. 2009 - 2013 வரை "டயபெட்ஸ் கல்வி மற்றும் தடுப்பது' என்ற மையக்கருத்துடன் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]

இன்சுலின்:



நமது உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் ஏற்படுவதே நீரிழிவு நோய். இதில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை, இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது, இது குழந்தைகளை அதிகளவு பாதிக்கிறது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது அல்லது செயல்படாமல் இருப்பது. இவ்வகை தான் நீரிழிவு நோய் உள்ளவர்களில், 90 சதவீதம் பேருக்கு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள், இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த பாதிப்பு இருப்பது தெரியாமல் கூட வாழ்கின்றனர். 


எங்கு அதிகம்:



உலகம் முழுவதும் 37 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2030க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2012ல் 48 லட்சம் பேர் இறந்துள்ளனர். நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 80 சதவீதம்பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள். 20 வயது முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமானோர், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சில ஆண்டுகளில் 7 கோடியாக உயரும் என அஞ்சப்படுகிறது.வாழ்நாள் முழுவதும் துரத்தும் இந்த நோய், குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். அவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோ, குறைவதோ கூட ஆபத்தில் முடியலாம். மருத்துவ பராமரிப்பும், மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடும் அவசியம். அதிக உணவு, குறைவான வேலை என இருக்கக் கூடாது.


அறிகுறி :



உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதன் அறிகுறிகள். துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால் கண், இருதயம், சிறுநீரகம், கால்பாதம் ஆகியவற்றை பாதிப்படைய செய்யும். உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். 

சர்க்கரை நோயாளிகளும் சாதிக்கலாம்!புரிஞ்சுக்கிட்டா குழப்பம் இல்லை

இன்று உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஏராளம். சர்க்கரை நோய் தினமான இன்று, இந்த நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு, சென்னை மோகன்ஸ் டயபடிக் சென்டரின் சேர்மன்டாக்டர் மோகன் விளக்கம் அளிக்கிறார்.

மரபு ரீதியாக மற்றும் உணவுமுறை மூலமாக நீரிழிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. இதில் எதன் மூலமாக இந்நோய் அதிகம் வருகிறது?
ஒரு மனிதனின் வாழ்க்கைமுறையும் அவனது சுற்றுப்புறமும் இரண்டாம் நிலை நீரிழிவு (Type 2 Diabetes) நோயில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவன் தனது பெற்றோரின் மரபணு மூலமாக பெறுவதை விடவும், அவர்களிடமிருந்து வாழ்க்கைமுறை பாடத்தை அதிகமாகக் கற்றுக் கொள்கிறான். அவர்களது ஊட்டச்சத்துகளற்ற தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளற்ற வாழ்க்கைமுறை அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, பெற்றோர் நல் உதாரணமாய் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கொண்டிருந்தால் அவர்களது சந்ததியும் நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு வாழும்.

ஆங்கில மருத்துவம் போலவே அக்குபஞ்சர் போன்ற முறைகளையும் நீரிழிவு பிரச்னைக்காக மக்கள் நாடும் நிலை உள்ளது. இது சரியானதா?
அக்குபஞ்சர் முறையில் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு, மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகிறது. அக்குபஞ்சர் முறையில் நரம்பு தொடர்பான வலிகள், நாள்பட்ட வலிகள் போன்றவைக்கு தீர்வு கிடைக்கலாம்.

இரண்டாம் நிலை (Type 2 Diabetes) நீரிழிவு என்பது என்ன? அது எப்படி வருகிறது?

இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் சுரப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். ஆனால், அந்த இன்சுலினும் சரியாக வேலை செய்யும் என்று சொல்ல முடியாது. இவ்வகையான இரண்டாம் நிலைநீரிழிவு பெரியவர்களுக்கேவருகிறது. அத்துடன் ஒபீசிட்டி எனப்படும் அதிக எடை உள்ளவர்களையும் அதிகம் தாக்குகிறது. டயட், உடற்பயிற்சி மற்றும் வாய் வழியாக மருந்துகள் உட்கொள்வதன் மூலம் இவ்வகை நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

ஜுவினைல் டயாபடீஸ் எனப்படும் குழந்தைப் பருவத்தில் வரும் சர்க்கரைத் தாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது?
ஜுவினைல் டயாபட்டீஸ் தற்போது (Type 1 Diabetes mellitus or insulindependent diabetes) டைப் 1 டயபட்டீஸ் அல்லது இன்சுலின் சார்ந்த டயபட்டீஸ் எனப்படுகிறது. பெரும்பாலும் 20 வயதுக்கு உட்பட்டோரே பாதிக்கப்பட்டாலும் எந்த வயதினரும் இவ்வகை நீரிழிவால் பாதிக்கப்படலாம்.

காஸ்டஸ் பிக்டஸ் (Costus Pictus) என்னும் மூலிகைச் செடியின் இலைகளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் போதும் இன்சுலின் ஊசி போடும் தேவையிருக்காது என சொல்கிறார்களே? இது உண்மையானதா?
இதற்கு எந்த சான்றுகளும் இல்லை.

மஞ்சள் காமாலை, அம்மை, போலியோ போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகளை குழந்தைப் பருவத்திலேயே கொடுப்பது போல் நீரிழிவுக்கும் தடுப்பு மருந்துகள் வந்துள்ளனவா? அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றனவா?
இன்றைய நிலை வரை நீரிழிவு நோய்க்கு எந்த தடுப்பு மருந்துகளும் இல்லை.

பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கிறார்களே?
முன்பெல்லாம் கைக்குத்தல் அரிசி உணவைத்தான் உண்டு வந்தார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், பச்சரிசியோ அரை வேக்காட்டு புழுங்கல் அரிசியோ எதுவானாலும் இன்று பாலிஷ் செய்யப்பட்டே கிடைக்கிறது. இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிலுள்ள நார்ச்சத்து மட்டுமில்லாமல் அதலிலுள்ள அனைத்து சத்துக்களும் நீக்கப்பட்டுவிடுகின்றன. இத்தகைய அரிசியால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எங்களது "மோகன்'ஸ் டயபட்டீஸ் சென்டரில் உடலில் சர்க்கரையை அதிகரிக்காத புதிய வகையான ஸ்பெஷல் பிரவுன் அரிசி மற்றும் வெள்ளை அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த அரிசி எங்களது நிறுவனத்தில் கிடைக்கும்.

"குறைவாகச் சாப்பிடுங்கள்; கூடுதலாக வேலை செய்யுங்கள்' என்ற கூற்று முற்றிலும் மாறி உடல் உழைப்பு குறைந்து வரும் நிலையில் சர்க்கரை வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள் யாது?
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாது. அதிகமான காய்கறிகளுடன் கூடிய மிதமான கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவு வகைகளே சர்க்கரை வராமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இதுவே ஏற்றது. இந்நோயாளிகளுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் சில வகைப் பழங்களையும் சாப்பிடலாம் சத்துக்கள் நிறைந்த உணவுப்பழக்கத்தால் நீரிழிவு மட்டுமல்லாமல் ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு சேர்தல், வளர்சிதை மாற்றம் மற்றும் உடல்பருமன் போன்றவற்றிலிருந்து தப்பலாம்."கேட்ஜட்டுகளும் குழந்தைகளும்' என்ற இன்றைய நிலையில் விளையாட்டு, நடனம் போன்ற உடல் உழைப்பு குழந்தைகளுக்கும் குறைந்து வருகிறது. 

இந்நிலையில் அவர்களுக்கான உணவுமுறையில் மாற்றம் அவசியமா?
"டிவி' பார்த்தல், மொபைல் போன் மற்றும் ஐபாட்களில் விளையாடுவது உள்ளிட்ட அனைத்து கேட்ஜெட்டுகளால் குழந்தைகள் அதிக எடை மற்றும் ஒபிசிட்டியால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட "ஜங்க் புட்' களை அதிகம் சாப்பிடுவதாலும், செயற்கை இனிப்புகளாலான பானங்கள், சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றை அதிகம் உண்பதால் சிக்கல் உண்டாகிறது. வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே உண்டு வெளிஅரங்க விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தாலே நோய் அண்டாது.

இன்றைய இளம்பெண்கள் "ஜீரோ சைஸ்' மோகத்தில் உடலை வருத்திக் கொள்வது நல்ல விஷயமா? உண்மையில் "ஜீரோ சைஸ்' ஆரோக்கியமானதா?
"ஜீரோ சைஸ்' என்பது ஒல்லியான (ஸ்லிம் பிகர்) உடல்வாகை பேணுவதுதான். இது ஆரோக்கியமான அணுகுமுறையல்ல என்பது பலருக்கும் தெரிவதில்லை. முறையான பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரிலும் சரியான உணவு முறையாலும் ஒல்லியான உடல்வாகைப் பெற முயற்சிக்கலாம்.

பலரும் இன்று ஓட்ஸ், கோதுமை சப்பாத்தி என மாறி வருகிறார்கள். இப்படி அரிசியை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா?
ஓட்ஸ் மற்றும் கோதுமை கூட பட்டை தீட்டப்பட்டிருந்தால் அதன் மூலம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எதைச் சாப்பிடுவதென்றாலும், அது சிவப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி அல்லது ஓட்ஸ் தவிடு நீக்கப்படாத முழு தானியமாக இருப்பது நல்லது.

கலோரிகளைக் கூட்டும் விருந்து என்பது எப்போதாவது என்பது போய் இப்போது "வீக் என்ட் பார்ட்டிகள்' இளைஞர்களிடையே அதிகரித்து வருகின்றனவே? இதனால் பாதிப்பு உண்டா?
ஆம். கண்டிப்பாக இத்தகைய வீக் என்ட் விருந்துகளால் சிக்கல்தான். இவை சசர்க்கரை அளவை உயர்த்தத் தவறுவதில்லை. காரணம், இத்தகைய பார்ட்டிகளில் நொறுக்குதீனிகளான சிப்ஸ், நாக்கோஸ் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படும் ஸ்டார்ட்டர் வகை உணவுப் பண்டங்களே அதிகம் பரிமாறப்படுகின்றன.இதுவே, ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகளைக் கொண்ட சாலட்டுகள், முழு தானியங்கள், பாதாம், முந்திரி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் கொண்ட பார்ட்டிகள் என்றால் ஆரோக்கியமானதும் கூட. கொழுப்பும் குறையும். முன் சொன்ன முறையே என்றாலும் எப்போதாவது ஒரு முறையென்றால் சசரி... வாராவாரம் என்றால் அது கூடாததுதான்.


"சுகர் ப்ரீ' ஆபத்தானதா?



சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப்படும்"சுகர் ப்ரீ' எனப்படும் "அஸ்பார்டேம்'ஆல் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால், சுகர் ப்ரீ சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், ஸ்வீட்டுகளை பிரபல கடைகளில் விற்கிறார்களே? இது சரியானதா?சுகர் ப்ரீ பொருட்களை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் கண்டிப்பாகக் கொடுக்க கூடாது. இந்த சுகர் ப்ரீ பொருட்களில் கலோரிகள் அதிகம் உள்ளதால் மற்றவர்கள் கூட இதனை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரும்பாலான உணவுப்பண்டங்களில் சாதாரண சர்க்கரைக்கு பதிலாக புருக்டோஸ் உபயோகிக்கப்படுகிறது. சர்க்கரை அளவு கட்டுப்படாத நிலையில் உள்ளவர்கள் புருக்டோஸ் கொண்ட திண்பண்டங்களை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு மேலும் கூடிப்போகிறது. இத்தகைய சுகர் ப்ரீ பொருட்கள் விலை மிக அதிகமானதும் கூட. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கர்ப்ப கால சர்க்கரை நோய்தொடருமா?



கருத்தரித்த நிலையில் சில பெண்களுக்கு சர்க்கரை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. கருவுற்ற நிலையில் மட்டும் சர்க்கரை நோய் தாக்குவதேன்? அது குழந்தையை பாதிக்குமா? குழந்தை பெற்ற பின்பு அது தாய்க்குத் தொடரும் அபாயம் உள்ளதா?

இதற்குப் பெயர் கர்ப்பகால நீரிழிவு என்பதாகும். கர்ப்பகாலத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாறுபாடுகளாலே சர்க்கரை நோய் வருகிறது. கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோருக்கு சர்க்கரை இருப்பின், மரபு ரீதியாக அவருக்கும் சர்க்கரை பாதித்து அது கர்ப்பகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை பாதித்த கர்ப்பிணிகளின் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது குழந்தையைப் பாதிக்கும். மேலும் கருச்சிதைவு மற்றும் குழந்தையின் உடலில் பிறவி ஒழுங்கின்மையை ஏற்படுத்தலாம்.பொதுவாக, இவ்வகை கர்ப்பகாலத்தில் வளரும் சர்க்கரை குழந்தை பெற்ற பின்பு தாய்க்கு சரியாகிவிடும். ஆனால், குழந்தை பெற்ற பின்பு 5 - 10 ஆண்டுகளில் அந்த தாய்க்கு திரும்பவும் நீரிழிவு வருவதற்கு 50 - 70 % வாய்ப்புண்டு. எனவே, ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் மூலமும் முறையான குழந்தை பெற்ற பின்பு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை சரியாகப் பேணுவதன் மூலமும் நீரிழிவுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.குழந்தை பெற்ற பின்பு 4 - 6 வாரத்திலும் பின்பு ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum