TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தாயின் ஆரோக்கியம் அவசியம்.கட்டுரையை படிங்க

Go down

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தாயின் ஆரோக்கியம் அவசியம்.கட்டுரையை படிங்க  Empty குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தாயின் ஆரோக்கியம் அவசியம்.கட்டுரையை படிங்க

Post by logu Thu Jun 13, 2013 10:23 pm

[You must be registered and logged in to see this image.]

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தாயின் ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான ஒரு தாயால்தான் ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்று எடுக்க முடியும். எனவே தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தல் அவசியமாகும். இந்த அடிப்படையில் ஒரு பெண் கருவுற்றதில் இருந்து தாய்ப்பாலூட்டும் காலம் வரை அவள் மீது விசேட கவனம் செலுத்தல் அவசியமாகும்.

கருவுற்ற காலத்திலே தகுந்த உணவுகளை தெரிவுசெய்து உண்பதன்மூலம் குழந்தையின் வளர்ச்சி சீராக அமைவதோடு தாயின் உடல்நிலை சுமுகமாக இருப்பதுடன் குழந்தை பிறந்த பின் அதற்குப் பாலூட்டும் சிறப்புத் தன்மையையும் ஒரு பெண் பெறுகிறாள். கருவுற்ற காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் தாயானவள் தனக்கு மட்டுமன்றி குழந்தைக்கும் சேர்த்தே உணவை உண்கிறாள் என்பதில் ஞாபகத்தில் வைத்திருத்தல் அவியமாகும்.

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அதிகம் சாப்பிடுவது மட்டும் முக்கியமல்ல. சத்துள்ள உணவுகளைத் தெரிவுசெய்து சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, உயிர்ச் சத்துக்கள் என்பன அதிகம் இடம்பெறுதல் வேண்டும்.

எமது மூதாதையர் கர்ப்பிணிப் பெண்களையும், பாலூட்டும் தாய்மார்களையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலம் பராமரித்துள்ளார்கள். எமது பாட்டிமார் கையாளும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் நாம் மூடத்தனமானவை என்று ஏற்றுக்கொள்ளல் தவறாகும். விஞ்ஞான ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய பழக்கங்களும் அவர்களால் கையாளப்பட்டுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

இயற்றை மருத்துவ மிகப் பழங்காலந்தொட்டே பரம்பரை பரம்பரையாக வளர்க்கப்பட்டு வாழ்ந்து கொண்டிக்கின்றது. இவ் மருத்துவம் ஒரு கலையாக மட்டுமல்லாமல் மருத்துவ உலகில் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஒரு சமுதாயத்தின் பழமை வரலாற்றினையும், பண்பாட்டினையும், சிறப்பியல்புகளையும் அம்மக்கிளிடையே காணப்படும் நாட்டுப்புறவியல் கூறுகள் பிரதிபலிப்பவையாக விளங்குகின்றன. ஆரோக்கியமான வாழ்வுக்கும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் இயற்கை மருத்துவம் உறுதுணையாக இருக்கின்றது.

இயற்கையில் கிடைக்கக் கூடிய மூலிகைகளைக் கொண்டு கிராமப்புற மக்கள் தங்கள் நோய்களைப் போக்கிக் கொள்கின்றனர். இத்தகைய மருத்துவ முறைகளினால் பக்கவிளைவுகளோ பின் விளைவுகளோ ஏற்படுவதில்லை. அன்றாட உணவில் நம் உடலிற்கு தேவையான கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்து உண்டு வந்தாலே நோயில்லா வாழ்வு வாழவும் நோய்கள் வருவதைத் தடுக்கவும் முடியும்.

அண்டம் முழுவதும் வானம், காற்று, நீர், நிலம், நெருப்பு போன்ற பஞ்சபூதங்கள் நிறைந்திருப்பதைப் போலவே மனித உடலிலும் பஞ்சபூதங்கள் நிறைந்திருப்பதும் அவை உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பதும் சித்தமருத்துவ சிந்தனையாகும். அதாவது இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகள் நமது உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆகவே இயற்கையுடன் இயைந்த வாழ்வு மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் வழிவகுக்கும்.

கர்ப்பமுற்ற பெண்களின் மனநிலை நல்ல நிலையில் இருத்தல் வேண்டும் என்ற கருத்தினடிப்படையில் வளைகாப்பு செய்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. சார்பாக முதலில் போடுவது வேப்பம் சருகு ஆகும். இப்பழக்கமானது அறிவியல் மருத்துவ அடிப்படையில் நோக்கும்போது ஏற்றுக்கொள்ளக் கூடிய பழக்கமாகவே உள்ளது.

கர்ப்பமுற்ற பெண்களுக்கு அஞ்சு பஞ்சலம் காப்பு இடுதல் என்ற பழக்கமும் மக்களிடையே காணப்பட்டது. வேப்பங்காப்பிற்கு பிறகு அஞ்சு பஞ்சலம் காப்பு என்ற காப்பைப் போடுவார்கள். இக்காப்பில் ஐவகை உலோகங்களும் கலந்திருக்கும். இந்த ஐந்து வகை உலோகங்களும் கர்ப்பமுற்ற பெண்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் அஞ்சுபஞ்சலம் காப்பு ஐந்து உலோகங்களால் ஆனது அவையாவன தங்கம்,வெள்ளி, இரும்பு, செப்பு, பித்தளை.

கர்ப்பமுற்ற பெண்ணுக்கு வசம்பு வைத்துக் கட்டும் பழக்கம் காணப்படுகின்றது. வசம்பு பொதுவாக பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. குழந்தைகட்கு எந்தநோய் வந்தாலும் நோய்வராமல் காக்கவும் வசம்பு பயன்படுத்தப்படுகின்றது. வசம்பிற்கு கிருமிநாசினி மருத்துவச் செய்கை உண்டு. அதாவது கருவிலிருக்கும்போதே குழந்தைகளை நோய் தாக்கக்கூடும் இதைத் தவிர்க்கவும் தாயை நோயிலிருந்து பாதுகாக்கவுமே தாய்க்கு வசம்பு கட்டப்படகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உழுந்து, நல்லெண்ணெய் சேர்ந்த உணவுகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. உழுந்தானது கரு வளர்சியடைவதற்கு உதவுவதுடன் கருப்பை இடுப்பென்புகளுக்குப் பலத்தையும் கொடுக்கின்றது. அதன்மூலம் பிரசவத்தையும் இலகுவாக்குகின்றது. நல்லெண்ணையில் உயிர்ச்சத்து அ இருப்பதால் தாய்க்கும் சேய்க்கும் மாலைக்கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

ஆறாம் மாதத்தின் பின்பு எள்ளு பனங்கட்டி உழுத்தம்மா என்பனவற்றை சேர்த்திடித்த எள்ளுப்பா இடைக்கிடை உண்ணக்கொடுப்பர். எள்ளு பனங்கட்டி என்பவற்றில் இரும்புச் சத்து கல்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றது. எனவே இவை தாய்க்கும் சேய்க்கும் போசாக்குணவாக அமைவதுடன் தாய்க்கும் சிறந்த மலமிளக்கியாகவும் செயற்படுகின்றது.

வள்ளல் கீரைக்கு முலைப்பாலைச் சுரக்கச்செய்யும் இயல்பும் அதிகமுள்ளதால் “வள்ளல் தாய் போல் பிள்ளையை வளர்க்கும்” என்று முதமொழியும் உண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு காலை, மாலை இரு நேரமும் வற்றக்காய்ச்சிய பசுப்பாலை அருந்தக் கொடுப்பார்கள். பசுப்பால் ஒரு நிறையுணவு. இதனால் உடல் வலுவும் வனப்பும் பெறும். உடலில் ஏற்படும் பலநோய்களும் மாறும். கண்நோய்கள் வராமல் தடுக்கும் இயல்பும் உண்டு.

“உணவின் பகுதியை யோதலுற் றனமினிப்
பணிவுள்ள வெண்பசும் பாலிகாப் பாற்று
நற்பசு வின் கதை நாவினைப் பற்றிடும்
பொற்பான செம்பசு போக்குங் கர்ப்பிணி
புள்ளியா மேகநோய் போக்கிடு மட்டபால்
விடாதொடர் காத்திர வெம்மையை மாற்றுமே.”
(தேரன் காப்பியம்)

வெண்மையாகிய பசுவின் பால் களைப்பைப் போக்கும். காராம் பசுவின் பால் தாகத்தைத் தணிக்கும். செம்மை நிறமுள்ள ஆவின் பால் கசரோகத்தையும், புள்ளிகளுடைய பசுவின் பால் மேகரோகத்தையும் போக்களிக்கும். காய்ச்சாதபால் பசி, தீபனத்தை உண்டாக்கும். காய்ச்சிய பால் சரீரத்தில் உள்ள வெப்பத்தைத் தணிக்கும். பாலில் உள்ள கேசின் எனும் ஊன் செய்பொருள் மிக விரைவில் செந்நீரில் கலக்கின்றது. பாலில் உள்ள கொழுப்பும், சீனிச் சத்தும் உடலுக்கு வெப்பமும், வன்மையும் கொடுக்கின்றன.

பாலில் உள்ள சில உப்புக்களில் சேர்ந்திருக்கும் சுண்ணாம்பு, பொஸ்பரகம் மூளையையும், நரம்புகளையும் செவ்வனே வேலை செய்யுமாறு செய்கின்றன. இந்த உப்புக்களுடன் சோடியமும் சேர்ந்து காம்பற்ற சுரப்பிகளுக்கு எழுச்சி மருந்துகளாக உபயோகிக்கப்படுகின்றன. மற்றும் சுண்ணாம்புச் சத்தினால் பற்களும், என்புகளும் உறுதியடைகின்றன. உடலுக்குள்ளே பால் சென்றவுடனே செந்நீருள்ள வெள்ளை அணுக்கள் அதிகப்பட்டு நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது. எனவே பொதியிடப்பட்ட பால்மாவகைகட்கு பதில் பசுப்பால் மிகவும் சிறந்தது.

கர்ப்பிணித்தாய்மார்கட்கு ஐந்தாம் மாதத்தின் பின்பு குங்குமப்பூ பாலுடன் சிறிது கலந்து கொடுக்கப்படுகின்றது. இதன் மருத்துவக் குணங்கள் இரத்தத்தைச் சுத்திகரித்து பிரசவ வேதனையை குறைத்து பிரசவத்தை இலகுவாக்கவும் பிரசவித்த பின்பு கருப்பையில் ஏற்படும் இரத்த தோஷங்களை நீக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. இந்த வகையில் குங்குமப்பூ தாயினதும் சேயினதும் ஆரோக்கியத்தை பேணுவதில் உதவக்கூடும். மாறாக பலர் குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை பயன்படுத்துகின்றார்கள். இதில் எவ்வித உண்மையுமில்லை.

கருப்பையில் கரு வளர்வதன் நிமித்தம் ஏற்படும் மாறுதல்களால் கர்ப்பிணிப் பெண்களிற்கு வித்தியாசமான உணவுகளில் ஆசை அதனை 'யா” என்று அழைப்பர். ஆனால் மசக்கை வேறு. இது முதல் 3 மாதங்கள் ஏற்படும் இதில் புளிப்புச் சுவையின் விருப்பம் அதிகம் இருக்கும். இதற்குத்தான் உறவினர்கள் சிவத்தப்பச்சரிசிமா, உழுத்தம்மா, பயற்றம்மா, கடலைமா போன்றவற்றால் பல்வேறு பலகாரங்கள் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுப்பார்கள். இதில் தேவையான அளவு புரதச்சத்து கிடைப்பதுடன் சிவத்தப்பச்சரிசி, முளைவிட்டபயறு போன்றவற்றில் ஃபோலிக்கமிலம் காணப்படுகினறது. இது குருதிக்கலங்கள் முதிர்ச்சியடைவதற்கும், குறைபாடுள்ள குழந்தைகள் (மூளை, முண்ணான் பாதிப்பு) பிறப்பதைத் தவிர்ப்பதற்கு அவசியமாகிறது என்பது விஞ்ஞான விளக்கமாகும்.

முருங்கையிலை, பொன்னாங்காணி, வல்லாரைரை, முல்லை, முகட்டைடை, வள்ளல்கீரைரை, தலசுமுருங்கை, அரைக்கீரை, ஆனாக்கீரை வகைகளை கர்ப்பிணிப் பெண்களின் உணவில் தாராளமாக சேர்த்துக்கொள்வர். இலை அவர்களுக்கு தேவையான உயிர்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, கல்சியம் முதலியவற்றை வழங்குவதுடன் மலம் சாதாரணமாக இளகி வெளியேறவும் உதவுகின்றன.

குழந்தை பிறந்தவுடன் தாயிற்கு சாராய ஊறல் கொடுக்கும் குடும்ப வழக்கமானது மரபுவழியாக மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதில் சாதிக்காய், கராம்பு, ஏலம், வகலாசி, கறுவா, திப்பிலி, வெந்தயம், சீரகம், இலவங்கம், உள்ளி, கோட்டம், அதிமதுரம், மல்லி, சிறுநாகம்பூ, குங்குமப்பூ, வால்மிளகு, கற்கடகசிங்கி, சிறுதேக்கு, ஓமம், மிளகு, வாய்விடங்கம் என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் 5கிராம் அளவு எடுத்து இடித்து அரித்து 2 போத்தல் சாராயத்தில் ஊறப்போட்டு சேறானநிலத்தில் அல்லது நெல்லினுள் 40 நாட்கள் வரை புதைத்து வைத்து எடுத்து குழந்தை பிறந்த பின்பு 2, 3 நாட்களுக்குப் பின் 1 தேக்கரண்டி வீதம் 1 வேளை 30 நாட்கள் கொடுக்கப்படுகிறது. இ

திலுள்ள மூலிகைகள் கர்ப்பப்பையை பலப்படுத்தி அழுக்குகளை அகற்றி, தாய்ப்பாலையும் அதிகம் சுரக்கப் பண்ணுகிறது. பிரசவித்த தாயிற்கு குழந்தை பிறந்து 5ஆம் நாளிலிருந்து 21 ஆம் நாள் வரை சாரணைவேர் ஒரு துண்டு, சுக்கு 1 துண்டு, சுட்ட உள்ளி 3 பல்லு, மஞ்சள் 1 துண்டு போட்டு அம்மியில் அரைத்து மைபோல அரைத்து சிறு சிறு உருண்டையாக்கி 5, 6 உருண்டைகளை பனங்கட்டியுடன் விழுங்கக் கொடுப்பர். இதனால் கருப்பை வலுவடைவதுடன் தாயிற்கும், சேயிற்கும் மலம் அலுவான வெளியேறுவதுடன் தாய்ப்பாலையும் நன்கு சுரக்கச் செய்கிறது.

பிரசவித்த பெண்களின் உணவு முறையுடன் அவளின் குளிப்பும் முக்கிய இடம்பெறுகிறது. இதற்கு வேப்பம்பட்டை, பாவட்டை இலை, மாவிலங்கம் பட்டை, நொச்சியிலை போன்றவற்றை அவித்து குளிக்கவாக்கப்படுகிறது. இதனால் கிருமிகளை அகற்றி கருப்பையில் உள்ள அழுக்குகளை அகற்றி தாய்பாலை அதிகரித்து சுரக்கச்செய்யும் மருத்துவ குணங்களும் மேற்படி மூலிகைகளுக்கு உண்டு. இம் மூலிகை பாகங்களால் மார்பகங்களை அழுத்தித் தேய்த்து உரஞ்சி ஒத்தடம் கொடுக்கும்போது மார்பங்கங்களுக்கு இரத்த ஓட்டம் பெருகி பாற்சுரக்கும் சுரப்பிகான்கள் விரிவடைந்து தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யவும் உதவும்.

தாய்ப்பால் குறைவாகச் சுரக்கும் பெண்களுக்கு 15 கிராம் உள்ளிப் பூண்டை எடுத்து தோல்நீக்கி வறுத்து அதனுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து உண்ணக்கொடுத்துவரின் முலைப்பால் அதிகம் சுரக்கும். இதனையே “ஏந்திழைத் கீருள்ளியேற்ற முலைப்பாலே” என்று பழமொழியும் சுட்டிக்காட்டுகின்றது.

கர்ப்பகால மூலிகை பாவனையின் பொதுக்குணங்களை மருத்துவ நோக்கில்;

சாதிக்காய்

“தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிரநோய்
ஓது சுலா சங்காசம் உட்கிரணி லேதோ
டிலக்காய் வரும்பிணி போம் ஏற்றமயல் பித்தந்
துலக்கி யருந்துவர்க்குக் கூறு”

இதனால் விந்துக்குறைவு, பெருங்கழிச்சல், வாயுவினால் உண்டாகும் நோய், தலைவலி, இரைப்பு(ஆஸ்மா), இருமல், நாட்பட்ட கழிச்சல், வெப்பத்தை முன்னிட்டு வரும் பிணிகளையும் போக்கும். வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், அக்கினிமந்தம் நீங்கும்.

குங்குமப்பூ

விந்துநட்டந் தாகமண்டம் மேகசவஞ் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி முந்துகண்ணில்
தங்குமப்பூ வோடுறுநோய் சர்த்தியலை நீங்கவென்றால்
குங்குமப்பூ ஓரிதழைக் கொள்.

குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனிசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம் பொங்கு
மதுரதோ டஞ்தொலையும் சலதோடமீ பொங்கு
உதிரதோ டங்களறும் ஓது

இதனால் விந்துக்குறைவு, நீர்வேட்கை, மேகநீர், சூலை, கபம், கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, காதுநோய், நீர் ஏற்றம், சூலகத்தின் அழுக்கு முதலியன போம்.

சாரணை

வித்திரிதி மூலம் விழிப்படலம் மார்புநோய்
தத்துசுவாசம் தனிக்கருப்பை யுற்ற
கருச்சிதறச் செய்சூதி காவாத மும்போம்
விருச்சிகத்தின் பேரைவிரி

இதனால் கட்பி, மூலவாயு, கண்படலம், மார்புநோய், இரைப்புநோய், கருப்பை சம்பந்தமான நோய்கள், கர்ப்பப்பை சிதைவால் ஏற்படும் சூசிகாத வாதமும் போம்.

உள்ளி

சன்னியோடு வாதந் தலைநோவு தாள்வலி
மன்னிவரு நீர்க்கோவை வன்சீதம் அன்னமே
உள்ளுள்ளி கண்பாய் உனைமூல ரோகமும் போம்
வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு.

இதனால் சிறிய கட்டிகள், செவிடு, நாட்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப்புழு, இவைகட்கும் முப்பிணி, வளிநோய்கள், கபத்தலைவலி, வாய்நோய், நீரேற்றம், சீதக்கழிச்சல் மூலம் இவைகட்கும் கொடுக்கலாம்.

மேலும் உள்ளியில் கந்தகச்சத்தும், கணிசமான அளவில் உள்ளது. உள்ளியின் நாற்றத்திற்கு இதுவே காரணமாகும்.கந்தகத்திற்கு விரணமாற்றிச் செய்கையுள்ளது. எனவே மாதவிடாய், பிரசவம் என்பவற்றை அடுத்து கற்பகாலத்தில் ஏற்படும் புண்களை ஆற்றுவதில் இது சிறந்தது.

உணவு மருந்து

கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்மாதங்களில் ஏற்படும் வாந்திக்கு துதிஞ்சி மணப்பாகு (நாரத்தை) கொடுப்பார்கள். இதற்கு நாரத்தைப் பழச்சாறு 500 மில்லிக்கு 250 கிராம் சீனி சேர்த்து தந்துபாகத்தில் எரித்து எடுத்து வாந்தி இருக்கும் கர்ப்பிணித் தாய்மார் நாக்கில் 4, 5 துளி விடலாம் இதனால் தான் எமது முன்னோர் கர்ப்பிணித் தாய்மாருக்கு நாரத்தங்காய் ஊறுகாய் செய்து உண்ணக் கொடுப்பார்கள். இதிலுள்ள புளிப்புச்சுவை வாந்தியைக் கட்டுப்படுத்துவதோடு அதிலுள்ள உயிர்ச்சத்துக்களும் கிடைக்கப்பெறும்.

நாரத்தம்பழம் பொதுக்குணம்

“பித்தவழிக் குன்மமறும் பேராத தீபனமாம்
வித்தான தாது வினைந்திடுங்காண் முத்திணைத்த
வாரத்தைத் தாங்குமுலை யாயிழையே யெக்காலு
நாரத்தையின் கனியால்”

நாரத்தம் பழத்தினால் பித்தகுன்மம் நீங்கும். நீங்காத ஐடராக்கினியும் சுக்கில விருத்தியும் உண்டாகும்.

மேலும் பிரவித்த பெண்களுக்கு “சரக்கு” அரைத்துக் கொடுக்கும் வழக்கமும் எம்மக்களிடையே காணப்படுகிறது. கர்பாசயத்தை வலுப்படுத்தவும் கர்ப்பாசயக் கழிவுகளை வெளியேறச் செய்யவும் தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்வதும் இதன் நோக்கமாகும்.

இதற்கு,
கொத்தமல்லி 25 கிராம்
நற்சீரகம் 10 கிராம்
மிளகு 8
தேங்காய்ச்சொட்டு சிறுதுண்டு
மஞ்சள் சிறுதுண்டு
இஞ்சி சிறுதுண்டு
உள்ளி 5 பல்லு

இவைகளை அம்மியில் இட்டு நன்றாகப் பட்டுப்போல் அரைத்து இந்த சரக்குத் தூளினாலேயே கறி சமைத்துக் கொடுப்பது வழக்கம்.
கொத்தமல்லி, நற்சீரகம் போன்றவற்றில் உயிர்ச்சத்து, கல்சியம், இரும்பு என்பன உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே எமது மக்களிடையே பாரம்பரிய மருத்துவ உணவுமுறைகளை மருத்துவ விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பின்பற்றுதல் இன்றைய சமுதாயத்தின் ஆரோக்கியத்தின் அவசியமாகின்றது.

டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் BSMS (sl)
MD(ind) PHd (ind)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
» தொப்பையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க இதோ சில டிப்ஸ்
» ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?
» வேலைக்கு போகும் பெண்கள், ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்:-
»  சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !படிங்க இந்த கட்டுரையை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum