TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

Go down

கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் Empty கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

Post by மாலதி Sun Jun 23, 2013 7:36 pm

கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் 1-1
கடலன்னையின் புதல்வர்கள்….
புவீத்திரன் ஒரு குழந்தை.
வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன்.
மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ – எவரோ – அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான்.
சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும் – உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் .
பக்கத்து வீட்டு அம்மா வந்து ” தம்பி ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன் ? ” என்றால் , சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்துபோய் விடுகின்றவன் அவன்.
ஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கேட்டது என்றால் , அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடிவேலைகள் செய்து கொண்டிருப்பான்.
சப்பாத்து கட்டாயம் அணியவேண்டிய அவனது பள்ளிகூடத்தில் – ஏழை நண்பனொருவன். “அம்மா காசுக்கு கஸ்ரபடுறா…. ” என்று மனவேதனைப்பட்ட போது . அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு , வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன்.
குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, ” காலையில கூடச் சாப்பிடேல மச்சான் ….” என்று விம்மிய உற்ற நண்பனிடம் – அவன் அடியோடு மருமருக்க – கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான புவீத்திரன்.
கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் Puvinthi-600x927
ஒரு மென்மையான் உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறிக்கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கேட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை.
வீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி. பிற்காலத்தில் – இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தாலும் அவன் தன்னைத்தானே நோந்துகொல்வானே தவிர , மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்: ஆனால் , நியாயம் கதைக்க மாட்டான். பொய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான்.
அது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான், குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான்.
அவனுக்கு 12 வயதே இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்ப வரவில்லை: அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள்.
புவீந்திரன் அழுதான் , அப்போது அவனுக்கு அது மட்டும்தானே தெரியும் – ஆனால் , அம்மாவின் இழப்பு அந்த பிஞ்சு உள்ளத்தில்ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது.
ஓய்வாக இருக்கும் கருக்கள் பொழுதுகளில் அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார் சுதந்திரத்தை நோக்கிய எழுட்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம் , கியூபா , தென்னாபிரிக்கா என அது நீளும். புவீத்திரன் மட்டும் ஆர்வத்தோடு இருந்து கேடான் ஏற்கனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கபடுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம், படக்கதைகளைக் கேட்கும்போது, ஒடுக்கப்படும் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை பணத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்த போராட்டங்களின் நியாயத் தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டு பார்த்து விழிக்கும் எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இருக்கும்.
இந்த விழிப்புணர்வோடும் – மனவுருதியோடும், இதயத்தை பிழியச்செய்கிற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்துதான் – அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்ககூடும்.
தொட்டு மகிழ்ந்திட்ட முத்துக்களே….!
புவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார் ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருகின்ற பிள்ளைப்பாசம் வெளிப்பாடு கண்டபோது – வந்தவர் அப்பாவிடம் சொன்னதை, அப்பா மகனிடம் கேட்டார். ” தம்பி… வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து … வீட்டோட நிக்கலாம் தானே ?…. ” அப்பா இழுக்க, மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்:
” இயக்கத்திற்க்கு போனது , விலத்திக்கொண்டு வாரத்துக்கில்லை ; நான் போனது நாட்டுக்காகப் போராட… திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்திலை நான் சாகவும் கூடும். அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை …” வந்தவருக்கும் அப்பாவும் மெளனித்துப் போனார்கள்.
கூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்தபின் பிரிகின்ற நேரத்தில், ” நீ இப்ப நொண்டி தானேடா…… இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம் …. விட்டுட்டு வாவன்ரா…. ” கேலி செய்தார்களாம்.
ஒரு மணித்துளி திகைத்துப்போனவன், நின்று , திரும்பி நிதானமாக சொன்னான்.
” எனக்கு கால்தான் நொண்டி : என்ற மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாய் போச்சுதே இல்லாம, உள்ளம் எம்மாவும் உறுதியாய் தான் இருக்கின்றது. அங்கங்கள் போனதைப்பற்றி எனக்குக் கவலையில்லையடா ….. மனதில் உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டேன். பெரிய சாதனை ஒன்றை செய்துதான் சாவேன்…… ”
அந்த நண்பர்களுக்கு அது அப்போது புரியவில்லை ; சிரித்துக்கொண்டு போனவர்கள் ; ஆனால் , இப்போது வியத்து நிற்கின்றார்கள்.
கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் Maniyasaran-poovinthiran-600x430
” பிரபல கரும்புலி போறார் ” இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.
ஆணையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால் – ‘ பெல்ட் ‘ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து இழுத்து , ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான்.
அவனை ஒரு ” கரும்புலிப் பைத்தியம் ” என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே , ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன.
எவருமில்லாத தனியரையொன்றில் – ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு , நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிற்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருப்படுத்திக் கொண்டு , வரைபடத்தைத் தடியால் தொட்டுக்காட்டி , அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான்.
” ….. டோரா  இதாலதான் வரும் ……. ”
” …. உங்கட வண்டிகள் இந்த மாதிரி வியூகத்தில அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும் …. ”
” ….அந்த நேரம் – இந்த விதமாகப் பக்கவாட்டில்., உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்…. ”
” …..டோரா புகையாகும்…. ”
ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும் , அவனைப் பார்க்க சிரிப்புதான் வரும்.
புவீந்திரன் !
அவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல ; வித்தியாசமான மனிதனும் கூட.
அவன் அமைதியானவன் ; ஆனால் சொம்போறியல்ல. உற்சாகமானவன். ஆனால் குளப்படிக்காரனல்ல.
அவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம்.
அவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டுமே தான் காணமுடியும்.
இயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இறக்க குணம். அடுத்தவர்கள் அவனில் இறக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும்.
இயலாத காலோடும்கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும்  விதமாக அவன் செயற்படுவான்.
கிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலையோன்றிர்க்கான அழைப்பின் பெயரில் , துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால் – அவன் திரும்பி வரும்போது அவனது உடுப்புகள்முற்றத்து வெளியில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன்தான் புவீந்திரன்.
முகாமிற்கு யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால் – அவர்களை உபசரிக்க , அன்றைய ‘ முறை ஆளை ‘த் தேடித்திரிந்து , பின் மூலையில் போய்ப் பிடித்துவந்து விடுவதற்கிடையில் – வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு , அவன் பேணிகளை கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன்.
ஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சுப் பொறிப்பது பணி. அங்கொன்றும்,இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக்கொண்டிருந்தவன் – கொஞ்ச நாட்களில் , மற்றவர்கள் மெச்சக்கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான்.
அறிக்கைகள் , கடிதங்கள் , விபரக்கோவைகள் , அது இது என்று. நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும் – கவிதை , கட்டுரைகளை எழுதிக்கொண்டு வந்து , ” இதையும் ஒருக்கால் …. ” என்று கெஞ்சுகின்ற நண்பர்களிடமும் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப்பைக்குள் மடித்து வைப்பான் கலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1.2. மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி , அதன் பிறகும் விழித்திருந்து, நண்பர்களுடையதையும் அடித்துக்கொடுக்கின்ற நண்பன்
புவீந்திரன் !
புலிவீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம்.
உன்னோடு வாழ்ந்த நாட்கள் , எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள்.

சூம்பிக் கிடக்கும்  காலோடும் உன்னைத் தூக்கிக்கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம் – சிறு பிள்ளை மாதிரித் தத்தளித்து கையைக் காலை வயசுக்கு விசுக்கி – ஓயாதமுயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்திப் பழகினாய்.
” பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன் கூட சரியாய் அடிக்கமாட்டான் …. ” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டு , பயிற்சி முகாமிலிருந்து அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் ” ரச் ” தந்த போது – வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டு, ரைபிள் பிடித்துச் சொல்லித்தர – நீ மட்டுமே ஒரு ” புல் ” லும், ஒரு ” நைனும் ” அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய்.
எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான  உன்னிடம். நல்லதற்ற ஒரு வார்த்தையச் சொல்லி ” இன்னாரிடம் கேட்டுப் பார் அர்த்தம் சொல்லுவார் ….. “  என்று அனுப்பிவிட்டால் – அங்கு சென்று நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து , விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய்.
கால் இயலாமல் இருந்தும். மெல்ல மெல்ல படகோட்டப் பழகி – கிளாளிக்களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில் , அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப்படகுகளிற்கு ஒட்டியாய் இருந்தாய்.
இன்னும் …. இன்னும்
இவையெல்லாம் , எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும்.
புவீந்திரன் !
சாதனையொன்றைச் செய்துதான் சாவேன் என்றாயா ? சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல : அது சாதனைகளின் ஒரு குவியல்.

‘ கனன் ‘ எடுத்து சாதனை. அது இரண்டாக இருந்ததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு ” பிப்ரி ” எடுத்தது இன்னொரு சாதனை.  டோரா ஒன்றை முழுமையாக் நொறுக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொள்ளப்பட்டது வேறொரு சாதனை .
” ஆசிரில ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் எண்டு சாள்ஸ் அண்ணன் சொல்லுறவர் …”  என்று அடிக்கடி. கூறும் நீ, ” இப்ப நாங்கள் அடிக்கப் போரம். ஆனால் , அதைப் பார்க்கிறத்துக்கு அவர் தான் இல்லை ” என்று கவலைப்படுவாய்.
அந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது.
கட்டைக்காட்டிலிருந்து – பலாலிக்கு ரோந்து செல்லும் டோராவை , பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும் , காங்கேசன்துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்த தாக்குதல் மையம் இருந்தது.
மணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள்.
உங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும்.
உள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய அந்த நாளில் உங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை , வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது.
சோகம் பரவிய முகத்தோடு , உன்னைக் கைதொட்டுத் தடவி , ” எந்தக் காளிளையப்பன் வெடி பிடிச்சது ?…. ” என்று , அக்கறையோடு தலைவர் விசாரித்தபோது – மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம்.
எல்லாமே தயார்.
தக்கைவண்டி: சண்டைப்படகுகள் : தாக்குதற் கருவிகள் : தாக்கும் வீரர்கள் : மணியரசன் . நீ …. எல்லாமே.
ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காக கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள்.

நள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விடவேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக்கொண்டிருக்கும்.
மறுநாள் மதியமோ , மாலைவரையோ  அந்தத் தேடல் நீடிக்கும்.
எதிரி வரமாட்டான் , ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள்.
உற்சாகம் குன்றாமல் , உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள்.
29.08.93 அன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிடுந்தவன் கடலில் வந்தான்.
பொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா ?
காத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல்.
தனியறையில் ” வரைபடத்தை விரித்துவைத்து , நீ காற்றுக்கும் விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம் ” எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது .
அப்போது நாங்கள்  சிரித்தோம்.
இப்போது ….

இரண்டு ” கனன் பீரங்கி ” களையும் . 2 ” பிப்ரி கலிபர் ” களையும் மூழ்கிக்கொண்டிருந்த ‘ டோரா ‘ விலிருந்து தோழர்கள் எடுத்துக்கொண்டு வந்தார்கள் .
புவீந்திரன் வரமாட்டான் …. !
மணியரசனும் வரமாட்டான் …. !

கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் Bt-maj-pukal-cap-mani-600x480
- விடுதலைப்புலிகள் இதழ் ( புரட்டாசி – ஐப்பசி : 1994 )


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» "தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்"
» "தமிழீழ தேசியத் தலைவருடன் கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி"
»  "கடற்கரும்புலி மேஜர் வரதன்"
»  "கடற்கரும்புலி மேஜர் கோபி"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum